https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 09.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : சனி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல*_
_*செயல்கள் எதையும் செய்ய முடியாது.*_
_*-ஜேம்ஸ் ஆலன்.*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*மனிதனாய் பிறந்து மிருகத்தின் குணத்தைக் கொண்டிருப்பதை விட. மிருகமாய் பிறந்து அது தன் இனத்தின் மீது காட்டும் அன்பு போல் காட்டி வாழ்ந்து விடு மனிதா!*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*நீர், நிலம், காற்று மாசடைதல் கட்டுப்பாட்டில் உள்ளதா? இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்னென்ன?*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🌴நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக 🙏எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும். 🌍மனித நாகரீகம் வளர வளர🤦🏻♂ இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.☹ இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். 🤐மனிதன் தன்தேவைக்காக இயற்கையை அழித்தான்.*_👎🏻
_*🇮🇳இந்தியாவில் நீர்,💧 காற்று 🌬மற்றும் நில🌎 மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடுதல் 🤔இருந்தாலும் அவற்றில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமுள்ளது’’*_🧐
_*🧐‘‘மாசுபாடுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு🏗 உரிமம் வழங்கும்போது மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சிகள், சுகாதாரப்பிரிவு😷 போன்றவற்றோடு கலந்து ஆலோசித்து 🤝🏻மக்களின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.*_🤝🏻👍🏻
_*🇮🇳அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து*_🙄
_*🌴 கழிவு நீரோடைகள் அமைத்தல்*_
_*🌴சரியான முறையில் சுத்திகரிப்பு செய்தல்*_
_*🌴 தொழிற்சாலைக் கழிவுகளை சரியான முறையில் சுத்திகரித்து, அவை நீர் நிலைகளில் கலப்பதைத் தடுத்தல்.*_
_*👆🏻 போன்றவற்றுக்கான நீண்டகாலத் தீர்வுகள் மூலம் நீர்நிலைகளை💦 பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.*_🤝🏻
_*🧐தமிழ்நாட்டில் பல இடங்களில் குடியிருப்புப்🏚 பகுதிகளில் தொழிற்சாலைகள்🏭 அமைக்கப்படுகிறது.*_
_*🏗தோல் தொழிற்சாலைகள்*_
_*🏗பேப்பர் தொழிற்சாலைகள்*_
_*🏗கனரக இயந்திர தொழிற்சாலைகள்*_
_*🏗பால் பண்ணைகள்*_
_*👆🏻 போன்றவற்றின் கழிவுகளை முறையாக சுத்திகரித்து அப்புறப்படுத்துவது இல்லை.*_☹
_*🐯தமிழகத்தின் மாநகர் மற்றும் நகர்ப் பகுதிகளில் வீடு 🏘மற்றும் தொழிற்சாலைகளில்🏭 உருவாகும் திட மற்றும் திரவ நிலைக் கழிவுகள் கடல், ஆறு, கால்வாய், ஏரி போன்ற நீராதாரங்களில் கலப்பதால் 😖அவை மாசடைகின்றன.*_😷
_*🧐சென்னை மாநகரில் கூவம் ஆறு தற்போது மிகப் பெரிய கழிவு நீரோடையாகவே💦 மாறிவிட்டது மிகப்பெரிய சோகம்.*_😓
_*😢இதுபோல தமிழகத்திலுள்ள பல ஆறுகளின் 💦நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.*_😓
_*🧐இவற்றுக்கெல்லாம் காரணம்,*_🤔
_*😓தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மேலாண்மை 🍃முறைகளில் சரியான திட்டமிடல் 🤝🏻மற்றும் நடைமுறைப்படுத்துதல் இல்லாததே.🤷🏻♂*_
_*💦நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இதனால்தான் தொடர்ந்து 😥நீடிக்கிறது.*_
_*🧐கோலாலம்பூருக்கு சுகாதார ஆய்வுப்பணிக்கு சென்றவர்கள் கூறிய தகவல்கள்:-*_🤔
_*👍🏻அந்நகரின் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதார முறைகள் சிறப்பாக இருந்தது ஆச்சரியப்பட வைத்தது.😱*_
_*🤔அந்த நகரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழ்நாடு தற்போது,😖 ஒட்டுமொத்தமாக சுற்றுச் சூழல் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 100😷 ஆண்டுகள் பின்தங்கியே😥 இருக்கிறது.🤷🏻♂*_
_*🧐எனவே, சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.*_💪🏻
_*🤔நிலத்தடி நீரை வணிக நோக்கில் சுரண்டுவதைத் தடுக்க கடுமையான🤝🏻 நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 💪🏻*_
_*💦சுத்தமான குடிநீர், விவசாயத்துக்குத்💪🏻 தேவையான தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் முதன்மையான கடமை.🇮🇳🤝🏻*_
_*😷நிலம் மாசுபாட்டு தன்மைகளை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கூடங்கள் 🔬மற்றும் அவற்றின் நடவடிக்கைகளையும் அதிகரிக்க வேண்டும்.🤝🏻👍🏻*_
_*🧐சமூக ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மூலம் நடக்கக்கூடிய சமூக கண்காணிப்பை 👀கிராமம் முதல் பெருநகரங்கள் 😱வரை எல்லா மட்டங்களிலும் செயல்பட வைக்க வேண்டும்.👍🏻*_
_*🧐இதுபோன்ற சமூக மற்றும் சுற்றுச்சூழல்🌴 ஆர்வலர்களை உள்ளடக்கிய அமைப்புகளுக்கு 😃அரசு சரியான அங்கீகாரம் கொடுப்பதோடு, 🤝🏻அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். 👍🏻*_
_*🤔மேலும் இதுபோன்ற அமைப்புகளுக்கு 🧐அரசு கண்காணிப்போடுகூடிய👀 அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.👍🏻*_
_*🇮🇳 இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த துறைகள் 🏗சரியான முறையில் கண்காணிக்கப்படுவது👀 இல்லை.😓👎🏻*_
_*🤔இதனால் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பல வகையான 😤குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடுகள்😷 அதிகரிக்கிறது.😓👎🏻*_
_*🙄இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க அரசு🇮🇳 கண்காணிப்புகளை👀 தீவிரப்படுத்துவதோடு, கடுமையான தண்டனைகளையும் 🚫வழங்க வேண்டும்.🤝🏻👍🏻*_
_*🇮🇳நமது நாட்டில் சேகரிக்கப்படும் திட மற்றும் திரவக் கழிவுகளை 🗑சரியான முறையில் மேலாண்மை 🌴செய்ய வேண்டும்.👍🏻*_
_*🙄இதுபோன்ற கழிவுகளிலிருந்து உரம்,🌴 எரிவாயு ⛽மற்றும் மின்சாரம் ⚡தயாரிப்பது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.🤝🏻👍🏻*_
_*🐯🦁வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்னைகள், பருவநிலை மாற்ற பிரச்னைகள் போன்றவற்றைத் தடுக்கவும்,👍🏻 காடுகள் அழிவதைத் தடுக்கவும், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.🤝🏻👍🏻*_
_*🌴காடுகள் வளர்ப்பு குறித்த இலக்குகள் நிர்ணயித்து,🧐 ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.🤝🏻👍🏻*_
_*🌴காடுகளின் முக்கியத்துவத்தை 🤔அறிந்து அவற்றை அழியாமல் தடுத்தல், வனவளத்தைப் பெருக்குதல்,🤓 வனவிலங்குகளை பாதுகாத்தல் ✅போன்றவை குறித்த விழிப்புணர்வினை👀 மக்களிடம் அதிகரிக்க வேண்டும்.🤝🏻👍🏻*_
_*🤔தற்போது பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்குப் 🌴பதிலாக குறைந்தது பத்து மரங்களாவது நடப்பட வேண்டும்.🌴🤝🏻*_
_*🏫பள்ளி, கல்லூரி மாணவர்கள் 👦🏻👩🏻மற்றும் பொது மக்கள்👥 அனைவரிடமும் மரம் வளர்த்தல் மற்றும் வனவளத்தை அதிகரிக்க வேண்டியதின் அவசியம் குறித்த விழிப்புணர்வினை👀 ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.’’🤝🏻👍🏻*_
_*💦மாசடைந்த நீரினால் ஏற்படும் பாதிப்புக்கள்:-*_🤔
_*😓மாசடைந்த நீரை பருகுவதனாலும், மாசடைந்த நீர் சூழலில் காணப்படும் போதும் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மாசடைந்த நீரைப் பருகுவதனால் வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல், தைபோயிட்டுக் காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன.*_
_*😓மேலும் மாசடைந்த நீர் சூழலில் காணப்படுவதனால் மலேரியா, டெங்கு, யானைக்கால், மஞ்சட்காய்ச்சல், தைவசுக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.*_
_*😓நீர் மாசடைவதால் நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.*_
_*😓நீரில் ரசாயண மாசுக்கள் கலப்பதனாலும், நீர் வெப்பப்படுத்துவதாலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகின்றன.*_
_*😓குறிப்பாக கைத்தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதனால் அதனை உட்கொள்ளும் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன் அவற்றின் இனப்பெருக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.*_
_*😓மேலும் வெப்பப்படுத்திய நீர் நீர்த்தொகுதியுடன் கலப்பதால் உயிரினங்கள் இறப்பதுடன், குடம்பிநிலையிலுள்ள பெரும்பாலான நீர்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிவடைகின்றன.*_
_*😓ஒரு பிரதேசத்தில் மாசடைந்த நீர் காணப்படுகின்றபோது அப்பிரதேச குடிநீர் வளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.*_
_*😓சில பிரதேசங்களில் மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற வளமாகவே நீர்நிலைகள் காணப்படுகின்றன.*_
_*😓குறிப்பாக ஆறுகள், குளங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை மாசடைகின்றபோது அப்பகுதி மக்களின் நீர்வளம் மாசடைகின்றது.*_
_*😓சில இடங்களில் மலசலக்கூடகுளிகள் அருகருகே அமைந்திருப்பதனால் நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற வகையில் மாற்றமடைந்துள்ளது.*_
_*😓பயிர்விளைச்சலிலும் நீர்ப்பாசன நடவடிக்கைகளிலும் நீர் மாசடைதலானது பாதிப்பபை ஏற்படுத்துகின்றது.*_
_*😓குறிப்பாக நீர் உவர்த்தன்மை அடைவதனால் நீரானது பயிர்விளைச்சலைக் கட்டுப்படுத்தும் அத்துடன் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.*_
_*😓யாழ்ப்பாணப் பகுதியில் அதிகளவில் கிணற்றுவழி நீர்ப்பாசணத்திற்காக தரைக்கீழ் நீர் பயன்படுத்தப்பட்டதனால் தற்போது சில பகுதிகளில் நீரின் உவர்த்தன்மை அதிகரித்துள்ளது.*_
_*😓குறிப்பாக இது கிணற்றுவழி நீர்ப்பாசனத்தில் இனிவரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.*_
_*😓இதனால் இவ்வாறு நீர்ப்பாசண நடவடிக்கையை நம்பி மேற்கொள்ளப்படுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.*_
_*😓உணவுற்பத்தி நிறுவனங்களுக்கு மாசடைந்த நீரினால் பெருமளவில் செலவு ஏற்படும்.*_
_*😓நீரின் துணையுடன் உணவுற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் சில நிறுவனங்களுக்கு இவ்வாறு பாதிப்புகள் ஏற்படும்.*_
_*😓குறிப்பாக இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள், குடிபாணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களைக் குறிப்பிடலாம்.*_
_*😓இவை தமது பொருட்களைச் சுத்ததப்படுத்துவதற்கும், கலவையாக பயன்படுத்துவதற்கும் நீரினைப் பயன்படுத்துகின்றன.*_
_*😓இதற்கு சுத்தமான நீர் கிடைக்காதபோது சுத்தமாக்கி நீரைப் பயன்படுத்துவதற்கரிய இயந்திரங்களை அதிக செலவில் கொள்வனவு செய்யவேண்டி ஏற்படும்.*_
_*☹ஒவ்வொரு வருடமும் டெல்லியில் 30 ஆயிரம் பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.*_
_*😓டெல்லியில் இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு வாழும் அனைத்து நபர்களுக்கும் ஏதாவதொரு மோசமான நோய் கண்டிப்பாக வந்துவிடும்.*_
_*😓டெல்லி மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறுவதைத் தவிர்க்க காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு இப்போதுதான் விழித்துக் கொண்டு தீவிரம் காட்டி வருகிறது.*_
_*😓அதற்கும் நீதிமன்ற உத்தரவு தேவைப்படுகிறது. டீசல் வாகனங்களை டெல்லியில் பதிவு செய்யத் தடை, 2000 சி.சி. கொண்ட எஸ்.யூ.வி வகை உயர் ரக கார்கள் இயக்க தடை, டாக்ஸிக்கள் அனைத்தும் மூன்று மாதங்களுக்குள் சி.என்.ஜிக்கு மாற வேண்டும் என ஏக கெடுபிடி.*_
_*😓டெல்லி எதிர்கொள்ளும் இந்த சிக்கல், இன்னும் சில ஆண்டுகளில் சென்னைக்கும் நேரலாம். அடுத்தடுத்து தமிழக நகரங்களும் எதிர்கொள்ளலாம்.*_
_*😓’’காற்று நாளுக்கு நாள் மாசடையும் பட்டியலில் மிக வேகமாக முன்னேறி வருகிறது சென்னை.*_
_*😓சென்னையில் கார்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்திருப்பது காற்று மாசு அதிகரிப்புக்கு பிரதான காரணம்.*_
_*😓காற்று மாசு என்பது கிட்டதட்ட ஒரு செயற்கைப் பேரழிவு. அது மெல்ல மெல்ல மக்களைக் கொல்லும். வந்தாரை வாழ வைக்கும் சென்னை, வருங்காலத்தில் வாழத்தகுதியற்ற நகரமாக மாறிவிடக்கூடாது என விரும்பினால் காற்று மாசு மட்டுமல்ல, நிலம், நீர் ஆகியவற்றையும் காக்க வேண்டும்.*_
_*👍🏻அதற்கு ஆறு விஷயங்களை உடனடியாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்!’’*_
_*🌴கழிவு நீர் கட்டுப்பாடு!*_
_*🔵கழிவுநீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இப்போது கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.*_
_*🔵சென்னையில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நல்ல நிலத்தடி நீரே தாரளமாக கொடுக்கப்படுகிறது.*_
_*🔵தொழிற்சாலைகளுக்கு கழிவுநீரை அரசே ஒரு முறை சுத்திகரித்து தரலாம். தேவைப்பட்டால் தொழிற்சாலைகள் இரண்டாவது முறையாக மீண்டும் சுத்திகரித்து அந்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்.*_
_*🔵தொழிற்சாலைகள் நமக்கு அவசியம்தான்; அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அதே சமயம் மிகவும் மோசமான அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சில வகை தொழிற்சாலைகள் நமக்கு தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.*_
_*🔵 தேவைப்பட்டால் அரசு தொழில் கொள்கையை மாற்றிக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். மனிதக் கழிவுகள், குப்பைகள் போன்றவற்றில் இருந்து பயோகாஸ் பிளான்ட் முறையில் மின்சாரம் எடுத்து பயன்படுத்துவதை எந்த அளவுக்கு சாத்தியப்படுத்தமுடியும் என்பதையும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.*_
_*🌴வேறு வழியே இல்லை... மரம் வளர்ப்போம்!*_
_*🔵மரங்கள் வளர்ப்பது அவசியம். ஏதோ ஒரு பகுதியில் செடிகளை நடுவதும், இன்னொரு பகுதியை ஒட்டுமொத்தமாக அழித்து மொட்டையாக்கி விடுவதையும் தவிர்க்க வேண்டும்.*_
_*🔵சென்னை நகரம் முழுவதும் மரங்கள் இருக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதால் மூன்று நன்மைகள் நமக்கு உண்டு.*_
_*🔵காற்று மாசடைவது குறையும். இதனால் நச்சு வாயுக்கள் நம்மை நேரிடையாக தாக்குவது குறைந்து மக்கள் பல்வேறு நோய்களின் பிடியில் இருந்து தப்ப முடியும்.*_
_*🔵மண் வளம் பெருகும். மரங்கள் மண்ணின் தரத்தை அதிகரிக்கும். மரங்களின் வேர்கள், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மண்ணை இறுக்கமாகப் பிடித்து கொள்ளும். இதனால் ஒரு மழை பேய்ந்தால், மண் உருண்டோடி நிலம் மாசடைவது தடுக்கப்படும்.*_
_*🔵புவி வெப்பமயமாதலை குறைக்கும். கோடை காலம் மட்டுமல்ல குளிர்காலங்களில் கூட சில சமயங்களில் சென்னை வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. அந்த அளவுக்கு நாம் நமக்கு மேலேயே மண்ணை வாரி போட்டிருக்கிறோம்.*_
_*🌴கட்டடக்கழிவுகளில் கவனம்!*_
_*🔵எங்கெல்லாம் கட்டடங்கள் திடீரென அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் கட்டடக் கழிவுகள் அதிகமாகவே இருக்கும்.*_
_*🔵கடந்த 15 ஆண்டுகளில்தான் வேளச்சேரி முதலான பல இடங்களில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.*_
_*🔵சென்னை முழுவதும் பல இடங்களில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டு இருக்கின்றன.*_
_*🔵இடித்த கட்டடங்களில் இருந்து கிடைக்கும் பொருட்கள் எல்லாம் எங்கே கொட்டப்படுகிறது? அது என்ன ஆனது என யாராவது தேடியிருக்கிறீர்களா? கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு உண்டான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்.*_
_*🔵தவிர ஒரே சமயத்தில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மணல் தேவை அதிகரித்திருக்கும். அப்போது மணல் சுரண்டலும் அதிகமாகவே இருக்கும். இதனால் மறைமுகமாக ஆறும் மாசடையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.*_
_*🔵திண்டுக்கல்லிலோ, தூத்துகுடியிலோ வசிக்கும் ஒருவர் அங்குள்ள பல ஏக்கர் நிலங்களை விற்றுவிட்டு, சென்னையில் பல லட்சம் முதலீடு செய்து லேக்வியூ அப்பார்ட்மெண்ட் ஒன்றை தவணை முறையில் வாங்கி, அதற்கு வாழ்நாள் முழுக்க உழைப்பது எல்லாம் புத்திசாலித்தனம்தானா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்!*_
_*🌴பிளாஸ்டிக் தவிர்ப்போம்! *_
_*🔵காலையில் பல் விளக்குவதில் ஆரம்பித்து இரவு பரோட்டாவுக்கு சால்னா வாங்கிச் செல்வது வரை நீங்கள் ஒரு நாளில் எத்தனை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என யோசித்து பாருங்கள்.*_
_*🔵 கண்ணாடிக் குவளை, எவர்சில்வர் குவளை, டிபன் பாக்ஸ் போன்றவை மறைந்து பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.*_
_*🔵டப்பர்வேரில் குழந்தைக்கு மதிய உணவுக்கு கொடுத்து அனுப்புவதையெல்லாம் கெத்து என நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் வறட்டு ஜம்பங்கள்.*_
_*🔵பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குப் பிறகுதான் புற்றுநோயின் வீரியம் அதிகரித்திருக்கிறது. செரிமான பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.*_
_*🔵 முதலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தன்னளவில் ஒழிப்பதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றைச் செய்ய வேண்டும்.*_
_*🔵 பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் நீர், நிலம், காற்று ஆகிய மூன்றும் மாசடையும்.*_
_*🌴எலெக்ட்ரானிக்ஸ் (இ) வேஸ்ட்*_
_*🔵இந்த 21-ம் நூற்றாண்டில் உலகமே சந்திக்கும் பெரிய தலைவலி இ- வேஸ்ட் எனப்படும் எலெக்ட்ரானிக் கழிவுகள்.*_
_*🔵 மொபைல் போன், மெமரி கார்டு, பென் டிரைவ், டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, லேப்டாப் என நாம் பயன்படுத்திய பின்னர் தூக்கியெறியும் அனைத்தும் இ-வேஸ்ட் தான்.*_
_*🔵எலெக்ட்ரானிக்ஸ் போர்டுகளை மறு சுழற்சி செய்யும் வாய்ப்பு இதுவரை இல்லை. இ- வேஸ்ட்களில் இருந்து பல நச்சுவாயுக்கள் காற்றில் கலக்கிறது. இதுவும் நிலத்தையும், நீரையும் மாசுபடுத்துகிறது.*_
_*🔵 100% டிஜிட்டல் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற மனோபாவத்தை நாம் மாற்ற வேண்டும்.*_
_*🔵அவசியமற்ற, ஆடம்பரத்துக்காக உருவாக்கப்படும் டிஜிட்டல் பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.*_
_*🔵 செல்போன் இப்போது எல்லோர் கையிலும் வந்துவிட்டது, இப்போதைய காலகட்டத்துக்கு செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாதுதான், ஆனால் ஆண்டுக்கொரு முறை மொபைலை மாற்றுவதை நம்மால் நிறுத்த முடியும்.*_
_*🔵 எலெக்ட்ரானிக் சந்தைகளை பொறுத்தவரையில் அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் இன்ஸ்டன்ட் வைரல் ஆக வேண்டும் என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மொபைலில் வாழ்நாள் நீட்டிப்புக்கு கொடுப்பதில்லை.*_
_*🔵 அவர்களின் விருப்பமே, அவர்கள் ஒவ்வொரு முறை புது மொபைலை அறிமுகபடுத்தும்போதும், நாம் ஓடோடிச் சென்று ஏற்கனவே இருக்கும் மொபைலை விட்டுவிட்டு, புது மொபைலை வாங்க வேண்டும் என்பதுதான். பகட்டுக்காக நாம் செய்யும் சில விஷயங்களை குறைத்துக் கொண்டாலே இ-வேஸ்ட்டை தடுக்க முடியும்!*_
_*🌴காலாட்படையாக மாறுவோம்!*_
_*🔵சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கில் இருசக்கர வாகனங்களும், நூற்றுகணக்கில் கார்களும் மக்களால் வாங்கப்படுகிறது.*_
_*🔵 முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் கார்களின் எண்ணிக்கை சென்னையில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.*_
_*🔵 பகட்டுக்காக ஓரிருவர் பயணிக்க ஆறு பேர் பயணிக்கும் அளவு வசதி கொண்ட கார்களை பயன்படுத்துவது தேச விரோத குற்றத்துக்குச் சமம். டெல்லியில் அதைக் குற்றமாகவே அறிவித்துவிட்டார்கள்.*_
_*🔵 நாமும் தவறை உணர்ந்து திருந்த வேண்டிய காலகட்டம் இது.*_
_*🔵எப்போது ஒரு சமூகம் தனிநபர் வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறதோ அது முன்னேறாத சமூகமாக கருதப்படும்.*_
_*🔵பொதுத்துறை வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.*_
_*🔵காற்று மாசுக்கு டீசல் வாகனங்கள் மிக முக்கியக் காரணம் என்பதை உணரவேண்டும். அரசும், மக்களும் ஒன்று சேர்ந்து கார்களை புறக்கணித்தால்தான் சுற்றுச்சூழல் மேம்படும்.*_
_*👍🏻சமூகத்தில் மாற்றம் எப்போது துவங்கும் தெரியுமா? 🤔நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவுக்கு மாசுபடுத்தும் செயல்களை நிறுத்தும்போதுதான்!*_👍🏻
_*🧐எதிர்கால சந்ததியினர் இன்று கேன்களில் தூய்மையான தண்ணீர் (மினரல் வாட்டர்)💦வாங்கி அருந்துவது போல் பிராண வாயுவையும் பைகளில் விலைக்கு வாங்கிசுவாசிக்கும்😷 நிலைக்கு தள்ள வேண்டுமா ..? 🤔சற்று சிந்தியுங்கள். இயற்கையின்🌴 பொக்கிஷங்கள் தான் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்களாகும்.🙏*_
_*🙏நன்றி*_🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🏅 இசையருவி*_
_*🏅 Su*_
_*🏅 jaiganesh2881*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🏅 பிரதீப் விஸ்வா*_
_*🏅 Shagul JRS*_
_*🏅 O+vஉயிர்தமிழ்💐சுரேதமிழன்*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*சுற்றுச்சூழல் பாதுகாப்பு பத்தி பள்ளி காலங்களில் இருந்து சொல்லிதந்துட்டுதான் இருக்காங்க... நாமலும் அத எந்த அளவு தெரிஞ்சு வச்சுருக்கோம்னு தெரியல... இன்னைக்கு விவாதமும் முடிவுரையும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியே... மத்தபடி மாற்றம் என்பது நம்ம ஒவ்வொருவரின் செயலில் தான் இருக்கு... முடிஞ்சது நம்மால் முடிந்த உதவி சுற்றுச்சூழல்க்கு பண்ணுவோம்... அது நம்மை பாதுகாக்கும்...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து*_
_*இயற்கை அறிந்து செயல்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💞அறிந்து கொள்ளவும்*_💕
_*தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?*_
_*💞தெரிந்து கொள்ளவும்*_💕
_*கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?*_
_*💞புரிந்து கொள்ளவும்*_💕
_*துள்ளாதே துள்ளாதே மனிதா! பக்கத்தில் பள்ளமடா!*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💞 *முடிவுரை தொகுப்பாளர்*🧐
👨🏻💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்*_ 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment