Saturday, 2 December 2017

தமிழ் நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளதா?... மற்ற மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் நாட்டில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதால் பாதிப்புகள் உள்ளதா?..

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 29.11.2017*_ 🌹
     🌹 _*கிழமை : புதன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*உலகினில் மிகவும் அரிதான விஷயம் என்னவென்றால் வாழ்வினை வாழ்வது தான். பலர் வாழ்வினை வெறுமென வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவ்வளவே.*_

                        _*- அசுகர் வில்டே*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*
_*உலகிலேயே மிகச் சிறிய ஆறு கண்ணீர்., அதை கடந்து கரையேறியவர்களை விட, மூழ்கித் தொலைத்தவர்களே அதிகம்.*_

_*சோதனைகளின்றி வாழ்க்கை இல்லை... வீழ்ச்சிகளின்றி உயர்வு வருவதில்லை...*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*தமிழ் நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளதா?... மற்ற மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் நாட்டில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதால் பாதிப்புகள் உள்ளதா?..*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🌏நாடுதழுவிய முறையில் வறுமை, கல்வி வியாபாரம், சுகாதாரமின்மை, விலைவாசி உயர்வு, சமூக ஒடுக்குமுறை , என அனைத்துப் பகுதி 👨‍👨‍👦‍👦மக்களையும் தாக்கும் பிரச்சனைகள், குறையாமல் நீடித்து வருகின்றன😌. இதில் ஒன்று 💁🏻‍♂வேலையின்மை என்ற பார்வை நமது பொதுபுத்தியில் ஏற்றப் பட்டுள்ளது🙆🏻‍♂.*_

_*👉😔வேலையின்மை (Unemployment): ஓர் அறிமுகம்*_

_*😔வேலையின்மைக்குப் பலவித வரையறைகள் இருந்தாலும், பொதுவாக வேலையில்லாமல் இருக்கும் நிலையே வேலையின்மை (Unemployment) ஆகும்🙆🏻‍♂. அதாவது, வேலை செய்யக்கூடிய ஒருவர் வேலை தேடியும் (கடந்த ஒரு வருடத்தில் அல்லது ஒரு வாரத்தில்) அது கிடைக்கவில்லை எனில் அவரை வேலையில்லாதவர் என்கின்றோம்🤔.*_

_*🤔செயல்திறன் உடைய தொழிலாளர்களில் (Active Labour Force) வேலை தேடி கிடைக்காதவர்களின் சதவீதம் வேலையின்மையின் சதவீதம் (Unemployment rate) எனப்படும்😔. வேலை செய்ய விரும்பாதவர்கள், இயலாதவர்கள் இதில் சேர்க்கப்படமாட்டார்கள்.🙅🏻‍♂*_

_*👨🏻ஒருவரை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் வைத்துள்ள அளவுகோல்கள் என்னென்ன என்பது குறித்து சிஐஐ, லிங்க்ட் இன் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட '🌏இந்தியாவின் திறமை அறிக்கை - 2015' -ல் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம். இதன்படி 39 சதவிகிதம் நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் குணம் பார்க்கப்படுகிறது.👍*_ _*2⃣இரண்டாவதாக அந்த வேலை சார்ந்த அறிவு 22 சதவிகிதம் தேவை. தகவல் பரிமாற்றம் அதாவது கம்யூனிகேஷன் 10 சதவிகிதம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.🤔*_
_*இந்த கம்யூனிகேஷன் 10 சதவிகிதம்தான் என்றாலும் இதுதான் மற்றத் திறமைகளை வெளிப்படுத்த மிக அவசியமான ஒன்றாக உள்ளது என்பதுதான் உண்மை💁🏻‍♂*_

*_🤔கல்லூரிப் படிப்பைத் தேர்வு செய்யும்போதே இன்றைய 👱🏻👱‍♀இளைஞர்களுக்குப் பிரச்னை ஆரம்ப மாகிவிடுகிறது. தாங்கள் விரும்பும் 📚படிப்பை  சரிபாதிக்கும் மேற்பட்டவர்களால் படிக்க முடிகிற அதேவேளையில், ஏறக்குறைய 46 சதவிகித 👱🏻இளைஞர்களால், கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய படிப்பைப் படிக்க முடியவில்லை🤦🏻‍♂.  பெற்றோர்கள் தாங்கள் 😏விரும்பும் படிப்புகளை படிக்கவே இளைஞர்களை வற்புறுத்துகிறார்கள்🙆🏻‍♂. அதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை.🤦🏻‍♂_*

*_👉அடுத்த பெரிய பிரச்னை, படித்த படிப்புக் கேற்ற வேலை கிடைக்காதது🙆🏻‍♂. கிட்டத்தட்ட 59% பேர் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று சொல்லி இருப்பது அதிர்ச்சித் தகவல்🙄. படிப்பது ஒன்று, வேலை செய்வது வேறாக இருப்பதால், கல்லூரியில் படித்த மூன்று ஆண்டு காலமும் வீணாகப் போகிறது என்பதை நம் 🏛அரசாங்கம் உணர்ந்து, அதற்கான தீர்வுகளைக் காண வேண்டும்.🤝_*

_*👉தலைமுறையின் தலையெழுத்து!🤔*_

_*👱‍♀👱🏻இப்போது பெரும்பாலான இளைஞர்கள் இன்ஜினீயரிங் 📚படிப்பு படிக்கிறார்கள். ஆனால் அவர்களில் 20 சதவிகிதத்தினர் மட்டுமே படித்தப் படிப்புக்கான வேலைக்குச் செல்கின்றனர்👩🏻‍💻. ஐ.டி நிறுவனங்களில் 17 சதவிகித வேலைவாய்ப்பு மட்டுமே தரப்படுகிறது😌. இன்ஜினீயரிங் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் 11 சதவிகித வேலைவாய்ப்பு மட்டுமே உள்ளது😏. பவர், ஆயில் உள்ளிட்ட தொழில் துறைகளில் அதிகபட்சமாக 38 சதவிகித வேலைவாய்ப்புகள் உள்ளன. அதிக வேலை வாய்ப்பைத் தரும் துறையாக, 🏥மருத்துவமனை, சுற்றுலா மற்றும் ஓட்டல் உள்ளிட்ட சேவைத் துறைகளே உள்ளன. ஏறக்குறைய 60 சதவிகிதம். ஆனால் இதற்கான பிரத்யேகமான 📚படிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதனால் படிப்பது ஒன்று, பார்க்கும் வேலை ஒன்று என்பதே இந்தத் தலைமுறையின் தலையெழுத்தாக மாறிவிட்டது.🤦🏻‍♂*_

_*🏛தமிழகத்தில் சுமார் 95 லட்சம் 👱‍♀👱🏻இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து இருக்கின்றனர்🙆🏻‍♂.*_

_*😓கொடுமையான விஷயம்*_

_*📜தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய புள்ளி விவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. 🏛தமிழகத்தில் கடந்த 2005-ல் 875 👱‍♀பெண்களும், 384 ஆண்களும் 👱🏻🔥தீக்குளித்து இறந்துள்ளனர்😭. 2010-ம் ஆண்டில் 1,625 பெண்களும், 863 ஆண்களும் தீக்குளித்து உயிரை விட்டுள்ளனர்.😭*_

_*🤔கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் 🔥🔥தீக்குளித்து இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்துள்ளது.😱 🌏இந்திய அளவில் பார்க்கும்போது, இருபாலரின் தற்கொலையிலும், தமிழகம்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த 2010-ல் இந்திய அளவில் 4137 ஆண்களும், 7,748 பெண்களும் 🔥தீக்குளித்து பலியாகி உள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் 🏛தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்🤦🏻‍♂🤦🏻‍♂. சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2011-ல் மட்டும் 1,300 தீக்காய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.😓*_

_*👉அவர்களில் 230 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்த வரை, தலைநகர் 🏛சென்னையில்தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.🙄*_

_*😓வேலையில்லாத் திண்டாட்டம் ஏன்?*_🤔

_*🤔ஏனிந்த வேலையில்லாத் திண்டாட்டம்? 😭பல ஆயிரம் 👬👭இளைஞர்களின் மனதில் தாம் தம் வீட்டுக்கும்,🏡 நாட்டுக்கும் 🇮🇳பாரமோ😲 என்ற கேள்வி எழத்தான் செய்யும்... 😰இதற்குப் பதில் இதுதான்*_👇🏻

_*🤝🏻"ஒவ்வொருவரின் முன்னும் ஆயிரமாயிரம்😱 வெற்றி 🎉வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும்🎀 இருக்கின்றன. 👍🏻ஆனால்? அவை நமது கண்ணுக்குத்👀 தெரிவதில்லை.🙈 ஏனென்றால் நமது மனது திறந்த நிலையிலில்லை,😟 சிறந்த நிலையிலும் இல்லை. 😳நமக்கு நாமே சில எதிர்பார்ப்புகளை🤔 உருவாக்கிக் கொண்டு அவற்றை மட்டுமே தேடி வருகின்றோம். 🙄இவ்வாறு நமக்கு நாமே திரை 🙈🙉🙊போட்டுக் கொள்வதால் எதிரே உள்ள ஏணிப்படிகள்🎢 கண்ணுக்குத் தெரிவதில்லை.*_👀🙈

_*😔எனவே, நாம் முதலில் நமது தகுதிக்கேற்ப வெள்ளை ஆடை (White Collar) உத்தியோகங்களைத் தேடுவதை விட,🚶🏻🏃🏻 எதிர்காலத்தில்🔭 உருவாகப் போகின்ற வேலைகளை, 👨🏻‍🏫வேலை வாய்ப்புகளை முன் கூட்டியே எதிர்பார்த்தும்,😎 தற்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு உரிய தகுதிகளை💪🏻 உருவாக்கிக் கொள்வதும்,🤝🏻 உடலுழைப்புக்கு அஞ்சாமலிருப்பதுமே வேலை இல்லாத் திண்டாட்டத்தைத்😢 தீர்க்கும் முதல் வழியாகும்.*_👍🏻

_*🤔வேலையின்மையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்...*_

_*🏛நம் நாட்டின் வேலைவாய்ப்பில் உள்ள மிகப் பெரிய பிரச்னை, 94 சதவிகித வேலையாட்கள், வழக்கமான வேலைவாய்ப்புகள் இல்லாத, பிற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இதனால் விரைவில் வேலை இழக்கும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். அதனால் அந்தந்தப் 📚படிப்புக்கு தகுந்த வேலை வாய்ப்பு களையே 👱🏻இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டும்.🤝*_

_*🌏நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்துக்குரிய நடவடிக்கையை 🌏இந்திய அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வேலையின்மை யானது குறையும்.🤝*_

_*👉ஒருசாராருக்கு மட்டுமே அதிக ஊதியத் தொகையை வழங்காமல், அனைவருக்கும் அதைப் பகிர்ந்து சமன் செய்ய வேண்டும்👍. நாட்டின் 📚கல்வித் திட்டங்களை மேம்படுத்துவது மற்றும் 👱🏻இளைஞர்களுக்குத் தொழில் சம்பந்தப்பட்ட பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பதாலும் வேலையின்மைக் குறையும்.🤝*_

_*👉வேலைகளைப் பகிர்ந்தளிப்பது, பணியாளர்களுக்கு வயது வரம்பை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்👍. தொழில் தொடங்குவது மீதான சட்ட விஷயங்களைத் தளர்த்த வேண்டும். உதாரணத்துக்கு,  புதிதாக ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தால், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் சம்பளமாகக் குறிப்பிட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதையும், தொழிலுக்கான அதிக 💴வரி விதிப்புகளை யும் தளர்த்த வேண்டும்.🤝*_

_*👨🏻‍💻👩🏻‍💻வேலைகளின் தேவைக்கும், சப்ளைக்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறைக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு 🏛அரசிடம்தான் உள்ளது. அதனால் வேலை இல்லாதவர் களுக்கு மேலும் பல விஷயங்களைக் கற்றுத்தருவதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் அறிவுத்திறனானது பட்டைத் தீட்டப்பட்டு வேலைக்குத் தகுதியானவர் களாக மாற்றும்.😊*_

_*👨🏻‍💻தொழில் துறையில் முதலீட்டை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் 🏬தொழிற்சாலைகளைத் தொடங்கி, பணியாளர்களின் திறனை அதிகரித்தால் மட்டுமே நம் நாட்டில் வேலையின்மை பிரச்னை தீர்ந்து எதிர்காலம் ஏற்றத்துடன் இருக்கும்!👍*_

_*🤔👉பொதுவான விஷயம்...*_

_*👉இப்போ இருக்கும் 👱🏻👱‍♀இளைஞர்கள் பலபேர் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத  வேலைகளில் தான் இருக்கிறார்கள்😔...*_

_*👨‍👨‍👦‍👦குடும்ப சூழ்நிலை காரணமாக... அல்லது "ஏன் இன்னும் உன் பிள்ள வேலைக்கு போகல.?" அப்படி யாரும் பெற்றோர்களை கேட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே😔...*_

_*😲பிடிக்காத வேலையில் சேர்ந்த ஒருவர் எப்படி அந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும்🤔... வேண்டா வெறுப்பாக தான் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்😓😓...*_

_*👉அவர் செய்யும் வேலையை  முழுமையாக கற்றுக் கொள்ள சில மாதங்கள் தேவைப்படலாம்😓.. அதற்குள் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் 👨🏻‍💻வேலை போகும் சூழ்நிலையும் உண்டாகும்😔...*_

_*👉ஒருசிலர் நான் விரும்பிய 👨🏻‍💻வேலை அவருக்கு கிடைக்கும் வரை வேற எண்ணம் எதுவும் எழாது😖... இதனால் அவர் வாழ்க்கையில் ஓரிரு வருடங்கள் தேவையில்லாமல் கழிந்து போகும் நிலை ஏற்படும்😓😓...*_

_*🏛அரசு வேலைவாய்ப்புகள் தினமும் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் சில இட ஒதுக்கீடு என்பது ஒருசிலருக்கு பிரச்சனையாக உள்ளது.🙆🏻‍♂🤦🏻‍♂*_

_*👉மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது... நம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு 👱🏻👱‍♀இளைஞர்களின் அலச்சியமே🙆🏻‍♂... காரணம் சிறந்த பணியாளர் கிடைக்காத சூல்நிலை ஏற்பட்டதால் கூட இந்த அறிவிப்பை மாநில அரசு உருவாக்கியிருக்கலாம்😲...*_

_*👉அப்படி வெளி மாநிலங்களில் இருந்து வரும் 👱🏻இளைஞர்கள் கிராமப்புறங்களில் வேலை கிடைத்தால் மக்களுக்கு எந்த வகையிலும் உபயோகமாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை🤔...*_

_*👉காரணம் மக்களிடம் அவர்கள் தொடர்பு கொள்ள முக்கியாமாக இருப்பது மொழி மக்களுக்காக அவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்😔...*_

_*👉🤦🏻‍♂அது வரை அவர்களுக்கும் கஷ்டம் மக்களுக்கும் கஷ்டம்🙆🏻‍♂...*_

_*👉2⃣இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எங்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி எந்த செய்தியும் சரியான நேரத்தில் வரவில்லை😲... ஆகையால் வேலைவாய்ப்பு பற்றிய விபரங்கள் எனக்கு தெரியாது என்று காரணம் சொன்னாங்க... இப்போ எல்லாம் இணையம் வழியாக நம்மை வந்து சேர்க்கின்றது அதை உபயோகப்படுத்துவது நம்முடைய சாமர்த்தியம்😏... அதற்கும் ஏதேனும் காரணம் கூரி குறைசொல்ல கூடாதுஎன்று🙅🏻‍♂...*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*👑

*🏅 SP.Vignesh⁩*
*🏅 Karthikeyan c🤗⁩*
*🏅 ⁨Santhi😊🦅⁩*
*🏅 sukumar ❤Zhorba⁩*
*🏅 பிரபாகரன்சிதம்பரம்⁩*
*🏅 bismilla⁩⁩*
*🏅 ⁨SRIRAM ACS⁩*
*🏅 Ganesh Rahul⁩*
*🏅 மன்னை மணிவர்மன்⁩*
*🏅 ⁨DEVENDRANhp⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*👑
*🏅 🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼*
*🏅 Arun⁩⁩*

_*😃கலந்துரையாடல் மற்றும் கலந்துரையாடல் 2 நண்பர்களுடைய அணைத்து பதிவுகளும் அருமை...*_👌🏻🤝🏻👍🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
  _*கல்வியில்லாத சமூகம் என்பது அறிவீனமானது. கற்றவர்களுக்கு வேலையில்லாத சமூகம் ஆபத்தானது. எனில் முறையான கல்வி இல்லை, கற்ற கல்வியில் மேம்பட்ட திறன் இல்லை, திறன் உள்ளவர்கள் தொழில்செய்ய சூழல் இல்லை, ஏதாவது தொழில் செய்துகொண்டிருப்பவர்களுக்கு நிதி ஆதாரம் இல்லை, நேற்றுவரை வேலையில் இருந்தவனுக்கு இன்றைக்கு வேலையில்லை, இன்றைக்கு வேலையில் இருப்பவனுக்கு நாளைக்கு வேலை நிச்சயம் இல்லை என்கிற அபத்தத்தின் உச்சகரமாய் இந்த சமூகம் வளர்ந்து வருவது எவ்வளவு அபாயகரமானது என்று யோசிக்கக்கூட முடியவில்லை*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*அருமை யுடைத்தன்று அசாவாமை வேண்டும்*_
_*பெருமை முயற்சி தரும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*❣அறிந்து கொள்ளவும்❣*_

_*தன் கையே தனக்குதவி*_

_*❣தெரிந்து கொள்ளவும்❣*_

_*கையை ஊன்றித்தான் கரணம்(குட்டிக்கரணம்) போடணும்*_

*_❣புரிந்து கொள்ளவும்❣_*

_*தெரிந்த தொழிலை விட்டவணும் கெட்டான், தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...