🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் : வெள்ளி*🌹
🌹 *தேதி :3.11.2017* 🌹
__________________________________
*💁🏻♂அறிவோம்🤔*
*நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு* *என்ன என்ன தோன்றுகிறதோ*
*அதுதான் உன்* *வாழ்க்கையைத் தீர்மானிக்கும்*. - *விவேகானந்தர்.*
⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛
*💁🏻♂அட்மின் தாட்😍*
*சாமி சிலையை திருடுகிறவன் சொல்கிறான், செய்யும் தொழிலே தெய்வமென்று...*
*யார் என்ன தவறு செய்தாலும் அதை உணராமல், காரணம் சொல்வதில் தான் குறியாக இருக்கின்றனர்.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
📣 *தலைப்பு*📣
*மரியாதைகள் யார் யாருக்கு கொடுக்க வேண்டும்? அதை எதிர்பார்ப்பது தவறா?அதனை பற்றிய முழு கலந்துரையாடல்கள்*
👍🤝👍🤝👍🤝👍🤝👍🤝👍🤝
*😍மதிப்பு மரியாதை என்பது என்ன?*
*👍மதிப்பு மரியாதை என்பது, தகுதியோடு, கௌரவத்தோடு, அபிமானத்தோடு இருக்கும் தன்மையை அல்லது நிலையை அர்த்தப்படுத்துகிறது🤝.*
*🤔அப்படியானால், மதிப்பு மரியாதை என்பது நம்மைப் பற்றி நாம் கருதும் விதத்தையும் மற்றவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் உட்படுத்துகிறது🙏. 🤔நம்மைப் பற்றி நாம் கருதும் விதத்தைப் பல்வேறு அம்சங்கள் பாதிப்பது உண்மையே.😍*
*👉அதேசமயத்தில், அன்றாட வாழ்க்கையில் மற்றவர்கள் நம்மைக் கருதும் விதம் அல்லது நடத்தும் விதம் நம்முடைய தனித்தன்மையையும் மதிப்பையும் பெரிதும் பாதிக்கிறது.😌😌*
*👉ஒரு சமுதாயம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பொதுவாக, ஏழைகள், ஆதரவற்றவர்கள், பலவீனர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்😭. என்றாலும், அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருப்பதுதானே ஒருவருடைய மதிப்பு மரியாதையைக் குறைத்து விடுவதில்லை🤙.*
*👉மற்றவர்கள் அவர்களை கருதும் விதமும் நடத்தும் விதமுமே அவர்களுடைய மதிப்பு மரியாதையைக் குறைத்துப் போடலாம்.😌*
*👉அவல நிலையிலிருப்போருக்கு மதிப்பு மரியாதை பெற உரிமை இருந்தும் பொதுவாக அவர்கள் கேவலமாக, அல்லது துச்சமாகக் கருதப்படுவதுதான் வருத்தந்தரும் விஷயம்.😖*
*😱மோசமாக நடத்தப்படுகிற முதியோர், ஏழைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உடல் குறைபாடுள்ளவர்கள், “லாயக்கற்றவர்கள்,” “தகுதியற்றவர்கள்,” “மட்டமானவர்கள்” என்று அழைக்கப்படுவதை அடிக்கடி கேட்டிருக்கிறோம், அல்லவா?😌*
*👉சரி, மக்கள் ஒருவரையொருவர் மட்டம் தட்டுவதற்கு காரணமென்ன?❓ மதிப்பு மரியாதையைப் பெற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமை எல்லா மக்களுக்கும் கிடைக்கும் காலம் வருமா?🤔*
*👉🤔ஒரு விதத்தில் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால்*
*👉🖥இப்போது சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகள் எல்லாமே ஒருவர் இன்னொருவரை மரியாதை இல்லாமல் நடத்தும் காட்சியாகத்தான் இருக்கும்🙅🏻♂🤦🏻♂. அவ்வாறு இல்லாமல் நகைச்சுவை காட்சிகள் அமைவது மிக அறிது😌*
*👨🏻ஒருவர் இன்னொருவரை மரியாதை இல்லாமல் நடத்துவதை நாம் ஏன் நகைச்சுவையாக உணர்கிறோம்? இது சற்று எனக்கு புதிராகவே உள்ளது*
*👉🖥பழைய தமிழ் சினிமாக்களில் இந்த வகை நகைச்சுவை அதிகம் கிடையாது. தற்கால நகைச்சுவை எல்லாமே இந்த விதம்தான்.*
*👉🤔ஒருவேளை சமூகத்தில் பலருக்கு பல இடத்தில் மரியாதை கிடைக்காமல் இருப்பதால், சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகர் மரியாதை குறைவாக நடத்தப்படும்போது, நம் மனம் ஆறுதல் அடைந்து சிரிக்கிறோமோ?*
*🤔சற்று ஆராய வேண்டிய ஒன்று*
*👆🏻இப்படி எதாவது யோசிச்சு பதிவு போட்டாலும் இதுலையும் சில குறைகள் இருக்கும் அது என்னான்னா...*
*🤦🏻♂நகைச்சுவையின் அடிநாதமே சோகம்தான்.*
*😳😱எந்த நகைச்சுவையில்லும் யாராவது ஒருவருடைய சோகம் ஒளிந்திருக்கும். உதாரணத்திற்கு டாக்டர் ஜோக்கை எடுத்துக்கொண்டால் அதில் நோயாளியின் சோகமோ அல்லது டாக்டரின் சோகமோ இருக்கும்.*
*😌யாருடைய சோகமும் இல்லாத ஒரு ஜோக்கை இங்கு யாராலும் தர முடியுமா?*
*இந்த கேள்விக்கு பதில் எங்க போய் தேடுவேன்...😭*
*✍எது சரி, எது ❌பிழை, எது கூடாது என்பதற்கான அளவு கோல்கள் எமது மூளையில் சின்ன வயதிலேயே பதிக்கப் பட்டு விடுகிறது.*
*🙅🏻♂பொய் சொல்லாதே, களவெடுக்காதே, பிச்சை எடுக்காதே, மது அருந்தாதே, புலால் உண்ணாதே... என்று எமக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து, முதலில் அம்மா, பின்னர் ஆசிரியர், தொடர்ந்து புத்தகங்கள்... என்று எங்கள் மூளையில் சில விடயங்கள் பதிக்கப் பட்டு விடுகின்றன. அதனால்தான் அவைகளில் ஏதேனும் ஒன்றையேனும் நாம் செய்ய வேண்டிய கட்டாயநிலை வரும் போது எங்கள் செய்கைகளுக்கு நாமே நியாயங்களைத் தேடிக் கொள்கிறோம். அல்லது குற்ற உணர்வில் குறுகிக் கொள்கிறோம். பொய் சொல்லாதே என்று படிப்பித்த ஆசிரியரே பொய் சொல்வதைக் காண நேர்ந்தால் ஏமாற்றமும் கோபமும் ஏற்படுகிறது.🤦🏻♂😭*
*😳பதின்ம வயதுகளில் உணர்வுகளை எமது கட்டுக்குள் வைக்கவோ, பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவோ எம்மால் முடிவதில்லை. சுற்றியுள்ள எதையும் கவனத்தில் கொள்ளாமல் எமது உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் அடிமையாகி விடுகிறோம். வயது ஏற ஏற ஒவ்வொன்றின் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்கிறோம். மரியாதைக்குப் பயப் படுகிறோம். இது கூடாது என்று எம்மால் தீர்மானிக்க முடிகிறது. அதனால் நாமே எமக்கு ஒரு எல்லை போட்டு வாழப் பழகிக் கொள்கிறோம். ஆசைகள், தேவைகள்... என்று எது வரும் போதும் சுற்றி உள்ளவர்களைப் பாதிக்காத விதமாக அவைகளை நிறைவேற்றப் பார்க்கிறோம். முடியாத போது எமது ஆசைகளையே குழி தோண்டிப் புதைத்து விடுகிறோம்.*
*🙅🏻♂யாருக்காகவும் எங்கள் சுயங்களை இழக்க வேண்டிய அவசியமில்லைத்தான். ஆனாலும் பல சமயங்களில் தவிர்க்க முடியாமல் இழக்க வேண்டியும் வருகிறது. காரணம் எம்மைச் சுற்றியுள்ளவர்கள்.*
*👩👩👧👦எம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்று குறிப்பிடும் போது எம்மேல் அன்பு செலுத்துபவர்கள், நாம் அன்பு கொண்டவர்கள், எங்களோடு கூடப் பிறந்தவர்கள், நாமாக எம்மோடு சேர்த்துக் கொண்டவர்கள்... என்று பலர் அடங்குகிறார்கள். இவர்களோடு எம்மைச் சுற்றியுள்ள சமூகமும் அடங்குகிறது. சமூகம் என்றால் என்ன? நாமும் அதற்குள் ஒருவர்தானே. ஆனாலும் அந்தச் சமூகத்தில் எமது தலை உருளும் போது மரியாதை போகிறதே என்று பயப் படுகிறோம்.*
*👨🏻ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதையை முக்கியமாக தான் கருதுவார்கள். அது நம்முடைய பிறப்பிலே தோன்றும் குணம்.*
*🤔✅❌மரியாதை எதிர்பார்ப்பது சரியா? தவறா?*
*👨🏻மனிதனாக இருக்கும் அனைவரும் மரியாதை எதிர்பார்க்க தான் செய்வார்கள். அதே போல நாமும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.*
*💏தாய், தந்தை*
*இவர்களின் அன்பிற்கும், பண்பிற்கும் மரியாதை தர வேண்டும்.*
*👨🏫ஆசிரியர் இடத்தில் மாணவர் குருவிற்கான மரியாதை தர வேண்டும்.*
*👴🏻வயதில் பெரியாரிடம் பேச்சில், வயதிற்கு மரியாதை தர வேண்டும்.*
*✅👉நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை தர வேண்டும்.*
*✅👉தன்னலமற்ற மனிதருக்கு மரியாதை தர வேண்டும்.*
*💪👍துணிச்சலாக, நமக்காக போராடுபவர்களுக்கு மரியாதை தர வேண்டும்.*
*🤙✅மதிப்பு, மரியாதை என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று.*
*🤔மதிப்பு என்பதை ஆங்கிலத்தில் (Value) வேல்யூ என்று சொல்கிறோம். 🤔நம்மைப் பொறுத்த அளவில் முக்கியத்துவம் என்று கொள்ளலாம்.*
*👍✅மதிப்பு ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. அது பணத்தாலும் இருக்கலாம்; கலை நயத்தலாலும் இருக்கலாம்; உபயோகத்தாலும் இருக்கலாம்.*
*👉உதாரணமாக சாதாரண செருப்பை எடுத்துக் கொள்வோம். கடும் வெயில்; சாலையோர கரடுமுரடாக உள்ளது. நடந்து செல்ல வேண்டிய நிலை. இதுவரை வெறும் காலில் வெளியில் நடந்ததே இல்லை. செருப்புகள் இரண்டும் அறுந்துவிட்டன. அணிந்து நடக்கவோ முடியாது. இந்த நிலையில் செருப்பின் மதிப்பு (Value) என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். இந்தச் சூழ்நிலையில் மிக மிக முக்கியமானது செருப்புதான். எனவே, எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு உயிரையும் மிகச் சாதாரணமாக மதிப்பிட்டு, ஒதுக்கவோ, உதாசீனப்படுத்தவோ கூடாது.🙅🏻♂*
*👨🏻மனித மதிப்பு நம்மிடம் மனம் என்கின்ற சிந்திக்கின்ற, யூகித்து அறிகின்ற ஆறாவது அறிவு உள்ளது. இதை நாம் அனைவரும் முதலில் உணர வேண்டும்.🤔*
*👉இன்று சமுதாய நிகழ்வுகளைக் கேட்கும்போது, பார்க்கும் போது, பரவலாக, குறிப்பாக இளைஞர்கள் மனித நேயத்தை மறந்து தற்காலிக திருப்திக்காக தவறான செயல்கள் செய்வதை அறிகிறோம்.*
*🤔ஏன்?*
*👉இவர்கள் தங்கள் மதிப்பை அறியாததால் தான். இதற்குக் காரணம் இவர்களது பெற்றோர்கள் என்று சுட்டிக்காட்டினால் மிகையாகாது. பொதுவாக மனிதர்கள் மற்றவர்கள் மீது வைத்துள்ள அபிப்ராயங்களை மதிப்பு எனக்கூறலாம்.😌*
*👩👩👧👦குடும்பம் என்றால் பெற்றோர் குழந்தைகள்; கணவன் மனைவி இவை தான் அடிப்படை உறவுகள்.*
*💏இவர்களுக்கிடையிலுள்ள உறவு மேலும் வலுப்பட்டு அன்புடையதாக இந்த அபிப்ராயங்கள் பேச்சிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இது மாறாது; மாறக்கூடாது.*
*👉😌சரியும் மதிப்பு அப்படி, தன் நெருங்கிய உறவுகளிடம் இவர் இப்படித்தான் என்று குறைபட்டுக் கொண்டு, இவரிடம் நேரில் தன் அபிப்ராயத்தை சரியான திருத்தத்துக்கு கூறாமல் விடுபவர்களை நாம் காண்கின்றோம். இதனால் உறவுகளின் மத்தியில் இவரது மதிப்பு சரியும்.*
*👉இதுபோல் சரிந்துவிட்ட மதிப்பை உயர்த்துவதென்பது மிகச் சிரமம்.🤦🏻♂*
*😓பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமலேயே பெரிய மாற்றுக்கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது.*
*👉✅அதனால், இவர் என்ன தான் முயன்று, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டாலும் முழுமையான திருப்தியை குடும்பத்தாரும் உறவுகளும் அடையமாட்டார்கள்.*
*🤔மதிப்பின் நிலைமாறுமா?*
*ஆம்.மாறும். உயரும் அல்லது தாழும். அழகான, நல்ல வேலைப்பாடமைந்த பொருள் உள்ளது. அதற்கென ஒரு காலம் உள்ளது🗓.*
*✅👍மறைவுக்குப் பின்னும் மதிப்பால் உயர்ந்த மனிதகுலச் செம்மல்கள் பலரை அறிவோம்.*
*👨🏻✅சாக்ரடீஸ்*
*இளைஞர்களை சிந்தித்துத் தன்னை அறிந்து செயல்பட வழிகாட்டினார். அதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்தார்.*
*✅👉அண்ணல் காந்தி*
*👴🏻💪மனிதர்களை மதங்கள் பிரித்துவிடக் கூடாது. அன்பால் எதையும் சாதிக்கலாம் என்று ஆங்கிலேயரிடமிருந்து நம் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தவர். சுய லாபத்துக்காக கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் வாழ்ந்தவர்.👍*
*✅👍👉A.P.J. அப்துல்கலாம்*
*எளிமைக்கு சிறந்த உதாரணம்.* *பதவியெனும் வாய்ப்பு இந்தச் சமுதாயத்திற்குத் தொண்டாற்றவே*.
*👨🏻தன் உறவுகளை அழைத்து வைத்து சேர்ந்திருப்பதற்கு அல்ல என்று தம் வாழ்க்கையால் போதித்து வருபவர்.* *இது போல் பலரைக் கூறலாம்.*
*✅👉மரியாதை என்பது நாம் எப்படி இருக்கிறோம் என்பது பொறுத்து தான் கிடைக்கும்*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 சிறந்த சிந்தனைவாதிகள்*👑
*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®
*😃இன்னைக்கு பதிவுகள் போட்ட அனைவருக்கும் மரியாதை 🙏செய்யும் விதமாக... 🤔இன்று அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே...*🤝🏻🌹
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*குழந்தைகள் பிறக்கும் போதே அனைத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. பிறரை மதிக்கவும், அனைவருக்கும் மரியாதை தரவும் நீங்கள் தான் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.*
*சுயமரியாதை என்பது தன்னை தானே உயர்வுபடுத்தி நினைப்பது. பெண்களுக்கு சுயமரியாதை கட்டாயம் இருக்க வேண்டும். அடிமைத்தனமாக இருப்பது, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை இது போக்கும். மற்றவர்கள் நமக்கு மரியாதை கொடுக்கும் முன் நம்மை நாமே மதித்து நடந்து கொள்வது வேண்டும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*பணிவு உடையன், இன் சொலன் ஆதல்* *ஒருவற்கு*
*அணி*; *அல்ல, மற்றுப் பிற*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*பணிவு என்பது பண்பும், அன்பும் கலந்து பிறரை மதித்துத் தாழ்ந்து வணங்கும் மரியாதை செய்யும் குணம். அதாவது பிறரை மதித்து வணங்கி மரியாதை காட்டி மகிழும் அடக்கம் உடைமை. மரியாதைக்கு உரியோரைப் போற்றும் மனோ நிலை மற்றும் செய்கை. அடக்கம் என்பது தான் எனும் ஆணவம் அடங்கிய உயர்ந்த நிலை. எனவே பணிவு என்பது அன்பையும், பண்பையும், அடக்கத்தையும், நன் மதிப்பையும் கொண்ட உயரிய ஒழுங்கு*.
*எனவே அத்தகைய உயரிய பணிவும், இனிய சொல்லைப் பேசும் பழக்கமும் ஒருவர் கொண்டிருத்தலே அது அவருக்கு அனைவரையும் வசீகரிக்கும் உண்மையான அழகாகும். ஏனையவை வேறு ஏதும் இவற்றின் முன் அழகல்ல.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*மருந்தும் விருந்தும் மூன்று வேளை.*
*மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
*🙏🏼குட்டி ராஜேஷ்~9486552988*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
*🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅*
*🏹G.K🏹*
*🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment