https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 06.01.2018*_ 🌹
🌹 _*கிழமை : சனி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*நீ செய்யும் காரியம் தவறாகும் போது,*
*நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,*
*உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,*
*உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,*
*அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.*
*ஆனால் ஒருபோது மனம் தளராதே..*
*-டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்தி*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*போதிய பேருந்து விடாதவனை விட்டுவிட்டு,*
*படியில் தொங்குபவன் பின்புறத்தில் அடிக்கும் கையாலாகாத சமூகம் இது..!*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*பேருந்து ஊழியர் போராட்டங்களும், தமிழக அரசும், மக்கள் படும் அவஸ்த்தைகளும்,*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*🗣🎭பரபரப்பாக போய்கொண்டு இருக்கும் பேருந்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம், அதனால் மக்கள் படும் அவஸ்தை, இவைகளை எல்லாம் ஆமை வேகத்தில் சரிசெய்ய நினைக்கும் அரசை பற்றி நாமலும் பரபரப்பா பாப்போம்...*👍🤙
*🚌🚎இடப்பெயர்வுக்காக, நம் தேசத்தில் குறுக்கு நெடுக்காக தினந்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் சிறிதும் பெரிது மான பல்வேறு விதமான வாகனங்கள்தான்,🚑🚒*
*🇮🇳🎭அரசு, தனியார் என எந்த வாகனமாக இருந்தாலும் தேசமென்னும் இதயம் நின்று விடாமல் இயங்க காரணமாக இருக்கும் ரத்த நாளங்கள் இந்த பேருந்து ஊழியர்கள் தான்.*🤝👍
*👀🚌இவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கை அடையும் இடத்தில்தான் ஓய்வு. வாகனத்தில் ஏறி விட்டால், மாற்று டிரைவர் வரும் வரையில் வீட்டிற்கோ, சொந்த வேலைகளுக்கோ செல்ல முடியாது.*😲😧
*😟🧐இவ்வளவு ஏன், நாமெல்லாம் குடும்பத்தோடு கொண்டாடும் பண்டிகை காலங்களில் எங்கோ ஒரு சாலையில் ஓடிக்கொண்டிருப்பார்கள் பேருந்து ஊழியர்கள்*😣☹
*🚌🚎வாகனங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியாத இன்றைய சூழலில், இவர்களும் நம் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் பயண நேர கடவுள் டிரைவர்கள்தான்.*💪🙏
*😳🤔ஆனால், நம் சமூகத்தில் டிரைவர்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம். சிறப்பாக பணி செய்யும் டிரைவர்களை எத்தனை பேர் மனமுவந்து பாராட்டுகிறோம்.*😒😒
*⏫⏬பொருளாதார அடிப்படையில் டிரைவர்களை அணுகும் நம் மனப்போக்கு எப்போது மாறும்?*☹😔
*😟🧐இப்படி எக்காலத்திலும் தவிர்க்க முடியாத நபர்களாக வலம் வரும் இந்த பேருந்து ஊழியர்கள் எதிர் கொள்ளும் பிரச்னை என்பது சம காலத்தில் அதிகரித்து வருகிறது.*😰😨
*😏😩குடும்ப சிக்கல்கள். இது மட்டுமில்லாது தொழிலுக்கு போன இடத்தில் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை என, பேருந்து ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வாகனங்களுக்கு வரும் பிரச்னைகளை விட அதிகமாக உள்ளன.*😱😭
*🚌🧐தமிழக அரசுடனான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் ஆங்காங்கே வியாழக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டன.*🚫🔚
*👮🏻♂🤷🏻♂போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தத்தால், பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால், மாலையில் அலுவலகம் முடிந்து வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.*☹😖
*♻✳போக்குவரத்து ஊழியர்கள் என்ன எம் எல் எ மாதிரி இரண்டுமடங்கு சம்பள உயர்வா கேட்கின்றனர்.*😏😒
*🚍🇮🇳மத்திய அரசு போன்று மாநில அரசு ஊழியர்களுக்கு கொடுத்தது போன்று 2 .57 காரணியில் தானே சம்பளஉயர்வு கேட்கின்றனர்.*🚎🚌
*💰💵அதாவது வாங்குகின்ற சம்பளம் ரூபாய் 225 என்றால் 257 அதாவது கூடுதலாக 32 ரூபாய் , 14 .2 சதவிகிதம் உயர்வு.*⏫⏏
*🙄🤔தற்போது வழங்கப்பட்டுள்ள சம்பளத்தின் படி மாதம் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏற்படும் செலவு 81 கோடி . 2 . 57 காரணியில் வழங்கினால் 90 கோடி. வருடம் ஒன்றுக்கு 108 கோடி தான் கூடுதல் செலவு.*😇😕
*🧐🤨அவர்கள் போன தடவை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அடுத்த பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படா விட்டால் வேலைநிறுத்தம் நடக்கும் என்று அறிவித்திருந்தார்கள்.*📢🔴
*😢😥அரசு சுமார் 16 மாத காலங்கள் தொழிலாளர்களை பேச்சுவார்த்தை என கூறி காலதாமதத்தை ஏற்படுத்தியது அரசு தானே தவிர தொழிலாளர்கள் அல்ல.*😒😒
*🇮🇳🚌அரசு தொழிலாளர்களின் உணர்வை கணக்கில் எடுக்க தவறியுள்ளது, அரசும் அதை சார்ந்த உளவுத்துறையும்.*😥😓
*🏗☹தொழிலாளர்கள் தங்கள் குறைகளை சொல்ல ஒரு இடம்தான் அரசு. மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கு அரசு தான் முழு காரணம்.*🇮🇳🗣
*👀🤕இதன் நகர்வுகளை உற்று நோக்கும் போது, இந்த பிரச்சனையின் பயணம் “தனியார்மயமாக்கல்” என்ற திசையில் நகர்வதாகவே உணர்கிறோம்.*😕😟
*🤨🧐எது எப்படியோ பாதிக்கப்படுவது மக்கள் தான்.* *தனியார்மயமானாலும், போராட்டங்கள் என்றாலும், விலை உயர்வு என்றாலும்..... விளையாட்டு எதுவாயினும் விளையாடப்படுவது மக்களாகிய நம்மிடம் தான்.*😠😤
*💵💰ஆம், போராடுபவர்களிடமும் பணம் இல்லை, போராடுபவர்களுக்கு கொடுக்க அரசிடமும் பணம் இல்லை, விலை அதிகம் கொடுத்து பயணிக்க மக்களிடமும் பணம் இல்லை, அப்ப இந்த பணம் எங்குதன் இருக்கு.*🤦♂🤷♂
*🎼🎼ஒரு பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது...*🎧
*🎤ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே...*
*🎤என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...*
*🤔🤔 குட்டி ஸ்டோரி பாப்போம் 🙌🏼:-*
*🇮🇳🚍தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2016 ஆக.31-ஆம் தேதி முடிவடைந்தது.*🚎🚍
*🤥😯6 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.*😔😕
*🇮🇳🎭அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.*
*🇮🇳🎭ஓய்வூதியர்களுக்கான பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் போக்குவரத்துக் கழக ஊழியர்களால் தொடர்ந்து பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.*🙄😟
*👊👊வியாழக்கிழமை மாலை நீண்ட நேரம் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.*😯👍
*🇮🇳🎭ஆனால் அதை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தன. தொழிற்சங்கங்கள் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கோரி வருவது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாகியுள்ளது.*🤥😠
*🚍🚌பேருந்து ஊழியர்கள் போராட்டம் பண்ணுனா, அது அரசுக்கும் பேருந்து ஊழியர்களுக்குமான பிரச்சனை. இதில் மக்களை ஏன் இருவரும் சேர்ந்து பழி வாங்க வேண்டும்.*🤔😒
*🇮🇳🧐அரசோட முக்கிய பணி மக்களுக்கு சேவைகள் புரிவது மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் அரசு ஊழியர்களுக்கு சரிவர ஊதியம் கொடுப்பது. ஏற்கெனவே சம்பள பாக்கி என்று பல்வேறு போக்குவரத்து ஊழியர்கள் சிறிது நாட்களுக்கு முன்பு போராட்டம் பண்ணாங்க. அது திரும்பவும் பேச்சுவார்த்தை நடத்தி வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.*🤨😔
*😥😓வெளியூர் மற்றும் உட்புறங்களில் (குறிபிட்ட தொலைவுகளுக்குள்) செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து ஊழியர்கள், திடிரென்று போராட்டம் அறிவித்து பயணிகளை பாதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.*😠😤
*🤨😟அதில் வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் பெண்கள், கைக்குழந்தையுடன் பெண்கள், பள்ளி, கல்லூரி முடித்து வீட்டிற்கு செல்லும் மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகள், துக்கங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்படைந்தவர் பல்லாயிரக்கணக்கானோர். அவர்களை பற்றி சிந்திக்காமல் எப்படி திடிரென்று போராட்டத்தை கையிலெடுத்தார்கள்.*🚩😠
*🤔😠தன் தாய், பிள்ளைகள் மனைவிகள் இவ்வாறு நடுரோட்டில் தவிக்க விட்டு சென்றால் அவர்கள் மனம் பதறாதா?*😥😣
*🤨💡இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ள முடிகிறது. எவன், ஏக்கெடு கெட்டுப் போனால் நமக்கென்ன? நமக்கு தேவை சம்பள உயர்வு மட்டுமே என்று பாதியில் (மக்களை அனாதைகளாக நடுத்தெருவில்) இறக்கிவிட்ட பேருந்து ஊழியர்கள் நிரூபித்து விட்டனர். ஆனால் அனைத்து ஊழியர்களுமே, இதுபோன்ற செயலை செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.*🚌😨
*🚍🚌பேருந்து ஊழியர்கள் கண் அசராமல் பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும், பொங்கல், தீபாவளி கூட தன் குடும்பங்களோடு கொண்டாடவும் முடியாமல், பல நேரங்களில் தன் தூக்கத்தையும் விட்டு, பலரது உயிர்களை பத்திரமாக இடம் விட்டு இடம் கொண்டு சென்றுள்ளனர்.*🤝👍
*😕👀அவர்கள் சிறிது கண் அசந்தால், இங்கு அவர்களை நம்பி செல்லும் பல குடும்பங்களின் நிலைமை கேள்விக் குறியாகிவிடும். அதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.*♻✅
*🤔🧐சரி என்னதான் பிரச்சனை*
*😏😒எந்திரன் 2.0, தமிழ்ப்படம் 2.0 கேள்விப் பட்டிருப்போம். அதே போல தான், நம்ம போக்குவரத்து ஊழியர்களுக்கு 0.13 தான் பிரச்சனையாம். அதான்பா சம்பள உயர்வு கேட்கிறாங்க😟😕*
*🗣👀கேட்கிறது தப்பில்லை ஆனா அதற்குனு ஒரு வரைமுறை இருக்குல. அதுக்கு இங்குள்ள ஏகப்பட்ட ஐடியாக்களை நம்ம குழுவுலயே அவுத்து விட்டாங்க. அதுல குறிப்பா மக்களுக்கு இலவசமா தான் பேருந்து ஓட்டுவோம் என்ற எண்ணத்துல போராட்டம் நடத்தலாம்லனு சொன்னாங்க.*😟😩
*👂🤙கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா நடைமுறைல சாத்தியமா? இருக்குற கடுப்புக்கு பூரா பேரையும் சஸ்பெண்ட் பண்ணாலும் பண்ணிடுவாங்க அந்த இரட்டை பிறவிகள்🤣😂.*
*☹😠பொதுமக்களையும் பாதிக்காதவாறு, உங்க நியாயமான கோரிக்கைகளை கேட்டு, நியாயமான முறைல போராட்டம் பண்ணுனா நல்லாயிருந்துருக்கும்.*🤝👍
*🤨🤔என்னைக்காவது ஒரு நாள்😏, ஓட்டை, உடைசல் பேருந்துகளை நாங்க இயக்க மாட்டோம்னு என்று சொல்லி போராடியிருக்கீங்களா?😠 கேட்டா, நாங்க கேட்டு, கேட்டு தான் பாக்குறோம். அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மாட்றாங்கனு பலர் சொல்லுவிங்க.😤 அதுபோல ஊதிய உயர்வையும் அப்படி நினைச்சிட்டு போலாமே🤔🤔.*
*🚩🚩போராடுறதுனு முடிவு பண்ணிட்டிங்க. கொஞ்சம் எல்லாத்துக்கும் சேர்த்து போராடுங்க பாஸ் 🙌🏼. பொதுமக்களாகிய நாங்கள் டபுள் மடங்கு ஆதரவுகளை அளிப்போம்.*🤓💪
*🇮🇳🇮🇳தமிழக அரசு*
*🤦🏼♂அட என்னத்த சொல்றது 😴😴😴😴. திட்டுறதுக்கு புது வார்த்தையே கிடைக்க மாட்டேங்குது. இவங்கள பத்தி பேசுனாலே பத்திக்கிட்டு தான் வருது.*
*🚍🚌இவங்க ஆல்ரெடி, தற்போதைய ஓட்டை டவுன் பஸ், டப்பா வண்டி மாதிரியே போயிட்டாங்க. ஆட்சியே சவ்வு மிட்டாய் போல இழுத்துக்கிட்டு கிடக்கு. இவங்க எங்க சுமூகமா பேச்சுவார்த்தை நடத்தி சமாதான படுத்தி 😴😴😴😴. முதல்ல அவங்களுக்குள்ள சமாதானம் ஆகட்டும்.*🙄😯
*🗣🤙எவ்வளவு சொன்னாலும் திருந்த போறது இல்ல. இவங்களுக்கு சம்பளம் மட்டும் ஒரு லட்சத்தி 5 ஆயிரமோ, 50 ஆயிரமோ சொல்றாங்க. இவங்களே இந்த சம்பளம் வாங்குறப்ப, இராப் பகலா கஷ்டப்பட்டு உழைக்கிற ஊழியர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது 🙌🏼.😠*
*👊👊எதாவது உருப்படியா ஆகுற வேலைய பாருங்கடானா, புது ஓட்டுநர், புது நடத்துனர்களை தேர்ந்தெடுத்து இருக்கிற மக்கள் தொகைய காலி பண்ண ஐடியா பண்றாங்க. இப்படி எல்லாரையும் காலி பண்ணிட்டா, கடைசியா உங்களுக்கு எவன் காசு வாங்கி ஓட்டு போடுவாங்க. அத யோசிச்சி பாத்திங்களா 😬*
*😕😢பஞ்சாயத்து முடிஞ்சிரும். ஆனா எப்ப தீர்ப்பாங்களோ 🙌🏼, புரியாத புதிர்🤷🏼♂*
*😖😖மக்கள் படும் அவஸ்தைகள்*
*இதுமட்டுமா 😂🤣, ஓட்டு போட்ட பாவத்துக்கு எல்லா அவஸ்த்தையும் தான் படுறாங்க. தமிழக அரசு தற்போது ஆட்சியிலிருந்து பண்ற அவஸ்த்தைய விட, பேருந்து ஊழியர்கள் போராட்டம் பண்ணி பண்ற அவஸ்த்தை கொஞ்சம் கம்மி தான்.*😔😟
*🚎🚍தனியார் பேருந்து இருக்கிறதுனால கொஞ்சம் பரவாயில்லை. அவனுங்களும் நேரம் பார்த்து கொள்ளை அடிக்கிறாங்க. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வேன் ஓட்டுபவர்களுக்கு நல்ல வருமானம்.*💵💰
*👨⚖👩⚖நீதிமன்றத்துல, தீர்ப்பு வேற சொல்லிருக்காங்க. திருப்பி மேல் முறையீடு பண்ணுனா திரும்ப வேற மாதிரி தீர்ப்பு சொல்லுவாங்க. நம்ம பார்க்காத நீதிமன்றமா?🎭 நம்ம பார்க்காத வழக்கா? 🎭கககபோ (கருத்து கந்தசாமியயும் கடந்து போவோம்.)🙌🏼*
*🤔😡வேற என்னத்த சொல்றது. அடேய் (பொதுமக்களபா) ஓட்டு போட்ட பாவத்துக்கு உங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.* 😡😡
*🙏👊இனிமேலாச்சும் திருந்துவியா? திருந்துவியா? திருந்துவியா? 😃😃😃😃*
*🇮🇳🇮🇳நல்லாட்சியை வாக்களித்து தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி🙏🏼😛*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
*🏅 Saai Janu*
*🏅 கற்றது கால்நடை மருத்துவம்*
*🏅 Prabhu*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
*🏅🌹Ravi kalai💖*
*🏅 இராஜேஷ்தமிழ்.சௌ B+Ve*
*🏅 எழில்மணி,*
*🏅 பாலாசுப்பிரமணியன்*
*🤼♂இன்றைய சிறந்த அட்மின்🤼♀*
*🏆NEVER EVER GIVE UP - SHAH*🏆
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*அவங்க வேணும்னா 0.13 (ஜீரோ பாயிண்ட் ஓன், த்ரி) பிரச்சனைக்காக போராட்டம் பண்ணலாம்? ஆனா நம்ம தலைல எத்தனை பாயிண்ட் (•) டிக்கெட் விலை ஏத்தப் போறாங்களோ 😝.*
*சார் நான் என் வீட்ல இருந்து பக்கத்து வீட்டுக்கு போகணும்.*
*கண்டக்டர் : எடுறா ₹8 ரூபாய.*
*ஐயோ சார் நான் டீ குடிக்கிற காசு 😳*
*🙌🏼காசா வாங்கிட்டு ஓட்டு போட்டா, ஓட்டை பஸ்ல போகாமா, பின்ன மாடி பஸ்லயே போக முடியும் 😂🤣.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்*
*துணைவலியும் தூக்கிச் செயல்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*💚 அறிந்து கொள்ளவும்* 💚
*போராட்டத்துக்கு எல்லையில்லை, போராடுபவர்களுக்கு உண்டு.*
*💙 தெரிந்து கொள்ளவும்* 💙
*கேட்டதை பெறுவதற்க்கே போராட்டம், அதை தடுப்பதற்க்கு ஒரு கூட்டம்.*
*💜 புரிந்து கொள்ளவும்* 💜
*எதற்க்கும் எல்லை உண்டு, தாண்டுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். தாண்டாதவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[08/01, 9:59 PM] +91 90474 93815: https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :08.01.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*போதி தர்மனின் வாழ்க்கை வரலாறும், கொரியா இன மக்கள் கடவுளாக வணங்கும் தமிழ் இளவரசி சீம்பவளத்தின் வரலாறு பற்றிய ஒரு அலசல்.*
⚜🌀⁉⚜🌀⁉⚜🌀⁉⚜🌀
🔔 _*இரண்டாம்பாகம்*_🔔
⚜🌀 *_தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. 👍💐கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது.🤷🏻♀ மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம்._*🤷🏻♀👍
⚜ *_யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும் வணிகக் கூட்டம் இங்கிருந்து இஞ்சி, மிளகு, இலவங்கம், பருத்தி போன்ற வாசனை பொருட்களை தங்கள் நாட்டுக்கு அள்ளிச் சென்றனர்.🤷🏻♀ பதிலுக்கு சர்க்கரை, தங்கம், வெள்ளி, பட்டு, உயர்ரக மது, அழகிகள், குதிரைகள் என்று கொட்டிக் கொடுத்தனர். தேனை வண்டு பார்த்துக்கொண்டா இருக்கும்! தமிழகத்தின் செழிப்பு பிற தேசங்களின் கண்களை உறுத்தின.🧐 இப்படியே செழிப்பாக போய்க்கொண்டிருக்கையில்தான் இந்தத் தென்பகுதியில் தொடர்ச்சியான அயல்நாட்டுப் படையெடுப்புகள் எழுந்தன._*😨
⚜🌀 *_எதிர்பாராத பல்லவர் படையெடுப்பு மூவேந்தர்களின் எல்லையைச் சற்று சுருக்கியது. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாக கைப்பற்றத் தொடங்கியிருந்தனர்.🤷🏻♀ அந்த சமயத்தில்தான் திடீரென்று களப்பிரர்களின் கை ஓங்கியது. தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்களே களப்பிரர் என்பது ஒரு கூற்று. 🤷🏻♀இல்லை இவர்கள் தமிழர்களே என்பது மற்றொரு சாராரின் கருத்து._*🤷🏻♀
🤔 *_இங்கு நமக்கு என்ன தேவையென்றால், இவர்கள் பௌத்த, சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பது மட்டுமே.🤷🏻♀ அவர்களுக்கு முன்பே அதாவது சக்கரவர்த்தி அசோகர் காலத்திலேயே பௌத்தமும் சமணமும் தமிழகத்துக்கு அறிமுகமாகி இருந்தாலும், இவர்கள் மூலமாகவே தமிழகத்துக்குள் பௌத்த சமண மதங்கள் ஆழமாக ஊடுருவின. 🤷🏻♀தமிழர் பண்பாட்டை பாதித்தன.😞 அப்படியானால் இதற்கு முன் எந்த மதமும் தமிழகம் வந்ததில்லையா?_*🤔
🔔 🌀 *_வந்திருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கண்டதில்லை.🙅🏻♀ எடுத்துக்காட்டாக, பௌத்தம் இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது.🤷🏻♀ மக்கள் மனதில் அகிம்சையையும் சமதர்மத்தையும், பகுத்தறிவையும் புகட்டிய பௌத்த சமண மதங்களுக்கு முன் உயிர்ப் பலிகளையும், பிறப்பால் சாதியத்தையும், பிளவையும், அறிவு நம்ப மறுக்கும் கட்டுக் கதைகளையும் முன்வைத்த வைதீகம் நிற்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை.😞 இந்த உண்மையை தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர்கள் ஆட்சி நடந்த வேளையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நூல்கள் தெளிவுபடுத்துகின்றன._*🙁
🔔🌀 *_பௌத்தமும் சமணமும் அப்படிப் பரவக் காரணம் என்ன? ⁉மக்கள் தொண்டு. புத்த, சமண துறவிகள் தமிழகமெங்கும் பரவினர். தீண்டாமை களைந்தனர். பிறரை/பிறவற்றை இம்சிக்காத அவர்களது எளிமை மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது. 🤷🏻♀அசோகர் தோற்றுவித்த வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எழுத்துப் புரட்சி கண்டனர். 🤷🏻♀எழுத்துப் பணி கடை நிலை மனிதனையும் சென்றடைய உதவினர். மக்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று கல்வியையும் கற்றுத்தந்தனர். சுருக்கமாகச் சொன்னால், பௌத்தமும் சமணமும் சாமானியர்களையும் அறிவில் சிறந்தோரையும் ஈர்த்தன. 🤷🏻♀இவ்விரு மதங்களிலும் மக்கள் திரள் திரளாக இணைந்தனர். காஞ்சி தமிழகத்தின் புத்த மக்காவானது. மதுரை, பூம்புகார் போன்ற நகரங்கள் பிற புத்த திருத்தலங்களாயின. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிருந்தும் பயணிகள் இங்கு வரலாயினர். தமிழகத்தில் பௌத்தம் தழைத்தது._*🤷🏻♀👍
🔔😨 *_இது பலருக்கு வியப்பாக இருக்கலாம், களப்பிரரின் காலம் இருண்ட நூற்றாண்டல்லவா?⁉ எனும் கேள்வி எழலாம்._*🤔
🔔🌀 *_கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்லி ஒதுக்கி வந்தனர்.🤷🏻♀ ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளும் வரலாற்று ஆய்வுகளும் இந்தக் கருத்தை உடைத்தெறிகின்றன. உண்மையில் களப்பிரர் வரவுக்குப் பின்னர்தான் மக்களை நெறிப்படுத்தும் திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றன.🤷🏻♀ களப்பிரர்களின் சிறப்பை இருட்டடிப்பு செய்யவே திட்டமிட்டு அவர்களின் ஆட்சியை இருண்டகாலம் என்று பொய்யுரைத்ததாகக் கூறுகின்றன._*🤷🏻♀
🔔🌀 *_இவ்வாறு பௌத்தமும் சமணமும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த தருணத்தில்தான் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மீண்டும் பெரும் எழுச்சி பெற்ற பல்லவர்கள் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி அகற்றுகின்றனர்._*🤷🏻♀
🔔🌀 *_இப்படியாக ஆட்சியை மறுபடியும் கைப்பற்றிய பல்லவர்களும் பௌத்த சமண சமயங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். 🤷🏻♀ இந்த இரண்டாம் தலைமுறையில் வந்த பல்லவ மன்னன் (சிலர் கோசிவர்மன் என கூறுவதுண்டு) ஒருவனின் மூன்றாம் மகன்தான் போதிதாரா எனும் இயற்பெயர் கொண்ட போதிதர்மர் என்பது பொதுவான கருத்து._*
🤷🏻♀
*_ஆனால் போதிதர்மர் களப்பிரர் வம்சத்தை சார்ந்தவர் என்று மற்றொரு கருத்து நிலவுகிறது.🤔😴 வரலாற்றில் களப்பிரர் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ😴 அதுபோலவே போதிதர்மரின் வரலாறும் இருண்டுதான் கிடக்கிறது.😴 போதிதர்மர் களப்பிரராக இருந்ததாலேயே அவருடைய வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது என்பதும் சிலரின் குற்றச்சாட்டு.😴 இதனாலேயே போதிதர்மர் பற்றிய செய்திகள் மிகச் சொற்பமாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளன.👍 அதிலும் அவரது இந்திய வாழ்க்கை குறித்த குறிப்புகளைத் தொகுத்தால் ஒரு பக்கத்தைக்கூட தாண்டமுடியாது._*🙅🏻♀🙅🏻♀🌀🤷🏻♀
🧐 👉 *_இப்பொழுது நமக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்சத் தகவல்கள், செய்திகள்கூட சீன மற்றும் ஜப்பானிய ஆசிரியர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளவைதான். 🤕ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த யுவாங் சுவான்ஸியின் லியோயங் என்பவரின் 1⃣‘"""பௌத்த மட பதிவுகள்’"""என்னும் நூலும், ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த தான்லின் என்பவரின் 2⃣‘""இரண்டு நுழைவாயில்கள் மற்றும் நான்கு சட்டங்கள்’""எனும் நூலும், ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த தாவோக்ஷுவான் என்பவரின் 3⃣‘""பிரபல பௌத்த துறவிகளின் சரிதம்’"""எனும் நூலும் தான் போதிதர்மரின் வரலாற்றை பதிந்த மூன்று முக்கிய சீன நூல்கள் எனலாம்._*👍👍
🔔👉 *_இவ்வாறு பதியப்பட்டுள்ள சீன, ஜப்பானிய வரலாற்றாசிரியர்களின் பதிவிலும் பெருத்த முரண்பாடு காணப்படுகிறது.🤕 உதாரணத்துக்கு போதிதர்மர் தேநீர் பருகினார் என்கிற ஒரு சாதாரண நிகழ்வை பதிவு செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்._*😏
✍ *_‘போதிதர்மர் தேநீர் பருகுகிறார்’_*🤷🏻♀
✍ *_‘அது இனிப்பானது’_*😏
✍ *_‘இல்லை கசப்பானது’_*😏
✍ *_‘அதன் நிறம் பச்சை’_*😏
✍ *_‘அதன் நிறம் வெள்ளை’_*😏
✍ *_‘அதன் நிறம் கருப்பு’_*😏
✍ *_‘அதன் நிறம் சிவப்பு’_*🤦🏻♀
✍ *_‘அது எங்கள் வீட்டு_* *_தேநீர். நான்தான் பரிசளித்தேன்’_*🤦🏻♀
✍ *_‘போதிதர்மர் பருகும் தேநீர் அவருக்கு தேவலோகத்தில் இருந்து வருகிறது’_*🤭
✍ *_‘போதிதர்மர் போன பிறவியில் தேநீர் பயிரிடுபவராக_* *_இருந்தார். 🤦🏻♀அதனால் தான் அவர் இந்த பிறவியில் தேநீராய் அருந்துகிறார்’_*🙄
✍ *_‘போதிதர்மர் கசப்பான தேநீரை அருந்துவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம், வாழ்க்கையின் கசப்பை ஏற்றுக்கொண்டால் தான் நம் வாழ்வு ஆரோக்கியமாகச் செல்லும்.’_*🙄🤭
🤜 *_இப்படித்தான் போதிதர்மர் பற்றிய நிகழ்வுகளை முரண்பாட்டு மூட்டையாகப் பதிந்துவைத்துள்ளனர் சீனர்கள்._*🤦🏻♀🤕😏 *_ஜப்பானியர்களோ இதற்கு ஒரு படி மேலே சென்றுவிடுகின்றனர்._*🤦🏻♀🤦🏻♀
*_‘போதிதர்மர் குடித்த தேயிலையை இந்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து குடித்தால் சகல வல்லமையும் பெறுவாய்.🤭 ஏனென்றால் அவர் அதனை ஒன்பதாண்டுகள் தவமிருந்து பெற்றார்’ என்று ஒரு சாதாரண நிகழ்வை புராணம் ஆக்கிவிடுகின்றனர்._*🤭🙄😨😴😰
😰🤔 *_எது உண்மை....எது மிகை என்பது புரியாத புதிர்தான்._*😴🙄😨
🌀🤕 *_‘தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத புனிதராகக் கருதப்பட்டு அதற்குத் தகுந்தபடி வரலாறு புனையப்பட்ட மனிதரின் துல்லியமான உண்மைச் சரிதத்தை எழுதுவது என்பது முற்றிலும் இயலாத காரியம். 🙅🏻♀🙅🏻♀அதனால், போதிதர்மரின் வாழ்க்கையை மீட்டு எழுத முயற்சிக்கும் எவரும் முழுமையாக வெற்றி அடைவதே இல்லை.’ 🙅🏻♀🙅🏻♀என்று புலம்புகிறார் பிரபல வரலாற்று ஆய்வாளர் 💐""John McRae""_*💐
✍👉 *_அவரது கருத்துப்படி போதிதர்மரின் வரலாற்றை எழுதுவதென்பது இன்றைய, நேற்றைய ஆசிரியர்களின் தலைவலி அல்ல.🙅🏻♀🤕 பல நூற்றாண்டு காலமாக தொன்றுதொட்டு நிலவிவரும் சங்கடம்.😰😔 ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மரின் சீடரான ""தான்லின்"" காலத்திலேயே நிலவிய தலைவலி இது._*🤕🤕😔
🙇🏻♀⁉ *_இப்படி இருக்கையில், போதிதர்மர் இன்ன இடத்தில்தான் பிறந்தார், இன்னாருக்கு மகனாக, இன்ன குலத்தில், இன்ன தேதியில் என்று அவர் பற்றிய செய்திகளை திட்டவட்டமாக வரையரை செய்வது இயலாத காரியம்._*⁉🙅🏻♀🙅🏻♀
[08/01, 10:00 PM] +91 90474 93815: https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :08.01.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*போதி தர்மனின் வாழ்க்கை வரலாறும், கொரியா இன மக்கள் கடவுளாக வணங்கும் தமிழ் இளவரசி சீம்பவளத்தின் வரலாறு பற்றிய ஒரு அலசல்.*
⚜🌀⁉⚜🌀⁉⚜🌀⁉⚜🌀
🔔 _*மூன்றாம் பாகம்*_🔔
🔱 *போதி தர்மன் பற்றி எந்த ஒரு பாடப் புத்தகத்திலும் வராத போதிலும், போதி தர்மன் என்ற வார்த்தையை, தற்போதுள்ள இளைஞர்களிடம் முணுமுணுக்க வைத்த ஏழாம் அறிவு படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்து இன்றைய முடிவுரைக்கு செல்லுவோம்.*🙏💐
👉 *இன்று உலகெங்கும் கராத்தே, குங்பூ, ஜூடோ, நின்ஜாக், போன்றவைகள் தற்பாதுகாப்புக் கலைகளாக பயிற்று விக்கப்படுகிறது.*👍🤷🏻♀
👉 *அது மட்டுமல்லாமல், உலகெங்கும் புத்தமதம் ஒரு உன்னதமான மதமாக போதிக்கப்பட்டு வருகிறது. இவை இரண்டிற்குமே மூலகாரணமாக இருந்த மாவீரன் போதிதருமர் ஒரு தமிழனே என்பதை ஒரு சில வரலாற்று சான்றுகள் சூசகமாக சொல்கிறது.*🤷🏻♀👍
👉 *ஆனால் தற்போது கராத்தே, குங்பூ, ஜூடோ, நின்ஜாக், போன்ற வரலாற்று சிறப்பை மூழ்கடித்து விட்டு, இன்று நம் குழந்தைகள் WRESTLING, WWE என்று முணுமுணுக்கிறது.*🤷🏻♀
🧐🤨 *எல்லா வித்தையயும் நம்மகிட்டயே கத்துக்கிட்டு, இப்ப என்னான்ன நமக்கிட்டயே போர் புரியலாமா வேண்டாமானு ஆலோசனை பண்றாங்களாம். 😡👊ஒரு காலத்துல சீனாவில் திறமையான மாவீரர்களே கிடையாது.😡🙅🏻♀ அவர்களை இந்தளவிற்கு வளர்த்து விட்டதே போதி தர்மனின் கலைகள் தான்.👍 அதனால தான் இப்பவரை கடவுளாக போதிக்கிறார்கள்.👍 இவருடைய கலை திறமை ஜப்பான் வரை பரவியது. அங்கும் போதி தர்மரை வழிபடுகிறார்கள்.👍 ஆனா நம்ம நாட்டுல தான் அவர் தமிழனா, கன்னடனா, அவர் ஏன் சீனா போனாரு, என ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்.*🤦🏻♀🤦🏻♀🤦🏻♀🙇🏻♀
😡🤨 *ஆராய்ச்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👏🏼👏🏼👏🏼💐*
😡 *நம்முடைய வரலாறை இப்படி ஒரு குழப்ப நிலையில் ஆக்கியதற்கு யார் காரணம்? எல்லாம் நம்ம பயப்புள்ளைங்க தான். தமிழனின் வரலாற்றை பலர் குழப்ப நிலையில், அழிக்க நினைத்தாலும் அயல்நாடுகளில் தமிழனின் சாதனை என்றென்றும் கொடிக் கட்டியே பறக்கும்.💪👍 அதற்கு போதித் தர்மனும் ஒரு உதாரணமாக இருந்துள்ளார்.*👍
⁉ *இத்தலைப்பு ஏன் வைத்தோம்? ⁉சும்மா தெரிந்துக் கொள்வதற்காக அல்ல*🙅🏻♀
🌀😴 *வரலாறு ஏன் படிக்கிறோம் என்பதே சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை.🤦🏻♀ சில ஆசிரியர்களிடம் சும்மா கேளுங்க.😉 பதில் தெளிவாக சொல்லுவாங்களா என்பது கேள்விக்குறி தான்.*😜⁉
😜 *ஒரு சின்ன உதாரணம் பாப்போம்😉.*👇
👉 *வட்டமான கற்பாறைகள் உருண்டோடியதாலேயே சக்கரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.*👍
👉 *கற்களை உரசியாதால்தான் நெருப்பு உருவானது.*
👍
👉 *இது தெரிந்திருக்கா விட்டால் உலகம் தோன்றிய நாட்களிலிருந்தே, கேஸ் இருந்ததாகவே நம்பப்பட்டிருக்கும்.*🤷🏻♀
⚜👉 *இது போன்ற வரலாற்று நிகழ்வுகளே அடுத்த சந்ததியினரை சிந்திக்கத் தூண்டும் மிகப்பெரிய பொரியை ஏற்படுத்தும்.*🤷🏻♀👍
⚜👉 *அந்த காலத்து பண்டமாற்று முறை தான், தற்போதைய பிசினஸ்*🤷🏻♀
⚜👉 *எதுவும் அதுவாக நிகழவில்லை, கால மாற்றத்தாலும் வரலாற்று நிகழ்வுகளாலுமே ஏற்பட்டது என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதுபோல நம் தமிழின வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லித்தர வேண்டும். அது நமது கடமையாகும்.*💪👍
⚜👉 *போதி தர்மனின் கலைகளில் ஆரம்பித்தது தான் இன்று ஒலிம்பிக் வரை பல கலைகளாக மாறி காட்சியளிக்கிறது.*👍
⚜👉 *போதிதர்மன் அப்போதே தன் அப்பாவிடம் என்னால் அரசனாக இருக்க முடியாது, எனக்கு அதில் ஆர்வமில்லை என்று கேட்டார். அதற்கு சில பேச்சுவார்த்தைகள் நடத்தி, பின் போதி தர்மர் விருப்பப்படியே, விட்டதால் தான் இன்று உலக முழுவதும் அவர் புகழ் ஓங்கி நிற்கின்றது.*💪👍
🤜 *இதே தான் இன்று நிகழ் காலத்திலும் பெற்றோர், பிள்ளைகள் படிக்கும் விசயத்தில் நடக்கிறது.* 🤷🏻♀
🌀 *இப்படி வரலாறு என்பது நம் வாழ்க்கையோடு பின்னி பிணைக்கப்பட்ட ஒன்றாகும்.* 💐👍
👉💪 *இப்படி வரலாறுகளுக்கே பல வரலாறுகள் உள்ளது.👍 சிலவற்றை வரலாற்றோடு பின்பற்ற வேண்டும். சில வரலாறுகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக தான் வரலாறு என்ற ஒன்றையே ஆராய்கின்றோம்.*👍👍
👆🤜 👊 *வரலாறு தெரிஞ்சி என்ன சாதிக்க போறோம்? அது சோறு போடப் போகுதா? இது இப்ப 2018 ல போதிதர்மர் வரலாறு ரொம்ப முக்கியமா? என்று கேட்டவர்களுக்கான பதில்🤝🏼*🤛👊👇
👇 *சக்கரம்*
💪 *அதை வைத்து தான் தற்போது அனைத்து வண்டிகளும்*👍
👇 *சிக்கிமுக்கி கற்கள்*
💪 *நெருப்பை வைத்து தான் தற்போது சாப்பிடுகிறோம்*👍
💪 *சித்த மருத்துவம்*
*இன்றைய டாக்டர் படிப்பு வளர்ச்சி*👍
👇 *தஞ்சை கோவில்*
*இஞ்சீனியர் படிப்பு வளர்ச்சி.*👍
👇 *சனீஸ்வரன் கோவில் அதிசயம்*
*விஞ்ஞானிகள் படிப்பு முன்னுதாரணம்*👍
🙌 *எனவே வரலாறு மிக முக்கியம் 🙌🏼. அனைவரும் கற்போம்.*👍
😉😜 😛😝 *வரலாறு முக்கியம் அமைச்சரே 😉*😜😝😛
😇🏹 _*கமலிகணேசனின் வரலாற்று வேட்டை தொடரும்*_🏹😇
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
👑 *கலந்துரையாடல்2⃣*👑
😇💐 *விவாதத்தில் கலந்துகொண்ட அனைவருமே குழுவில் மட்டும் அல்ல வரலாற்றிலும் இடம் பெற்றவர்களே..*💐😇
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
*🤼♀ சிறந்த அட்மின்🤼♂*
*🏆NEVER EVER GIVE UP - SHAH🏆*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
👉 *தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் உன்னதத்தை இழந்து ம்,மறந்தும்,மறைத்தும் உள்ளோம்....*👊🤦🏻♀🙇🏻♀
👍💪 *வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம்.💪👍 இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.*👍💪
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும், ஆற்ற லதுவே படை.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும், அஞ்சாமல் ஒன்றுபட்டு, எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🧐 *அறிந்துகொள்ளவும்*🧐
*படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவிலா? விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன் என்றானாம்.*
🧐 *தெரிந்துகொள்ளவும்*🧐
*நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்*
🧐 *புரிந்துகொள்ளவும்*🧐
*ஜனகனுக்கு ஒரு நீதி! நீரோ மன்னனுக்கு வேறொரு நீதி?*
*இதை உணர்ந்தால் அதுவே பொது நீதி.*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment