Saturday, 2 December 2017

பத்மாவதி படத்தின் சர்ச்சையும் அதன் உண்மை வரலாறும்.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 *தேதி  : 26.11.2017* 🌹
     🌹 *கிழமை : ஞாயிறு*🌹
____________________________________

      *📣அறிவோம்📣*

*_இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்._*

*_ஆலன் ஸ்டிரைக்_*

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*_ஒருவர் அடைந்ததை கண்டு பொறாமை கொள்ளாதீர்கள்._*

*_அவர் இழந்ததை அறிந்தால் அடைய வேண்டும் என்ற எண்ணமே வராது_*

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

*பத்மாவதி படத்தின் சர்ச்சையும் அதன் உண்மை வரலாறும்.*

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

===================

*_🙏கலந்துரையாடல் குழுவில் உள்ள நண்பர்களுக்கு எங்கள் முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்🙏. 🤔சமீபகாலமாக 🌏உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் பத்மாவதி 🎥திரைப்படம் பற்றிய பிரச்சனையை பார்க்க போகிறோம். என்னடா ஒரு 🎥திரைப்படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்களே என்று யோசிக்க வேண்டாம்🙅🏻‍♂. இப்படத்திற்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கின்றது_🔜*

*_🤔முன்பெல்லாம் ஒரு 📽படம் வெளியிடும் போது படத்தோட தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கின்றது, கதை திருடப்பட்டது, படம் வெளிவந்த பிறகு அரசை இப்படம் விமர்சிக்கிறது என்றெல்லாம் எதிர்ப்புகள் வருவதை நாம் அன்றாடம் காண்கிறோம்😲. ஆனால் முதன்முறையாக ஒரு படம் தணிக்கை குழுவிற்க்கு செல்லும் முன்பாகவே பட்டி தொட்டியெல்லாம் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்றால் அது பத்மாவதி படம் தான்🙄. சரி அப்படி என்ன தான் இப்படத்தோட பிரச்சனை.??🤔 யார் அந்த பத்மாவதி?? எதற்கு இத்தனை எதிர்ப்பு என்றெல்லாம் பலருக்கு கேள்விகள் எழலாம் அதைபற்றி முழுமையாக காண்போம்.😥_*

*_🤔யார் இந்த பத்மாவதி?_*

*_🌏ஸ்ரீலங்காவில் வாழ்ந்த பேரழகி தான்  👸🏻ராணி பத்மினி அல்லது பத்மாவதி இந்தியாவின் சித்தோர்கார் இராச்சியத்தின் இராணியும், மன்னர் ராவல் ரத்தன் சிங்கின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்._*

*_👸🏻பத்மாவதி வாழ்ந்த காலத்தில் இவருடைய அழகு வேறு எந்த பெண்ணுக்கும்  கிடையாது😍. இவளை அடைய வேண்டும் என்று நிறைய மன்னர்கள் ஆசை பட்டனர்🤴🏻. இவளை அடைய வேண்டும் என்றால் கடுமையான போட்டிகள் விதிக்கப் பட்டிருந்தன!🤼‍♂ இவளுடைய அழகு பற்றி ராணா ரத்தன் சிங்கிற்கும் தெரியவருகிறது_🤴🏻*

*🤔_யார் இந்த ராணா ரத்தன் சிங்?_*

*_🌏ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூர் கோட்டை மேவார் மன்னன் ராணா 🤴🏻ரத்தன் சிங்தான். சித்தூரை ஆண்டு கொண்டிருந்த மன்னன். இவருக்கு நாக மதி என்ற மனைவியும் உண்டு. சின்ஹால் எனும் ஊரில் வசிக்கும் 👸🏻பத்மாவதி எனும் பெண்ணின் பேரழகு பற்றி ஒரு பேசும் கிளி மூலம் ரத்தன்சிங் கேள்விப்பட்டார். அதிலேயே அவள் மேல் பெரும் மையல் கொண்டு அவளை அடைய எல்லாவற்றையும் துறந்து வீரர் குழு ஒன்றுடன் புறப்படுகிறான்.🤺 அவன் பயணத்தை தொடர்ந்து பெரும் துயரங்களுக்கு பின் பத்மாவதியை கண்டடைகிறான்.😍 அவளை மணமுடித்து சித்தோருக்கு கூட்டி வருகிறான்💑. பத்மாவதிக்கு பிறகுதான் தெரிந்தது ஏற்கனவே  கணவருக்கு திருமணம் ஆகிவிட்டது😱 என்று கணவரின் நடத்தையில் மிகுந்த மனவேதனை அடைந்தார்😪 என்ன இருந்தாலும் கணவனாயிற்றே என்று ஏற்றுகொண்டார்.  🤴🏻ரத்தன்சிங் சில காலம் 👸🏻பத்மாவதியுடனும் சிலகாலம் நாகமதியுடனும் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் அடிக்கடி 🤼‍♂சண்டைகளும் வந்த வண்ணம் இருந்தது. ஒரு கால கட்டத்தில் பத்மாவதியும் அங்கிருக்கும் கலாச்சாரம் மற்றும் உடைகள், அங்கிருப்பவர்களையும் ஏற்றுகொண்டு வாழ பழகினார்👸🏻.  சிறந்த முறையில் ஆட்சி செய்த  ரத்தின சேனனால் ஒருநாள் தலைமை மந்திரி ஒருவர் 🏬கோட்டையில் இருக்கும் நகைகளை திருடி மாட்டிக் கொண்டார்.😳 அவையில் இருந்து அவருடைய பதவி பறிக்கப்பட்டு அரண்மனையை  விட்டு நீக்கப்பட்டிருந்தார்.😌 தான் பட்ட அவமானத்திற்கு 🤔பழிவாங்க திட்டமிட்ட தலைமை  மந்திரி அலாவுதீன் கில்சியை பயன்படுத்தி கொள்ள நினைத்தார் அந்த சமயத்தில்  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜம்மு-காஷ்மீர், வட நாடு அனைத்திற்கும் டெல்லி தான் தலைமையிடமாக இருந்தது. இவை அனைத்திற்க்கும் 🤴🏻அலாவுதீன் கில்சி தான் அரசானக இருந்தார். ராணா ரத்தன் சிங்கால் நீக்கப்பட்ட அந்த தலைமை மந்திரி  டெல்லிக்கு சென்று அலாவுதீன் கில்சியிடம் ராணி பத்மாவதி பேரழகை பற்றி விவரித்தார்_👨🏻*

*_👉அந்த விவரணையில் மயங்கிய கில்சி 👸🏻பத்மாவதியை அடைய வேண்டி படைகளுடன் சித்தோர் விரைகிறான். தனது ஆறு படை தளபதிகளுடன் சித்தூர் கோட்டைக்கு வருகிறார்.🏬 அலாவுதீன். ஆனால்  சுல்தான் கோட்டைக்குள் அவர்களை அனுமதிக்கவில்லை🙅🏻‍♂  அலாவுதீன் சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது🙄. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை🤦🏻‍♂ என்றும், 👸🏻பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” இல்லையென்றால் நான் உங்கள் நாட்டின் மீது படையெடுப்பேன் என்று ரத்தன் சிங்கனுக்கு செய்தி அனுப்பினார்✍✉._*

*_🤴🏻ரத்தன்சிங், அவர் வார்த்தையை நம்பி போர் ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படுமே என்று எண்ணி 👸🏻பத்மாவிடம் வந்து அனுமதி  கேட்கிறார்.🤔 அவர் உன்னை தங்கையாக தான் நினைக்கிறார். நீ அவரை சந்தித்தே ஆக வேண்டும். என்கிறார் ஆனால் பத்மாவதி மறுக்கிறார்🙅🏻 ரத்தன் சிங் ஒரே ஒரு முறை தனே பார்த்து விட்டு போகட்டுமே என்கிறார். சரி நான் சந்திக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை  அவர் என்னை நேரில் சந்திக்க கூடாது கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளட்டும் என்கிறாள்.👸🏻 சரி எப்படியோ பார்த்தால் சரிதான் என்று  ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனையிட்டு 👨🏻அலாவுதீனை கோட்டைக்குள் அனுமதித்தார்.🏬_*

*_👉ஆறு தளபதிகளுடன் உள்ளே நுழைகிறார். 👸🏻பத்மாவதியை சந்திக்கும் நேரத்தில் இந்த ஆறு தளபதிகளும் கோட்டை பாதுகாப்பு எப்படி இருக்கிறது பதுங்கு குழிகள் எங்கு இருக்கிறது எத்தனை 👨🏻‍✈காவல் படையினர் இருக்கிறார்கள் உள்ளிருந்து எப்படி தாக்கலாம் என்று 👁கண்களால் அளவிட்டனர்._*

*_🤔😏ஏதேனும் சதி செய்து அவளைக் கவர வேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.🤷🏻‍♂ “நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்ப கூடாதா?” என்று 🤴🏻ரத்தன் சிங்கனிடம் அலாவுதீன் சொன்னார். அலாவுதீனை நம்பி அவன் கூட 🦄குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், 🤴🏻ரத்தன் சிங்கனைச் சூழ்ந்து கொண்டன.🤦🏻‍♂ அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.👨🏻_*

*👉👸🏻உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான் உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன் என்று 👨🏻அலாவுதீன் சொன்னான். ஆனால் 🤴🏻ரத்தன் சிங்கன் இணங்க வில்லை.🙅🏻‍♂ இந்த செய்தி சித்தூர் வரை சென்றது._*

*_🤴🏻ரத்தன் சிங்கனின் மனைவியான 👸🏻பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்சிக்கு செய்தி அனுப்பினாள்.✍✉ என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வர த்தயார். ஆயினும் ராஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள்✍✉. அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.👨🏻_*

*_🏬சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட 👩🏻பெண்கள் கிடையாது🙅🏻. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 🤺வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் 🤺வீரர்கள். பல்லக்குகளில் ⚔ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “👸🏻பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து 🤴🏻ரத்தன் சிங்கனை 🦄குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே 🤺பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன😥._*

*_🕰ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. 👨🏻அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் 👸🏻பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் 🤺படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது 🤴🏻ரத்தன்சிங் பலவீனமான நிலையில் இருந்தார் ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்துவிட்டார்😌. ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது.😌 தன் மகனை அருகாமையிலுள்ள ராஜ புதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும் படி சொல்லி விட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர் துறந்தார் ரத்தன் சிங்.🤴🏻_*

*_👩🏻ராஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள் 🏬அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் 🔥தீ வளர்த்தனர். அதில் 75000 பெண்கள், பேரழகி 👸🏻பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர்.😭 வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத் தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!🤦🏻‍♂_*

*_👉✍இது தாங்க வரலாறு இந்த வரலாற்றை தான் 😳🎥படமாக எடுக்குறாங்க. இந்த படத்துல இருக்கும் புகார்கள் இரண்டு : 1⃣ஒன்று பன்சாலி வரலாற்றை திரித்து விட்டார். 2⃣இரண்டு, 👸🏻பத்மாவதி எனும் மானமிகு ராணியின் பெருமையைக் குலைத்து விட்டார்கள்.🤦🏻‍♂_*

*_👉1⃣முதல் புகாரை பார்ப்போம்_*

*_👨🏻கில்சி சித்தோரை தாக்கியது 13ம் நூற்றாண்டில். மேற்சொன்ன சம்பவங்கள் மாலிக் முஹம்மது எனும் ஒரு சூஃபி துறவி எழுதிய 'ப்ரேமாக்யான்' என்கிற கவிதை இலக்கியத்தில் இருக்கிறது.😏 அது எழுதப் பட்டது 16ம் நூற்றாண்டில். அதாவது 👸🏻பத்மாவதி என்கிற பாத்திரம் முதன் முதலில் அறிமுகமானது ஒரு கற்பனைப் படைப்பில்தான். அதற்கு முந்தைய எந்த வரலாற்று எழுத்துகளிலும் இந்த ராணி பற்றிய குறிப்புகள் இல்லை🙅🏻. சொல்லப்போனால் 👸🏻பத்மாவதி என்கிற ஒரு ராணி சின்ஹாலில் பிறந்து சித்தோரில் வாழ்ந்து மரித்ததற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. கில்சி இந்த 👸🏻ராணியை தேடிப் போனதற்கும் ஆதாரம் இல்லை🙅🏻. இது வரலாறே இல்லை எனும் போது திரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.🙅🏻‍♂_*

*_👨🏻✍மாலிக் எழுதிய காலத்தில் இருந்து பத்மாவதி பெரும் மாற்றங்கள் கொண்டே வந்திருக்கிறார். வட இந்தியாவில் பெரும் பிரசித்தி பெற்று விட்ட இவர் கதை பெர்சியன், பெங்காலி, குஜராத்தி, ஜெயின் இலக்கியங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு ✍எழுத பட்டிருக்கிறது. 18ம் நூற்றாண்டில் வேறொரு கதையில் 🤴🏻ரத்தன்சிங் மேவார் சமஸ்தான அரசனாக மாறிப் போகிறான். எனவே வரலாற்றை திரித்து விட்டார்கள் என்கிற புகாரே அர்த்தமற்றது🤦🏻‍♂._*

*_👉2⃣இரண்டாவது புகாருக்கு வருவோம்:_*

*_👸🏻பத்மாவதியின் மானம் குலைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். மானம் என்றால் இங்கே என்ன குறிக்கப் படுகிறது?🤔 அவள் கற்பு. அதாவது கணவன் இறந்ததும் தானும் சிதையில் புகுந்தது வீரச் செயல்.👍 கணவனைத் தாண்டிய வேறு வாழ்வை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று பெண்களுக்கு அறிவுறுத்த பத்மாவதி பயன்படுகிறார்.😌 👩🏻பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு பெயர் போன மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. கருவில் 👶🏻பெண் குழந்தைகளை கொலை செய்வது,😱 வரதட்சணை பிரச்னை, 👩🏻பெண் ஆண் குழந்தைகளிடம் உள்ள கல்வி இடைவெளி இவை தான்  ராஜஸ்தானில் இருக்கும் பெரிய பிரச்சனைகள். இப்போதே இப்படி என்றால் 13ம் நூற்றாண்டில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்துக் கொள்ளலாம்.🤔 ரத்தன் சிங் பெரிய பெண்ணியவதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை🙅🏻. ஆகவே ரத்தின சேனன் நல்லவன், கில்ஜி கெட்ட மனிதன் என்கிற வாதம் அங்கே எடுபடாது.🤷🏻‍♂_*

*_🎥எந்த ஒரு படமும் தணிக்கை குழுவிற்கு சென்றால் தான் அதோட கதை விபரம் தெரிவிக்கப்படும் ஆனால் இப்படம் தணிக்கை குழுவிற்கு செல்லும் முன்னரே தவறாக சித்தரிக்க பட்டுள்ளது என்று எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இன்றி கூறுவது ஏற்புடையதல்ல.🙅🏻‍♂ இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி பல பேட்டிகளில்,"அது எதிர்ப்பாளர்களின் யூகமே. அப்படி எந்தக் காட்சியும் படத்தில் இடம் பெறவில்லை" என்கிறார்.😌 இதை எழுதியும் கொடுக்கிறார்.✍ வெளியிடப்பட்டிருக்கும் ட்ரைலரிலும் ராஜ்புத் வீரர்களின் வீரத்தைப் புகழ்ந்துதான் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 🎥படமோ இன்னும் வெளிவரவில்லை மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் அவர்களின் தலையை கொய்து வந்தால் 💴10கோடி என்றெல்லாம் வெளிப்படையாக கொலை மிரட்டல் அதுவும் 🤕அரசியல்வாதிகள் விடுப்பது மக்களின் பாதுகாப்புக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.😱 பாய்ஸ்  படம், லட்சுமி குறும்படம்,  தற்போது வெளி வர உள்ள செக்ஸி துர்கா திரைபடத்திற்க்கும் எதிர்ப்பு தெரிவிக்காத கூட்டங்கள் இப்படத்திற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது.🤔 அரசியல் ரீதியாக பல குற்றங்களை மறைப்பதற்கு சமம் ஆகும்😳. ஆம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினால் நாம் அதை ஊதி பெரிதாக்கி பல மாதங்கள் அதிலே கவனம் கொள்வோம் இதை ஆதாயமாக எடுத்து பல குற்றங்கள் நம் கண்முன்னே நடைபெறுவதை மறைக்கின்றது.🤷🏻‍♂ 👁👁விழித்துக் கொள்ளுங்கள் ஒரு 🎥திரைப்படம் அதுவும் கற்பணை கதாபாத்திரத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து பல குற்றங்களை தவறவிடவேண்டாம்🤷🏻‍♂._*

*_🤔மேலும் இக்கதை கற்பனை என்று ஒரு சாராரும் உண்மை என்று மற்றோரு சாராரும் தெரிவிக்கின்றனர். 🙅🏻‍♂உண்மையில்லாத ஒரு வரலாற்றுக்கு எவ்வாறு 🏬சித்தூர் கோட்டை கண் முன்னே ஆதாரமாக இருக்கும். இங்கு தான் சில விடயங்கள் மறைக்கப்படுகிறது. ஓவ்வொரு ✍எழுத்தாளரும் பல்வேறு காலகட்டத்தில் அவர்களுக்கு தகுந்தாற்போல் ✍வரலாற்றை மாற்றி எழுதினார்கள். இதன் மூலம் உண்மை தன்மை புலப்படாமல் போயிற்று. ஷாஜகான் - மும்தாஜ் வாழ்ந்ததற்க்கு தாஜ்மகால் எப்படியோ அதே போன்று தான் பத்மாவதி அம்மையாருக்கும். உண்மை வரலாறு மறைக்கபட்டுள்ளது._🤦🏻‍♂*

*_👉😉புரியுது புரியுது படம் வெளிவரதுக்கு முன்னாடி படத்துல நடித்த தீபிகா படுகோன் தலைக்கே 10 கோடினா. முடிவுரை வெளியிட போற முடிவுரை தொகுப்பாளர்கள் தலைக்கு எத்தனை 💴💴கோடினு தானே யோசிக்குறீங்க😂. எது எப்படியோ குடும்பத்தை ஒரு வழியா கரை சேத்துடுவோம். மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறோம்💝_*

      *_💝நன்றி💝_*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🏹சிறந்த பேச்சாளர்கள்🏹*

👑 *கலந்துரையாடல்~1®©*👑
*🏅🏆பிஸ்மில்லா* *🏅🏆S.P.விக்னேஷ்*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~2®©*👑
*🏅🏆ghouse*
*🏅🏆பிரதீப் விஸ்வாஸ்*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
*_படத்தை பார்க்க முடியாம இறந்த வாலிபரை பற்றி கேள்வி பட்டிருப்போம். இங்க படமே வெளியிட கூடாது என்று ஒரு வாலிபர் விலை மதிப்பற்ற உயிரையே மாய்த்துக் கொண்டார். இதனால் நட்டம் யாருக்கு திரைப் படத்துறைக்கா?? அல்லது அரசாங்கத்திற்காக??. ஒரு திரைப்படத்திற்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன் குடும்ப நலனுக்கு பயன் படுத்தியிருந்தால் இன்று அவர் குடும்பம் கண்ணீர் மல்க வருந்தியிருக்க மாட்டார்கள்._*

*_மேலும் ஒரு படம் வரலாற்றுக்கு புறம்பாகவோ, கலாச்சாரத்தைக் கெடுக்கும் விதமாகவோ, அல்லது படத்தால் சட்டம் ஒழுங்கு கெடும் சூழ்நிலை உருவாகும் என்றோ தணிக்கையாளர்கள் கருதினால் நிச்சயம் அப்படிப்பட்ட காட்சிகளை அனுமதிக்கப் போவதில்லை. பிறகு ஏன் இத்தனை எதிர்ப்பு என்று யோசித்தது உண்டா??._*

*_இந்த படம் தமிழிலும் படமாக வந்திருக்கிறது. 'சித்தூர் ராணி பத்மினி' என்கிற தலைப்பில், சிவாஜி, பத்மினி, நம்பியார் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தியிருக்கிறார்கள். ஹிந்தியிலும் 'மஹாராணி பத்மினி' என்ற பெயரில் பத்மினியே நடித்து வெளி வந்திருக்கிறது. அப்போதெல்லாம் காட்டாத எதிர்ப்பு ஏன் தற்போது வந்தது என்று யோசித்தது உண்டா..?? விழித்துக் கொள்ளுங்கள் ஒரு திரைப் படத்தை பரபரப்பாக்கி அரசியல் ஆதாயம் பூச பார்க்கிறார்கள்._*

💝💝💝💝💝💝💝💝💝💝💝

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

*📜திருக்குறள்📜*

*நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை*

*போற்றி யொழுகப் படும்.*

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

*📜குறள் விளக்கம்📜*

*பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.*

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

*_📜 பழமொழி 📜_*

*⚜அறிந்து கொள்ளவும்⚜*

*உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்*

*⚜புரிந்து கொள்ளவும்⚜*

*கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்*

*⚜தெரிந்து கொள்ளவும்⚜*

*மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்*

💝💝💝💝💝💝💝💝💝💝💝
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

*🏹முடிவுரை தொகுப்பாளர்கள்🏹*

👨🏻‍💻 *💝கார்த்திக் ராஜ்பவன்💝*
📱 *+918072908455*✍

👨🏻‍💻 *💝சங்கிலி பூதத்தான்💝*
📱 *+919842148700*✍

👨🏻‍💻 *💝உதயா யுவா💝*
📱 *+919500764969*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *மணிமாதேஷ் - +918428073724*

😎 *அருள்முருகஇன்பன் - +919942288439*
*(வழக்கறிஞர்)*

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...