🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 *தேதி : 21.11.2017* 🌹
🌹 *கிழமை : செவ்வாய்*🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்.*
*மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்*
*பெரியார்*
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*மரத்தில் இருக்கும் பழங்களை பறிக்க கல்லால் அடித்தால் ஏதோ ஒருபழம் விழும் அல்லது விழாதுமபோகாலாம்.*
*ஆனால் கஷ்டப்பட்டு ஏறிபறித்தால் நீ விரும்பிய பழத்தை பறிக்கலாம். வாழ்க்கையில் வாய்ப்புகளும் இதுபோலவே அதிர்ஷ்டத்தைவிட உன்னை நீ நம்பு...!*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*பொது விநியோக திட்டத்தில்(ரேஷன் கடை) ஏற்பட்டுள்ள மாற்றங்கள்... திடீர் விலை உயர்வு... அதனால் மக்களின் நிலை... விலையேற்றத்திறக்கான காரணங்கள்.*
===================
*👬👭கலந்துரையாடல் குழுவில் உள்ள நண்பர்களுக்கு எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻*
_*🔃ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சனைகளையும்... அதற்க்கான காரணங்களையும் விவாதத்தித்து வருகிறோம்🤔... அது போல இன்றும் ஒரு பிரச்சினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்🤝👍..*_
*⚖நியாயவிலை கடைகளின் மூலம் 🌍இந்திய 👨👩👧👧குடிமக்களுக்கு, அவர்களின் அடிப்படை ஆதாரமாக இருக்கக்கூடிய 🌾உணவுவையும், 🔥எரிபொருளையும் வழங்குவது தான்...*
*_⚖"பொது விநியோகத் துறையின் மூலமாக அந்த திட்டத்தின் மூலமாக 🌍இந்திய அரசு கடைபிடிச்சு வந்துட்டு இருக்குது..."_*
_*🌍உலகிலேயே மிகப்பெரிய பொது விநியோக திட்டத்தை நடைமுறைபடுத்தியிருக்கும் நாடு *இந்தியா🌍👍*_
*2⃣இரண்டாம் உலகப்போரில் இருந்து துவங்கிய இந்த பொது விநியோக திட்டமானது⚖...*
*🏛நாட்டில் ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது😭. உணவு கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் பலியாயினர்😭😱. அப்போது அத்தியாவசிய 🌾உணவுப் பொருட்களை பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்குவதற்காக 1960-ம் ஆண்டு இத் திட்டம் கொண்டுவரப்பட்டது.👍*
*👉அதனை தொடர்ந்து Agriculture Prices Commission மற்றும் The Food Corporation of India என்ற ஒரு அமைப்பும் 1965-ல் உருவாக்கப்பட்டது.🤝*
*👉🤔இதன் நோக்கம் விவசாயிகளிடம் இருந்து உணவை குறைந்த பட்சம் 💴விலை கொடுத்து 🌾பொருள்களை கொள்முதல் செய்து பின்னர் 🌍இந்தியாவில் உள்ள அனைத்து குடி மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு 🍲உணவு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு , மாதந்தோறும் இன்றியமையா பொருட்களை நல்ல தரத்தோடும் நியாயமான விலையில் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே ⚖நியாயவிலை கடைகள் வாயிலாக விநியோகம் செய்வதே பொது விநியோக திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.🤝*
*👉1970 ஆம் ஆண்டு இந்த கொள்முதல் செய்து விநியோகிக்கும் உணவுகள் எல்லாம் எல்லாருக்கும் வழங்கனும் அதாவது யுனிவர்சல் ஸ்கீம் என்று கொண்டு வந்தார்கள்👏👌...*
*👉அது 1990 க்கு பிற்பாடு ⛰மலைகளில் இருக்கக்கூடிய 👴🏻பழங்குடியின மக்களுக்கும், குக் கிராமங்களில் இருக்கக்கூடிய அடிப்படை வசதியே போய் சேராதா மக்களுக்கு 🍲உணவு , 🔥எரிபொருள் இதெல்லாம் அத்தியாவசியமாய் போய் சேந்துரனும் அதுவும் இந்த ⚖நியாயவிலை கடைகளின் மூலமாக போய் சேரனும் அப்படி ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தார்கள்👍.*
*🌍நமது நாட்டில் தனியார்மயம் தாராளமயத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, பல்வேறு 😌குற்றங்குறைகளோடு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் (Universal Public Distribution System) நடைமுறையில் இருந்து வந்தது😏.*
*🤔👉அதன் பின்னர், இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டத்தை(Targeted Public Distribution System) 1990களின் இறுதியில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது, மைய அரசு. இதற்கேற்ப, 📗குடும்ப அட்டைகள் வழங்குவதில் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர் என்ற பிரிவினை கொண்டுவரப்பட்டு, 📙பல வண்ண அட்டைகள் வழங்கப்பட்டன.*
*🏛இன்று, தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து, 💁🏻♂பெரும்பாலான மாநிலங்களில் இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம்தான் நடைமுறையில் இருந்து வருகிறது.👍*
*🍲🌾உணவு மானியத்தை வெட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரிவினையை, உணவுப் பொருட்கள் 👴🏻ஏழைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டதாக அப்போதைய ஆளுங் கும்பல் பூசி மெழுகியது.🤷🏻♂*
*😌ஆனால், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதைக் குறிக்கும் 📗குடும்ப அட்டைகள் பெரும்பாலான ஏழைகளுக்குக் கொடுக்கப்படவில்லை🤦🏻♂ என்பதையும் இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பட்டினியால் வாடும் இந்திய 👨👩👧👧மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் அப்போது வெளியாகியுள்ள அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள்கூட ஒப்புக் கொண்டுள்ளன.👍*
*👉சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, “உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள 88 நாடுகளில் 🌍இந்தியா 66 ஆவது இடத்தில் இருக்கிறது.”😌🤦🏻♂*
*😓உலகெங்கிலும் சத்தான உணவின்றி அரைகுறைப் பட்டினி நிலையில் வாழும் 👨👩👧👧மக்களில் ஏறத்தாழ 27 சதவீதத்தினர் (23 கோடி பேர்) இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்;😌*
*😓இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 75,000 👶🏻குழந்தைகள் சத்தான உணவின்றி இறந்து போகின்றன;😭*
*😓உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 15 இலட்சம் 👶🏻குழந்தைகள் அரைகுறைப் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுகின்றன என 🌍இந்தியாவின் பட்டினிப் பட்டாளத்தைப் பற்றிப் பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.😳*
*👉தற்பொழுது நாடெங்கும் 11 கோடிக்கும் அதிகமான 👨👩👧👧குடும்பங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதைக் குறிக்கும் 📗📙குடும்ப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 📗இந்த அட்டைகள் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளையும், மோசடிகளையும் தடுக்க முன்வராத தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா, இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்துவிடும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மசோதாவின்படி, 🏡கிராமப்புறங்களில் வாழும் மக்களில் 90 சதவீதப் பேருக்கும், 🏬நகர்ப்புறங்களில் வசித்துவரும் 50 சதவீதப் பேருக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுமென்றும், அதே சமயம், இவர்கள் அனைவருக்கும்கூடக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்க முடியாது என மசோதா தெளிவாக வரையறுத்திருக்கிறது.✍*
*🤔அதாவது, 🏡கிராமப்புறங்களில் 🌾உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் 90 சதவீதப் பேரில், 44 சதவீதப் பேர் முன்னுரிமை தரத்தக்கவர்களாக வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் 🌾அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். மீதி 46 சதவீதப் பேர் பொதுவானவர்களாக வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மானிய விலையைவிடக் கூடுதலான விலையில் 🌾அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். 🏬நகர்ப்புறங்களில் இத்திட்டத்தின் கீழ் வரும் 50 சதவீதப் பேரில், 28 சதவீதப் பேர் முன்னுரிமை தரத்தக்கவர்களாகவும், 22 சதவீதப் பேர் பொதுவானவர்களாகவும் வகைப்படுத்தப்படுவார்கள்.✍*
*😌வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே எனக் 📗குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டிருப்பதற்கு, முன்னுரிமை தரத்தக்கவர்கள், பொதுவானவர்கள் எனப் புதிய நாமகரணம் சூட்டுகிறது, ✍இம்மசோதா. மேலும், ⚖பொது விநியோக முறையிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்கள் என்ற புதிய பிரிவையும் இப்படி விலக்கி வைக்கப்படுபவர்கள் 🏡கிராமப்புறங்களில் 10 சதவீதமாகவும், 🏬நகர்ப்புறங்களில் 50 சதவீதமாகவும் இருப்பர் உருவாக்கியிருக்கிறது. இப்படி விலக்கி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் எனக் கூறிகிறது, இம்மசோதா.👈*
*👉🏛தற்பொழுது தமிழகத்தில் 📗குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 20 கிலோ வரை 🌾அரிசி வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு ⚖ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படுகிறது. 🍲உணவு பாதுகாப்பு மசோதாவோ, “முன்னுரிமை 📗குடும்ப அட்டை பெற்றவர்களுக்குக்கூட ஒரு கிலோ அரிசி 💴மூன்று ரூபாய் விலையில்தான் வழங்கப்படும்; ⚖ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் 🌾அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகள் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும்” என்று கூறுகிறது. இதுவொருபுறமிருக்க, முன்னுரிமை 📗குடும்ப அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை அவ்வப்பொழுது வறுமைக் கோடு பற்றி எடுக்கப்படும் கணக்கீட்டின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும் என்றும் இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.✍*
*👉இதன்படி பார்த்தால், 👴🏻ஏழைகளுள் ஒருபகுதியினருக்குக்கூட உணவுப் பாதுகாப்பு கிடைக்கும் என்றோ, அவர்களுக்கு மலிவான விலையில் 🌾அரிசியும் கோதுமையும் கிடைக்கும் என்றோ எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது🙅🏻♂. இந்த மசோதா தற்பொழுது ஏழைகளுக்குக் கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பை மட்டுமல்ல, ⚖பொது விநியோகத் திட்டத்தையும், பொதுக் கொள்முதலையும் ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடுதான் தயாரிக்கப்பட்டுள்ளது.🤦🏻♂*
*🌍உலக வங்கி “இந்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்” குறித்துத் தயாரித்துள்ள அறிக்கையில், “⚖பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக 🌍இந்திய அரசும் பொருளாதார நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். இதனைக் களையெடுக்கக் 📗குடும்ப அட்டைதாரர்களுக்கு 🌾உணவு தானியங்களை வழங்குவதற்குப் பதிலாக, 💴பணத்தைக் கொடுத்து வெளிச் சந்தையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்கெனவே ஓரளவு 🌾🍲உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியுள்ள மாநிலங்களில் அல்லது மாவட்டங்களில் கொண்டு வர வேண்டும். இதற்கு ஏற்ப 🌾உணவுக் கொள்முதலில் தனியாரையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.💁🏻♂*
*👉🌍உலக வங்கியின் இந்த ஆலோசனையில் முதல் வரியல்ல, கடைசி வரிதான் நம் கவனத்துக்குரியது. ரேசன் கடை ஊழல் என்று பேசத் தொடங்கி, 🌾உணவுக் கொள்முதலில் தனியாரை நுழைப்பது என்று முடிகிறது 🌍உலகவங்கி அறிக்கை. உலக வங்கி கூறுவதற்கு முன்னாலேயே கொள்முதலில் ஏற்கெனவே தனியார் மண்டிகள் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உலக வங்கி கூறும் தனியார் என்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள். ⚖ரேசன் கடைகளும், அரசாங்கத்தின் தானியக் கொள்முதலும் அவர்களுடைய ‘சுதந்திரமான’ வர்த்தகத்துக்கும், கொள்ளை இலாபத்துக்கும் தடையாக இருக்கும் என்பதனால்தான், ⚖ரேசன் கடைகளை ஒழித்துவிட்டு🙅🏻♂ 💴பணத்தைக் கொடுக்கச் சொல்கிறது உலகவங்கி.🤦🏻♂*
*🌾மளிகைப் பொருட்கள் சில்லறை விற்பனையில் ஏற்கெனவே இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துவிட்ட நிலையில்😌, இப்பொழுது அத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதிக்க முடிவெடுத்திருக்கிறது, மைய அரசு. இன்னொருபுறம், 📗குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக பணத்தைக் கொடுத்து, அவர்களைச் சந்தையின் சூதாட்டத்தில் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது🤦🏻♂*
*😌பட்டினியால் வாடும் ஏழை 👨👩👧👧மக்களுக்கு ரேஷன் கடைகளின் மூலம் தேவையான 🌾உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிடுமாறு கோரி உச்ச 👨🏻⚖நீதிமன்றத்தில் 2001 இல் ஒரு வழக்கு தொடரப்பட்டது. “வறுமைக் கோட்டைத் தீர்மானிக்கும் அளவுகோல் எது?🤔” என்பது பற்றி அரசாங்கத்தால் ஒரு முடிவுக்கு வர முடியாததால் அவ்வழக்கு முடியவில்லை.🙆🏻♂*
*🤔என்ன செய்வது? தனியார்மய தாராளமயக் கொள்கைகள் 💴விலைவாசி உயர்வைத் தீவிரப்படுத்துகின்றன. 🌾😌விவசாயத்தை அழித்து 👴🏻விவசாயிகளின் நிலவெளியேற்றத்தை தீவிரப்படுத்துகின்றன. தாராளமயக் கொள்கைகள் சிறு தொழில்களை அழிக்கின்றன🤦🏻♂. வறுமைக்கு ஒரு அளவுகோலை நிர்ணயிக்கலாமென்றால், அதற்குச் சற்றும் அவகாசம் தராமல் ஒவ்வொரு கணமும் 💴விலைவாசி மேலே செல்கிறது. வாழ்க்கைத் தரம் கீழே செல்கிறது. வழக்கும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது😌.*
*👉எனவேதான் கைக்குப் பிடிபடாத வறுமையை ஒழிப்பதற்குப் பதிலாக, முதலில் பட்டினியை ஒழித்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு✍. அந்த முயற்சியின் முதல் கட்டம்தான் ரேசன் கடை ஒழிப்பு🙆🏻♂. அடுத்த கட்டம் 🌾உணவுப் பாதுகாப்பு அதாவது 🏢கார்ப்பரேட் முதலாளிகளின் 🌾உணவு தானிய வணிகத்தைப் பாதுகாப்பது! இந்த அயோக்கியத்தனத்தைத் தேசிய அளவில் செய்யத்திட்டமிட்டிருப்பதால் இதற்கு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.😳*
*👉🙆🏻♂அடுத்தது மோடி அரசு...*
*_👉GST என்று தமிழில் கூகிள் டிரான்ஸ்லேட் -டில் எழுதினால் அது கிஸ்தி என்று காட்டுகிறது😡. இதைவிட வேறு என்ன வேண்டும். இது மட்டும் நம் மத்திய அமைச்சர்களுக்கு தெரிந்தால் 🖥மெர்சல் படத்திற்கு கொடுத்த விளம்பரத்தை நம் எல்லையில் இருக்கும் 🏡கிராமங்களுக்கும் கொண்டு செல்வர். கூகுளை குடிசைக்குள்ளும் கொண்டு செல்வர்._*
*_👉இப்படி GST பயத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த அன்றாடங்காய்ச்சிகளின் குடிசைகளில், இட்லி என்ற உணவு அறவே வராததாக ஆக்கிவிட்டார்கள்😲. கேட்டால் கொடுப்போம் என்கிறார். எதை? என்பதை அமைச்சரைதான் கேட்க வேண்டும்.😌 அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டிய அமைச்சர், அதிரி புதிரியாக சிலவற்றை செய்து 🖥ஊடகங்களின் உயர்ந்த மின் வெளிச்சத்தில் மின்னுகிறார்_✨*
*_👉இந்த உலகமயமாக்கலின் உச்சத்தில் தவித்து கொண்டிருக்கும் அடித்தட்டு 😌😓மக்களின் வாழ்க்கை, அவர்களின் தட்டளவாவது உயருமா என்ற சந்தேகம் பலருக்கும் விதைத்துள்ளது😔_*
*_🏛தமிழ்நாட்டு மக்களின் கல்வி தரத்தை உயர்த்த, மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கர்மவீரர் காமராஜர் சத்துணவு திட்டத்தை வகுத்தார்✍_*
*_👉ஆனால் நம் அமைச்சர் காமராஜோ, இருக்கிற திட்டத்திலிருந்து உளுத்தம் பருப்பை எடுத்து நாட்டின் கஜானாவுக்கு நன்மைகளை வழங்கியுள்ளார்._🙆🏻♂*
*😓_ஆம் ரேஷன் கடைகளின் மூடு விழாவுக்கான முதல் அறிக்கையை மறைமுகமாக செய்துள்ளார் அமைச்சர் காமராஜர். சில தினங்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு கிடையாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்😲._*
*_👉அமைச்சர் காமராஜ் அவர்களின் அறிவிப்பு அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் இன்னுமொரு பாறாங்கல்லை போட்டிருக்கிறது._🙆🏻♂*
*_🤔ஒரு வேளை இதைப் பற்றி அமைச்சர் செல்லூ ராஜூவிடம் கேட்டால், 'உளுந்தை எடுக்கிறது ஒரு தப்பா?. அன்று அம்மாவே உளுந்து நல்ல பொருள் இல்லை' என்று கூறினாலும் கூறுவார்😉_*
*🏕ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மானியம் இல்லை என்று கூறும் அரசின் கவனத்தில் சில😱....*
*👉பல விவசாயிகள் புன்செய் நிலமாக ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள்... ஆனால் அவர்களுக்கு 💦மழை நாட்களில் மட்டுமே விவசாயம்🌾... கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிக பேர் ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக புன்செய் நிலம் வைத்திருந்தவர்கள் தான்😓...*
*😓இன்னும் நிறைய சொல்லமுடியா துயரங்களும் உள்ளன...😓*
*👉இன்று வெளியான செய்தி...*
*'⚖ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என, இதுவரை, 3,500 பேர் மட்டுமே, 🏛தமிழக அரசிடம் தெரிவித்துள்ளனர்.*
*🏛⚖தமிழக ரேஷன் கடைகளில், 1.93 கோடி குடும்பங்களுக்கு, 🌾அரிசி உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதற்காக, ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாயை அரசு செலவு செய்கிறது.*
*😲அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலரும், அரிசி ரேஷன் கார்டு வைத்து உள்ளனர்; பொருட்கள் வாங்குவது இல்லை.🙅🏻♂*
*😓ஆனால், பொருட்கள் வாங்கியது போல், ரேஷன் ஊழியர் முறைகேடு செய்யும் விபரத்தை, உணவு வழங்கல் துறை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவித்தும், அவர்கள், அதை கண்டு கொள்வதில்லை🤦🏻♂. மத்திய அரசு, வசதியானவர் களை, சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை விட்டு தரும்படி, வலியுறுத்தி வருகிறது. அதை ஏற்று, பலரும், 'மானியம் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் தெரிவித்து வருகின்றனர்🤦🏻♂. இதே போல், 🌾ரேஷன் பொருட்களை, விட்டு கொடுக்கும் திட்டத்தை, உணவுத் துறை துவக்கியது. ஆனால், இதற்கு பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.😓🙆🏻♂*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑
*🏅 👉🏼SIVARAJ💘👈🏼*
*🏅 Santhi😊*
*🏅 sukumar ❤Zhorba*
*🏅 bismilla*
*🏅 பேரறிவு💫*
*🏅 DEVENDRANhp*
*🏅 jaiganesh2881*
*🏅 Ganesh*
*🏅 Vita Safe Life My Company*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*_படிப்படியாக ஒவ்வொரு பொருளையும் நிறுத்திவிட்டு சில வருடங்களுக்கு பிறகு ரேஷன் கடைகளில் அரிசி கொடுக்கப்போவதில்லை. காஸ் மானியம் போல அரிசிக்கும் மானியம் கொண்டுவருவதாக அறிவிப்பார்கள். ஏழை, எளிய மக்களுக்கு இனி அரிசி மலிவு விலையில் கிடைக்காது._*
*_அரசு இனி அரிசியை சேமிப்பதோ, கொள்முதல் செய்யப்போவதோ இல்லை. இந்திய விவசாயிகளுக்கு மானியம் நிறுத்தப்படும்._*
*_வெளிநாட்டிலிருந்து அரிசியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வார்கள். உர மானியம், மின்சார மானியம் எதையும் இந்திய விவசாயிகளுக்கு அரசு தரப்போவதில்லை என்பதால் நமது விவசாய உற்பத்தியின் விலை அதிகமாக இருக்கும். இதனால் நமது விவசாயிகள் அழிவை நோக்கி செல்வார்கள்._*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*_இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்_* *_காத்த_*
*_வகுத்தலும் வல்ல தரசு_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*_பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்._*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.*
*உளவு இல்லாமல் களவு இல்லை*.
*உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்*.
*உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment