Friday, 12 January 2018

விவசாயமும், இயற்கை சீற்றங்களால் விவசாயிகளின் இன்றைய நிலையும், நிவாரணமும், அதனை போக்குவதற்க்கான வழிமுறைகள் பற்றி ஓர் அலசல்.

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 23.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : சனி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார், தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லமாட்டார்...!!!*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*விவசாயி, என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்த்தால் இறுதியில் எனக்கு மரணம் தான், நேற்று சாத்தியமாய் இருந்தது, இன்று அசாத்தியமா மாறிவிட்டது.*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*விவசாயமும், இயற்கை சீற்றங்களால் விவசாயிகளின் இன்றைய நிலையும், நிவாரணமும், அதனை போக்குவதற்க்கான வழிமுறைகள் பற்றி ஓர் அலசல்.*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🇮🇳இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே . 😃எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு . 💪🏻இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அவர்களின் பாரம்பரிய 🌴தொழிலைச் சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் . 🤝🏻அதற்காக மற்ற துறைகள அனைத்தையும் ஒதுக்கி விடக்கூடாது, 🤨அது மிகவும் தவறு . ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம்👀 செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.*_😱

_*🤔கடந்த 50 ஆண்டுகளாக நவீனம் என்ற பெயரில் ரசாயன உரம் மற்றும் மரபணு🍂 மாற்றப்பட்ட விதைகளை நம் மாநில அரசும் மத்திய அரசும் வலுக்கட்டாயமாக விவசாயிகளிடம் திணித்து வருகிறது.🐾 விளைவு, நம் நிலம் முழுவதும் தரிசாகிவிட்டது,☹ உணவு நஞ்சாகிவிட்டது. தமிழக அரசு வழங்கும் விவசாயக் கடன் திட்டத்தால்😟 விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை. 🤷🏻‍♂இந்த திட்டத்தில் பாதி பொருளாகவும், மீதி பணமாகவும் வழங்கப்படுகிறது.💰 பொருளாக வழங்கப்படும் அனைத்தும் நம் மண் வளத்தை சீர்குலைத்த ரசாயன உரங்களும்,😰 பூச்சிகொல்லிகளும் தான். பிறகு எப்படி விவசாயம் செழிக்கும்?😖 இதை உணர்ந்த பலர் நம்மாழ்வார் அய்யாவின் வழிகாட்டுதலால் இன்று இயற்கை வழி வேளாண்மைக்கு💪🏻 திரும்பியுள்ளனர். நாங்கள் மறுபடியும் இதை உரக்கச் சொல்கிறோம்.🗣 இயற்கை வழி விவசாயத்தில் தற்கொலைக்கே இடம் இல்லை.*_👍🏻

_*😕உணவுப் பஞ்சம்' என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது.😱 என்றைக்கு வீட்டுக்குள் பாயும் என்று தெரியவில்லை.😧 இத்தகையச் சூழலிலும் மற்ற துறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைகூட வேளாண் துறைக்கு🌾 வழங்க நம் அரசு தயாராக இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.*_😥

_*🧐1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் நம் நாட்டில் 🇮🇳விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.😓 அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர்.*_😨

_*🤔"இவர்களில் யாரும் காதல் தோல்வியாலோ, கிரிக்கெட் தோல்வியாலோ, ☹வயிற்று வலியாலோ சாகவில்லை. கடன் தொல்லையால்,😓 வட்டி கொடுக்க முடியாமல், பயிர்களின் நட்டங்களினால் தற்கொலை செய்துகொண்டவர்கள்.😢 போர்களில் இறக்கிறவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகமானது."*_😱

_*😢"உலகமயமாதல் என்கிறார்கள். உலகம் ஒரே கிராமம் என்கிறார்கள்.🤨 தகவல் தொலைத்தொடர்பு, விஞ்ஞான வளர்ச்சி என்கிறார்கள்.😠 சந்திரனுக்கு விண்கலன்கள் ஏவப்பட்டாயிற்று.🚀 ஏவுகணைகள் கண்டம் விட்டுக் கண்டம் பாய்வன. தயார் நிலையில் உள்ளன. 🚔அணுகுண்டு ஆயத்த நிலையில் சாவு சுமந்து ஓய்வுகொள்கின்றன.💺 ஆனால், சபிக்கப்பட்ட உழவர் இனத்துக் கண்ணீர் மஞ்சளுக்குப் பாய்ந்து இஞ்சிக்கும் பாய்ந்துகொண்டு இருக்கும்."*_👀

_*😃இப்போ விவசாயத்தில் இளைஞர்களின் பங்கு சற்று அதிகமாகவே உள்ளது. 💪🏻அவர்களும் நம் பழைய பாரம்பரிய முறைப்படி இயற்கை விவசாயம் செய்யவே முயற்சிக்கிறார்கள்.*_👍🏻🤝🏻

_*😱எதிர்காலத்தில் சிலரையாவது சந்திரனில் குடியேற்ற முடியுமா, 😩விவசாயம் செய்ய முடியுமா (!) 😟என்ற ஆராய்ச்சிக்கு முன்னால், பூமியில் விவசாயத்தை மேம்படுத்த எதாவது செய்தல் புண்ணியமாக போகும்.*_🙏🏻

_*🌪இயற்கை சீற்றங்களால் மட்டும் இல்லாமல் பருவ நிலை🌚 மாற்றம் காரணமாகவும் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது...*_☹

_*🌪ஓகி புயலால் கடலோடிகளின் வாழ்வு மட்டுமல்ல, விவசாயிகளின் வாழ்வாதாரமும்🌾 நிலைகுலைந்திருக்கிறது. 95 ஹெக்டேர் நிலப்பரப்பில் 2,916🌴 விவசாயிகளுக்குச் சொந்தமான 16,633 தென்னை மரங்களும், 316.53 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் 764 விவசாயிகளுக்கான🌳 நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளன.🐾 தோட்டக்கலைத் துறைப் பயிர்களான வாழை 1693.16 ஹெக்டேர், மரவள்ளி 127.90 ஹெக்டேர், ரப்பர் 1363.53 ஹெக்டேர் என மொத்தம் 16,259 விவசாயிகளின் 3310.13 ஹெக்டேர் என்று தோட்டக்கலைப் பயிர்களும்🌱 சேதமாகியிருக்கின்றன என்று தமிழக அரசே தெரிவித்திருக்கிறது.🗣 கணக்கெடுப்புப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விடவில்லை 👀என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.*_😱

_*🌳விவசாயிகள். புயலில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குக்🍁 கேரளத்தைப் போல் பாரபட்சமற்ற இழப்பீடு கேட்டு குமரியில் போராட்டங்களும் நடந்தது.*_🏴

_*😧குமரியின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றான ரப்பர் சாகுபடியில்🧐 ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மிக முக்கியமானது.*_😰

_*☹மாவட்டம் முழுவதும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான ரப்பர் மரங்கள் விழுந்திருக்கின்றன.😓 “33%க்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ரப்பர் மரங்களுக்குத் தற்போது ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது.😟 விவசாயிகள் நலனைக் கருத்தில்கொண்டு, ரப்பர் சாகுபடிக்கு ‘சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு உதவித் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.🤪 இத்திட்டத்தில் ரப்பர் பயிரிட விரும்பும் விவசாயிகள்,🌳 ஊடுபயிராக வாழை அல்லது அன்னாசி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ஆகும் முழு செலவான ₹50💰 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்” என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.*_🗣

_*🧐ரப்பர் தோட்டங்களில் தேனீ வளர்ப்புக்கு ஹெக்டேருக்கு ஆகும் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான 20 தேனீ 🐛பெட்டிகளுடன் கூடிய தேனீ குடும்பங்கள் வழங்கப்படும் என்று சொல்லும் அரசு,😤 இதன்படி, புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் கூறுகிறது.*_😬

_*🤔அதாவது, ஊடுபயிர் சாகுபடி செய்தால்தான் அந்த ரூ.1 லட்சமே கிடைக்கும். 😟ஒரு ஹெக்டேர் என்பது கிட்டத்தட்ட இரண்டரை ஏக்கர். 🐾ஒரு ஹெக்டேருக்கு 500 ரப்பர் மரங்கள் நட பரிந்துரைக்கிறது இந்திய ரப்பர் வாரியம்.☘ விவசாயிகள் 550 முதல் 600 வரை அவரவர் விருப்பம்போல் நடுகின்றனர். 🌱ஒரு ஹெக்டேரில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக 2000 கிலோ ரப்பர் சீட் உற்பத்திசெய்யலாம்.👍🏻 இவை ஒரு கிலோ குறைந்தபட்சம் 100 ரூபாய் என்றால்கூட, ஒரு ஆண்டில் ஒரு ஹெக்டேரில் ரப்பர் விவசாயி சம்பாதிப்பது ரூ. 2 லட்சம்தான்.😰 தொழிலாளர் ஊதியம், இடுபொருள் செலவு போக ரூ.1 லட்சம் மிஞ்சும். அரசுதான் ரூ.1 லட்சம் வழங்குகிறதே என்று கேட்கலாம்.*_🤐

_*🧐ஒக்கி புயலில் முறிந்துபோன ரப்பர் மரங்களுக்குப் பதில் புதிய ரப்பர் கன்றுகள்🌱 நடப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.😏 சரி, நாளையே ரப்பர் பால் வந்துவிடுமா? 😖ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர் பால் வருவதற்கு ஏழு ஆண்டுகள் ஆகும்.😖 அப்படியெனில், ஒரு ஹெக்டேரில் ரப்பர் சாகுபடி செய்த விவசாயி இழந்து நிற்பது ரூ.14 லட்சம் அல்லவா?*_😱

_*🤨ரப்பர் தொழிலாளர்களின் கணக்குக்கு வருவோம். குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான 😕ரப்பர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அடர்ந்த ரப்பர் தோட்டங்களில் பால் வடிப்பு செய்து, 😩பிழைப்பு நடத்திவந்தவர்கள்.*_😳

_*☹இனி வரும் ஏழு ஆண்டுகளில் இவர்கள் வாழ்வும் ஜீவமரணப் போராட்டம்தான்.😓 இதற்கெல்லாம் சேர்த்தே வீதியில் நின்று போராடுகிறார்கள் விவசாயிகள்.✊🏻 இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்டு அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். 😥இது விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்சினை என்பதை இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்!*_😰

_*🧐இது தற்போது நடந்த இயற்கை சீற்றத்தால்🌪 நிகழ்ந்த விவசாய பாதிப்புக்கான அரசின் நடவடிக்கை யாகும்.*_🐾

_*🙊இன்னும் வறட்சி சம்பந்தமான இழப்பீடு. பற்றி நிறைய பேசாலாம்🗣 ஆனால் அதற்க்கான இழப்பீடு திட்டம் மற்றும் அதை பெறுவதற்கான வழிமுறைகள்🧐 இவைகளை பற்றி மாவட்டங்களில் ஆட்சியர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு 👀ஏற்படுத்த பட்டு வருகிறது. ஆனாலும் இழப்பீடு சரிவராமலும் விவசாயிகள் 🌳பரிதாப நிலையில் உள்ளார்கள்*_😥

_*🌳 இறுதியாக...🌴*_

_*🏗நகர மயமாக்கல் என்ற பெயரில் விளைநிலங்கள் எல்லாம் கான்கிரீட் 🏭கட்டடங்களாக மாறி வருகின்றன.😥 சுயநலத்தின் காரணமாக இயற்கை வளங்களை அழித்தனர்; 🌴மரங்களை வெட்டி வீழ்த்தினர். 🌳இதன் காரணமாக மழை பொய்த்து விவசாயம் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.🍂 விவசாயிகள் செய்வது இன்னதென்று தெரியாமல் கையறுநிலையில் தவிக்கிறார்கள். 😓நம் முன்னோர்கள் போற்றிய விவசாயிகளுக்கும்,👨🏻‍🌾 வேளாண் வளர்ச்சிக்கும் இன்றைய வழிபாட்டு முறையால் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.🤔 உலகத்துக்கே உணவளிக்கும் விவசாயி👨🏻‍🌾💪🏻 கஷ்டப்படுவதை இறைவனே விரும்பமாட்டான்.*_☹

_*🙏🏻கோயில்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் பொதுமக்களுக்கு👥 அன்னதானம் செய்யும் கோயில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத் துறையும், 🧐வழிபாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான மூலப் பொருட்களை🍂 விளைவித்துத் தரும் விவசாயிகளுக்கு, கோயில் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து💰 விவசாயிகளுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கலாம். 🤔அரசின் வேளாண்மைத் துறை மட்டுமல்லாமல்,😕 இந்து சமய அறநிலையத் துறையும் இது குறித்து ஓர் ஆய்வு 🔬மேற்கொண்டு திட்டங்களைத் தீட்டி நடைமுறைப் படுத் தலாம்.*_🤝🏻

_*🌴விவசாயம் செழித்தால், விவசாயிகளின் குடும்பம் மட்டுமா பயன் பெறும்?🤔 ஒட்டுமொத்த உலகத்துக்கே 🌎அல்லவா உணவு கிடைக்கும்?!😃 விவசாயத்தை பயிர்த்தொழிலாக😕 நினைக்காமல் உயிர்காக்கும் கடமையாகச் செய்யும் 💪🏻விவசாயிகளைப் போற்றுவோம்;🤝🏻 அவர்களின் கஷ்டங்களைத் தீர்க்கப் பாடுபடுவோம்.*_👍🏻✊🏻

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

_*🏅🦁naanum En Chevum🦁⁩*_
_*🏅SP.Vignesh⁩*_
_*🏅Su⁩*_
_*🏅🦀கல்கி🦀⁩*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

_*🏅balasundar pisn⁩*_
_*🏅⁨பிரதீப் விஸ்வா⁩*_
_*🏅King David (Editor)⁩*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*நவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. பொதுவாக நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி விட்டோம்.*_

_*இதில் விவசாயி விளைவிக்கும் போது ஏற்படும் பாதிப்புகளை கேட்பதற்க்கு கூட நேரமில்லை ஆன விலைவாசி அதிகமாகும் போது தான் நமக்கு தெரிகிறது. அப்போதான் அரசை கேட்போம் விலைவாசியை கட்டுபடுத்த ஏன் இந்த முரண்பாடு.*_

_*முன்னேற்றம் என்ற பெயரில் விவசாயத்தையும் தொழில்நுட்ப கட்டமைப்போடு விளைவிப்பது என்பதை விட கேவலமான நிலைக்கு இந்த கார்ப்ரேட் கரண்சி  விளம்பரம் என்ற பெயரில் நம் கண்ணை மறைக்கிறது.*_

_*நாம் காக்க வேண்டியது விவசாயம், காப்பாற்றப்பட வேண்டியது விவசாயியை முடிவை நீங்கள் எடுங்கள் முயற்ச்சியை விவசாயி எடுப்பார்.*_

_*விவசாயம் வெறும் தொழில் அல்ல...நம்மை வாழவைக்கும் உயிர்*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்*_
*_உழந்தும் உழவே தலை._*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைப்பவன்.*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெறுபவன்.*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*எத்தனை விதைகளை விதைத்தாலும் வாழ்கையில் முளைக்காத விதை விவசாயி .*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...