Friday, 12 January 2018

இன்றைய இளைஞர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது தங்களது கருத்தில் தெளிவாய் இருந்து அவர்களின் சொந்த விருப்பப்படியே நடக்கிறார்களா?

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 19.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : செவ்வாய்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*''எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி''*_

                                      _*-சாக்ரடீஸ்*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு.*_
_*ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!*_

_*பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை*_
_*தட்டி கொடுப்பது மட்டும் தான்*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*இன்றைய இளைஞர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது தங்களது கருத்தில் தெளிவாய் இருந்து அவர்களின் சொந்த விருப்பப்படியே நடக்கிறார்களா?*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🇮🇳ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது.💪🏻 அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு இன்றைய காலகட்டத்தில்  தன்மையையும் மிகவும் அதிகம்.👍🏻 நாட்டு நடப்பு, உலக நடப்பு தெரிந்து வைத்திருப்பது மட்டுமின்றி அதைப்பற்றிய சிந்தனைகளையும் கருத்துகளையும் தங்கு தடையின்றி பயமில்லாமல் எடுத்துச் சொல்கிறார்கள்.🗣👏🏻 இப்படிப்பட்ட இளைஞர்கள், 🤔தங்களை நோக்கி அறிவுரையென்று வரும்போது ஏற்கிறார்களா?*_🤨

_*🧐திறமையும் அறிவும் மேம்பட்ட இன்றைய இளைஞர்களிடம் தெளிவாய் சிந்தனை இருந்தாலும்,😊 பெரியவர்கள் கூறும் அறிவுரைகளை உதாசீனப்படுத்தத்தான் செய்கிறார்கள் என்ற கருத்தும் உண்டு.*_😕

_*💻நவீன யுகத்தில் காலடி எடுத்து வைக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் மனதில், 🤔காலத்திற்கேற்ப சிந்திக்கும் திறனும், வேகமும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. 🤩தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடனும்💪🏻 முடிவுகளை எடுக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்ற பிடிவாதத்துடனும்🧐 இன்றைய தலைமுறை இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என்பது சிலருடைய கருத்து.*_😃👍🏻

_*🤨வேகமாக வளரும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இளைய தலைமுறையினரின் மன வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கிறது. 😢அதற்கு ஈடுகட்ட முடியாத பெரியவர்கள் சிறிது திண்டாடித்தான் போகிறார்கள்.☹ ஆனாலும் அன்பும், பண்பும், ஒழுக்கத்துடன் தன்னம்பிக்கையும் கற்றுத்தந்து வாழும் குடும்பங்களில்👥 இளைஞர்கள் இன்றும் பெரியவர்களின் அறிவுரைகளை கருத்திற்கொள்ள😄 தவறுவதில்லை.👍🏻*_

_*🧐இன்றைய தலைமுறை இளைஞர்கள் தங்கள் கருத்தில் தெளிவாக இருக்கிறார்கள் 👀என்பதும், அவர்கள் எடுக்கும் முடிவுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை🗣 ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது தங்களது சொந்த விருப்பப்படியே நடக்கிறார்களா 🤔என்பதை அவர்களது குடும்ப சூழல் தீர்மானிக்கிறது.*_👍🏻👎🏻

_*🗣இன்று பெற்றோர்களாக இருக்கும் சிலர் அவர்களது இளமைப் பருவத்தை நினைத்துப்🤔 பார்த்தார்கள் 👀என்றால் இந்த குற்றச்சாட்டு அவர்கள் மேலும் இருந்ததை அறிய முடியும்.*_😊

_*🧐இளமைப் பருவத்தை கடந்த பலர் இந்தக் குற்றச்சாட்டை கடந்து வந்து இருப்பார்கள்.*_😢

_*🧐எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு மட்டும் அழியாமல் இருக்கும். 😅இது தலைமுறையின் இடையே🧐 ஏற்படுத்திய ஒரு சிறிய தவறான புரிதல் தானே ஒழிய,😩 இதை பெரிதாக எடுத்துக் கொண்டு அச்சம் கொள்ள அவசியம் இல்லை.😕*_

_*🤔இளைஞர்கள் எந்த காலத்திலும் அன்றைய காலச் சூழ்நிலைக்கேற்ப தன்னை எளிதில் ஈடுபடுத்திக்கொண்டு,🤓 காலம் போகும் போக்கில் தானும் ஐக்கியமாகி வாழத் துடிப்பவர்கள்.😟*_

_*🙄ஆனால் அவரின் குடும்பத்தினர்கள் காலத்தின் ஓட்டத்திற்கேற்ப தன்னை 😦மாற்றிக் கொண்டு இளையவர்களை உடனே அவர்களின் எண்ணத்தின் படி🧐 அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க அனுமதி அளிப்பவர்கள் வெகுச் சிலரே, ☹பலர் புதிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயங்கி எங்கே தன் பிள்ளை வாழ்க்கையில் தோற்று😭 விடுவார்களோ என்று நினைத்து, 😔அவர்களை அறிவுரை என்ற பெயரில் தன் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யும் போது தான் உறவுக்குள் தவறான புரிதல்,🙇🏻‍♂ மனக்கசப்பு ஏற்படுகிறது.😠*_

_*🧐பெற்றோர்களே...*_

_*👱🏻‍♂குழந்தைகளை எல்லா இடத்திற்கும் நாம் கைப்பிடித்து கொண்டும்,😧 அல்லது அவர்களை பின் விட்டு நாம் பாதுகாப்பாய் முன் செல்ல அவசியம் இல்லை.😖 அவர்களின் பாதையை மறைக்காமல் அவர்களை முன் செல்ல வழி விட்டு, 🤨நீங்கள் பின் நின்று அவர்கள் செல்லும் பாதையை மட்டும் கவனியுங்கள். 👀அவர்கள் பாதை மாறி செல்வது போல் தோன்றினால் அவர்களின் தோள் தட்டி, 🤝🏻கைப்பிடித்து மாற்றுப்பாதை காட்டுவதை விட்டுவிட்டு ☹அறிவுரை என்ற முள்ளை அவர்களிள் செல்லும் பாதையில் போட்டு அவர்கள் ஓட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டாம்.🚫*_

_*😱தோல்வி அடைந்தால் என்ன செய்வது? 🤔அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஆயிரம் அறிவுரைகள் சொல்லி தராத பாடத்தை ஒரு தோல்வி கற்றுத் தரும்.😒*_

_*😃இன்றைய இளைஞர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். 😟சிலர் அவர்களுடைய சுயநலனுக்காக அவர்களை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். 😕பறக்க விடுங்கள் முயற்சி செய்து முன்னே செல்வான்.*_🧐🤝🏻

_*🤔தலைமுறை இடைவெளி இந்த தேசத்தை தகர்ந்து விடும்,👀 ஒருமைப்பாட்டை சிதைத்து விடும் என்று சொல்லும் முதியவர்களால்👴🏻 இன்றைக்கு இளைய சமுதாயம் சிறப்பாக சிகரத்தை எட்ட வழி😨 நடத்தப்படுகிறதா என்ற கேள்வி நமக்கு எழுகின்றது.🧐🤔 அவ்வப்போது. விடை தேடித் பார்த்தால் கிடைப்பதென்பதோ வெறும் வெறுமைதான்.🤷🏻‍♂*_

_*😠இன்றைய அரசியலை பார்க்கும் போது நமது இளைஞர்கள் குழப்பத்தின் தலைக்கு மேல சென்று விட்டார்கள்.😰 ஊழல், வன்முறை, இல்லாத ஒரு சமுதாயம் உருவாகப் பாடுபடும் இன்றைய இளைஞர்களை, 🙄தங்களது சுயநலத்திறக்காக அரசியல் ரௌடிகளாக மாற்றுகின்ற 😨முதிர்ந்த தலைவர்கள்தான் ஏராளம்.😡 இன்று இந்த நாட்டில். பட்டினியைப் போக்குவேன்,😢 பாலாறும் தேனாறும் ஓடச் செய்வேன் என்று சொல்லும் இந்த தலைவர்கள், பாமரனின் கோவணத்தைக்கூட 😠உருவி எடுக்கிறார்கள். சுடுகாட்டுக்குக் கூடச் சென்று பிணங்களை😰 வைத்து ஊழல் செய்கிறார்கள்.😡*_

_*🇮🇳இறுதியாக...*_💪🏻

_*🤔இன்றைய இளைஞர்கள் பெரியவர்களை மதிப்பதில்லை,😕 பெற்றோருடன் வாதிடுகின்றனர்,😥 ஆசிரியர்களை மதிப்பதில்லை, வீண்வாதம் செய்கின்றனர்'😢 இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மீது பெற்றோர், 🤨பெரியோர்கள், ஆசிரியர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் இவை. 😥ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அனைத்தும் இளைஞர்கள் மீது சுமத்துவது சரியா?🤔 பேச்சு, நடத்தை, செயல், பண்பாட்டு அடிப்படையில் பல குற்றச்சாட்டுகளை நாம் கூறினாலும் அவை நம் இளைஞர்களின் பிறவிக் குணமல்ல.🧐 இளைஞர்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் சரியென்றால் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கு யார் அடிப்படைக் காரணம்?🤔 அவர்களிடம் வேறு எந்த நற்குணங்களும் இல்லையா? 😕என்ற இந்த இரண்டு கேள்விகள் நாம் கேட்க வேண்டியது அவசியம்.👍🏻*_

_*🧐'வீடு நல்ல முறையில் இருக்க தாய், தந்தையர் பங்கே முக்கியம்.💪🏻 சமுதாயம் சிறந்திட ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களே சிறந்த ஆதாரம். 👍🏻நாடு நல்ல நிலையில் வளர்ந்திட இளைஞர்களே ஆதாரம்' என்கிறார் விவேகானந்தர்.🇮🇳🤝🏻 மொத்தத்தில் இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்ற இந்த மூவர் கூட்டணிதான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதாரம்.🇮🇳👍🏻*_

_*🧐இன்றைய இளைஞர்களிடம் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் தெளிவுடன் இருக்கிறார்கள்.🤨 அது படிப்பானாலும் சரி, வேலை வாய்ப்பானாலும் சரி. 👍🏻சென்ற தலைமுறை இளைஞர்களைக் காட்டிலும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் சாதனைகளே அதற்கு சாட்சி. 💪🏻சுந்தர்பிச்சை, நாதெள்ளா சத்யா போன்ற இளம் சாதனையாளரின் பட்டியல் மிக நீளம். 👏🏻எடுத்த காரியத்தில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வேட்கை, 🧐அதற்கான தீவிர தேடல் மற்றும் உழைப்பு தான் இளைஞர்களின் சக்திக்கு வலுவூட்டுகிறது. 💪🏻👍🏻இந்திய இளைஞர்களை பொறுத்த வரை லட்சியம் மற்றும் இலக்குகளை நிர்ணயம் செய்துவிட்டால் உறுதி கொண்ட நெஞ்சத்தினராக மாறிவிடுகின்றனர்.👏🏻🤝🏻👍🏻*_

_*🤔இன்றைய இளைஞர்கள் காற்றாடி போல் சுதந்திரமாக வானுயரப் பறந்து🎏 சமூகத்தைப் புரிந்து சாதனை என்னும் இலக்கை அடைய வேண்டியவர்கள். 🧐ஆனால் கட்டுப்பாடு என்னும் நூலைப் பிடித்துக் கொண்டு இளைஞர்களின் சமூக சிந்தனைக் 🤔காற்றாடியை பறக்க விடாமல் பிடித்து வைத்திருக்கும் பெற்றோர்களும்,🧓🏻👵🏻 பெரியோர்களும் மாற வேண்டியது தான் மிக முக்கியமான இன்றைய தேவை.*_🤝🏻👍🏻

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

_*இந்தத் தலைப்புச் சார்ந்த விவாதத்தில் பங்கு கொண்ட நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை*_

👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

_*🎖 Sivaraj.*_
_*🎖 Thilaga*_
_*🎖 Suresh babu.*_
_*🎖 Kalki*_
_*🎖 Isai aruvi*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

_*🎖 Vengatesh Subramaniam.*_
_*🎖 Raguram.*_
_*🎖 Balasundar.*_
_*🎖 Lakshmi narayan an.*_
_*🎖 Shagul.*_

_*🆕 புதிதாக இணைந்த நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை*_🤝🏻👍🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*இன்றைய இளைஞர்கள் சாதி அற்ற, மதவாதம் இல்லாத, ஊழலற்ற, வன்முறை விலக்கப்பட்ட ஒரு சமுதாயம் வேண்டி சமதர்மம் இந்த மண்ணிலே மலர வேண்டும் என்று போராட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை துன்பம் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் நாங்கள் இருக்கிறோம், உங்கள் துயர் துடைக்க என்று நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்கிகிறார்கள். என்பதையும் கருத்தில் கொள்ளவும்...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா*_
_*ஊக்க முடையா னுழை.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*அகல உழுகிறதை விட ஆழ உழு.*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...