https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 05.01.2018*_ 🌹
🌹 _*கிழமை : வெள்ளி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*உண்மையான கல்வியை என்னவோ இன்னும் நம்மால் வகுக்க முடியவில்லை…. நான் எதற்கும் இலக்கணம் வகுப்பது இல்லை; ஆனால் அதை ஒருவாறு கூறலாம். உண்மையான கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது.*
*- விவேகானந்தர்*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*நேற்றைய இழப்புகளை மறந்து.. நாளைய வெற்றியினை நோக்கி.. இன்றைய பொழுதினை துவங்குவோம் நம்பிக்கையுடன்..!!*
*வாய்ப்புகள் விலகும் போது அதை எண்ணி கவலைப்படாதே.. எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்.. மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்..!!*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*அரசாங்க வேலை, தனியார் வேலை இவை இரண்டில் இன்றைய இளைஞர்களின் தேடல் எதற்காக உள்ளது? ஏன்?*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*😃🙎♂இளைஞர்கள் எல்லோருக்கும் இப்ப தேவை ஒரு நல்ல சம்பளத்தோட வேலையும் தான்...*😎👍🏻
*🧐🤨இந்த மாதிரி இளைஞர்கள் ஒரு அறுபது சதம்... ஆனா இதுல இன்றைய போட்டி உலகத்து ல வெற்றி பெற்றவங்க ரொம்ப கம்மி ...*☹😥
*😇🤔வெறும் கனவும் தேடலும் மட்டும் இதுக்கு பொது மானதாக இல்லை. திறமையும் ரொம்ப கம்மிய இருகிரவர்களும் போதிய உழைப்பு இல்லாதவர்களும் சரியான வழி காட்டுதள் இல்லா தவர்களும் இதில் தேறுவது இல்லை..*👎
*🇮🇳😃 அரசாங்க வேலையிலும் இளைஞர்களின் எண்ணம் உள்ளது. ஆனால் அது அவநம்பிக்கையாக மட்டுமே உள்ளது.☹😇*
*🌳🌴சுயதொழில் மற்றும் விவசாய தொழில்களிலும் இளைஞர்கள் ஈடுபாடு உள்ளது. ஆனால் அதற்கு முன் பணம் இல்லாமல் தனியார் வேலையில் சேர்ந்து அதில் தேவையான பணத்தை சம்பாதித்து. அவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்...*🤝🏻👍🏻💪🏻
*🏭🏗தனியார் வேலை பற்றி...*
*🌀⬅1984 ஆண்டு பிறகு, நமது தமிழ்நாடு மாறி விட்டது. ஆம், அப்போதுதான் தனியாரின் பொறியியல் கல்லூரிகள் உருவாகியது.*🏢🏫
*🌀🧐(இப்போது சுமார் 570 பொறியியல் கல்லூரியும் மற்றும் சுமார் 20 மேற்பட்ட பல்கலைக்கழகம் உள்ளது (அரசு மற்றும் தனியார்)).*🏢🏭
*🌀🧐 அன்றுமுதல் இந்தியவில் ஐ. டி புரட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், அயல்நாட்டின் தனியார் துறைகள் இந்தியாவில் தொழிச்சாலைகள் உருவாகி உள்ளது. ஆகையால், இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு உள்ளது.*🤝🏻👍🏻
*🇮🇳🏢அரசாங்கத்தை நம்பி இருந்தால், கால் வாழ்க்கை மறக்க வேண்டியது. படிப்பு முடித்தவுடன் உடனே அரசாங்க வேலை கிடைக்காது. வந்தால் சுமார் 5 வருட முதல் 10 வருட வரை காத்திருக்க வேண்டும்.*🙄😒
*👩🏻💻👨🏻💻B . Sc (கம்ப்யூட்டர் சயின்ஸ்) அல்லது BCA படிப்பு முடித்தவர்களுக்கு சுமார் 10000 முதல் 15000 வரை மாதம் சம்பளம் ஐ. டி கம்பெனியில் வேலை கிடைக்கும். (ஹெல்பர் ஜாப்) அதுவும் இன் கேம்பஸ்'தான் கிடைக்கும்.*👩🏻💻👨🏻💻👍🏻
*🙄🧐மற்றபடி அவுட் கேம்பஸில் பார்த்தால், சுமார் 3000 முதல் 7000 வரை மாதம் சம்பளம் கிடைக்கும்.*🤝🏻💰
*👩🏻🎓👨🏻🎓இதைப்போல் BBA மற்றும் BCOM படிப்பு முடித்தவர்களுக்கு சுமார் 10000 முதல் 15000 வரை மாதம் சம்பளம் எம்.என்.சி கம்பெனியில் அல்லது தனியார் வங்கிகளில் வேலை கிடைக்கும். இதுவும் இன் கேம்பஸ்'தான் கிடைக்கும்.*👨🏻🎓👩🏻🎓👍🏻
*🙄🧐அவுட் கேம்பஸில் பார்த்தால், சுமார் 3000 முதல் 5000 வரை மாதம் சம்பளம் கிடைக்கும்.*👍🏻💰
*🇮🇳🧐அரசாங்கத்தில் நிறைய பேர்கள் பதவி உயர்வு வாங்கி கொண்டு அவர்களே இளைஞர்களுக்கு வழி விடாமல் தாங்களே பியூன் முதல் மேலாளர் வரை இருப்பார்கள்.*😠😤
*🎭தானியங்கி பற்றிய சில பதிவு...*
*🏢🏗தானியங்கி (AUTOMOBILE ) துறையில் இந்தியாவில் மிக பெரிய நிறுவனம் 132உள்ளன. (ஆதாரம்: இன்போ சைன்)*🙄🧐
*🏭🏢இதில் எங்களுக்கு தெரிந்து சுமார் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் ஒரு கோடி மேற்பட்டவர்கள் வேளையில் இருக்கிறார்கள். (மறைமுகமாக வேலை செய்யும் நபர்களின் எட்டாம் படிப்பு முதல் முனைவர் படித்தவர்கள் வேலைகள் செய்கிறார்கள்.*😳😱
*🏢🏭தானியங்கி (AUTOMOBILE ) துறையில் பார்த்தால், டிப்ளோமோ முதல் முனைவர் வரை படித்தவர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.*👍🏻✊🏻
*🎯குறிப்பாக,...*
*🎈தானியங்கி (AUTOMOBILE),*
*🎈இயந்திரவியல் (MECHANICAL),*
*🎈மின்னணுவியல் தொடர்பு (ECE),*
*🎈மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (EEE),*
*🎈மின்னணுவியல் மற்றும் செயற்கருவி (EIE),*
*🎈இரசாயனம் (CHEMICAL),*
*🎈கணினி அறிவியல் (CSE),*
*🎈தகவல் தொழில் நுட்பவியல் (IT),*
*🎈ரோபோடிக் (ROBOTICS).*
*🙄😳போன்ற படித்தவர்களுக்கு தானியங்கி துறையில் வேலைகள் கிடைக்கும்.*👍🏻🤝🏻
*🏭🏢மற்ற துறையில் பார்த்தால், எவ்வளவு வேலைகள் இருக்கும் என்று நீங்களே கணக்கு பாருங்கள்.*🤔😱
*🏭🏢இதுமட்டுமல்லாமல் INDIAN OIL CORPORATION LTD (வருமானம் 416816.20 கோடிகள்) முதல் GUJARAT NRE COKE LTD (வருமானம் 1409.77 கோடிகள்) வரை (TOP 500 NO OF COMPANIES ) இருக்கிறது. இதிலும் எவ்வளவு வேலைகள் இருக்கும் என்று நீங்களே கணக்கு பாருங்கள்.*🤔😳
*🇮🇳🏭இப்ப அரசாங்க வேலைப்பற்றி...*
*🇮🇳✍🏻அரசு மாவட்ட வேலைப் வாய்ப்பு அலுவலகத்தில் பார்த்தால், முதலில் +2 வகுப்பு முடித்தவர்கள், தங்களுடைய பெயரை அரசு மாவட்ட வேலைப் வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வார்.📃📨*
*🧑👩 அப்போது அந்த நபர்களுக்கு சுமார் 17 முதல் 20 வரை வயசு இருக்கும். அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வரும் போது, அவர்களுக்கு வயசு சுமார் 30 முதல் 35 வரை ஆகும்.🤨😒*
*🤔🧐 ஆக +2 முடித்தவர்களுக்கு சுமார் பத்து ஆண்டு பிறகு அரசாங்கம் வேலை கிடைகிறது. அதுவும் சுமார் ருபாய் 5000 முதல் 7000 வரை மாதம் சம்பளம் கிடைக்கும்.👨🏫👩🏫*
*👨🏻🎓👩🏻🎓ஆனால், பட்டதாரிகளுக்கு பெயர் பதிவு செய்தவுடன் சுமார் 5 வருடம் பிறகு அரசாங்க வேலை கிடைக்கும். இவர்களுக்கு சுமார் 10000 முதல் 25000 வரை மாதம் சம்பளம் கிடைக்கும்.*💰👍🏻
*🔚🧐முடிவா என்ன சொல்லவரோம்னா...*
*👨🏻🏫👩🏻💻'உத்யோகம் புருஷ லக்ஷணம்' என்று நம் முன்னோர்கள் முற்காலத்தில் சொன்னது, இக்காலத்தில் நாம் அதை 'உத்யோகம் மனுஷலக்ஷணம்' என்று மாற்றி விட்டோம்.*🤦♂😃
*🧐🤨ஆம்... இக்காலத்திற்கு ஏற்ப, இருபாலரும் வேலைக்குச் செல்லும் கட்டாய நிலையில் இருக்கிறோம். வேலை என்பது, 25 ஆண்டுகளுக்கு முன் குதிரைக் கொம்பாகவே இருந்து வந்தது.* 🤔🙇♂
*😊👀அப்பொழுதெல்லாம் எல்லா வீடுகளிலும் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருக்கும் பிள்ளைகளை 'தண்டச்சோறு' என்று திட்டுவார்கள்.*😥😣
*🗣🤷🏻♂இன்றைய சூழலில், உலகமயமாக்கலின் காரணமாக, வேலையில்லாத் திண்டாட்டம் பெரும்பாலும் ஒழிந்துவிட்டது.*👍🏻✊🏻
*😎🧐அவரவர் திறமைக்கேற்ப ஏதாவது ஒரு வேலை பார்கிறார்கள். ஆகையால் இந்த 'தண்டச்சோறு' என்று திட்டுவது மறைந்துவருகிறது என்றால் மிகையல்ல.*😏😏
*😃💰'அரை காசு சம்பளம் என்றாலும் அரசாங்க சம்பளம்' என்று நமக்கு முன் தலைமுறை மக்கள் அரசாங்க வேலையின் மீது ஒரு மோகத்துடன் இருந்தார்கள்.🤪🤨*
*🏗🏭அப்பொழுதெல்லாம் தனியார் நிறுவனங்கள் அதிகம் வரவில்லை.🤷🏻♂🙇🏻♂*
*👩🏻🎓👨🏻🎓 அத்துடன் படிப்பிலும் இப்பொழுது உள்ளது போலே அதிகத் துறைகள் இல்லை. மேலும் இன்றைய நாட்களில்,📆 கல்லூரிகளுக்கே சென்று தனியார் நிறுவனங்கள் 'கேம்பஸ் இன்டர்வியு' நடத்தி, கல்லூரிப்படிப்பு முடிக்கும் முன்பே வேலைக்கு, அதுவும் நல்ல சம்பளத்துடன், உத்திரவாதம் அளிக்கின்றனர்.*🤝🏻👍🏻
*🤔🇮🇳அரசாங்கமே எல்லா மக்களுக்கும் வேலை கொடுக்கவேண்டும் என்றால் அது முடியாத காரியம். இன்று அரசாங்கம் ஏற்று நடத்திய துறைகள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. 🤦🏻♂😥*
*🏭🏗தனியார் துறையில் படிப்பு மற்றும் திறமைக்கு மட்டுமே முதலிடம் அளித்து, அதன் அடிப்படையில் வேலை, ஊதியம், பதவி உயர்வு இவை கொடுக்கப்படுகின்றன.*✊🏻👍🏻
*🇮🇳🧐ஆனால் அரசாங்கத்தில் அப்படியில்லை, ஒரு சில பிரிவினருக்கு வேலை மற்றும் பதவி உயர்விலும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.*😏🙇🏻♂
*🇮🇳🤦🏻♂அரசுத் துறையில் சில வகுப்பினருக்கு மட்டும் வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அதில் முட்டி மோதிக் கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டு, எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பதைக் காட்டிலும் கிடைக்கும் தனியார் துறை வேலை வாய்ப்பை இழக்காமல் பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது தன் திறமையை பயன்படுத்தி சிறிய அளவிலாவது தொழில் தொடங்கவே மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.*👍🏻💪🏻
*🇮🇳🤝🏻சரி, பெரும் பிரம்மப் பிரயத்தனத்திற்குப் பிறகு அரசாங்க வேலை கைகூடி வருவதே ஆனாலும், அதற்குள் எத்தனை பேரின் பாக்கெட்டை நிரப்பவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம்.*🤦🏻♂🏃♂
*🇮🇳🧐அரசாங்க வேலையா? அதற்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற மனோபாவத்திலயே சிலர் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.*🤷🏻♂🙇🏻♂
*🇮🇳👍🏻அரசுத் துறையோ அல்லது தனியார் துறையோ அதில் விசுவாசத்துடனும், நேர்மையுடனும் பணி செய்து நம்மையும், நம் நாட்டையும் பொருளாதாரத்தில் உயர்த்தி உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கி நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கவேண்டும்.*💪🏻🇮🇳✊🏻
*🙏🏻🤝🏻நாம் நம் உழைப்பில் வாழவேண்டுமே அன்றி பிறர் உழைப்பில் வாழக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு வாழ்வில் முன்னேறுவோம்.*💪🏻🤝🏻🙏🏻
*😃🤝🏻இத்துடன் எங்களது சிறிய உரையை முடித்து, உங்களிடம் விடை பெறுகிறோம்.🎯🔚*
*🙄✍மேல குறிப்பிட்ட வார்த்தையில் எதாவது தப்பு அல்லது தங்களின் மனது நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.*🤓🙏🏻
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*👏👏👏இன்றைய தலைப்பு சார்ந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அணைவரும் சிறந்த பேச்சாளர்கள்... மற்றும் புதிதாக இணைந்த நண்பர்களின் கருத்துக்களும் வரவேற்கிறோம்...👏🤝👍*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பணி தற்போது மாறி, தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது.*
*தமிழகத்தில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.*
*அதன் தொடர்ச்சியாக தேசிய வழிகாட்டி சேவை எனும் பிரிவை ஏற்படுத்தி அதற்காக www.ncs.gov.in என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது.*
*படிப்பை முடித்தவர்கள் இந்த இணையதள முகவரி மூலம் தங்களுக்கென தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு விவரங்களையும், வேலை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.*
*அதன்பின் வேலைவாய்ப்புக் குறித்து தகவல்கள் அவரவர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும்.*
*இதேபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணையத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம்.*
*அரசு சார்பில் இது செயல்படுவதால் நம்பகத்தன்மையுடன் கூடிய பணி கிடைக்கும்.*
*மேலும் நம் விழிப்புணர்ச்சி குழுமம் சார்பாகவும் வேலைவாய்ப்பு என்ற குழுவும் உள்ளது. தேவைப்படுவோர் பயன் பெற்றுக் கொள்ளலாம்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்*
*பாத்திப் படுப்பதோ ராறு*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*💞 அறிந்து கொள்ளவும் 💕*
*சாமி காட்டுமே தவிர ஊட்டாது. தெய்வம் பாதி திறமை பாதி.*
*💞 தெரிந்து கொள்ளவும் 💕*
*கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.*
*💞 புரிந்து கொள்ளவும் 💕*
*“யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்.”*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
*✍ அறிவழகன்*
*🤝🏻 (வேலைக்காரன்)*
*📱 +91 8344047314*
*✍ ராமகிருஷ்ணன்*
*💪🏻(சுயதொழில்)*
*📱+91 8489390625*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment