🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :சனி*🌹
🌹 *தேதி :4.11.2017* 🌹
__________________________________
*அட்மின்ஸ் தாட்ஸ்*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆
*நம் நல்ல விசயங்களை செய்ய முற்படும் போது,*
*பல இடைஞ்சல்கள் வரத் தான் செய்யும், அதை சமாளித்து வெற்றி பெறுபவனே சாதனையாளன் ஆகுறான்.*
*அறிவோம்*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆
*தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு*
💐 *- ஒளவையார்*💐
📣 *தலைப்பு*📣
*இன்றைய பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு என்னென்ன தேவை...?*
*🚨(பொதுவான தளம் வார்த்தை/எழுத்து பதிவுகளில் கவனம் தேவை.)🚨*
👧🏻⁉👩🏻⁉👧🏻⁉👩🏻⁉👧🏻⁉👩🏻
😇 *கலந்துரையாடல் குழுவில் உள்ள நண்பர்களுக்கு என் தமிழ் வணக்கம்🙏*
*🤔எது பாலியல் வன்முறை?*❓
⚠ *பாலியல் துன்புறுத்தல் என்பதில் தொடுதல் அல்லது தொட முயற்சித்தல், பாலியல் ரீதியான விஷயங்களைக் கோருதல் அல்லது வலியுறுத்தல், பாலியல் தொனியில் பேசுதல், ஆபாச படங்களைக் காட்டுதல், இதர விரும்பத்தகாத பாலியல் தன்மையுடன் கூடிய உடல் ரீதியான அல்லது வார்த்தைகள், சைகைகள் கொண்ட நடத்தை போன்றவை அடங்கும்.*
🌍 *இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடப்பதாக ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க எத்தனையோ கடுமையான சட்டங்கள் போடப்பட்டாலும் நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற பாலியல் பலாத்காரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 57-க்கும் அதிகமான பெண்கள் நாட்டில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.*
⚠ *நாட்டில் நிலவக்கூடிய சமுதாய சீர்கேடுகள் அனைத்திலும் முந்தி நிற்பது பாலியல் வன்கொடுமை என்று சொன்னால் அது மிகையாகாது... சரி வாங்க விஷயத்துள்ள போவோம்.*🤷🏻♂
⚠ *கலாச்சாரம் என்கிற பெயரில் இதுவரை பாலியல் பற்றிய பேச்சை பொதுவெளியில் விவாதிக்க தயங்கும் பிற்போக்கான சமூக அமைப்பில்தான் இருக்கிறோம் நாம். அதைப் பற்றிய சரியான புரிதல் பெரியவர்களுக்கிடையே இல்லாத பொழுது இளம் பிஞ்சுகள் என்ன செய்ய முடியும்.*⁉
⚠👩🏻 *வளர்ந்துவிட்ட பெண் சமுதாயத்தை சரியான கோணத்தில் பார்க்க நாம் சொல்லித் தரவில்லை என்பதுதான் உண்மை.*😔
🛑 *வீட்டிலும் பள்ளியிலும் சொல்லித் தரவேண்டிய தனி மனித ஒழுக்கங்கள்:-*👇
*🌸நம் வீட்டில் அப்படி யாராவது அதீத மன வக்கிரத்தில் இருப்பவர்களாகத் தெரிந்தால் உடனடியாக கவனித்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ, மற்றும் மன நல அறிவுரைகள் கிடைப்பதற்கு வழி செய்யவேண்டும். ஏனென்றால் இன்று நடக்கும் பல பாலியல் கொடுமைகள் வீட்டில் உள்ளவர்களால் தான் நடத்தப்படுகின்றது. அதுவும் நெருங்கிய உறவுகளால் என்கிறது பல ஆய்வுகள்.*🎯
*🌸வீட்டில் இருக்கும் உறவுகளின் மன நிலையைக் கவனியுங்கள். அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கு முயலுங்கள்.*🎯
*🌸உங்களால் அவர்கள் சமுதாயப் பிரச்னையாக மாறுவதைத் தடுக்கமுடியும்.*🎯
*🌸”குட் டச்! பேட் டச்” பற்றிப் பேசவிருக்கும் நாம் நமது தார்மீகக் கடமையிலிருந்து தவறுவது குழந்தைகளுக்கு நாம் இழைக்கும் அநீதியாகும்.*🎯
🌍 *👁உலக சுகாதார நிறுவனம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளது. அவை:*👇
*🌸எந்த உறுப்பும் மர்மமானதோ, ரகசிய மானதோ இல்லை. ஆனால், அந்தந்த கால கட்டத்துக்கு சொல்லி உஷார் படுத்துவது நல்லது.*🎯
*🌸யாராவது, குழந்தைக்கு முத்தம் கொடு த்தால் கூட குழந்தையை விட்டே தடுப்பது நல்லது.*🎯
*🌸தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளின் மார்பகம் உட்பட மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளை, யாரும் தொடவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுக்க வேண் டும்.*🎯
*🌸குழந்தை வீட்டை விட்டு அடிக்கடி வெளியில் போகிறாள் என் றால் அதனைக் கண்காணிக்க வேண்டும்.*🎯
*🌸நம் தொலைக் காட்ச்சியில் திரை யிடப்படும் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தும்கூட பிள்ளைகள் தவறான நடத்தைக்கு உட்படலாம். அதனால், அது சரி, இது தவறு என்று ஆரம்பத்தில் இருந்தே எச்சரிப்பதுடன், கண்காணிப்பது முக்கியம்.*🎯
*🌸வெளியாட்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவசியம் எச்சரிக்க வேண்டும்.*🎯
*🌸குழந்தைகளிடம் எந்த கட்டத்திலும், தவறு என்று தெரிந்தால், உடனே போன் செய்யவோ, வெளியேறவோ அட்வைஸ் செய்து வைக்க வேண்டும்.*🎯
😳 *நம் நாட்டிலா இப்படி?❓ நம் ஊரில் இப்படியெல்லாம் நடக்காது 😏என்று இந்த விசயத்தை ஒதுக்கிவிடாமல் நம் குழந்தைகளைக் காத்து வளமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவோம்.*👍
⚠ *ஆரம்ப கட்டத்தில் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த வகுப்புகள் நடத்தப்பட்டன என்றாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளி நிர்வாகங்கள் மழலையர் பள்ளியிலேயே இத்தகைய வகுப்புகளை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.*🎯
⚠ *அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் இயங்கிவரும் பிசிஎம் பள்ளி, கேவிஎம், குருநானக் பப்ளிக் ஸ்கூல், கிரீன்லாண்ட் பப்ளிக் ஸ்கூல் போன்றவற்றில் சிறுவர் சிறுமியருக்கு பாலியல் விழிப்புணர்வு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.*🎯
⚠ *இதுகுறித்து, பிசிஎம் பள்ளியின் தலைவர் பரம்ஜித் கவுர் கூறுகையில், மத்திய அரசின் பாட திட்டத்தின் கீழ் எங்கள் பள்ளியில் இளம் பருவத்தினருக்கான பாலியல் விழிப்புணர்வு கல்வி கற்பிக்கப்படுகிறது.*🎯
⚠ *ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவர்களுக்கு இந்த பாடம் நடத்தப்படுகிறது.*🎯
⚠ *ஆயினும், வயது பாராமல் பெருகி வரும் பாலியியல் வன்முறைகளில் இருந்து சிறுமிகளையும் காப்பாற்றும் நோக்கில், தற்போது மூன்றாம் வகுப்பு முதல் இந்தப் பாடம் நடத்தப்படுகிறது.*🎯
⚠👧🏻 *குழந்தையிடம் குழந்தை பாலியல் கொடுமை பற்றி உண்மையில் பேசுவது கடினம். எனவே அதைப் பற்றி உங்கள் குழந்தையிடம் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்பது ஒரு சிக்கலான செயலாக இருக்கலாம்.*😔
🛑 *அதற்கு இதோ, சில ஆலோசனைகள்:-*👇
♨ *ஆண்-பெண் பாலியல் உறவு என்பது ஒரு இயல்பான விஷயம் என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொண்டு, உங்களிடம் உள்ள இறுக்கத்தைத் தளர்த்துங்கள். குழந்தையிடம் பேச ஆரம்பிக்கும் முன்னர் தகவல்களை நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம்.*🎯
♨ *பொதுவான, மற்றும் சுய பாதுகாப்பு விதிமுறைகளை குழந்தைக்கு உருவாக்கிக் கொடுங்கள் எடுத்துக்காட்டாக, சாலையைக் கடக்கும்போது இரண்டு புறமும் பார்க்கவேண்டும் அல்லது தீக்குச்சியைவைத்து விளையாடக்கூடாது என்பது போன்ற பாதுகாப்பு விதிகளைக் கற்றுக் கொடுங்கள். இவற்றோடு கூடவே சுய பாதுகாப்பு விதிமுறைகளையும் கற்றுக் கொடுங்கள்.*🎯
♨ *இயல்பாகவே குழந்தை ஆவலுடன் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். _“குழந்தைகள் எங்கிருந்து வருகின்றன?” அல்லது “பாலியல் உறவு என்றால் என்ன?”_❓ போன்ற கேள்விகளைத் தவிர்க்காதீர்கள்.🎯 கேள்விகளுக்கு விடைகூறி குழந்தையின் இயல்பான ஆவலுக்கு மதிப்பளியுங்கள்.🎯 இல்லையெனில், ஆவலைத் தீர்த்துக்கொள்ள, முறையற்ற வேறு வழிகளை அவள்(ன்) நாடக்கூடும்.*🎯
♨ *“ஒரு வேளை அப்படி நடந்தால்”......... விளையாட்டைக் குழந்தையுடன் விளையாடவும். எடுத்துக்காட்டாக, “ஒரு வேளை கடைத்தெருவில், நாம் பிரிந்துபோய் உன்னால் என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீ என்ன செய்வாய்? “❓*
♨ *“ஒரு வேளை உன் தனிப்பட்ட உடல் உறுப்புகளை எவரேனும் தொட முயன்றால், நீ என்ன செய்வாய்?”❓ என்றெல்லாம் குழந்தையைக் கேளுங்கள்.*🎯
♨👧🏻 *குழந்தைக்குத் தொடர்புடைய, பழக்கமான சூழலைப் பயன்படுத்துங்கள். சரியான விடை சொல்லகுழந்தையை ஊக்கப்படுத்துங்கள்.*🎯
♨ *கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்த குழந்தைகள் பற்றியும் அவர்கள் எப்படி அந்தக்கஷ்டங்களைச் சமாளித்தார்கள் என்பது பற்றியும் உள்ள கதைகளைக் குழந்தைகளுக்குப் படித்துக்காண்பியுங்கள்.*🎯
♨ *இந்தக் கதைகளைப் படிப்பது மூலம் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி நம்பிக்கையூட்டும் எண்ணத்தைக் குழந்தையிடம் ஏற்படுத்த முடியும். குழந்தை சந்திக்கும் பிரச்சினைகள், அதற்குத் தேவையான உதவி போன்றவற்றைப்பற்றி உங்களிடம் குழந்தை பேச இது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.*🎯
📡 *மீடியாவின் பங்கு...*🤦🏻♂
📡 *பாலியில் குற்றம் தொடர்பான தொடர் விழிப்புணர்வு முகாம் எங்கும் நடைப்பெறுவதாகத் தெரியவில்லை.*🔪
📺 *தொலைக்காட்சியில் நடனம், சமையல், வாக்குவாதம் முதலியவற்றை அலசி ஆராய்ந்து பரிசு கொடுக்கப்படுகிறது.*😓
🛑 *என்றாவது இதுபோன்ற குற்றங்களுக்கு ஒரு விழ்ப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து வழங்கி இருக்கிறதா?❓ இல்லையே. 🙅🏻♂ஏன்?🤙 பாலியல் குற்றங்கள் எல்லாம் தொலைக்காட்சிக்கும், செய்தித்தாளுக்கும் வெறும் சம்பவங்களே.😡 அன்றைய நாளுக்கான ஒரு தலைப்புச்செய்தி, அவ்வளவே!*👊
🏛 *அரசாங்கத்தின் செயல்பாடுகள்:-*🏛
😡 *கடும் தண்டனைகள் அப்பொழுது மட்டும் பயன் தரும் என்றாலும், காலத்திற்கும் பயன் தராது, உச்ச பட்ச தண்டனையை உடனே தரும் அளவிற்கு நம் அரசியல் அமைப்பில் சட்டங்கள் இல்லை.*🔪
⛔ *அவர்களால் உடனே செய்யப்படக் கூடியது, முடிந்தவரை ஆபாசப் படங்களை அனைவரும் பார்க்க உதவும் இணைய தளங்களை மூடுவது, முடிந்தவரையில் தொலைபேசிகளிலாவது தடுக்கப்படவேண்டும்.*🔪
🗣 *சமுதாயத்தின் பங்கு:-*🗣
💢 *முன் சொன்ன அனைத்திலும் சமுதாயத்தின் பங்கு இருக்கிறது. மற்ற குற்றங்களைப் போல் அல்லாமல், பாலியல் வன்முறையில் மட்டும், பாதிக்கப்பட்டவர்களே, தொடர்ந்து தண்டனை அனுபவிக்கிறார்கள் சமுதாயத்தின் கைகளில். பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் மற்றும் அவர் குடும்பத்துக்கு தோள் கொடுத்து ஆதரவு அளிக்காவிட்டாலும் பரவாயில்லை.😏 ஆனால அவர்களை குற்றவாளிகளாகவும் பரிதாபமாகவும் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.*⭕
💔 *ஒரு பெண்ணிற்கு அநீதி நேர்ந்தால், குற்றவாளி தண்டிக்கப்படும் வரை போராட வேண்டும்.🔪 நியாயம் கிடைக்கவில்லையெனில், தர்மத்தை நம் கையில் எடுப்பதால் தவறில்லை. குற்றங்களுக்கு வெறும் பார்வையாளனாக மட்டும் இருப்பதை விட்டு விட்டு அதைத் தடுக்க வேண்டியது இச்சமுதாயத்தின் கடமை. 🔪இக்கடமை வீட்டிலும் பள்ளியிலும் சிறு வயதிலிருந்தே போதிக்கப்பட வேண்டும். தட்டிக்கேட்கும் வரை குற்றங்கள் நிற்கப் போவதில்லை, தட்டி வைக்கும் வரை குற்றவாளிகள் நிறுத்தபோவதில்லை.*🔪
📛 *வக்கிரம் பிடித்த நபர்களுக்கு...*📛
🔥 *திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.🔥🙅🏻♂ அது போல குற்றம் புரிந்தவன், குற்றம் செய்ய இருப்பவன் தன் தாய்க்கோ, மனைவிக்கோ, அக்கா, தங்கைக்கோ, மகளுக்கோ இப்படி பாலியல் குற்றம் நடந்தால் என்னவாகும் என்று ஒரு நொடி நினைத்துப் பார்த்தால் மட்டுமே அவனால் அந்தக் குற்றத்தை செய்யாமல் இருக்க முடியும்.*👍
🌐 *சட்ட திட்டங்கள் / அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள்:-*🛡
🛡 *கண்டிப்பாக இது தண்டனைகளை விட அதிக அளவு உதவும். ஓவ்வொரு புகாரும், நாட்டின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை போல் விரைவாக கையாளப்பட வேண்டும்.*🛡
🛡 *இதில் பாதிக்கப்பட்டவர்கள், களங்கப்படாமல் நடத்தப்பட வேண்டும். இது காவல் நிலையம் மூலமாக மட்டுமே கையாளப்பட வேண்டிய நிலை மாறி,*🛡
*👉🏻சில சமூக ஆர்வலர்கள்,*
*👉🏻 மனோதத்துவ நிபுணர்கள்,*
*👉🏻professional family counsellors அடங்கிய குழு/சங்கம் மூலமாகவும் நடத்தலாம்.*
🛡 *அப்போ தான் மக்கள் தைரியமாக புகார் தர முன்வருவார்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கும் மறுவாழ்விற்குரிய நடவடிக்கைகள் தொடங்குகின்றன.*🛡
🔴 *பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குக் காரணமாக இருப்பதில் முக்கியமானவை வலைத்தளங்கள்.*🔴
😡 *இன்றைய மாணவர்கள் கையில் பேனா இருக்கிறதோ இல்லையோ அனைவரிடத்திலும் கைபேசி உள்ளது.*🤦🏻♂
😡 *வலைத்தளங்களில் உலாவும் தவறான காட்சிகளையும் செய்திகளையும் முறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம். அரசு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.*🔪
👥🗣 *பொதுவான கருத்து...*
😏 *இப்போதுதான் இதுபோன்ற கொடுமைகள் பரவலாக நிகழ்கிறது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. இது உண்மையல்ல.*🙅🏻♂
👩🏻👧🏻🛑 *பெண்களுக்கு எதிரான கொடிய அடக்குமுறைகள் காலாகாலமாக இந்தியாவில் நடந்து வருகின்றன.*🎯
🔴 *இதற்கான காரணங்களை நாம் வகைப்படுத்தும்போது அரசை மட்டுமே குற்றம் சொல்வதில் பயனில்லை.*🙅🏻♂🔪
🔴👩🏻👧🏻 *பெண்கள் மட்டுமல்லாது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு தருவது அரசின் பொறுப்புதான், கடமைதான் என்ற போதும், நமது இந்திய மனங்களில் பெண்கள் குறித்து காலகாலமாக உருவாக்கி வந்திருக்கும் பதிவான சில பிம்பங்களும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.*🔪
🌍 *இந்திய பழமைவாத சமூகம் பெண்கள் குறித்து இயல்பிலேயே அவளை ஒரு மனித உயிரியாகக் கூட எண்ணுவதில்லை.*😔
😔 *சமையல் கட்டிலும், கட்டிலுக்கும் மட்டுமே உபயோகமானவள் பெண் என்பதே நமது சமூகத்தில் நிலவி வந்திருக்கும் பண்பாடு.*😔
🎯 *இதைக் கருத்தில் கொண்டே இன்று பெண்கள் மீது ஏவப்படும் பலாத்காரம் குறித்து சிந்திக்க வேண்டும்.*🎯
🎯 *இதில் சம்பந்தப்பட்ட ஆண்கள் பெண்கள் தவிர, சமூக பாதுகாப்பின்மை, ஊடகங்களின் ஆபாசம் ஆகிய அனைவருமே காரண கர்த்தாவாக ஆகிறார்களா?🤙 தற்போது இவ்வாறான பெண்மைக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தேவை என்ற நிலைப்பாடு அனைவரிடமும் ஏற்பட்டிருக்கிறது.*🔪
🔴 *_'நள்ளிரவில் ஒரு பெண் தன்னத்தனியாக எவ்வித அச்சமுமின்றி உலாவரும் நாளே இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்தது என்பதைக் குறிக்கும் நாளாகும்' என்றார் காந்தி._*🔴
😔 *_அறுபது வருடங்களுக்கு மேல் ஆகியும் அப்படி ஒரு நாள் இன்றும் வரவே இல்லை 🙅🏻♂என்பது தான் வரலாற்றில் பெரும் சோகம்!_*😔
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 சிறந்த சிந்தனைவாதிகள்*👑
*🏅Karthikeyan c🤗*
*🏅jaiganesh2881*
*🏅SP.Vignesh*
*🏅மன்னை மணிவர்மன்*
*🏅Kumaran. G*
*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®
*🏅 d navaneethakrishnan*
*🏅 😝😆rishi😂🤣*
*🏅 bismilla*
*🏅 archana@183*
*🆕புதிதாக இணைந்த நண்பர்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை👍🏻🤝🏻*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
😇 *ஒவ்வொரு மனிதனுக்கும் சுய ஒழுக்கமும்,கட்டுப்பாடும் அவசியமே...ஆணும் பெண்ணும் சமமாக மதிக்க படவும் வேண்டும்....காக்க படவும் வேண்டும்...*
*இதை குழந்தை பருவத்தில் இருந்து கற்று கொடுக்கவும் வேண்டும்*😇
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்*
*உயிரினும் ஓம்பப் படும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
❣ *அறிந்துகொள்ளவும்*
❣
*பெண் பாவம் பொல்லாதது*
❣ *புரிந்துகொள்ளவும்*❣
*பெண்* *இன்றிப்பெருமையும் இல்லை*
*கண் இன்றிக் காட்சியும் இல்லை.*
❣ *தெரிந்துகொள்ளவும்*❣
*ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment