🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :17.11.2017.*
🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *உண்மையான* *செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக்* *கூடாது.அது நம்மைத் தொடர்ந்துவரவேண்டும்*
💐 *மான்ஸ்பீல்டு.*💐
🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀
📯 *கடவுளே இல்லை என்று கூறுபவனை கடவுள் வெறுப்பதில்லை...*
😇 *உதாரணமாக தாயினை கவனிக்காத மகனிடம் கூட, தாயின் பாசம் குறைவதில்லை ஒரு போதும்...*
*🤷🏻♀◆●◆அட்மின்◆●◆🤷🏻♀*
💖💖💖💖💖💖💖💖💖💖💖
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*கட்டடக்கலையில் சிறந்தோங்கிய கோவில்களை பற்றிய ஓர் அலசல்*
🔔🔱🏰🔔⛪🔔🕌🔔🔱🏰🔔
🔱 *பாகம்1⃣*
📯 *இன்றைய தலைப்பு கோவில்களை பற்றி வைக்க மிக முக்கிய காரணம்🤔*
📜 *அந்தக் காலத்தில் கோவில் வணங்குவதற்கு மட்டும் பயன்படவில்லை. மேலும் பல நன்மைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.*🤗
*✅ஊர் விசேஷங்களுக்கு கோவிலில் அன்னதானம் செய்யப்பட்டன.*
*✅கோவிலில் தான் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.*
*✅கோவிலில் கல்வி போதிக்கப்பட்டன.*
*✅கோவில்களில் தான் வணிக மேம்பாட்டுக்கும் மக்கள் நன்மைக்காகவும் கடன் உதவி முதன் முதலாக செய்யப்பட்டன.*
*✅கோவிலகளில் போருக்கு தேவையான ஆயுதங்கள் சேமிக்கப்பட்டன.*
*✅கருத்தரங்குகள், போட்டிகள், மக்கள் மனமகிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.*
*✅கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட், எனர்ஜி-யைத் தந்தன. அந்தக் காலத்தில் சினிமா பாடல்கள் இல்லை. இவைகள் தான் மனிதனுக்கு புத்துணர்ச்சிகளை தருவதாக இருந்தது.*
*✅பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது.*
*✅ஊர் விட்டு ஊர் செல்ல வேண்டும் என்றால் கூட, சுரங்கப் பாதை வழிகளிலும், கோவில்களில் இருந்து தான் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுவார்கள்.*
*✅பண்டைய காலங்களில் கோர்ட் கிடையாது. சரி, தவறு அலசி ஆராய பஞ்சாயத்துகள் கூட கோவில் எல்லைகளில் கூட்டி தான் பேசி தீர்ப்புகள் வழங்குவார்கள்.*
💝 *இப்படி பலதரப்பட்ட (கல்வித்துறை, நீதித்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உணவுத்துறை, போக்குவரத்துத் துறை) துறைகளும் முதலில் கோவில்களில் இருந்து தான் தொடங்கியது எனலாம்.*💝
💝 *அவ்வளவு சிறப்பாக அனைத்திற்கும் பயன்படும வகையில், அப்போதே கோவில்களின் கட்டடங்களை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அந்த கட்டடக் கலைகளை பற்றி, அறிந்துக் கொள்ளாமல் இருக்கலாமா?❓❓ அதற்காக தான் இன்றைய தலைப்பு வைக்கப்பட்டதன் காரணம்.*💝
🔔 _*விருபாட்சர் கோயில் (ஹம்பி)*_🔔
🔱 *_இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை 🌊ஆற்றங்கரையில் உள்ள ஒரு சுற்றுலா நகரம். மனிதன் தான் கண்ட கனவுகளை கல்லில் செதுக்கினால் எப்படி இருக்கும், கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற👌 பாடலுக்கும் சொந்தமான ஊர் என்றால் அது ஹம்பிதான்.🔱 விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தில் தற்போது மிஞ்சியிருப்பது ஹம்பி மட்டுமே._*🔱
🔱 *_இங்கிருக்கும் விருபாட்சர் கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் பெரும்பாலும் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது._*⚜
🔱 *_இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் சில ஆதாரங்கள் இந்த கோயில் சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதற்கான 🔎ஆதாரத்தை வெளிப்படுத்துகிறது._*⚜
🔱 *_கோவிலின் மத்தியில் அமைந்துள்ள மைய மண்டபம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 1510ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக தெரிகிறது._*⚜
🔱 *_இந்த கோவிலை சுற்றிலும் சிறிய கோயில்கள், தூண் மண்டபங்கள், கொடிக் கம்பங்கள், விளக்கு கம்பங்கள் போன்று ஒரு நகரத்தைப் போல கட்டமைத்துள்ளனர். இந்த கோவில் அளவீட்டில் மிகச் சிறிய கோயிலாக இருந்தாலும் இதன் வளாகம் மிகப் பெரியது._*⚜
🔱 *_படையெடுப்புகள் எத்தனை வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய முடியவில்லையாம்.👏 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்த போதும் கூட இந்த கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சியளித்தது._*👌⚜
🔱 *_இந்த கோவிலின் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த கோயிலில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகின்றது._*👌⚜
🔱🔎 *_பல ஆராய்ச்சிகள் செய்தும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.👎 இருப்பினும் அறிவியலின் படி கோபுரத்திற்க்கும் சுவருக்கும் இடைமுகமாக ஒரு துளை லென்ஸாக இருந்து நிழலை தழைகிழாக மாற்றுவதாக கருதப்படுகிறது. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது_*👏⚜
🔔 *_வீரபத்திரா கோவில்_*🔔
🔱 *_கி.பி 1530ம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள அனந்தபூரில் கட்டபட்டுள்ள இந்த கோவிலில் 70 மாபெரும் தூண்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்திரத்தில் தொங்கியபடி இருக்கின்றது. 😱சுமார் 70 அடி உயரம் கொண்ட இந்த மாபெரும் தூணானது எவ்வாறு அந்திரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது என்பது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது._*😨👏👌⚜
🔱 *_1910ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் இதுதூணை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தரையுடன் இணைக்க முயற்சித்தார். தூணின் ஒரு பகுதியை தரையுடன் இணைத்தபோது கோவிலில் மேல்தளம் சிதிலமடைய தொடங்கியது. அதனால் இம்முயற்ச்சியானது பாதியில் விடப்பட்டது. மேலும் இக்கோவிலில் மூன்றடி நீளம் கொண்ட மாபெரும் கால்தடம் ஒன்று இருக்கின்றது அது யாருடையது என்பது இன்றளவும் புதிராகவே இருக்கின்றது._*🤔👏⚜
🔔 *_கோனார்க் சூரிய கோவில்_*🔔
🔱 *_கி.பி1255ம் ஆண்டு கட்டபட்ட 🌞சூரிய கோவில் ஒரிசாவில் கோளார்க் என்னும் இடத்தில் உள்ளது. இக்கோவிலானது சுமார் 24 சக்கரம் கொண்ட தேரினை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.👏 இதில் 24சக்கரம் 24 மணிநேரத்தையும் 7 குதிரைகள் வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் குறிக்கின்றது. இந்த சக்கரங்களின் நிழல் கொண்டு இன்றைய நேரத்தைக்கூட துள்ளியமாக கணக்கிட முடியும்.👌 சுமார் 800 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவிலின் சக்கரம் இன்றைய நேரத்தை துள்ளியமாக காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.😨 மேலும் இக்கோவிலின் ஒவ்வொரு பெரிய தூண்களும் சிறிய இரும்பு தகட்டை கொண்டு சாதாரணமாக இணைத்துள்ளனர்._*👏⚜
🔔 *_எல்லோரா கைலாச நாதர் கோவில்_*🔔
🔱 *_கி.பி 8ம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ண மன்னரால் எல்லோரா கைலாசநாதர் கோவில் கட்டபட்டது. இக்கோவிலை முழுவதுமாக கட்டிமுடிக்க சுமார் 😨4லட்சம் என் பாறையை கோவிலின் மேற்புறத்தில் இருந்து கீழ் நோக்கி வெட்டி அப்புறபடுத்தியுள்ளனர். மேலும் இக்கோவிலானது 18 வருடங்களில் கட்டிமுடிக்கபட்டது😱 என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. எந்தவித நவீன உபகரணங்களும் இன்றி சாதாரண உளி மற்றும் சுத்தியலை கொண்டு மனிதர்களால் எவ்வாறு கட்டிமுடிக்கபட்டது என்பதை நினைத்தாலே வியப்பாக இருக்கின்றது.👏👌 காரணம் 18வருடங்களில் கட்டிமுடிக்க வேலை செய்த இக்கோவின் மொத்த தொழிலாளர்களும் 12மணிநேரம் இடைவிடாமல் பாறைகளை வெட்டி எடுத்திருந்தாலும் ஒரு நாளைக்கு கிட்டதட்ட 60லிருந்து 65டன் என்ற விகிதத்தில் அதாவது 1 மணி நேரத்தில் சுமார் 5டன் பாறைகளை வெட்டி அப்புற படுத்தியிருந்தால் மட்டுமே சாத்தியமாகிறது 1200 ஆண்டுகளுக்கு முன் நம் மூன்னோர்களின் அறிவு திறமையும் திட்டமிடலும் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது_*😱👌👏
🕌 *_சேரமான் ஜும்மா பள்ளிவாசல்_*🕌
🕌 *_சேரமான் ஜும்மா மசூதி கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் என்ற ஊரில் உள்ளது. இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது._*👌👏
🕌👌 *_இப்பள்ளிவாசலின் சிறப்புகள்._*👌
☪👌 *_இந்த மசூதி முகம்மது நபியின் காலத்திலேயே கட்டப்பட்டது._*👌👏
☪👌 *_இன்றும் எல்லா மதத்தினரும் வந்து வழிபாடு செய்யும் ஒரு திருத்தலமாக உள்ளது._*👏
☪ *_இங்குள்ள ரோஸ்வுட் சொற்பொழிவு மேடையும் கரும்பளிங்குக் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது._*👌👏
⛪ *_பனிமய மாதா பேராலயம் (தூத்துக்குடி)_*⛪
✝ *_முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம். இப்பேராலையம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும்._*👌👏
✝ *_கி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது._*👏
✝ *_நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் கம்பீரமாக கடற்கரையோரம் இருக்கின்ற இத்தேவாலயத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கானோர் வந்து செல்கின்றனர்._*👏
[17/11, 9:41 PM] +91 77082 77357: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :17.11.2017.*
🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*கட்டடக்கலையில் சிறந்தோங்கிய கோவில்களை பற்றிய ஓர் அலசல்*
🔔🔱🏰🔔⛪🔔🕌🔔🔱🏰🔔
🔱 *பாகம்*2⃣
💝 *தமிழர் கட்டிடக் கலையின் நுணுக்கங்கள், வேறு எந்த நாட்டிலும் இல்லாத சிறப்புகளை பெற்றுள்ளது என, பல கோணங்களில் நிரூபிக்க முடியும்.*🔍👍
💝 *தமிழர்கள் கட்டும் பெரும் கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைப்பது எப்படி?❓ என்பது குறித்து அவர்களுக்குத் தெளிவான அறிவு இருந்தது.*👌👍
⚜ *பழங்கால கோவில் கட்ட முதலில் தேவையான அளவு பள்ளம் தோண்டிக் கொள்ள வேண்டும். அந்தப் பள்ளத்தில் முதல் வரிசையாக மணல் கொட்டப்பட வேண்டும்.*👍
⚜ *பிறகு இரண்டாவது வரிசையாக நாகப்பழம் அளவு உள்ள கற்களைப் போட வேண்டும்.*
⚜ *பிறகு அதன் மீது 3வது வரிசையாக தேங்காய் அளவு கற்கள் போட வேண்டும்.*
⚜ *நான்காம் வரிசையில் யானை தலையளவு கற்கள் போட வேண்டும்.*
⚜ *இவ்வாறு செய்வதை திம்மியாகப் போடுவது என்று கூறுவார்கள். 🤷🏻♀ஆனால் பல ஆயிரம் ஆண்டு முன்பே இந்த நுணுக்கத்தைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.*👍
⚜ *அடிமானம் எதுவரை இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் தமிழர்களுக்கு தெளிவான அறிவு இருந்தது.*👌👏👍
☢ *கல் காணும் வரை என்று சொல்வார்கள்*
☢ *கீழே கருங்கல் இருக்குமானால் எவ்வளவு பாரம் வேண்டுமானாலும் தாங்கும். எனவேதான், பெரும் கட்டிட அமைப்புகளுக்கு கல் காணும் வரை தோண்டி அடிமானத்தை அமைக்க வேண்டும்.*👍
*👉🏻எடுத்துக்காட்டாக தஞ்சை பெரிய கோயில் செம்பாறாங்கல் எனப்படும் பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அடிமானம் 5 அடி ஆழம் மட்டுமே தரைக்குள் சென்றிருப்பதாக இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது.*👍
☢ *மணல் காணும் வரை*
☢ *மணலில் கட்டப்பட்டிருக்கும் போது எவ்வளவு பாரமாயினும் தாங்கும். தமிழகத்தில் அமைக்கப்பட்ட நெடுநிலை மாடங்கள் (கோவில் மண்டபங்கள்) மணற்பாங்கான நிலத்தில்தான் கட்டப்பட்டன.*👍
☢ *நீர் காணும் வரை*
☢ *அடிமானம் மட்டத்தில் தண்ணீர் வந்துவிட்டால் உலர்ந்துள்ள நிலையில் பாதி பாரம்தான் தாங்கும். நிலத்தடி நீர் மட்டம் இனி உயராது என்ற அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.👍 அதற்குகீழே போகக்கூடாது🙅🏻 என்று பொருள் கொள்ள வேண்டும்.*👍
☢ *மண்ணின் அடர்த்தி*
☢ *கட்டிடங்கள் கட்டும்போது மண்ணின் அடர்த்தியைத் தெரிந்துகொள்ள பழந்தமிழர்கள் எளிய சோதனையைக் கையாண்டார்கள்.*👌🔍👍
❇ *ஒரு கோல் நீளம் ஷ்*
❇ *ஒரு கோல் அகலம் ஷ்*
❇ *ஒரு கோல் உயரம் கொண்ட குழி ஒன்றை வெட்ட வேண்டும்.*
❇ *பின்னர் வெட்டப்பட்ட மண்ணை அதே குழியில் போட்டு நிரப்ப வேண்டும்.*
❇ *குழி நிரம்பியது போக மண் இருந்தால் அது வன்புலம்.*
❇ *குழியில் போட இன்னும் மண் தேவைப்பட்டால் அது மென்புலம்.*
♻ *இந்த உண்மையை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார்.*👍👌
⚜🔔 *கோயில்களையும், அணைகளையும், பெரும் கட்டிடங்களையும் எழுப்பியவர்களை தச்சர்கள் என மக்கள் அழைத்தார்கள்.*💐
⚜👏 *அவர்களுக்கு தலைமை தாங்குபவர் பெருந் தச்சன் என அழைக்கப்பட்டார்.*💐
🔔⚜ *பல்லவர், சோழர், பாண்டியர் காலத்து கல்வெட்டுகளில் பல்வேறு கட்டடக்கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தச்சர்களையும், பெருந் தச்சர்களையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.*💐😇
🔔⚜ *கட்டடக் கலை மரபில் இவர்களின் பணி குறித்தும், பெயர்க் குறித்த தரவுகளும் கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன.*🔍👍
🔔⚜ *தமிழகக் கட்டடக் கலை மரபில் பெருந் தச்சன் என அழைக்கப்படுபவது தமிழர் மரபில் மிகவும் மதித்துப் போற்றப்படுகிற ஒரு கலைஞனை சூட்டும் சொல்லாகும்.*💐😇
📜 *சங்க இலக்கியங்களிலும் தச்சு, தச்சன் ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன.*📜🔍👍
🔔 *_தஞ்சை பெரிய கோவில்_*🔔
🔱 *_ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இந்த கோவில் தமிழர்களின் பாரம்பரிய சின்னமாக இருக்கின்றது._*👌⚜
🔱 *_10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.👍 ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது._*📯⚜
🔱😱 *_இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் எந்த ஒரு நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாமல் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.😱👌 இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. 👌👏அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத்திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜராஜன். 👍1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது._*👌👏📯
🔔 *_ஐராவதேஸ்வரர் கோயில்_* *(தாராசுரம்)*🔔
🔱 *_முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ஆம் ராஜராஜனால், 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலும் பெற்றுள்ளது. 👍இந்தக் கோயிலில் காணப்படக்கூடிய மிக நுணுக்கமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளை தமிழ்நாட்டின் வேறெந்த கோயிலிலும் காண முடியாது._*👍👌👏📯
🔱 *_கட்டிட வல்லுனர்களால் 'சிற்பிகளின் கனவு' என்று வர்ணிக்கப்படும் இந்தக் கோயில் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது.👌 தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அறிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது._*👌👏📯
🔱👌 *_ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதேஸ்வரர் கோயில் கொனார்க் கோயிலை ஒத்துள்ளது.👏 ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்தியக் கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.👌 ராஜ கம்பீர மண்டபத்தின் தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. அதோடு நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும்,👏 வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே இங்கு மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.👌 யானையா, காளையா என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒரு அட்டகாச சிற்பத்தை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் வடித்திருக்கிறார்கள்._*👏👌📯
🔱👌 *_இக்கோவிலில் உள்ள நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெவ்வேறு பகுதிகளில் தட்டும்போது 'சரிகமபதநி' என்ற சப்த சுவரங்களும் ஒலிக்கின்றன.👌 மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன._*👏👌📯
🔱👌 *_2004-ஆம் ஆண்டு ஐராவதேஸ்வரர் கோயில் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டன._*👌👏👍
🔔 *கழுகுமலை வேட்டுவன் கோவில்*🔔
🔱👌 *_தூத்துக்குடி யில் உள்ள இக்கோவில் ஒரு பாறையில் செதுக்க பட்டது. 👏இன்று இருக்கும் diamond cutting கருவிகள் வைத்து கூட செதுக்க முடியாத வடிவமைப்புகள் அப்போதே தமிழன் செதுக்கி விட்டான்._*👌👏📯
🔱👌 *_இது இப்போது உலகில் இருக்கும் அணைத்து விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எப்படி செதுக்கினார்கள் தமிழர்கள் என்று வியந்து போய் உள்ளனர்._*😱👌👏
🔔 *_ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி_*🔔
🔱👌 *_இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் நான்கு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன. இதன் சிறந்த கட்டடக்கலை ஆடம்பரத்திற்க்கு எடுத்துகாட்டாகிறது._*👏📯
🔱👌 *_ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது. 👏நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது. மேலும் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரம் ஆதித்ய தேவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது._*👏👌
🔱👌 *_இந்தக் கோவிலில் வடமேற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்களையும் மேலும் பல நுட்பமான கலைநுணுக்கங்களும் சோழ காலத்தின் கட்டிட சிறப்புகளை எடுத்துரைக்கிறது. 25 அடி உயர மதில் சுவர்கள் கொண்ட இந்தக் கோவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன._*👌👏📯
🔔 *_திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் திருச்சி_*🔔
🔱👌 *_அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர்😱 பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 👏இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது_*👌👏📯
🔱👌 *_9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.👍 சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கிறன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன_*👌
🔱👌 *_966இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ்ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்_*👌🔱📯
🔔 *_கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்_*🔔
🔱👌 *_அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. 👍ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியதாக வரலாறு. கங்கையையும், கடாரத்தையும் வெற்றிக்கொண்ட ராஜேந்திர சோழன் அந்த கருவூலத்தில் இருந்து கொண்டு வந்தப் பொருட்களை கங்கை கொண்ட சோழபுரத்தில் வைத்ததாக கூறப்படுவதுண்டு_*👍
🔱👌 *_இந்தக்கோவிலில் ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வெகு அழகாக நவகிரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.👏 தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய அளவிலான லிங்கம் இருப்பது இங்கு தான்.👌 இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது .இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது._*👏👌📯
🔱👌 *_இதனுடைய கட்டுமானப்பணிகள் சோழர் காலத்தில் உள்ள கட்டிடக்கலையின் திறமையை வெளிப்படுத்துகிறது.👏 இந்த கோபுரக் கலசத்தின் நிழல் பூமியில் விழாது என்பது சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம். மேலும் இவ்விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் விமானத்தைவிட உயரம் குறைவானது. பெருவுடையார் கோயில் விமானத்தின் அடுக்குகள் நேரானவையாகும் இக்கோயில் விமான அடுக்குகள் வளைவாகவும் உள்ளன. கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு நந்தி அமைக்கப்பட்டுள்ளது.கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது._*👌👏📯
🔱👌 *_10 -12 ஆம் நூற்றாண்டுகளில், வெவ்வேறு மூன்று சோழ அரசர்களால் கட்டப்பட்ட இம்மூன்று கோயில்களும் அதிகளவிலான ஒற்றுமையமைவுகளைக் கொண்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.😱 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது._*👌👏📯
🔔 *_நெல்லையப்பர் கோவில்_*🔔
🔱👌 *_திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். 👍இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இதுவாகும்.👍 இரண்டு கோவில்களும், 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ⛓சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன._*👌👍
🔱👌 *_இக்கோவிலின் கோபுரங்களும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். புராணங்களின்படி, சிவபெருமான் தமது தாண்டவ நடனத்தை ஆடிய பல்வேறு தலங்களில் நெல்லையும் ஒன்றாகும். 👍இதனால், பரத நாட்டியம் போன்ற பழமையான நடனக்கலைகளுக்கும் இதர கலைகளுக்கும் முக்கியமான இடமாக திருநெல்வேலி கருதப்படுகிறது. இந்நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, இக்கோவிலின் உள்ளே, தாமிரத்தினால் ஆன மேடை என்னும் பொருள் படும் தாமிர அம்பலம்/தாமிர சபை அமைக்கப்பட்டு உள்ளது._*👌👏👍
🔱👌 *_இக்கோவிலின் இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் அமைக்க பட்டுள்ளது._*👌👏👍
🔱👌 *_சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தவையாகும். இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது._*👏👌
[17/11, 9:41 PM] +91 77082 77357: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :17.11.2017.*
🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*கட்டடக்கலையில் சிறந்தோங்கிய கோவில்களை பற்றிய ஓர் அலசல்*
🔔🔱🏰🔔⛪🔔🕌🔔🔱🏰🔔
🔱 *பாகம்*3⃣
🔔 *_சிதம்பரம் நடராசர் கோயில்_*🔔
🔱👌 *_நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் தென்னிந்தியாவில் ஐந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.👌👍 இவைகள் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 👍பூகோளரீதியாக அவைகள் (தக்காண பீடபூமியில்) தமிழகத்தில் நான்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன. நீருக்காக திருவானைக்காவல்,👌 நெருப்புக்காக திருவண்ணாமலை,👌 காற்றுக்காக காளஹஸ்தி,👌 ஆகாயத்திற்காக சிதம்பரம்,👌 பூமிக்காக காஞ்சிபுரம்👌 ஆகிய இடங்களில் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன._*👏👍📯
🔱👌 *_இதில் சிதம்பரம் கோவில் சுற்றுப்புற கட்டிடங்கள் 1000 வருடம் பழமையானது.😱 கோவிலின் புராதன உட்புறம் எவ்வளவு காலத்திற்கு முந்தையது என்று யாருக்கும் தெரியாது.👍 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம் என கருதுகின்றனர்._*😱👌👏
🔱👌 *_இக்கோவிலானது நம்முன்னோரகளின் அறிவியல் திறமையை பறைசாற்றும் விதமாக இருக்கின்றது._*👌👍
🔱👌 *_சிதம்பரம் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் 🌐பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதியாக அமைந்துள்ளது._*👌👍
🔱👌 *_நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற திருக்கோலம் காஸ்மிக் நடனம் (COSMIC DANCE) என்று பல ஆய்வுகளால் கருதப்படுகிறது._*👌👍
🔱👌 *_நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய பஞ்ச பூதங்களான ஐந்து இயற்கை அம்சங்களில், வானைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், புவியைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம் ஆகிய மூன்றும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது 79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்கரேகையில் அமைந்துள்ளன.👍 இன்றைய அறிவியல் கருவிகள் உதவியுடன் நாம் பார்ப்பதை, அக்காலத்தில் அமைக்கப்பட்டிருப்பது அதிசயமாகும்.😱👌 இவை நம் முன்னோர்களின் பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் 'உச்சகட்ட அதிசயம்' என்றால் அது மிகையாகாது._*👌👏
*_திருக்கோயிலின் முக்கிய அங்கமான விமானத்தின் மேலிருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிப்பதைக் குறிக்கின்றது_* _(15*24 = 21,600)_😱👌👏
🔱👌 *_மேற்படி 21,600 பொற்தகடுகளை வேய, 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 72,000 என்ற இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கின்றது. 👍இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியைக் கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்._*👌👍
🔱👌 *_'பொன்னம்பலம்' சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் ♥இதயத்தைக் குறிப்பதாகும்.👍இந்த இடத்தை அடைய ஐந்து படிகள் ஏற வேண்டும், இந்தப் படிகள் 'பஞ்சாட்சர படி' என்று அழைக்கப்படுகின்றது, அதாவது 'சி,வா,ய,ந,ம' என்ற ஐந்து எழுத்தே அது. இறைவன் இதயக் கமலத்தில் இடம் பெற ஐந்தெழுத்து மந்திரமே ஒரே வழி என்பதனை உணர்த்துவதாக இது உள்ளது_*👌👍
🔱👌 *_இந்த கனக சபையைத் தாங்கிடும் நான்கு தூண்களும் ரிக், யஜூர், சாம, அதர்வணமாகிய நான்கு வேதங்களைக் குறிக்கின்றது. 👍 நடராஜரின் 'கனகசபை' பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேராக இல்லாமல், ஒரு பக்கமாகத் தள்ளி இருக்கிறது._*👌👍
🔱👌 *_பொன்னம்பலத்தில் இருக்கின்ற இருபத்தெட்டு தூண்கள் இருபத்தெட்டு ஆகமங்களையும், சிவனை வழிபடும் இருபத்தெட்டு வழிமுறைகளையும் குறிக்கின்றன. இந்த இருபத்தெட்டு தூண்களும் அறுபத்து நான்கு குறுக்குச் சட்டங்களைக் கொண்டுள்ளது இது அறுபத்து நான்குக் கலைகளைக் குறிக்கின்றது.👍 அதைச் சார்ந்து, இதன் குறுக்கில் செல்லும் பல வித சட்டங்களும், மனித உடலில் ஓடும் பல ரத்த குழாய்களைக் குறிக்கின்றன._*👍
🔱👌 *_பொற்கூரையின் மேலிருக்கும் ஒன்பது கலசங்கள், நவ சக்திகளைக் குறிக்கின்றன. அர்த்த மண்டபத்திலுள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும், அந்த மண்டபத்தின் அருகிலுள்ள மண்டபத்திலிருக்கும் பதினெட்டு தூண்கள், பதினெட்டு புராணங்களையும் குறிக்கின்றது._*👌👍
🔱👌 *_மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது சிதம்பரம் கோயில். அதனால்தான் அதன் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கக் கூடிய ஒன்பது நவ துவார வாயில்களைக் குறிக்கின்றது._*👌👏👍
🔔 *_கடற்கரைக் கோயில் மாமல்லா புரம்_*🔔
🔱👌 *_7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். 👍இந்நகரம் மகாபலிபுரம். மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை.👏 முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது.👍 அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது._*👏👍
🔱🌍 *_இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன.👌 வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை. அர்ச்சுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதி மீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது), முற்றுப்பெறாத அர்ச்சுனன் தபசு, விலங்குகள் தொகுதியாகும்._*👌👍
🔱👌 *_சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர். கட்டுமானக் கோயில்கள்: ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்த கோயில்களை கருதலாம்.👍 மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன : முகுந்தநாயனார் கோயில் (தரையில் கட்டப்பட்டது), உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் (மலைமீது கட்டப்பட்டது), கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை)_*👌👏👍
🔱👌 *_மாபெரும் யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை. குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட் டுள்ளன. 👌இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறை சிற்பங்களைக் காண்பது அரிது._*👌👏👍
🔔 *_மதுரை மீனாட்சி அம்மன் கோவில்_*🔔
🔱👌 *_மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.👍 இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன._*👌👏📯
🔱👌 *_மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.😱👌 இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.👍 இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும்.👌 இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது._*👌👏👍
🔱👌 *_இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன.👏 கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும்.👏 இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது._*👌👏👍
🔱👌 *_மேலும் இக்கோவிலின் தனிசிறப்புகளை பார்க்கலாம்_*👌🔱
🔱👌 *_மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்._*👌👍
🔱👌 *_மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது._*👌👍
🔱👌 *_இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது._*👌👍
🔱👌 *_ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.👍மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது._*👌👍
🔱👌 *_மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது._*👌👏
🔱👌 *_600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது._*👌👏
🔱👌 *_ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன._*👌👏
⚜😇 *_பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது._*👏
🔔 *_அங்கோர் வாட் கோயில்_*🔔
🌍👌 *_உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ளது .👌😇உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான்.👌👏 இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல்.😱👌😇 ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்._*👏👌😇👍
🔱👌👏 *_பிரம்மாண்டமான இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. 👌இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது.👌 இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,👌 திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர்._*👌👏
🔱👌👏 *_பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது.👍 எந்த ஒரு நவீன கருவிகள் இல்லாத காலகட்டத்தில் இத்தனை குறைவான காலத்தில் எவ்வாறு கட்டிமுடிக்கபட்டது என்பது இன்றளவும் விடை தெரியாத ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.😱👌 ஏனெனில் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் கூட இக்கோவில் கட்ட சில நூறு வருடங்கள் ஆகும் என்று ஆராய்ச்சியாளார்கள் கருதுகின்றனர்._* 👌👏🔎👍
🔱👌 *_பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!_*👏👌🔎👍
🔱👌👏 *_இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசியக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது_*👌👏👍
🔱💐⚜💐🔱💐⚜💐🔱💐⚜
🔔 _*இசைத்தூண்கள் உள்ள கோவில்கள்*_🔔
🔔 *அழகர் கோவில்*
🔔 *ஆழ்வார் திருநகர்*
🔔 *களக்காடு*
🔔 *குற்றாலம்*
🔔 *சுசீந்திரம்*
🔔 *செண்பக நல்லூர்* *(துளை இசை)*
🔔 *தட்புத்திரி*
*தாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில் கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள மண்டபம்*
🔔 *திருப்பதி*
🔔 *திருவனந்தபுரம்*
🔔 *திருநெல்வேலி*
🔔 *தென்காசி*
🔔 *பெங்களூர்* *ராமராசன் பேட்டை*
🔔 *மதுரை*
🔔 *வெப்பாச்சி*
🔔 *ஹம்பி* *(இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)*
🔔⚜ *தமிழிசையின் மகத்துவம் நிலைத்து வாழவேண்டும் என்று பண்டைத்தமிழ் மக்கள் நினைத்தார்கள்.😇 இதனால் போலும் ஆலயங்களிலே இசைத்தூண்களை அமைத்தார்கள்.*👍
🔔🥁 *இசைக்கலைஞர்கள் கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் எனலாம்.*🥁🔔
🔔⚜ *தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக ஒலிக்கின்றது, உலகிலேயே வேறு எங்குமே இல்லாத “மிடறு” என்ற இசைத்தூண்கள்.👍 💚 உலக அதிசயங்களில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலைதான் இசைத்தூண்கள் ஆகும்.*💚⚜👍
🔔 *கோயில்களைக் கட்டும் கலையிலும் தமிழர்கள் மிகவும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.👍 தொடக்கக் காலத்தில் மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.*👍
🔔 *பின்னர் சமவெளிப் பகுதிகளில் செங்கல், சுண்ணாம்பு, மரம் போன்றவற்றைக் கொண்டு கோவில்கள் கட்டப்பட்டன. 7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில் இருந்த கோவில்களில் பெரும்பாலானவை செங்கல் கோவில்களே ஆகும். எனவே அவற்றில் சுலபமாக செடிகொடிகள் முளைத்து வளர்ந்தன.*👍
🔔 *எனவே தான் திருநாவுக்கரசர் தனது கையில் (உழவாரப் படையைத் தாங்கி) ஆயுதங்களை ஏந்தி கோயில் கோயிலாகச் சென்று செடிகொடிகளை நீக்கித் தூய்மை செய்தார்.*👍
🔔 *அப்போது தான் செங்கல் கோயில்களைக் (கற்றழிகளாக) கற்கோவிலாக மாற்றும் கலை வளர்ந்தது. பல்லவர் காலத்தில் காஞ்சி கைலாச நாதர் கோயில் கருங்கல்லால் ஆன கட்டுமானக் கோவிலாகும். பிற்காலச் சோழர் காலத்தில் செங்கல் கோயில்கள் பல கருங்கல் கோயில்களாக மாற்றி அமைக்கப்பட்டன.*👍
🔔 *இராசஇராச சோழன் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் 1000 ஆண்டு காலத்திற்கு மேலாக இன்றளவும் நிமிர்ந்து நின்று தமிழர் கட்டிடக்கலையின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்கூறி வருகிறது. பெரிய கோவிலைத் தொடர்ந்து தமிழகமெங்கும் பல கோவில்கள் பல மன்னர்களால் தொடர்ந்து கட்டப்பட்டன.*👍
🔔 *கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சாதரணமாக சொல்லவில்லை.*👌👏👍
💝😇 _*நாம் வெறும் மூட நம்பிக்கைகளால் மூழ்கியவர்கள் அல்ல, இயற்பியலிலும், கட்டிடவியலிலும் காலத்தை வென்றவர்களே....நம் பெருமைகளை நாம் தான் மதிக்க வேண்டும்...!!*_👍👍
📜📯 *_வரலாற்றின் எந்த பகுதியை திருப்பினாலும் அதில் தமிழருடைய முத்திரை இல்லாமல் இருக்காது.👍 நவீன தொழில்நுட்பம் இல்லாத காலத்திலும் கணிதம், அறிவியலில் சிறந்து விளக்கியுள்ளார்கள் என்பது நம் முன்னோர்களின் கட்டிடகலைகளே அச்சாரமாக உள்ளது._*👍📯
💐 *நன்றி*💐
💝🏹 _*கமலிகணேசனின் வரலாற்றுவேட்டை தொடரும்.......*_🏹💝
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்~1*👑
🥇 *@Jaiganesh&*
*@தமிழ்மகன்*
🎊
🥈 *@Sugumar&@nagarajan M*🎊
🥉 *@Er.JAGADEESWARAN&@🔥ARAVINTHSAMY🔥*🎊
👑 *கலந்துரையாடல்~2👑®©*
🥇 *@👉🏼SIVARAJ💘👈🏼*🎊
🥈 *@d navaneethakrishnan & @😆😝Rishi😂🤣*🎊
🥉 *@Bruce Karthi &@தமிழடியான் thamizhadian &@🙊படிக்காதவன்🙉*🎊
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*👍கருத்து🤔*
👌👏 *இவ்வளவு சிறப்புமிக்க கோவில்கள் ஒன்றன்பின் ஒன்றாக, குறிப்பாக கிராமங்களில் உள்ள கோவில்கள் செடி, கொடிகள் சூழ்ந்து பராமரிக்க படாமலே உள்ளன.*😔
😔 *சில கோவில்களில், சாதி பிரச்சனைகளால், கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாக்கள் கூட நடைபெறாமல் உள்ளன.*😔
😔 *சிலர் கோவில்களை சுத்தமாக வைத்திருக்கவும், பராமரிக்க நடவடிக்கை எடுக்காமலும் சில அரசு அதிகாரிகளும், மக்களும் கூட, ஒத்துழைப்பு தருவதும் இல்லை.* 😔
👌👏 *முன்னோர்கள் காலத்திலேயே எந்தெந்த இடத்தில் கோவில் கட்டலாம், என்று ஆராய்ந்த பின்னரே கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.* 👍👏
👌👏 *பல லட்சம் பொறியாளர்கள் ஒன்று சேர்ந்தால் கூட, முன்னோர்கள் கட்டிய கோவில்களை அதே போன்று உருவாக்க முடியுமா?🤔*
😏 *தற்போது சாதரண கட்டிடங்கள் கட்டினால் கூட, பல இடர்பாடுகள் வந்தாலும் இடிந்து விழும் சூழ்நிலையிலேயே உள்ளன.*😏
😳 *கோவில் கட்டிடங்களின் எடைகளை மட்டும், பூமி எப்படி தான் தாங்குகின்றதோ🤔, இன்றும் பல இயற்கை சீற்றங்களை, கோவில்கள் சந்தித்தாலும், கம்பீரமாய் அசையாமல் நிற்பது வியப்பிற்குரியதே.*👌👍
👌👍 *நம்மால் உருவாக்க முடியாததை...... நம்மால் அழியாமலாவது பாதுகாப்போம்......👍👍👍*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்*
*கண்ணென்ப வாழும் உயிர்க்கு*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🌹 *அறிந்துகொள்ளவும்*🌹
*மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?*
🌹 *புரிந்துகொள்ளவும்*🌹
*சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?*
🌹 *தெரிந்துகொள்ளவும்*🌹
*பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.*
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment