Saturday, 4 November 2017

சமுதாயத்தில் குற்றங்கள் பெருக யார்/எது காரணம்? மக்களின் நமக்கென்ன என்ற அலட்சிய மனப்போக்கா? கடமைகளைச் செய்யத் தவறும் அதிகாரிகள் மற்றும் சரியில்லாத சட்ட திட்டங்களா?* 🤙🛠⚖💺🤔🛠⚖💺🤔🤙🛠

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :வியாழன்*🌹

🌹 *தேதி :2.11.2017* 🌹
__________________________________
🔎 *அறிவோம்*🔍
■★■★■★■★■★■★■★■★■★
*உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம்.*

*நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை,  ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.*

💐 *~பிளாட்டோ*💐

🤷🏻‍♀ *அட்மின்ஸ் தாட்ஸ்*🤷🏻‍♂
■★■★■★■★■★■★■★■★■★
*யாரையும் நம்பாதே...!!உன்னையும் உன் உழைப்பை மட்டுமே நம்பு...!!பிறரை ஏமாற்றாதே..!!நீயும் ஏமாறாதே...!!*

📣 *தலைப்பு*📣
■★■★■★■★■★■★■★■★■★
*சமுதாயத்தில் குற்றங்கள் பெருக யார்/எது காரணம்? மக்களின் நமக்கென்ன என்ற அலட்சிய மனப்போக்கா? கடமைகளைச் செய்யத் தவறும் அதிகாரிகள் மற்றும் சரியில்லாத சட்ட திட்டங்களா?*
🤙🛠⚖💺🤔🛠⚖💺🤔🤙🛠

🌍👀🤔😴🤔🇮🇳👀🤔😴🤔🌍
*🙏கலந்துரையாடல் குழுவில் உள்ள நண்பர்களுக்கு என் தமிழ் வணக்கம்🙏*

*🤔முதல்ல இந்த தலைப்பு வைக்க என்ன காரணம்... அத கொஞ்சம் படிங்க...👇*

*🤔நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்கள், கொலைகள், 🙎🏻பெண்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அண்மையில் வெளியான தேசிய அளவிலான புள்ளிவிபரங்களும் அதிர்ச்சியடைய வைக்கின்றன.😨*

*😱குறிப்பாக 🙎🏻🙎🏻பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று தேசிய குற்ற ஆவணப்பிரிவு தகவல் கூறுகிறது. 🤔அதான் இதுக்கு யார் காரணம்னு யோசிச்சு இந்த தலைப்பு வச்சிருக்கோம்...😏*

*👉இந்த தலைப்பு பார்த்த உடனே எனக்கு தோன்றியது மக்களின் அலட்சியமே😌... காரணம் கீழே தெளிவா போட்டுருக்கேன் பாப்போம்...😩 👩‍👩‍👧‍👦மக்களுக்கு உண்மையிலேயே அலட்சியமா இல்லை இயலாமையுடன் கூடிய பயமா🤔???? அலட்சியம்னு முழுசா ஏற்றுக்கொள்ள முடியல.*🤷🏻‍♂

*👨🏻‍✈காவல்துறை பற்றி...*

*👉😱சரி பயம்னு எடுத்துக்கிட்டா , எதனால்? பாதுகாப்பின்மையால்.... சட்டம் மற்றும் 👩🏻‍✈👨🏻‍✈காவல்துறையின் மீதுள்ள அவநம்பிக்கையால்.... குற்றவாளி அவஸ்த்தைக்கு உள்ளாகலாம், சாட்சி சொல்லவந்தவர் எதற்கு அலைக்கழிக்கப்படணும்.😡*

*🤦🏻‍♂அது மட்டுமா ... சரி எந்த நம்பிக்கையில் சாட்சி சொல்ல வர முடியும். சாட்சி சொல்றத விட்டுடலாம்.😌*

*👉😢பாதிக்கப்பட்டவரே சட்ட ரீதியா 👨🏻‍✈👨🏻‍✈காவல்துறைய அணுக தயங்குவாங்க. 👨🏻‍✈காவல்துறை ரௌடியிசத்திற்கு நிகராக மக்களால் தீண்டத்தகாத ஒரு இடமாகவே இருக்கு.🤦🏻‍♂*

*👉உதாரணமா ஒரு சம்பவம். எங்க வீட்டு வாசல்ல நிறுத்தி இருந்த என் தங்கையோட சைக்கிள யாரோ சுட்டுட்டாங்க.🤦🏻‍♂*

*🏘எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த 👨🏻‍✈காவல்நிலையத்துல எங்க பெரியப்பா புகார் செஞ்சாரு.📃*

*👉🤔கொஞ்ச நாள் கழிச்சு அந்த 🚲சைக்கிள் எங்க தெருவிலயே வேற ஒரு வீட்டுக்கு முன்னால நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு😱😱.*

*😳அதே அடையாளம் கண்டுபிடிச்சு, திரும்ப எங்க பெரியப்பா போய் 👨🏻‍✈போலீஸ்காரங்ககிட்ட சொல்ல, அவங்களும் கூட வந்து அந்த சைக்கிள்காரர்கிட்ட விசாரிச்சப்ப அவர் வேறயார்கிட்டயோ இருந்து வாங்கினதா சொல்லி இருக்காரு.😨*

*👨🏻‍✈போலீஸ்காரங்க உரிய திருடனை கண்டுப்பிடிக்குற வரைக்கும் 🚲சைக்கிள் எங்ககிட்டயே இருக்கட்டும்னு சொன்னாங்க.🤦🏻‍♂🤦🏻‍♂*

*👉சில நாட்கள் கழிச்சு 👨🏻‍✈போலீஸ்காரங்க திருடன பிடிச்சிட்டோம், சில நடைமுறை (போர்மாலிட்டீஸ்) இருக்கு வாங்கன்னு சொன்னதால எங்க பெரியப்பா போனாரு.👨🏻*

*👨🏻அவரு திரும்ப வந்தப்ப செம்ம கடுப்புல இருந்தாரு😡. 👨🏻‍✈காவல்துறை அந்த செலவு இந்த செலவன்னு காசு கேட்க... எங்க பெரியப்பா நொந்தே போய்ட்டாரு.👨🏻🤦🏻‍♂*

*🚲சைக்கிள கண்டுப்பிடிச்சும் கொடுத்து, அதுக்கு மேல கைக்காச போடுறதுக்கு, நான் புது சைக்கிளே என் மகளுக்கு வாங்கிக்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டாரு😡. இந்த மாதிரி இருந்தா யாரு தான் புகார் செய்வா??*

*😢🚲இது சும்மா சைக்கிள் பிரச்சனை.. ஆனா பெரிய பிரச்சினையா இருந்தா...!??*

*🤔சரி இந்த அவநம்பிக்கைக்கு என்ன காரணம். 💶💴எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தான் காரணம்.😳*

*💁🏻‍♂குற்றவாளிகளுக்கு மட்டும் தண்டனை இருக்க கூடாது. 👨🏻‍✈கடமையை செய்ய தவறும் காவல்துறைக்கும் தண்டனை இருக்கணும்.👨🏻‍✈⛓*

*🤔ஏற்கனவே அதெல்லாம் இருக்க கூடும் , ஆனாலும் ஏன் 👨🏻‍✈காவல்துறை ஏன் மெத்தனமா இருக்கு? ஒன்னு நேர்மையான அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்டிருக்கு இல்லனா பணத்தாசை, உயிர் பயம் போன்ற சில காரணங்களால் கட்டப்பட்டிருக்கிறார்கள்.😢🤦🏻‍♂*

*🚫👨🏻‍✈கடமை தவறும் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கணும்.*

*👩‍👩‍👧‍👦மக்கள் : காவல்துறை விகிதம் அதிகப்படுத்தனும். அவங்கள வேலைக்கு தேர்வு செய்றது நேர்மையா நடக்கணும். (நானும் ரவுடி தான் படத்துல ராதிகா தன் பையன் போலீஸ் ஆகுறதுக்காக தேர்வு நடவடிக்கைளை தலையிடுவாங்களே .... அது மாதிரி இருக்கவே கூடாது)🙅🏻‍♂🙅🏻‍♂. 💁🏻‍♂👉அது ஒரு உன்னத பணி.. அதுக்கு தகுதி இல்லாதவங்க... வரவே கூடாது.🙅🏻‍♂*

*👨🏻‍⚖👩🏻‍⚖நீதித்துறை பற்றி...*

*✅👨🏻‍✈சரி இதெல்லாம் மீறி காவல் துறை ஒழுங்கா கடமை செஞ்சாலும் அடுத்த தடை, நீதித்துறை.🤦🏻‍♂*

*💁🏻‍♂👉அருள் சார் கோவிச்சுக்காதிங்க...🙅🏻‍♂*

*🤔👉ஒரு குற்றத்துக்கு தண்டனை அளிக்க எத்தனை காலம் எடுத்துப்பீங்க.*

*🤦🏻‍♀நிர்பயா மாதிரி கேஸா இருந்து... பயங்கர சென்சேஷனலா இருந்து.... குற்றவாளிகள் எந்த அரசியல் மற்றும் அமைப்பு சப்போர்ட் இல்லாம இருந்தா வேணா நீதி சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு...*

*😳இல்லனா ???? நிர்பயா கேஸ் ஒருவேள அதிக சென்சேஷன் ஆகாத இருந்திருந்தா..... 👺குற்றவாளிகள் பெரிய அரிசியல்வாதியோ , இல்ல செல்வச்செழிப்பான / அதிகார வர்க்க குடும்ப பின்னணியில் இருந்து வந்திருந்தா??? நிர்பயாவும் தூசு படிஞ்சு ஓரமா ஒதுக்கப்பட்ட ஒரு கேஸ் கட்டாவே போய் இருக்கும்.🤦🏻‍♂*

*👉இப்படி ஒவ்வொரு வழக்கம் ⌛⏱வருடக்கணக்குள இழுத்துட்டே போனா, ஒன்னு சாட்சி சொல்ல வந்தவனே செத்து போயிருவான்👎(சல்மான் கான் கேஸ் மாதிரி) , இல்லனா பாதிக்கப்பட்டவங்களே செத்துப்போய்டுவாங்க , இல்லனா நொந்து ஒதுங்கிருவாங்க 👎.... justice delayed is justice denied.*

*🚨👨🏻‍⚖வழக்கு விசாரணைகள் துரித கதியில் நடக்கணும். எல்லாத்துக்கும் ஒரு கால வரையரை இருக்கணும்.*

*✍🏻சட்டதிட்டங்கள் பற்றி...*

*👉எங்கேயாவது ஒரு கொலை நடந்தது தெரிந்து, எவரேனும் ஒருவர் 👨🏻‍✈போலீசில் தகவல் சொல்லி விட்டால் அத்தோடு அவர்கள் போலீசாரின் பிடியில் தான்.*

*🤔எப்படி என்று கேட்கிறீர்களா? துப்பு துலக்கி குற்றவாளியை பிடிக்க முடியாத போது தகவல் சொன்னவரையே குற்றவாளி ஆக்கப் பார்ப்பார்கள் அல்லது கேசை முடிக்க அவர்கள் சொல்கிறபடி கோர்ட்டில் சொல்லச் சொல்வார்கள்.😢🤦🏻‍♂*

*👉இதனால் தான் பிறர் அனுபவத்தின் மூலம் இதை உணர்ந்தவர்கள் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்ற மனப்பான்மையோடு இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.💁🏻‍♂*

*🚑🚨ஏதேனும் விபத்து ஏற்பட்டால் கூட அவர்களுக்கு உதவி செய்வதில் தயக்கம் ஏற்படுகிறது.*

*🚨👨🏻‍⚖கோர்ட், கேஸ் என்று யார் அலைவது என்று. இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் நம் நாட்டில் இருக்கும் சட்ட திட்டங்கள் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?*

*🎥மீடியா பற்றி...*

*👉சரி இவங்க எல்லாம் கடமை தவறினாலும் 🎥📸ஊடகங்களும் 📑பத்திரிக்கைகளும் கேள்விக்கேக்கணும். இவங்க எங்க.. ஏதாவது சென்சேஷனல் செய்தி கிடைச்சா அது பின்னாடியே ஓடுவாங்க, ~நாய் எலும்புத்துண்ட துரத்திட்டு போறாப்ல.~ அதிலயும் போட்டி யாரு கைக்கு முத கிடைக்குதுன்னு...🖋*

*🤦🏻‍♂இதுவும் பொழுபோக்கு வியாபாரமாகிட்டு இருக்கு.  இவங்களுக்கு ஒரு தார்மீக பொறுப்பிற்கு🤦🏻‍♂... சமுதாயமோ, சட்டம் ஒழுங்கோ எங்க தவறினாலும் தட்டிகேக்கணும்.🤝*

*🚫📛தவறு நடக்குறப்ப நியாயத்துக்கு 🗣குரல் கொடுத்துட்டே இருக்கணும். The pen is mightier than the sword. இத அவங்க உணருறாங்களாண்ணே தெரியல.*🤷🏻‍♂

*🤔ஓகே மேல படிச்சதெல்லாம் போதும் இப்ப உங்க(என்) மேல இருக்குற குறைகளைப் பற்றி பாப்போம்...*

*👱🏻நம் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வர மறுக்கும் நம்மிடையே அலட்ஷியப் போக்கு மட்டுமே இருக்கிறது.😌*

*"😫😣தனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும் , திருகு வலியும்" என்று ஒரு பழ மொழி உண்டு. அப்படி நமக்கு ஒரு பிரச்னை வரும்போது நமக்கும் உதவ யாரும் முன் வர மாட்டார்கள்... (லாஜிக் சரி தானே... நாமும் போகவில்லை... அவர்களும் வரவில்லை... எப்புடி???) அப்போ மட்டும், "சமூகம் ரொம்ப மோசம் என்று முனங்குவதில், திட்டுவதில் லாபம் இல்லை.*

*👱🏻நம்முடைய சின்ன சின்ன 😁😆சந்தோஷங்களிலேயே மூழ்கிக் கிடந்து விட்டால், மற்றவர்களுடைய பெரிய, பெரிய வலிகள் நம் 👁👁கண்ணில் படுவதில்லை.*

*🛣ரோடு ஓரமாய் நடக்கும் விபத்துகளைக் காண கூட நமக்கு பிடிப்பதில்லை...(பிறகு எப்படி உதவுவது???) . 🌡💉"ரத்தம் பார்த்தால் மயங்கியே விடுவேன்" என்று டைலாகு வேறு....*

*"யாரை சொல்லி என்ன பண்ண???" அதிகாரிகளையும், மற்றவர்களையும் குற்றம் சொல்லிப் பிழைப்பது அல்ல நம் பணி. நாம் என்ன செய்கிறோம் என்று யோசிப்போம்.🤔*

*🗒✅சட்ட திட்டங்கள் என்று சரியாக இருந்து இருக்கிறது? 🗒சட்ட திட்டங்களை உருவாக்கியதும் 👨🏻‍⚖மனிதர்கள் தானே???? சில பல ஓட்டைகள் இருக்கத் தான் செய்யும்.🤦🏻‍♂*

*👨🏻‍✈காவல்துறை... 👨🏻‍⚖நீதித்துறை.. 🎥📸மீடியா.. சரி இவங்க எல்லாம் கடமைய செய்வாங்கன்னு நாம சும்மா இருக்கலாமா... இருக்க கூடாதுன்னு தெரியுது.🤔*

*👉😌இன்னைக்கு ஒருத்தனுக்கு நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்னு அறிவுக்கு தெரியுது🙆🏻‍♂. ஆனாலும் ஒரு பயம்😱. ஒரு இயலாமை. ஒரு தயக்கம். வேற யாராவது முத போகட்டும் பின்னாடி நாம போகலாம்னு நின்னுடறோம்.🚶*

*👨🏻நமக்கு தனிச்சையா ஏதும் செய்ய பயம்😱. 👨‍👨‍👧‍👧நாலு பேரு முன்வந்தா அஞ்சாவதா போறதுக்கே யோசிக்க வேண்டியதா இருக்கு.🤔*

*👉📛இல்லனா நம்ம சுத்தி இருக்குறவங்கள பார்த்திட்டு நாமளும் அமைதி ஆயிடறோம்.🤦🏻‍♂*

*👦👧🏻சின்ன வயசில இருந்தே தப்ப பார்த்து ஒதுங்கி போ ஒதுங்கி போன்னு சொல்லி வளர்க்கப்பட்ட நாம, நம்ம கண்ணுக்கு முன்னாலேயே தப்பு நடந்தாலும், எதுவுமே செய்ய தைரியமில்லாம உறைஞ்சிப்போயிடறோம்.😌*

*😎நடந்ததை பத்தி நாலு சுவத்துக்குள்ளேயோ, நம்ம 👬நட்பு வட்டத்துலயோ இல்ல 📱சமூக வலைத்தளங்களிலோ ஆவேசமா பேசிட்டு நம்ம ஆதங்கத்தை இறக்கி வச்சிட்டு ஹப்பாடான்னு நமக்கு குற்றஉணர்வுல இருந்து விடுபட்ட நிம்மதியோட போயிடுறோம்.🚶*

*_🌏உலகம் குற்றவாளிகளால் அழியப்போவதில்லை._* *_😌அதை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்களால் தான் அழியும்._*
                               *_- ஐன்ஸ்டீன்_*

*👤சாத்தியமான வாக்கு!! ஆனாலும் என்னை போன்ற சாமானியர்களால் தான் இந்த உலகம் நிறைந்துள்ளது🙆🏻‍♂*

*🤐நாமும் கேள்வி கேட்க மாட்டோம். நம்ம நலம் விரும்பிகளையும் தட்டிக்கேட்க விட மாட்டோம்.👊*

*🤔ஆனாலும் ஒரு நல்ல விஷயம் ... நமக்கு தனியா போராட தான் பயம்😱. 👨‍👨‍👧‍👧கூட்டத்தோட நிற்க அந்தளவுக்கு பயமில்லை. இப்படியே எப்போதும் ஒரு தலைவனுக்கு காத்திட்டு இருக்குற இந்த கையாலாகாத நிலை மாறுற வரை நிரந்தர நல்ல மாற்றம் வர வாய்ப்பில்லை.⛔*

*😒😒அதுவரை சின்ன சின்ன ❌🚫தவறையாவது செய்யாமல் இருக்கலாம். 🚨ஒரு விபத்து ஏற்பட்டால், கூட இருந்து உதவி செய்யாட்டியும் , குறைஞ்சது 108க்காவது சொல்லுவோம்🚑...*

*👉இன்னும் முடியல 🙎🏻பெண்களுக்கும் கொஞ்சம் எதாச்சும் சொல்லிடுறேன்...*

*👩🏻நாம் செல்லும் இடங்களில் நடைபெறும் செயல்பாடுகளை கவனிக்கபட வேண்டும்.*

*👩🏻ஒருவரிடம் கலந்துரையாடும் பொழுது அவரை பற்றியும் அவரின் செயல்பாடுகளையும் நன்கு கவனிக்க வேண்டும்.*

*👩🏻நம்மை பற்றிய விபரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது.*

*👩🏻அன்றாட செயல்பாடுகளில் வித்தியாசமான மாற்றங்கள் தெரியுமானல் அவற்றை கண்கானிக்க வேண்டும்.*

*👩🏻அடையாளம் தெரியாதவர்கள் பின் தொடர்ந்தால் அருகில் உள்ள இடங்களிலோ அல்லது வீட்டிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும்.*

*👩🏻தொலைப்பேசி எண்களை மிக நெருக்கிய நண்பர்கள் மற்றும் விட்டில் உள்ள உறவினர்களுக்கு மட்டும் பகிர்ந்தது கொள்ள வேண்டும்.*

*👩🏻அடையாளம் தெரியாதவர்களின் அன்பான பேச்சில் மயங்கி விட கூடாது.*

*👩🏻கல்லுரி தோழிகள் தங்கள் சக நண்பர்களுடன் பொது இடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.*

*👩🏻குடும்பத்தில் ஏற்படும் வீவாதங்களின் பொழுது மிக அமைதி காக்க வேண்டும்.*

*👩🏻விட்டிற்கு புதிதாக வருபவர்களிடம் அளவான பழக்கங்கள் வைத்து கொள்ள வேண்டும்.*

*👩🏻பெண் குழந்தைளிடம் அடையாளம் தெரியாதவர்கள் தரும் பொருட்களை வாங்க கூடாது என அறிவுறுத்த வேண்டும்.*

*👩🏻அதிக மக்கள் கூடும் பொது இடங்களில் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களையும் மற்றும் ஆபரணங்களையும் தவிர்க்க வேண்டும்.*

*👩🏻வயது வந்த பெண்களோ அல்லது பெண் குழந்தைகளையோ தனிமையாக பொது இடங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.*

*👩🏻விட்டில் தனியாக இருப்பதை முடிந்த வரையிலும் தவிர்க்க வேண்டும் அல்லது அருகில் உள்ளவர்களின் தொலைப்பேசி எண்களை வைத்து கொள்ள வேண்டும்.*

*👩🏻தேவையற்ற தொலைப்பேசி எண்களுக்கு அழைப்பதோ அல்லது தொடர்ச்சியான அழைப்புகள் வருமானால் விட்டில் தெரியபடுத்த வேண்டும்.*

*👩🏻பாலிய குழந்தை திருமணங்கள் நடைபெறுமானல் அவற்றை கண்டு தெரியபடுத்த வேண்டும் அல்லது அவற்றின் விளைவுகளை பற்றி இரு தரப்பிற்கும் புரிய வைக்க வேண்டும்.*

*👩🏻காதல் நண்பர்களின் வசிய மாற்றங்களுக்கு மனதில் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.*

*👩🏻உறவினர்களிடம் கவனமுடன் பழக வேண்டும்.தேவையற்ற உறவுகளை தவிர்க்க வேண்டும்.*

*👩🏻இரவு நேர பயணங்களில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் தனியாக அதிக தொலைவு செல்வதை தவிர்க்க வேண்டும்.*

*👩🏻 பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு ஏற்ப்பட வேண்டும்.🙎🏻🚫பெண்களுக்கு ஆபத்து சமயங்களில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் தைரியமும் அவசியம்.*

*👩🏻சமூகத்தில் மாற்றம் ஏற்ப்படும்முன் ஆண்களுக்கு பெண் என்பவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பதை முதலில் வீட்டில்ருந்தே கற்றுத்தரப்பட வேண்டும்.✅*

*👩🏻 நம் நாட்டில் சட்டமும் 👨🏻‍💻அதிகாரிகளும் ஒழுங்காக இருந்தாலே மக்களிடம் மனிதநேயமும் இருக்கும் சமூகத்தில் குற்றங்களும் குறையும்.*

*👩🏻குற்றவாளிகள் மீண்டும் இதுபோல் செயலில் ஈடுபடாத அளவுக்கு தண்டணைகள் கடுமையாக வேண்டும்✅.📛தண்டணைகள் கடுமையாக இருந்தால் தான் தப்புக்கள் குறையும்.*

*🤔பொதுவான கருத்து...*

*👨‍👨‍👧‍👧மக்களின் செயல்பாடுகளில் சரி எவை…. தவறு எவை? நல்லவை எவை... தீயவை எவை? என்றோ நாட்டில் நியாயம் எது... அநீதி எது? என்பதையோ தீர்மானிக்க தெளிவான உறுதியான எந்த அளவுகோலும் இல்லாதது நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படாமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாகும். 👨🏻‍⚖சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்ற நிலையும், ஆளுக்கு ஒரு நீதி, நாளுக்கு ஒரு நீதி என்று சட்டம் கேலிக்குள்ளாக்கப்படுவது இதன் காரணத்தினால்தான்!*

*😒பலவீனமானவையும் சிறிதும் தொலைநோக்கில்லாதவையும் ஆன 👨🏻‍⚖சட்டங்கள் நடைமுறையில் இருப்பதன் காரணமாக சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொடிய குற்றங்கள் கூட சட்ட அங்கீகாரத்தோடு நடைபெறவும் நாளுக்கு நாள் பெருகவும் செய்கின்றன.😌*

*👉மேலும் நாட்டில் ❌🚫குற்றங்களும் பாவசெயல்களும் 💴மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே பாவங்களைப் பற்றிய குற்ற உணர்வும், வெட்க உணர்வும் இல்லாமையாகும்🤦🏻‍♂. 👨🏻தனி நபர் வாழ்விலும், 👨‍👨‍👧‍👧குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தன் செயல்பாடுகளுக்காக தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு நாளுக்கு நாள் பெருகி வருவதை நாம் காணலாம். நாடே குற்றம் செய்யும்போது நாம் மட்டும் ஏன் செய்யக்கூடாது என்ற உணர்வும் சிறிய குற்றம் செய்பவன் பெரிய குற்றம் செய்பவனைக் காரணம் காட்டி தன் செயலை நியாயப்படுத்திக் கொள்ளும் போக்கும் குற்றங்கள் பற்றிய பொறுப்புணர்வையும், வெட்க உணர்வையும் சமூகத்தில் இல்லாமல் ஆக்கி விடுகின்றன.🤦🏻‍♂*

*👉இந்த தொடரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து 🏛நாட்டைக் காப்பாற்ற வழியேதும் உண்டா என்று ஏங்காத உள்ளங்களே கிடையாது.😪*

*👱🏻✍நான் சொல்ல நெனச்ச விஷயத்தை உங்க கருத்துக்களோடு சேர்த்து சொல்லிருக்கேன்... தயவுசெய்து எதாவது ❌தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்... மீண்டும் ஒரு நல்ல தலைப்புடன் உங்கள சந்திக்கின்றேன்🤝... அனைவருக்கும் என் தமிழ் வணக்கம்... நன்றி🙏*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 சிறந்த சிந்தனைவாதிகள்*👑

*🥇@⁨Kumaran. G⁩*
*🥈@⁨மயிலை முருகன் 🦅*
*🥉@⁨jaiganesh2881⁩*

*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®

*🏅@⁨Arun⁩*

*🏅@⁨AK⁩*

*🏅@⁨😆😝Rishi😂🤣⁩*

*🏅@⁨Saagar M⁩*

*🏅@⁨d navaneethakrishnan⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

👊 *சமுதாயத்தில் குற்றங்கள் பெருக முக்கிய காரணம் மக்களின் நமக்கென்ன என்ற அலட்சிய மனப்போக்கு தான். காரணம், காசை வாங்கி கிட்டு ஓட்டு போடுற, மக்களுக்கு முதல்ல சூடு, சொரணை வரணும். இங்குள்ள மக்கள் (ஒரு சில நல்ல உள்ளவங்களை தவிர்த்து), குவாட்டர்காகவும், பிரியாணிற்காகவும், பணத்திற்காகவும், பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும் போதே, அறிவு வர வேண்டும்.  பண்றதெல்லாம் பண்ணிப்புட்டு, கடைசில அடுத்தவன குறை சொல்றதுல தான், முன்னடி வந்து நிக்கிறோம்.*

🔪 *முதலில் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கிறதோ, அதை முதலில் சரி செய்ய வேண்டும்.*

🤷🏻‍♂ *நேர்மையான அரசியல்வாதிகளை தேடி கண்டுபிடிச்சி, தேர்ந்தெடுத்துட்டாலே போதும். கடமைகளைச் செய்யத் தவறும் அதிகாரிகள் மற்றும் சரியில்லாத சட்ட திட்டங்களை களையெடுத்து விடலாம்.*

😏 *நேர்மையான அரசியல்வாதி, கூகுள்ளயே இல்லயேனு சங்கடப்பட கூடாது. ஏன் நம்ம மேல நமக்கு நம்பிக்கையில்லையா என்ன?🤔*

💪 *நாம் ஒற்றுமையுடன் முயற்சி செய்தால், இந்தியாவை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.*

💪 *புலம்புவதை விட்டுப்புட்டு, புரட்சிய கையில் எடுப்போம்.*

*😜உங்க எல்லாரையும் நம்பி வீர வசமானக கருத்து போட்டுட்டேன். திரும்ப திரும்ப போட்டவனுக்கே ஓட்டை போட்டு நீங்களும் புலம்பி, மத்தவஙகளையும புலம்ப வைக்காதீங்கப்பா.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

_*அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு*_
_*என்புதோல் போர்த்த உடம்பு*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*உயிரோடு கூடிய உடம்பு அன்பு வழியில் இயங்குவதாகும். அவ்வன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பானது எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பாகும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

🔹 *அறிந்துகொள்ளவும்*🔹

*நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.*

*நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.*

🔹 *புரிந்துகொள்ளவும்*🔹

*பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.*

🔹 *தெரிந்துகொள்ளவும்*🔹

*புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...