Saturday, 2 December 2017

*📚இன்றைய பள்ளி🏫 மாணவர்களின் தற்கொலை😓 எண்ணங்களுக்கு என்ன காரணம்? யார் காரணம்?🤔


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 28.11.2017*_ 🌹
     🌹 _*கிழமை : செவ்வாய்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும் நாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்உண்மையிலேயே திருப்திதரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.*_

                      _*-பெர்ட்ரண்டு ரசல்*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*கவலைகளும் தோரணங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அதை தற்காலிகமாக்குவதும், நிறந்தவரமாக்குவதும் அவரவர் கையில் இருக்கின்றது.*_

_*தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி.*_

_*நிறந்தரமாக்கினால் நீ நோயாளி*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

🏫✍🏻🖌🖍📝📖👩🏻‍🏫👨🏻‍🏫🙋🏻🙋🏻‍♂📚🙇🏻🙇🏻‍♀

_*📚இன்றைய பள்ளி🏫 மாணவர்களின் தற்கொலை😓 எண்ணங்களுக்கு  என்ன காரணம்? யார் காரணம்?🤔*_

🏫👩🏻‍🏫👨🏻‍🏫🙋🏻🙋🏻‍♂🙇🏻‍♀🙇🏻📚📖📝🖍🖌✍🏻

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🏢பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தவறு செய்யும் மாணவர்களை, சொன்ன 📚பாடங்களைச் செய்யாத மாணவர்களை, ஆசிரியர்கள் 🗣கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதும் தண்டிப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது😌.*_

_*👉இன்று பல்வேறு துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்கள்கூட தமது பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் இதைக் கடந்தே வந்திருப்பார்கள்😌. இதை எதிர்கொள்ளும் முறை தெரியாமல் சில மாணவர்கள் விபரீத முடிவுக்குச் செல்கிறார்கள்😓. அப்படியான ஒரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது😭. எக்காரணம் முன்னிட்டும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்ற வாதமும் பல காலமாக முன்வைக்கப்படுகிறது. 👧🏻👦மாணவ, மாணவிகள் செய்யும் தவற்றை, 👩🏻‍🏫👨‍🏫ஆசிரியர்கள் வார்த்தைகளால் வதம் செய்வதால் தீர்வு கிடைத்துவிடுமா. இதற்கு என்னதான் செய்வது?🤔*_

_*'' '🐄அடியாத மாடு படியாது' என்கிற பழமொழியைத்தான் இன்றும் 👩🏻‍🏫ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மூலதனமாகக் குழந்தைகளிடம் பயன்படுத்துகிறார்கள். 👦ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற சரியான புரிதல் இல்லாததே பல்வேறு தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன🤦🏻‍♂. 👩🏻‍🏫ஆசிரியர்களும் பெற்றோர்களும் 👧🏻குழந்தைகளை எப்படி அணுகவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்''🤷🏻‍♂*_

_*🤔எந்தப் பிரச்னை இருந்தாலும், துணிந்து நின்று போராடும் குணத்தைக் 👦குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.🤝*_

_*🤔முந்தைய காலத்தில், குழந்தைகள் தவறு செய்தால் 👩🏻‍🏫ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பார்கள். அப்போது 👨🏻பெற்றோரும், 'நீ செய்தது தவறு. அதனால்தானே ஆசிரியர் அடித்தார். இனி இவ்வாறு நடந்துகொள்ளாதே' எனப் புத்திமதி சொல்வார்கள். ஆனால், இன்று 👧🏻👦குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்பதால், அவர்களைத் தண்டிப்பதற்காக கடினமான வார்த்தைகளை ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள்.🤦🏻‍♂* _

_*👨🏻பெற்றோர்களுக்குக் குழந்தைகள் பேசுவதைக் கேட்பதற்கு நேரம் இல்லாததால், அவர்கள் முகம் வாடியிருந்தாலும் பொருட்படுத்தாமல் இருந்துவிடுகின்றனர்.🤷🏻‍♂*_

_*🏢பள்ளியோ, வகுப்பறையோ ஆசிரியர்கள் மாணவர்களைத் திருத்த வேண்டும் என்று நினைத்தால், அதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன🤷🏻‍♂. மனதைக் காயப்படுத்தும் வார்த்தைகளோ, அடியோ ஒருபோதும் தீர்வாக முடியாது🙅🏻‍♂.*_

_*👉பொதுவாக மாணவர்களுக்கு ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது👩🏻‍🏫. அதைப் பெற்றவர்களும் ஆசிரியர்களும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.🤝*_

_*🤔முன்பெல்லாம் வீட்டிலும் வகுப்பறையிலும் மாணவர்கள் 👩🏻‍🏫அடிவாங்குவார்கள், வசைச் சொற்களுக்கும் ஆளாவார்கள்😌. ஆனால், அந்தக்காலம் வேறு. இப்போது சிறு வசைச் சொற்களைக்கூட பிள்ளைகள் தாங்குவதில்லை😓. வகுப்பறையிலிருக்கும் குழந்தைகளும் நம் குழந்தைகளே என்கிற எண்ணத்தை ஆசிரியர்கள் வளர்த்துக்கொண்டால் போதும்.🤷🏻‍♂*_

_*👉காப்பி அடிக்கிறார்களா... உடனே அந்த 👦மாணவனையோ/👧🏻மாணவியையோ கடுமையாகத் திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்புவதைவிட, அவர்களுடைய பேப்பரில் ரெட் மார்க் போட்டுவிடுங்கள்😌. ரெட் மார்க் போட்ட 📃பேப்பர்களைத் திருத்திக் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படத் தேவையில்லை😓. அவர்களுடைய தவற்றையும் நாம் அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறோம். இப்படி 👨‍🏫ஆசிரியர்கள் காலத்துக்கேற்ப தங்களுடைய நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்.🤝*_

_*👦ஒரு பையன் இனி ஸ்கூலுக்குப் போகமாட்டேன் எனப் பெற்றோரிடம் அடம்பிடித்திருக்கிறான். '🤔ஏன் ஸ்கூலுக்குப் போகமாட்டே?' எனக் கேட்டால், 'மிஸ் என்னை அடிச்சாக்கூட அந்த வலி கொஞ்ச நேரத்துல சரியாகிடும்😌. ஆனா, அவங்க எல்லார் முன்னாடியும் என்னைத் திட்டுறாங்க🗣. அது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு.😓 என்னால் அந்தச் சம்பவத்திலிருந்து மீண்டுவரவே முடியலை😭. அதனால் நான் ஸ்கூலுக்குப் போகமாட்டே'னு சொன்னான்🙅🏻‍♂. தன் பிரச்னையைப் பெற்றோரிடம் சொன்னால், அவர்கள் தன்னையே குறை கூறுவார்கள் என்றே குழந்தைகள் பெற்றோர்களிடம் சொல்வதில்லை😌.*_

_*👉😣அடித்தல் என்பது அந்த நேரத்து வலி... ஆனால், 🗣வசைச்சொற்கள் காலத்துக்கும் மாறாத ஒரு விஷயம். அதை 👨‍🏫ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த ஒன்றுதானே🤔. பிறகு எப்படி அதையே பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் காண்பிக்க முடிகிறது என்பது புரியவில்லை🤦🏻‍♂.*_

_*🏢🏬பள்ளியோ, கல்லூரியோ... தினமும் உங்கள் பிள்ளைகள் வீட்டுக்கு வந்ததும் அவர்கள் முகத்தைப் படிக்கப் பழகுங்கள்😧. சந்தோஷமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் அவர்கள் உங்களிடம் ஷேர் செய்கிற ஸ்பேஸை அவர்களுக்குக் கொடுங்கள்👨‍👩‍👧.*_

_*👦👧🏻பிள்ளைகள் எதை அவமானமாக உணர்கிறார்களோ, அதை அவர்களிடம் பிரயோகிக்காதீர்கள்.🙅🏻‍♂ அவை வார்த்தைகளாகவோ, செய்கைகளாகவோ எதுவாகவும் இருக்கலாம்🤷🏻‍♂. கண்டுபிடியுங்கள்.*_

_*🚫தவறு செய்யும்போது தனியாக அழைத்து கண்டிப்பதுதான் சிறந்த வழி🤝. பெரியவர்களான நாமே மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்பட விரும்புவதில்லை எனும்போது, குழந்தைகளையோ, டீன் ஏஜ் வயதினரையோ மற்றவர்கள் முன் அவமானப்படுத்துவது சரியா?😏*_

_*🚫தவறு செய்துவிட்டால் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தைப் பெற்றவர்கள் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்👍. தவறு செய்வதைக் கண்டித்தால் உடனே தற்கொலை, மிரட்டல் என்பதை எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாது❌🙅🏻‍♂.*_

_*👉எந்தத் தவறுக்கும் 🙅🏻‍♂தற்கொலை தீர்வல்ல என்பதைச் சிறு வயதிலிருந்தே 👧🏻👦மாணவர்களுக்கும் தெளிவாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.🤝*_

_*👎தற்கொலை என்கிற வார்த்தையே நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தும்😱. ஆனால், அதை சர்வசாதாரணமாக பத்து வயதுப் 👧🏻👦பிஞ்சுகள் செய்துகொள்கிறார்கள் என்பதை நாளிதழில் படிக்கும்போது மனம் பதறுகிறது😱. தற்கொலை செய்துகொள்ளும் 👧🏻குழந்தைகள் பெரும்பாலும் டீச்சர் திட்டினார், படிப்பில் அழுத்தம், மற்றவர்கள் முன் டீச்சர் அவமானப்படுத்தினார், பரிட்சையில் தோல்வி, 👨🏻பெற்றோர்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதாகவே இருக்கிறது.🤦🏻‍♂*_

_*👎தற்கொலை செய்துகொள்ளும் 👦குழந்தைகள், அதற்குமுன் 👪பெற்றோர்களிடமோ அல்லது சக மாணவர்களிடமோ அதுபற்றி பேசியிருப்பார்கள் அல்லது செய்கைகளால் காட்டியிருப்பார்கள் அவைகள் என்ன என்று பார்ப்போம்🤔...*_

_*👎👧🏻தற்கொலைக்கு முயலும் குழந்தைகள் நமக்குக் காட்டும் அறிகுறிகள் இவைதான்🔜...*_

_*😥உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் 👨🏻பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிற நேரம் என்பது மிகக்குறைவே😌. ஆனால், 👧🏻👦சிறு குழந்தைகள் அப்படிப்பட்டவர்கள் இல்லை🙅🏻‍♂. தங்களுடைய செய்கையாலே நமக்கு அவர்களுடைய நிலையைப் புரிய வைத்துவிடுவார்கள்😳.*_

_*👎தற்கொலை எண்ணத்துக்கு ஆட்படும் 👦👧🏻குழந்தைகள், 🏬பள்ளி மற்றும் 🏡வீட்டில் எப்போதும் தனிமையிலேயே இருப்பார்கள். தன் வகுப்பறையில் நடக்கும் நல்லது கெட்டதுகளைப் பற்றி வீட்டில் வாய் திறக்கமாட்டார்கள்😧. இதுதான் தற்கொலையை நோக்கி அவர்கள் செல்கிறார்கள் என்பதற்கான முதல் அறிகுறி🙄.*_

_*👧🏻தனிமையில் இருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் கதவை அடைத்துக்கொண்டு தன்னை தனிமைச் சிறையில் ஆட்படுத்திக்கொள்வார்கள்😧. தனி 🏡அறை இல்லாத வீட்டுக் குழந்தைகளின் கண்கள் கலங்கியபடி இருக்கும்😥.*_

_*🤔பெரும்பாலும், 🌑இரவுகளில் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள் அல்லது அடித்துப்போட்டது போன்று தூங்குவார்கள்😴.*_

_*👎தற்கொலை எண்ணத்துக்கு ஆளாகும் 👧🏻குழந்தைகள், தனக்குப் பள்ளியில் ஏற்படும் மன அழுத்தத்தை 👨‍👩‍👧வீட்டிலுள்ளவர்களிடம் காண்பிப்பார்கள். எல்லோரிடமும் எரிந்துவிழுவது, தேவையில்லாமல் 🤼‍♂சண்டை வளர்ப்பது போன்றவற்றை செய்வார்கள். வீட்டில் பிரச்னை என்றால், வகுப்பறையில் தனக்கு நெருக்கமான ஃப்ரெண்ஸ்களிடம்  எரிந்து விழுவது😡, கடிந்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.😌*_

_*🏬பள்ளியில், வகுப்பறையில் தனக்கேற்பட்ட   அவமானத்தை வீட்டில் 😡கோபமாக வெளிப்படுத்துவார்கள். தட்டைத் தூக்கி எறிவது, சாப்பிடாமல் கத்தி கூச்சல் போடுவது என்று நம்மை ஒரு நிமிடம் திணறடிப்பார்கள்🤦🏻‍♂. இவை வழக்கமான அறிகுறியல்ல என்பதை பெற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்🤔. அவர்களை அந்தத் தருணத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.🤝*_

_*👦👧🏻எட்டு வயதாக இருந்தாலும் சரி, பத்து வயதாக இருந்தாலும் சரி திடீரென படுக்கையை நனைப்பார்கள். சில 👦குழந்தைகள் காய்ச்சல், தலைவலி என்று அடிக்கடி ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.😧*_

_*😓ஆஸ்துமா இருக்கும் பிள்ளைகளென்றால்... தற்கொலை எண்ணம் தலைதூக்கும்போது அவர்களுடைய ஆஸ்துமா பிரச்னையும் அதிகமாகும் கவனம்.😱*_

_*😌காரணமேயில்லாமல் அடிக்கடி ஸ்கூலுக்கு மட்டம் போட நினைக்கும் 👧🏻குழந்தைகளை... பெற்றோர்களும், 👨‍🏫ஆசிரியர்களும் அதிக கவனம் எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.🤕*_

_*👱🏻வளர்ந்த பள்ளி மாணவர்களாக இருந்தால், பள்ளி செல்கிறேன் என்று சொல்லிவிட்டு பார்க், 🖥தியேட்டர் என்று வேறுவேறு இடங்களுக்குப் பயணிப்பார்கள். இதைக் கண்டுபிடிக்கும் 👨‍🏫ஆசிரியர்களும், 👨🏻பெற்றவர்களும் கூடுதல் கவனம் எடுத்து இக்குழந்தைகளை/மாணவர்களை கையாள வேண்டும்.🤝*_

_*👱🏻👧🏻குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமான மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணங்களோட இருப்பதாகத் தோன்றினால் உடனடியாக கவுன்சலிங்குக்கு அழைத்துச் செல்லுங்கள்👩🏻‍🔬. அல்லது அவர்களிடம் என்ன பிரச்சினை என்பதை கேட்டு ஒரு நிரந்தர தீர்வு காண்பது நல்லது👍... இவைகளே உங்கள் 👱🏻👧🏻பிள்ளைகளைக் காக்க ஒரே வழி.🤝*_

_*⚜பொதுவான விஷயம்...🤔*_

_*🏡வீட்டில் நடக்கும் விவாதங்களில் கருத்து சொல்லும்  👦👧🏻பிள்ளைகளை வியந்து பார்ப்போம்🙄. நம் கருத்தை எதிர்த்து 'இப்படிதான் எங்க ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க சொல்றதுதான் கரெக்ட்''  என சொல்லி பூரிப்படைவார்கள் குழந்தைகள்👦. குழந்தைகள் அதிகம் நம்புவது அவர்களுடைய ஆசிரியர்களைதான்.👨‍🏫*_

_*🤔முன்னாடி யெல்லாம் 👨‍🏫ஆசிரியர்களிடம் தங்கள் 👦குழந்தைகளை ஒப்படைக்கும் 👪பெற்றோர் ''கண்ணு தலையைத் தவிற மத்த எடத்துல எங்க வேணும்னாலும் அடி பின்னி எடுங்க சார்'' என்பார்கள்👨🏻. ஆனால் தற்போது 'ஏன் என் 👦குழந்தையை அடிச்சீங்க'' என்கிற அளவுக்கு நிலைமை 👎தலைகீழாக மாறிப்போயிருக்கிறது.🤦🏻‍♂*_

_*🏡வீட்டிலிருந்து கிளம்பும்போது என்ன பிரச்னைகளை வேண்டுமானாலும் 👨‍🏫ஆசிரியர்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் 🏬வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டால் 👦மாணவர்களே நலனே முதன்மையாக இருக்க வேண்டும்.🤝*_

_*🤔முன்பெல்லாம் மாணவர்கள் 13 வயதைத் தொட்டால் அதை அடசலன்ட் என்பார்கள்🙂. தற்போது அதை 10 வயதிலிருந்தே அடசலன்ட் என்று சொல்லப்படுகிறது.😱 இந்த வயதில் ஈகோ பார்க்கத் தொடங்கும் 👧🏻மாணவர்களிடம் கண்டிப்பையோ, தண்டனையையோ பொதுவெளியில் ஆசிரியர்கள் காட்டக் கூடாது🙅🏻‍♂. தவறு செய்த மாணவனை தனியாக அழைத்துப் போய் தான் நடந்த தவறை விளக்க வேண்டும்.😧*_

_*🤦🏻‍♂சாதியைச் சொல்லி திட்டுவது, நிறத்தை காராணம் காட்டி திட்டுவது, மற்றவர்களுடன் கம்பேர் செய்வதை 👧🏻👦மாணவர்கள் துளியும் விரும்புவதில்லை🙅🏻‍♂. அப்படி செய்வதாலேயே மாணவர் தற்கொலை, தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன😓.*_

_*👨‍🏫ஆசிரியர்களைப் பொறுத்தவரை பாடத்தை குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமே அவர்களுடைய வேலையில்லை.🙅🏻‍♂ 👧🏻மாணவர்களுக்கு புரியும்படி 📚கற்பிக்கப்படும் போதுதான் ஆசிரியர் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும். மாணவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு மதிப்பளித்து பதில் சொல்ல ஆசிரியர்கள் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.👍 இது போன்ற மாற்றங்கள் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.🤝*_

_*👨‍🏫ஆசிரியர்கள் தங்களது மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான பயிற்சி வகுப்புகள், உளவியல் ரீதியான பயிற்சிகளையும் கல்வித்துறை 👨‍🏫👩🏻‍🏫ஆசிரியர்களுக்கு அளிப்பதும் ஆசிரியர்களின் டென்ஷன் குறைக்க உதவும்👍🤝.*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*👑

*🏅⁨ 👉🏼SIVARAJ💘👈🏼⁩*
*🏅 ⁨SP.Vignesh⁩*
*🏅 ⁨ELA. TAMILADYAN⁩*
*⁨🏅 karthikeyanc29⁩*
*🏅 ஶ்ரீ வாலகுரு⁩*
*⁨🏅 sukumar ❤Zhorba⁩*
*🏅 ⁨jaiganesh2881⁩*
*🏅 surajthoothuvan84⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*👑

*🏅 பிரதீப் விஸ்வா⁩*
*🏅 Arumugam⁩*
*🏅 Dasphin Shaji⁩*
*🏅 வித்யா😀⁩*
*🏅 ⁨ஷகின்⁩*

_*🆕இன்றைய விவாத பதிவுகளில் புது உறுப்பினர்களின் பதிவுகள் அனைத்தும் அருமை...🤝🏻👌🏻👍🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*👨‍👩‍👧ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் அன்புக்குழந்தையை, தினமும் பள்ளிக்கு அனுப்பும்போது, 📚புத்தகப்பையை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. அதனுடன் சில நம்பிக்கைகளையும் சேர்ந்தே அனுப்பி வைக்கிறார்கள்.*_

_*👧🏻👦தங்கள் குழந்தை நன்றாக படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும். நம் குழந்தையை தனது குழந்தையைப் போல் எண்ணி, அவர்களுக்கு நல்ல விஷயங்களை 👨‍🏫👩🏻‍🏫ஆசிரியர்/ஆசிரியை கற்றுக்கொடுப்பார்கள் ஆகியவை அந்த நம்பிக்கைகள். ஆனால், ஆசிரியர் மீதான நம்பிக்கையை சில ஆசிரியர்கள், உடைத்தெறியும்போது, அத்தனை நம்பிக்கைகளும் பலனில்லாமல் போய்விடுகிறது🤦🏻‍♂.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*_பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்_*
*_சொரியினும் போகா தம_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*_எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது._*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*❣அறிந்து கொள்ளவும்❣*_

_*ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.*_

_*❣தெரிந்து கொள்ளவும்❣*_

_*புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.*_

_*❣புரிந்து கொள்ளவும்❣*_

_*துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...