Friday, 12 January 2018

பெண்கள் தாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய தடையாக இருப்பது அவர்களின் சுயத்தீர்மானமா? அல்லது அவர்களைக் சுற்றியுள்ள குடும்பம் மற்றும் சமுதாயமா?

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 25.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : திங்கள்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

*முகத்தை ஒளித்துக் கொள்வதனால் எதுவும் ஆகப்போவதில்லை.*
*ஆனால் பிரச்சனையை முகம் கொண்டு எதிர்நோக்குவதால்*
*எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றன...........*

       *-ஈ.வே.ரா.பெரியார்*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*இலக்கை அடையவேண்டும்  என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள்.  சுயதீர்மானத்தில் உறுதியாக இருங்கள் சுற்றம் வசப்படும்.*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*பெண்கள் தாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய தடையாக இருப்பது அவர்களின் சுயத்தீர்மானமா? அல்லது அவர்களைக் சுற்றியுள்ள குடும்பம் மற்றும் சமுதாயமா?*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

*அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் 👁விழிப்புணர்ச்சி குழுவிற்கு👁 வந்ததிலிருந்து, இந்த குழுவிற்காக 🏹ஒரு தனிப் பெண்ணாக இருந்தும் சில விசயங்கள் பண்ண முடியும், செய்து காட்ட முடியும் என்று சாதித்து காட்டிய பெண்மணி, எங்களின் குழு நண்பர் கமலி, அவர்களுக்கு இன்று பிறந்தநாள்🎊🎁🎉🎈. அவர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், இந்த சமூகத்திலும், பொது நலத்திலும் சில விசயங்களை நம் குழு வாயிலாக செய்ய முடியும், தனது திறமைகளையும் வெளிக் காட்ட முடியும், அனைத்தையும் சமாளிக்க முடியும், சுயமாக தீர்மானம் எடுக்க முடியும் என்று பலவற்றை சாதித்துள்ளார். அவர்களுக்கு இன்றைய முடிவுரையினை பரிசலிக்கின்றோம்.🏹☺*

*👩🏼பெண்கள், கனவு லட்சியமென்ற👩🏻‍🎓 குறிக்கொள்களோடு தங்களின் பள்ளி, கல்லூரி காலங்களில் பயணிப்பர்.. 👩🏻‍💻ஆனால் மண வாழ்வுக்குப் பின்👰🏻 கனவுகளோடும் லட்சியத்தோடும் இருக்கும் பெண்கள்,🧚🏻‍♀ தங்களுடைய குடும்ப வாழ்கையில் தன் அடையாளத்தையும்🙆🏻‍♀ தனித்தன்மையும் தொலைக்கின்றனர். 🤦🏻‍♀ஒரு சிலரே மணமான பின்னரும் தங்களின் கனவுகளையும்,👸🏻 லட்சியங்களையும் கை விடாமல் நிர்ணயித்த இலக்கை 🎯அடைய போராடுவர். 💪🏻சாதிக்க வேண்டுமென்று நினைக்கும் பெண்கள் எப்படியும் முன்னேறுவர் என்றும் சொல்வார்கள்.*🗣

*🇮🇳இந்தச் சமுதாயம் ஒவ்வொரு காலகட்டத்திலும்💫 பெண்களைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.*😰

*🌳இயற்க்கையின் (இறைவனின்) படைப்பில் ஆண் 👨🏻உடலால் வலிமை மிகுந்தவனாகவும்,பெண்👱🏻‍♀ மனதளவில் வல்லமை பெற்றவளாகவும் படைக்க பெற்று இருக்கிறார்கள்.🌀*

*🧐இப்போது இருக்கும் கால மாற்றத்தில் பெண்கள்👱🏻‍♀ ஆண்களுக்கு 👨🏻நிகராக கல்வி அறிவு பெறுகிறார்கள்.🤝🏻ஆனால் ஆண்களால் மட்டும் செய்யப்படும் வேலைகள்♒ சில உள்ளன பெண்கள்👱🏻‍♀ சிலர் அதை எங்களால் செய்ய முடியும் என்று தர்க்கம் செய்வதில் சிலருக்கு உடன் பாடு இல்லை.🙆🏻‍♀ எப்படி ஆண்களால் ஒரு குழந்தையை பெற்று எடுக்க முடியாதோ 🤱🏻அது போல் பெண்களும் ஆண்கள்👨🏻 செய்யும் ஒரு சில வேலையை செய்ய முடியாது🚫 என்பது மறுக்க முடியாத உண்மை.🤨*

*👱🏻‍♀ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் கல்வி அறிவினால் 👩🏻‍🎓அவள் பெரிய பதவி ,புகழ் அடைந்தால் மட்டும் தான் அவள் சாதனை பெண்மணியா?🤦🏻‍♀இல்லை ,பதவியில் மட்டும் உயர்வை அடைந்து தன் சொந்த வாழ்வில் சறுக்களை சந்தித்தால் 👩🏻‍🎓,அது அந்த பெண்ணுக்கு மகிழ்ச்சியை தருமா என்பது எங்கள் கேள்வி.❓*

*🧐இதுவே நல்ல கல்வி தகுதி இருந்தும் திருமணத்திற்கு பின் குடுப்ப நலனிற்காக👨‍👩‍👦‍👦 வேலைக்கு செல்லாமல் தன் குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம்👀 செலுத்தி நல்ல குழந்தைகளை 🤱🏻இந்த சமுகத்திற்கு வழங்கும் பெண்ணின் மனதில்ஏற்படும் 🧚🏻‍♀திருப்த்தி பற்றி கூற வார்த்தைகள் ஏது.😟*

*☹சிலர் தன் குடும்பத்திற்காக தகுதி இருந்தும் தன் கனவுகளை👩🏻‍🎓 நனவாக்க முயலவில்லை.🤦🏻‍♀என்ன படித்தும் என்ன பயன் கடைசியில் அடுப்பு அடியில் தான் நிற்கிறோம் 😰என்று சலிப்பாக கூறினாலும்.🗣 அவர்கள் அனைவரின் உள் மனதிலும் 😊நான் என் குடும்பத்திற்காக என் வளர்ச்சியை இழந்து விட்டேனே 🤔என்று துக்கம் இருக்காது, ஒரு பெருமிதம் தான் இருக்கும்.😃🤝🏻*

*🇮🇳ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆண்,👨🏻பெண்ணிற்கு 👱🏻‍♀ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன.🤝🏻 சமுதாயம் என்பது என்ன பல குடும்பங்களின் கட்டமைப்பே ஆகும்.🤨*

*🇮🇳ஒரு சமுதாயம் ஒரு பெண்ணிற்க்கு போடும் கட்டுப்பாடுகளை 👱🏻‍♀அந்த சமுதாயத்தில் உள்ள குடும்பங்கள் பெண்ணிற்க்கு போடுகிறது.🤝🏻*

*😰அதில் சிலர் கட்டுப்பாடுகளை மீறி 🚫ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண்ணையும் வளர்த்தாலும், 💁🏻‍♀திருமணம் முடித்த பின் 🤔*

*🙋🏻‍♂'நாங்கள் எல்லாம் முற்போக்கு ஆசாமிகள்' என்று சொல்லிக் கொள்ளும் 🗣ஒரு சிலர்கூட, 'பெண்களுக்கு காலை ஒன்பது மணிக்கு ஆபீஸுக்கு போய், சாயங்காலம் ஐந்து மணிக்குள்ள 🕰வீட்டுக்கு வந்துறது மாதிரியான வேலைதான் சரிவரும்’😕 என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். 😟மேலும் சிலர் இருக்கிறார்கள்.😅 'பெண்கள் வேலைக்குப் போகக்கூடாதுனு 🧐சொல்ற ஆள் நான் இல்லை. 😧எனக்கு மனைவியாகப் போகிறவள் வேலைக்குப் போவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.🤨 ஆனால், ஆண்களிடம் பேசுவதற்கான அவசியமில்லாத 🤔ஸ்கூல் டீச்சர் போன்ற வேலையாக 👩🏻‍🏫இருந்தால் ஓகே!’ என்று 'பரந்த' மனப்பான்மையோடு பேசுவார்கள்.*🗣

*😊ஆதரவான புகுந்த வீடு, அனுசரணையான கணவரும், 💑அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய குழந்தைகளும்👩‍👧‍👦 எல்லோருக்கும் அமைந்துவிடாது.😃 ஆனால், இப்படி கிடைக்கப் பெற்றவர்களில் 🤪எத்தனை பேர் அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்🤔 என்பதில்தான் இருக்கிறது அவரவர் வெற்றியின் ரகசியம்!*💪🏻👍🏻

*🗣சில பொதுவான காரணங்கள்*😟

*👸🏻பெண்களுக்கு தங்கள் சிறகுகளின் பலமும்🧚🏻‍♀ தெரிவதில்லை.🤷🏻‍♀ தெரிந்தாலும் அதை பரீட்சித்து பார்க்க முயல்வதும் இல்லை.💁🏻‍♀ அவர்களே தங்களுக்கான வரையறைகளை நிர்ணயித்து, 🧐தங்களை சிறைபடுத்திக்கொண்டு, அதன் திறவுகோலை🔑 அடுத்தவர்களிடமோ அல்லது தங்கள் கைக்கெட்டும் தூரத்திலேயோ வைத்துவிட்டு,🤦🏻‍♀ தன் உலகத்தை சுருக்கிக்கொள்கிறார்கள்🙇🏻‍♀.*

*🧚🏻‍♀ தன்னாலும் சிறகடிக்க முடியும் என்று நம்பிக்கையையும்,💪🏻 தான் சிறகடித்து பறக்கத் தேவையான சப்போர்ட்டையும் 🤷🏻‍♀ஏனோ தன்னை சார்ந்தவர்களே தர வேண்டும் என்று நம்பி காத்திருக்கிறார்கள்.🤦🏻‍♀ தங்களை தாங்களே முடக்கிக்கொண்டு🙇🏻‍♀ மற்றவர்களை குறை கூறுவதில் நியாயம் இல்லை.*🤦🏻‍♀

*💁🏻‍♀இந்த நடைமுறையிலும் விதிவிலக்காக 🤷🏻‍♀ஒரு சிலர் தங்களின் பலத்தை உணர்ந்து, 🧐கனவை நினைவாக்கி வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள்.*🧚🏻‍♀👍🏻

*👰🏻திருமணத்திற்கு முன் சுதந்திரமாக சுற்றித்திரியும் பெண்கள்,👩🏼 திருமணத்திற்கு பின் கூட்டிற்குள் அடங்கி விடுகிறார்கள். சிலரே தடைகளை உடைத்து🤨 வெளியே வருகிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாமே காரணம். 😰அப்படியாயின் நமக்கு நாமே வரையறை வைத்துக்கொள்கிறோம்.🧐 பெண்கள் தமக்காக ஒதுக்கும் நேரம் மிகவும் குறைவு. 😓மனம் சோர்வடையாமல் இலக்கைப்பற்றியே🎯 சிந்தித்தல் ஒரு நாள் கைகூடிவிடும்*👍🏻

*👍🏻எவ்வளவு உயர்ந்த பதவிகள் வகித்தாலும் பெண்கள் 👸🏻அன்றும் இன்றும் குடும்பம் 🤷🏻‍♀என்று கூட்டுக்குள் அடங்கி தான் இருக்க வேண்டி இருக்கிறது.*💁🏻‍♀

*🧐வேலை என்று வந்து விட்டால் ஆணென்ன பெண்ணென்ன, ஒரே மாதிரிதானே இருக்கும்.🙇🏻‍♀ ஆண்கள் அதிக வேலை என்று இரவு எந்த நேரம் திரும்பி வந்தாலும் ஒத்துக் கொள்வார்கள்.😰 ஆனால் பெண்கள் மாலை நேரத்திலேயே வீடு திரும்ப வேண்டும்.🤦🏻‍♀ இரவு நேரங்கழித்து வரக்கூடாது, 🙇🏻‍♀மாலை நேரத்தில் மீட்டிங் போன்றவற்றில் கலந்து கொள்ள முடியாது.😓 வேலை விசயமாக வெளியூருக்கு போக அனுமதி கேட்டு நிற்க வேண்டும். 🤔இப்படி பல பிரச்சனைகள் பெண்களுக்கு.*🤦🏻‍♀

*🙄 மேலே கூறப்பட்ட பதிவுகள் சமூகத்தில்🇮🇳 பொதுவாக சமூகத்தில் பேசப்படும் கருத்துக்களே...!!!*🗣

_*🤪முடிவா என்ன வரேன்னா...*_🤔

_*👩🏼பெண்கள் பெரும்பாலும் குடும்பம் மற்றும் பொறுப்பு இல்லாதக் காலக்கட்டத்தில்,👀 அதாவது கல்லூரிப் படிப்பு👩🏻‍🎓 முடிந்து வேலைக்குச் செல்லும் நிலையில்,👩🏻‍🏫 தாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதில் காட்டும் மும்முரம்🤔 அவர்கள் திருமணமாகி ஒரு குடும்பத்தின்👨‍👩‍👧‍👦 பொறுப்பை கையில் எடுத்துக் கொண்ட பின் குறையவே செய்கிறது.😰 வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணுக்கு👩🏻‍⚕ அனுசரணையான கணவன் அமைந்துவிட்டாலும்...🙆🏻‍♀ குடும்பத்தையும்👨‍👩‍👧‍👦 குழந்தைகளையும்🤱🏻 மறந்து அவளால் 💯 சதவிகிதம் வேலையில் மூழ்கிவிட முடியும் 😢என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது.🤷🏻‍♀ காரணம்... 🤔ஒரு தாயின் மனசு, குழந்தைகளை மையமாக வைத்தே🤱🏻 சதாசர்வகாலமும் சுற்றிக் கொண்டிருக்கும்.🌀 ஏனெனில் ஆதிகாலம் தொட்டே பெண்களின் பொறுப்பும், கடமையும் குடும்பத்தைக்👨‍👩‍👧‍👦 காப்பதிலும், 🤝🏻அதில் உள்ள அங்கத்தினரின் தேவையை நிறைவேற்றுவதிலேயே மையம் கொண்டு திகழ்ந்துள்ளது.*_💁🏻‍♀

_*🙋🏻‍♀அதையும் தாண்டி சில பெண்கள் தங்களின் இலக்கை 🎯அடைய வெறியாக உழைத்து சாதித்ததும் நிகழ்வதுண்டு. 💪🏻அதற்கும் அவர்களின் குடும்பச் சூழலே காரணமாக இருந்திருக்கலாம்.🧚🏻‍♀ அதாவது, குடும்ப உறவுமுறைகளில் அதிருப்தி அடைந்த பெண், 🤦🏻‍♀தன் குடும்பத்தில் அக்கறைக் காட்டுவதைக் குறைத்து,💆🏻‍♀ தான் நிர்ணயித்ததை இலக்கை அடைந்து சமுதாயத்திலாவது 🎯ஒரு உன்னத நிலையை அடைவோமே என்று தன் பாதையை 🚶🏻‍♀மாற்றி வெற்றி கண்டவர்களாகவும் இருக்கலாம். 👩🏻‍🎓ஆக மொத்தம் பெண்கள் தன் குடும்பம் மற்றும் 👨‍👩‍👧‍👦சமூகச் சூழலை வைத்தே தன்னுடைய முடிவுகளை தீர்மானிக்கிறார்*_👩🏻‍🎓🎯💪🏻

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

*🏅 நான் மகான் அல்ல*
*🏅 SP.Vignesh⁩*
*🏅 Maha Rajan⁩*
*🏅 🦁naanum En Chevum🦁⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

*🏅 lakshminarayanann 264⁩*
*🏅 King David (Editor)⁩*
*🏅 Bruce Karthi⁩*

*இன்றைய தலைப்பில் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்த அனைவரும் சிறந்த பேச்சாளர்களே.👏🏻*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
*🇮🇳சமுதாயத்தில் உள்ள கட்டுப்பாடுகளை குடும்பங்கள் பெண்ணின்👩‍👧‍👦 மீது திணித்தாலும் திணிக்காவிட்டாலும் பெண் என்பவள் தன் குடும்பத்தை 👨‍👩‍👧‍👦நினைத்து தன் இலக்கை நிருணைத்து கொள்கிறாள்.*👍🏻

*👩🏻‍💻படிக்கும் படிப்பை வைத்து நல்ல பதவி ,👩🏻‍🏫புகழ் அடைந்தால் மட்டும் தான் வெற்றி அல்ல.👩🏻‍🎓நல்ல முறையில் குடுப்பதை நிர்வாகம் செய்து ,👨‍👩‍👧‍👦 அவர்களின் குழந்தைகளை 🤱🏻நல்ல குடிமகனாக நாட்டிற்கு தர வேண்டிய பொறுப்பு இருக்கிறது.🧚🏻‍♀ அதை சிறப்பாக செய்த அனைத்து பெண்மணிகளும் சாதனையாளர்களே.*👸🏻🤝🏻💪🏻

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

*எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்*
*பண்புடை மக்கட் பெறின்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*💚அறிந்து கொள்ளவும்*💚

*“குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.”*

*💙தெரிந்து கொள்ளவும்*💙

*“பறக்க விரும்புபவரால் படர முடியாது.”*

*💜புரிந்து கொள்ளவும்*💜

*“பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை.”*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...