Sunday, 12 November 2017

தமிழ் திரைப்பட பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற காரணம் என்ன? மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பது குத்துப்பாட்டா? இன்னிசை பாடல்களா? பக்தி பாடல்களா?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :சனி*🌹

🌹 *தேதி :11.11.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.*

💐 *சுவாமி விவேகானந்தர்*💐

😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★

😇 *குழந்தைகளின்  மழலை குரல்களுக்கு முன்னால்,*👼

🎶🎵 👶🏻 *எந்தவொரு பாடல்களும் ,இசைக் கருவிகளும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும்.*😍

📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

*தமிழ் திரைப்பட பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற காரணம் என்ன? மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பது குத்துப்பாட்டா? இன்னிசை பாடல்களா? பக்தி பாடல்களா?*
🎵🎤🎶💝🎵🎤🎶💝🎵🎤🎶

🙋🏻‍♂🙋🏻 🎶 *வாங்க வாங்க வாங்க, பாட்டு பாடுனவங்க எல்லாரும் இன்னைக்கு செம ஜாலியா இருந்துருப்பிங்க போலயே🤔, ஆனா கேட்டவங்க எல்லாருக்கும் எப்படி இருந்துச்சினு அவங்க அவங்க மனசாட்சிய தொட்டு சொன்னா தான் தெரியும்😭.*

🎤 *இன்று குழுவில் சில பாடகர்கள் பாடகிகளை அடையாளம் கண்டது உண்மையிலும்💖 மனமகிழும் வண்ணமாகவும் இருந்தது.அவர்களுக்கு வாழ்த்துக்களை 💝இந்த நொடியில் தெரிவித்து கொள்கிறோம்*😇

🤔 *இன்னைக்கு ஏன் இந்த தலைப்பு வச்சோம் தெரியுமா?❓ வேற வழியில்லாம தான் வச்சோம், அப்படினுலாம் சொல்ல மாட்டோம்.😜 உண்மையான காரணம் இருக்கு.😊 ஆமாங்க, இந்த சன் டிவி, விஜய் டிவிக்காரனுங்க தொல்லை தாங்க முடியல. நம்ம குழுல இருந்து 10 பேரை அனுப்ப சொல்லிட்டாங்க. நாங்களும் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டோம். இதெல்லாம் சரிப்பட்டு வராது. உங்க புரோகிராம்மை நீங்களே கெடுத்துக்காதிங்க.😝 உங்க ரூட் வேற. எங்க ரூட் வேறனு எவ்வளவோ எடுத்து சொன்னாலும் போன் மேல போன் தாங்க முடியல. சரி போன போகுதே புள்ளக்குட்டிக் காரங்க பொலச்சி போறானுங்கனு நாங்களும் தலைப்ப வச்சி, அவங்களையே கண்காணிக்க சொல்லிட்டோம். கவலைப்படாதீங்க, அவங்க தப்பிச்சிட்டாங்க.😉 சரிங்க முடிவுரைக்கு போவோம்.*🤷🏻‍♂

🚧 *இன்றைய தலைப்பு என்ன? தமிழ் திரைப்பட பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற காரணம் என்ன? மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பது குத்துப்பாட்டா? இன்னிசை பாடல்களா? பக்தி பாடல்களா?*🚧

*👆🏻தலைப்ப பத்தி பேசுங்கனா, ஐ எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்😁, ஐ எனக்கு அந்த பாட்டு பிடிக்கும்😇, உங்களுக்கு எந்த பாட்டு பிடிக்கும்னு நாங்க கேட்டோமா? அது பிடிக்க காரணம் என்னனு கேட்டா? அத பத்தி யாரும் பேசுன மாதிரி தெரியல.😏 ஒருத்தர், இரண்டு பேர் மட்டும் தலைப்பு சம்பந்தமா பேசுனா நாங்க எப்படி முடிவுரை போடுறது😫?.*😩

🤗 *மக்கள் மனதில் நீங்கா இடம் பெறும் பாடல்கள் எவை பக்தி பாடல்களா? குத்துப்பாட்டா? இன்னிசை பாடல்களா? என்று கேட்டா, உங்களுக்கு பிடிச்சத மட்டும் சொல்றிங்க.*😏

🤓 *நாங்க என்ன, (தேர்தல்) பாடல் கருத்துககணிப்பா வச்சி நடத்திக்கிட்டு இருக்கோம்?🤦🏼‍♂.*

😏 *முடிவுரை சரியில்லைனா மட்டும்,  ஓடி வந்து குறை சொல்றிங்க, சிலர் இதெல்லாம் ஒரு முடிவுரையா? Conclusion சரியில்லை அப்படின்னு😏.நாங்க மட்டும் சிந்தனைவாதிகளா?😴அவங்க மட்டும் பேச்சாளர்களா? கிழமை மாத்தி போட்ருக்கீங்க.??😴 அப்பப்ப எத்தனை குறைகள் 😴 முடியல 😭. 🤢நாங்களும் ஏதோதோ சமாளிச்சி பொழப்பு ஓட்டிட்டு இருக்கோம்.*😭🤢

😜 *முதல்வன் படத்துல வர மாதிரி தான் சொல்லணும், ஒரு நாள் நீங்க முடிவுரை போட்டு பாருங்கப்பா, நாங்களும் எல்லாருக்கும் வாய்ப்பளிக்க தயாராக தாங்க இருக்கோம்.*😟
*🤕🤔 தினமும் நாங்க தலைப்பு ,முடிவுரை என்ற சிந்தனையிலேயே தாங்க சுத்திட்டும் இருக்கோம்*😰

*🤦🏼‍♂தலைப்பு என்ன? முடிவுரை என்னன்னே, மறுபடியும் மறந்து போயிட்டு*🤦🏻‍♀

🎵 *தமிழ் திரைப்பட பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற காரணம் என்ன?*❓

🤷🏻‍♀ *எப்பவுமே, நம்ம எல்லா நேரமும் ☹ ம்ம்ம்னு இருக்க முடியாது. 🙅🏻சில நேரங்களில் நம்ம எல்லாருக்குமே எண்டர்டெய்ண்மண்ட் தேவைப்படுகிறது.*🤷🏻‍♀

🎶🎤 *எண்ண எண்ண திகட்டாத எண்ணற்ற தமிழ் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலாத பாடல் வரிகள்.கேட்கும் போதே மனம் லேசாகி கண்கள் இமைக்க மறுப்பவை சில.....பல வரிகள் கேட்டவுடன் கண் இமைகள் தாமாய் மூடிக்கொள்ளும் ...கண்களை நீரை வரவழைப்பன பல.காதல் ,நேசம், பாசம்,நட்பு,குடும்பம்,குதூகலம் என் அவை தொடாத உணர்வுகளே இல்லை. அருமையான மறக்க முடியாத அழியாத பாடல்கள் எப்போதும் நம் நினைவில் வந்து நிற்கின்றன.*🎶👍

🤷🏻‍♂😍 *நம்முடைய சந்தோசம், துக்கம், அதிர்ச்சி, ஆணவம், கோபம் இப்படி பல நிலைகளில் இருக்கும் போது பாடல்கள் கேட்க ஒரு இதமாக தான் இருக்க செய்கின்றது.*😍🎶

🎶😍 *ஏறக்குறைய எண்பது ஆண்டுகளில் நாம் நம்மைச் சுற்றிக்காணுகிற முன்னேற்றங்கள் திரைப்பாடல்களிலும் தென்படுகின்றன- குறிப்பாக தொழில்நுட்பம் கண்டிருக்கிற வியத்தகு வளர்ச்சியின் தாக்கத்தை திரைப்பாடல்களிலும் காண முடிகிறது. ஆனால், நமது வளர்ச்சியின் பக்கவிளைவுகளாக நாம் அன்றாடம் எதிர்கொள்ளுகிற சோதனைகளைப் போலவே, திரைப்பாடல்களிலும் பல பக்கவிளைவுகளும் விபரீதங்களும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.😔 இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி பெற்றும், பாடல்கள் இல்லாத படத்தை நாம் விரும்பாமலிருப்பது நமக்கு இயல்பாகவே இசை மீதிருக்கிற நாட்டத்தை வெளிப்படுத்துகிறது என்பது உண்மை தான்.*🎶🎶

🎶🤔 *சரி இந்த இசை எங்கே இருக்கின்றது என்று பார்ப்போமா❓?😂.*

🤔😉 *யாராச்சும் பக்கத்துல வந்தா ஈசியா சொல்லி கொடுக்கலாம். சரி  வேணாம் விடுங்க. இசை பல பரிமாணங்களில் பரவி கிடக்கின்றது. இசை இல்லாத இடமே இல்லை. நம் காதுகளில் கேட்கின்ற அனைத்துமே இசைதாங்க.*🎶🤷🏻‍♀

🎶💝 *நம் மனதில் தமிழ் பாடல்கள் நீங்கா இடம் பெற முக்கிய காரணம், நம்ம பிறந்ததுல இருந்து இறக்கிற வரைக்கும், ஒவ்வொரு நிலையிலும், நமக்கு நம் தமிழ் பாடல்கள், நிறைய விசயங்களை கற்றுக் கொண்டுத் தான் இருக்கின்றது. அதுல, வேறு மொழி சிறிதளவு கலந்தால் மட்டுமே சில பாடல்கள் சரியில்லாமல் போய் விடுகின்றது.* 😟

🎶💝  *திரைப்பாடல் காலங்கடந்தும் மக்கள் மனதில் பசுமையாக இருப்பதற்கு கவிநயம், கருத்துச்செறிவு மட்டும் தான் காரணமா...?❓வெறும் வரிகளாக இருக்கிற பாடல்களுக்கு வடிவம் கொடுப்பது யார்?❓ இசையமைப்பாளர்கள்...!!!*

🎵🎵 *"சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா," என்ற பாட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் "ஜனசக்தி," பத்திரிகையில் எழுதியிருந்தால், அது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?*🤙

🎵🎵 *"பொன்மாலைப் பொழுது," பாடலை கவிப்பேரரசு வைரமுத்து ஏதாவது வாரப்பத்திரிகையில் எழுதியிருந்தால் எத்தனை பேர் வாசித்திருப்பார்கள்?🤙 அப்படி வாசித்தவர்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?*🤙

🎵🎵 *கவிதைத்தொகுப்புகளிலும், பத்திரிகைகளிலும் வாசிக்கிற கவிதைகளைக் காட்டிலும் திரைப்பாடல்கள் நம் நெஞ்சில் நிற்பதற்கு என்ன காரணம்?🎵 அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள், அந்த வரிகளைப் பாடி அவற்றிற்கு உயிர்கொடுத்த பாடகர்கள், 🎤அதைத் திரையில் நடித்து காணொலியாக நமது நெஞ்சில் இறக்கி வைத்த நடிகர்கள், இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்த இயக்குனர் என்று எத்தனை காரணகர்த்தாக்கள் ஒரு பாடலுக்குப் பின்புலத்தில் உழைத்திருக்கிறார்கள்..?*❓⁉

🎵🎵 *தமிழ் பாடல்கள், நம் தமிழ்மொழி போலவே என்றுமே தனிச் சிறப்பு தான். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.*💖

😍 *பழைய பாடல்கள் ஒரு வட்டத்துக்குள் சிக்கியிருந்தது உண்மை தான்! புதிய பாடல்கள் சிக்கியிருப்பதோ ஒரு சக்ரவியூகத்தில்! 😞ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால், அதில் ஒரு குத்துப்பாட்டு, 😛ஒரு ஆங்கிலம் கலந்த மேற்கத்திய இசையில் அமைக்கப்பட்ட பாட்டு,😛 கதாநாயகனை முன்னிறுத்துகிற ஒரு பாட்டு,🕺🏻 இனிமை இல்லை என்று சொல்லி விடக்கூடாதே என்பதற்காக சற்றே சுரசுத்தமாக ஒரு பாட்டு என்று அந்த வியூகத்தில் விழித்துக்கொண்டிருக்கின்றன. விளைவு..?❓ பல பாடல்களை குடும்பத்தோடு கேட்க முடிவதில்லை,😰 தொலைக்காட்சியில் பார்க்க முடிவதில்லை.*😨🙈

🎵💝 *கவிநயம்,இசைநயம் என்று பேசும்போதெல்லாம் புதிய பாடல்களில் பெரும்பாலும் காதல் குறித்த பாடல்களே மேற்கோள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. சமூகநோக்கு, தமிழுணர்வு போன்றவற்றைக் குறித்து புதிய பாடல்கள் மிகக்குறைவு.😞 ஆனால், அன்றைய காலகட்டத்தில் உள்ள அதிகமான பாடல்களில் இன்றும் மனதில் இடம்பிடிக்கின்றன அதன் வரிகள்....*💝😍

🎵😍 *நம்முடைய அனைத்து நிலைகளிலும், அனைத்து சூழ்நிலைகளிலும், எதாவது ஒரு தமிழ் பாடல் 🎤நம்மை ஞாபகப்படுத்தும் விதமாகவே இருக்கின்றது. அதனால் தான் என்றும் தமிழ் பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.*💝

🤔 *மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பது குத்துப்பாட்டா?இன்னிசை பாடல்களா? பக்தி பாடல்களா?*🤔

🥁🎵 *குத்துப்பாட்டு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் போது மட்டுமே கேட்க முடியும். அதற்கு பின் யாராவது இறந்துவிட்டால் அதை மற்றவர்கள் தான் ரசிக்க முடியும். சோகத்தில் இருப்பவர் என்றும் குத்துப்பாட்டை ரசிக்க முடியாத சூழ்நிலையே அமைகின்றது.*😕

🙏 🎵 *பக்திப் பாடல்கள் காலை, மாலை மற்றும் இறைவனை வணங்கும்போது மட்டுமே கேட்க முடியும். அனைத்து நேரங்களிலும் பக்தி பாடல்கள் அனைவராலும் கேட்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையே.*😕

🙏🎵 *சில பக்திப் பாடல்கள் கூட குத்துப் பாட்டு ரேஞ்சுக்கே இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.*😰

🎶🎤🎵 *பாடல்கள் எல்லாம் அவரவரின்  சூழ்நிலைக்கு தகுந்தாற்போல,😍தனக்கென்றே எழுதி இருப்பது போல இருக்கும்....அந்தந்த சூழ்நிலையில் இருந்து கேட்டு ரசிக்கும் பாடல்கள் என்றுமே இனிமை தரும்....*😍🎶

😍🎶🎤 *இன்னிசை பாடல்கள் இன்பம், துன்பம், நல்லது, கெட்டது, இருமலு, தும்மலு, நிம்மதி, துக்கம், தூக்கம் இப்படி பல நேரங்களிலும், ஒவ்வொரு நிலைக்கு தகுந்த மாதிரியும் பல இன்னிசை பாடல்கள் பல பரிமாணங்களில் பரவிக் கிடக்கின்றது.🎶 எல்லா நிலைகளிலும் கேட்க கேட்க சலிக்காத பாடல்கள் இந்த இன்னிசை பாடல்களே. 🎶எனவே மக்கள் மனதில் என்றும் நீங்காமல் நிலைப்பத்திருப்பது இந்த இன்னிசை பாடல்களே..!🎶 இன்னிசை பாடல்களே..!🎶🎶 இன்னிசை பாடல்களே..! 🎶🎶🎶🎶🎵🎵🎤என்று கூறி இதோட இத முடிச்சிக்கிறோம்.🙏😉😜 எங்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி😝🙏*

🤦🏻‍♀ *கடைசியா பட்டிமன்ற ரேஞ்சுக்கு தீர்ப்பு சொல்ல வச்சிட்டாங்கப்பா 🤦🏼‍♂😭😭*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑

🎵🎤 *@⁨🏁ஜான்🔴ழைழா🏁⁩*
*&@⁨Santhi😊⁩*🎁🎈👏

🎵🎤 *@⁨sp vignesh⁩ &*
*@⁨God With U..⁩*🎁🎈👏

🎵🎤  *@⁨✍🏻Arman🎭& @⁨Prabhu⁩*🎁🎈👏

👑 *கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*👑©®

🎵🎤 *@⁨👉🏼SIVARAJ💘👈🏼⁩*🎁🎈👏

🎵🎤 *@⁨🌻இசை என்ற நாதம் 🌻⁩*🎁🎈👏

🎵🎤 *@⁨இராமசுப்பிரமணியன்⁩*🎁🎈👏

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

🎵🎶🎤 *நல்ல பாடல்கள் வர வேண்டுமென்றால், நல்ல படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.👍 இன்றும் நாம் அண்ணன்-தங்கை பாசமென்றால் "பாசமலர்" "முள்ளும் மலரும்," என்று தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.*👍

🎵🎶🎤 *புதிய திரைப்பாடல்கள் மொத்தமும் மோசம் என்றோ, பழைய திரைப்பாடல்கள் மொத்தமும் முத்துக்கள் என்றோ முரண்டு பிடிக்க விரும்பவில்லை.🙅🏻 ஆனால், தொழில்நுட்பம், வசதிவாய்ப்புக்கள், திறமையான கவிஞர்கள், நல்ல பாடகர்கள், உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்கள் இருந்தும், உளி அம்மி கொத்திக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர்கள் மட்டும் காரணமல்ல! அவர்கள் பாத்திரமறிந்து பிச்சையிடுகிறார்கள். நல்ல கதையமைப்புடன் தமிழ்ப்படங்கள் வெளிவந்தால், நல்ல பாடல்களைத் தர முடியும்...நல்லபாடல்களே ஆயிரம் காலம் ஆனாலும் அனைவர்மனதிலும் நீங்க இடம் பிடிக்கும்*🎵🎶👍

🎶🎵🎤 *எனவே, சமூகநோக்கு, தமிழுணர்வு, காதல் என்ற மூன்று அளவுகோல்களின் அடிப்படையிலே பாடல்கள் மனதில் நிலையாக தங்குகிறது எனலாம்.*🎶🎵🎤👍

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற்* *கண்ணென்னாங் கண்ணோட்டம்* *இல்லாத கண்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

💓 *தெரிந்துகொள்ளவும்*💓

*எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.*

💓 *புரிந்துகொள்ளவும்*💓

*ஓசை பெறும் வெண்கலம்... ஓசை பெறா மட்கலம்....*

💓 *அறிந்துகொள்ளவும்*💓

*காகிதப்பூ மணக்காது.*

*கனிந்த பழம் தானே விழும்....*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

   😎 _*குட்டிராஜேஷ்*_
    _*9486552988*_😎

           👮🏻‍♀🏹 *_GK_*🏹👮🏻‍♀

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *மணி மாதேஷ் ~*
*8428073724*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...