🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :24.03.2018.*
🌹 *கிழமை :சனி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💡 *துன்பங்ளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.*
💐 *-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம்தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக, சிலர் புன்னகையாக.*😅
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*_வெளிவராத தமிழக இளம்தலைமுறையினரின் கண்டிபிடிப்பு சாதனைகள் பற்றிய ஓர் சிறப்பு அலசல்_*
🧐👩🏻🧑🏻🧐👩🏻🧑🏻🧐👩🏻🧑🏻🧐👩🏻
*_🏹பாகம் - 1⃣🏹_*
😇🤔 *_என்னடா இன்றைய தலைப்பில் நம் தமிழர்கள் கண்டுபிடிப்பு என்று யோசிக்குறீங்களா🤔🤔 பழங்காலம் தமிழர்கள் கண்டுபிடித்தவற்றில் பலவகைகள் நாம் ஆராய்ந்து தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் தற்போது இருக்கும் தமிழர்களின் அதுவும் இளைய தலைமுறையினரின் கண்டுபிடிப்புகள் ஏனோ அதை பற்றி தெரிந்து கொள்ள பெரும்பாலானோர்க்கு ஆர்வம் இல்லை.😔கண்டுகொள்வதும் இல்லை😔 இந்தியாவில் அதிக பொறியாளர்களை உருவாக்கும் மாநிலமாக திகழ்கிறது தமிழகம். ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் படிப்பு முடித்து வெளிவருவதாக தெரிவிக்கின்றன குறிப்புகள்.🧐 இவர்களால் சமூகத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்புகள் எவ்வளவோ உருவாகி இருக்க வேண்டும்தான்.👍👍 ஆனால், அத்தி பூத்தாற்போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவே செய்திகள் வருகின்றன._*🙇🏻♀😔
🧐🙇🏻♀ *_ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என எத்தனையோ திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்கும் அரசும், மாணவர்களின் இந்த அரிய கண்டுபிடிப்புகளை ஏனோ கண்டுகொள்வதேயில்லை.😔 அதனால்தானோ என்னவோ நம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் வணிகச் சந்தைக்கு வராமலேயே கல்லூரி வளாகத்தோடு அழிந்துபோய்விடுகின்றன. 😔என்னுடைய சிறிய முயற்ச்சியாலேயே இன்றைய மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சுமார் 100லிருந்து 1000 த்திற்கும் மேற்படியான அறிவியல் கண்டுபிடிப்புகளை தெரியபடுத்தவும் முடியும். ஆனால் பாகம் நீளுமே தவிர இளைய தலைமுறையினரின்கண்டுபிடிப்பு ஒருநாளும் நின்றுவிடவும் போவதில்லை.இதன் மூலமாக சிலரது கண்டிப்பினை தெரியப்படுத்தி இந்த தொகுப்பை அவர்களுக்காக சமர்ப்பிக்க கடமையும்பட்டுள்ளேன்_*🙏🙇🏻♀😇💐
*_1⃣ப்ளைண்ட் கைடன்ஸ்_*😇💐
🔎 *_பொதுவா கண் தெரியாதவங்க தங்களைச் சுற்றி நடப்பதை சத்தத்தை வச்சு தெரிஞ்சுகிறாங்க. ஆனா, அவங்களுக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் எழுத்துகள்தான். உதாரணமா, பஸ் வர்றது சத்தம் மூலமா அவங்களுக்குத் தெரியும். ஆனா, அது எந்த இடத்துக்கான பஸ்ஸுனு தெரியாது. இத மாத்தணும்னு நினைத்து. இதை மையமா வைத்து கண்டுபிடிக்கபட்டதே ப்ளைண்ட் கைடன்ஸ் எனும் கருவி_*🔍🧐👍
🧐 *_பார்வையற்றோருக்குப் படித்துக்காட்ட ஒரு கருவிபார்வையற்றோர்களின் கண்முன் இருக்கும் எழுத்துகளை வாசித்து ஆடியோவாக்கி அவர்களுக்கு கூறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது ப்ளைண்ட் கைடன்ஸ் என்ற கருவி. இதை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினியரிங் படிக்கும் சரிகா, கௌதமி, கிருத்திகா, சுச்சரிதா மற்றும் மூன்றாமாண்டு ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் எஞ்சினியரிங் இது படிக்கும் நந்திதா ஆகிய ஐந்து மாணவிகள் இணைந்து உருவாக்கியிருந்தனர்._* 😇👍
🧐🔎 *_இதன் செயல்பாடானாது. சாதாரண தொப்பியில ஒரு கேமரா, அத ஆன் பண்றதுக்கு ஒரு ஸ்விட்ச். டெஸ்ஸராக்ட்னு கம்ப்யூட்டர் ப்ரொக்ராம் ஒன்று, மைக்ரோபிராசசர் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றனர். கண் தெரியாதவர்கள் தொப்பியை மாட்டியவுடன் அந்த ஸ்விட்சை ஆன் செய்தால், கேமரா அவங்க முன்னாடி இருக்குற எழுத்துகளை போட்டோ எடுக்கும். பின்னர் எடுத்த போட்டோவிலிருந்து எழுத்த பிரிச்சு எடுத்து, அதனோட அர்த்தத்தை ஆராய டெஸ்ஸராக்ட் ப்ரோகிராம் உதவும். இப்போ அந்த எழுத்துக்கான அர்த்தம் கிடச்சுடுச்சு. அந்த அர்த்தத்தை வாய்சாக மாற்றுவதற்கு ஈ ஸ்டீக்னு ஒரு செயலி மூலமாக அந்த எழுத்துக்கான வாய்சை அவருக்கு தெரிவிக்கும் வகையில் கேமராவுடன் ஒரு ஹெட் போன் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் கண் தெரியாதவர்கள் தங்கள் முன் இருக்கும் எழுத்துகளை ஆடியோவாக்கி தெரிந்துகொள்ளலாம்._*🧐🔍👍
*_2⃣சேஃப்ட்டி டிராவல் பேக்_*
🔎🧐 *_தற்போது எங்கு பார்த்தாலும் திருடர்கள் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் எதாவது ஒரு வழியில் நம் கைபையை திருடி சென்று விடுகின்றனர். மேலும் டிராவல் பேக் திருட்டுப் போவது, பேக்கில் பிளேடு போடுவது, பேக்கை மறந்து வைத்துவிடுவது மற்றும் ஏர்போர்ட்டில் பேகை மாற்றி எடுத்துச் செல்லுதல் போன்ற சூழ்நிலைகளில், தங்கள் டிராவல் பேகுகளை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் அண்ணா பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிக்கும் டேனிஸ் அஹமது, ஜாகிர் அப்பாஸ், ரோகித் ஆகிய மூன்று மாணவர்கள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பேக் ஒன்றை வடிவமைத்திருந்தனர்._*🔍👍
🧐🔎 *_இதன் செயல்பாடுகள் ஒரு மெயின் போர்டில் சிம் கார்டு போல இருக்கும் ஜி.எஸ்.எம். கார்டு, ப்ரொடக்டிவ் வயர், சென்சார் போர்டு போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். உங்கள் டிராவல் பேக் தொலைந்தாலோ அல்லது திருட்டுப் போனாலோ, அந்த பேகில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டு போன்று இருக்கும் ஜி.எஸ்.எம். மாடியுலின் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அந்த பேக் இப்போது எங்கே இருக்கிறது என நம் மொபைலுக்கு மெஸேஜ் வந்துவிடும். இதேபோல் பேகின் உட்புறம், எலக்ட்ரிக் வயர் போன்ற ப்ரொடெக்டிவ் மெஸ் ஒன்று சுற்றப்பட்டு சென்சார் போர்டும் இணைக்கப்பட்டிருக்கும். இதன் உதவியால் பேகில் பிளேடு போடும்போது அலாரம் அடிக்கும்.மேலும் இதில் பாஸ்வேர்டை கூட போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் முக்கியப் பொருட்களை வைத்து எடுத்துச் செல்லும் பேக்கானது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்._*🧐🔍👍
*_3⃣மாயக்கண்ணாடி_*
🧐🔎 *_காலையில் எழுந்ததும் நாம் முதல்ல கண்ணாடி அல்லது கைபேசி முகத்துலதான் முழிக்கிறோம். அப்படி கண்ணாடியைப் பாக்கும்போதே முகம் தெரியவும் மற்றும் அதே சமயத்தில் கண்ணாடியில் நேரம், செய்திகள், வெதர் ரிப்போர்ட், காலண்டர், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பதிவுகள் மெயில் போன்றவற்றை கண்ணாடியிலேயே பார்க்கும் ஒரு கண்டுபிடிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்கள் நிகில், கீர்த்தனா, பீப்தி, ஆகாஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்._*🧐🔍
🧐🔎 *_இதன் செயல்பாடுகள் கண்ணாடியில் நம் செல்போனில் வந்திருக்கும் செய்திகள் தெரிவதற்கும் 2 (2 way mirror) வழிக் கண்ணாடியைப் பயன்படுத்தியியுள்ளனர். இதனால் செய்திகள் இக்கண்ணாடியின் உள் திரையிலும், உங்களின் முகம் வெளித் திரையிலும் தோன்றும். மேலும் செய்திகள் ,நேரம், வெதர் , நினைவூட்டல் ஆகியவற்றை உங்களுக்கு தெரிவிக்க ஒரு ஸ்பீக்கரும், மற்றும் அக்கண்ணாடியுடன் 'நேரம் என்ன?' என்பதைத் தெரிவிப்பதற்கு ஒரு மைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. இக்கண்ணாடியை இயக்குவதற்கு ராஸ்ப் பெர்ரி 5 எனும் மைக்ரோ ப்ராஸஸர், ஜி.எஸ்.எம். மாடியுல் உபயோகப்படுத்தியுள்ளனர். ஜி.எஸ்.எம். மாடியுலில் உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்துவிட்டால் போதும். இதன் மூலம் இந்தக் கண்ணாடியைப் பார்த்து காலையில் பல் தேய்க்கும் நேரத்திலேயே அன்றைய உங்கள் செல்போன் பதிவுகளைக் கண்ணாடித் திரையிலேயே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்._*🔍🧐👍
🧐🔎 *_4⃣காற்றில் இயங்கும் இயந்திரம்(பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர் ராம்குமார் குழுவினர்)_*😇💐
🧐🔎 *_புதுப்பிக்க இயலாத எரிபொருள்களான பெட்ரோல்,டீசல் போன்றவை இன்னும் கொஞ்ச நாளில் அழிந்துவிடும். அதன் பின் புதுப்பிக்கக்கூடிய மாற்று எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களை கண்டுபிடித்தே ஆக வேண்டும். அதற்கான சிறிய முயற்சிதான் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர் ராம்குமார் குழுவினரின் இந்த காற்றில் இயங்கும் இயந்திரம். நிமாட்டிக் சிலிண்டர்களின் மூலம் இயங்கும்படியாக இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கின்றனர். இந்த மாதிரி வாகனமானது, ஒரு முறை காற்றை நிரப்பினால் 5 கி.மீ வரை ஓடக்கூடியது. குறைந்த எடையுள்ள மெட்டீரியல்களை பயன்படுத்தி வடிவமைக்கும்போது 25 கி.மீ வரை பயணம் செய்ய முடியும்._*🔍👍
🧐🔎 *_5⃣தேங்காய் உடைக்கும் இயந்திரம் (பெருந்துறை கொங்கு கல்லூரி நவீன் குமார் மற்றும் ஜெய்விக்னேஷ் குழுவினர்)_*😇💐👍
🧐🔎 *_பெரிய ஹோட்டல்கள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகமான தேங்காய்களை உடைக்க வேண்டி இருக்கும். இதற்கென தனியாக ஆட்களை நியமித்து இருப்பார்கள். அவர்களால் ஒரு நாளைக்கு 400 முதல் 800 தேங்காய்களையே உடைக்க முடியும். அதுவும் ஒரே மாதிரியாக உடைக்க முடியாது. ஆனால் நவீன் குமார் மற்றும் ஜெய்விக்னேஷ் குழுவினர் கண்டுபிடித்த இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்கு 21 தேங்காய்களை உடைக்க முடியும். இதனால் நான்கு நாட்கள் ஒருவர் செய்யும் வேலையை ஒரே நாளில் செய்துவிட முடியும். ஒரு நாளைக்கு மின்சார செலவும் 60 ரூபாய்க்கு அதிகமாகாது. அதுமட்டுமில்லாமல் தேங்காய்களை சரியான அளவில் உடைக்கும்போது அவற்றை லேம்ப் செட்டப், கட்டடங்களின் கூரைகள், அழகு சாதன பொருள்கள் போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும். வெளிநாடுகளில் அதிக அளவில் இது போன்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது._*🧐🔍🤷🏻♀
🧐🔎 *_6⃣ அக்ரோபேக் மெசின் (பெருந்துறை கொங்கு கல்லூரி அகதீஸ்)_*😇💐
🧐🔎 *_நிலக்கடலை, மஞ்சள் போன்ற விவசாய பொருட்களை, மூட்டைகளாக பேக் செய்வதற்காகவே பிரத்யேகமாக செய்யப்பட்ட இயந்திரம். தான் இந்த அக்ரோபேக் மெசின் இதில் பொருட்களை வெற்றிடம் உருவாக்குவதின் மூலமாக மேல உள்ள தொட்டியில் சேமித்துக் கொள்ளலாம். பின் எவ்வளவு கிலோவில் மூட்டை வேண்டும் என்று செட் செய்துவிட்டு சாக்கை மாட்டினால் அத்தனை கிலோ எடை வரை தானாகவே நிரம்பிவிடும்._*🤷🏻♀🔍👍
🧐🔎 *_7⃣ கனரக வாகனங்களுக்கான எமர்ஜென்சி பிரேக்கிங் (பெருந்துறை கொங்கு கல்லூரி சக்திவேல் மற்றும் வருண் குழுவினர்.)😇💐_*
🧐🔎 *_கனரக வாகனங்களான லாரிகள், டிரக்குகள் போன்றவை மலைகளில் ஏறும்போதோ இறங்கும்போதோ, அதிகமான சுமையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, விபத்துகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கனரக வாகனங்களில் ஹேண்ட் பிரேக் இருக்காது. கிளட்சை கன்ட்ரோல் செய்து வாகனங்களை நிறுத்த வேண்டும் என்பதுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம். இது போன்ற விபத்துகளை எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டத்தை பயன்படுத்தி முற்றிலுமாக தவிர்க்க முடியும். வண்டி பார்வர்ட் கியரில் இருக்கும்போது சக்கரங்கள் முன்னோக்கி நகரவேண்டும் என்றும், ரிவர்ஸ் கியரில் இருக்கும்போது சக்கரங்கள் பின்னோக்கி நகரவேண்டும் என்றும் புரோகிராம் செய்திருக்கின்றனர். ரோட்டரி என்கோடரைக் கொண்டு வீல் டைரக்சனை அறிந்துகொள்ள முடியும். எப்போது எங்கள் புரோகிராம்படி இயங்கவில்லையோ அப்போது எமர்ஜென்சி பிரேக் அப்ளை ஆகி விடும். மீண்டும் டிரைவர் கண்டுபிடித்து பிரேக் பெடலில் கால்வைக்கும் போது, அவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும்படியாக வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் டிரைவரின் கட்டுப்பாட்டைத் தாண்டி நிகழும் 35% விபத்துகளை தவிர்க்க முடியும். இதை கண்டு பிடித்தவர்கள் பெருந்துறை கொங்கு கல்லூரி மாணவர்கள் சக்திவேல் மற்றும் வருண் குழுவினர்._*😇💐
🧐🔎 *_8⃣ பல்வகை நிலம் சீரமைப்பான் மற்றும் கிழங்கு விளைவிப்பான் இயந்திரம் (பெருந்துறை கொங்கு கல்லூரி சங்கர் மற்றும் சார்மி குழுவினர்)_*😇💐
🧐🔎 *_ பயிரிடுவதற்கு முன் நிலத்தை சீரமைக்கவும், கிழங்கு வகைகளை அறுவடை செய்யவும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம். டிராக்டருடன் இணைக்கும் விதமாக இதை வடிவமைத்துள்ளனர். நிலத்தில் உள்ள கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை எடுத்து, கன்வேயர் மூலமாக பின் உள்ள கம்பார்ட்மென்டிற்கு போய்விடும். இது போலவே அறுவடையின் போது கிழங்குச் செடிகளை வேரோடு புடுங்கி, பின் உள்ள கம்பார்ட்மென்டில் சேமித்துவிடும். இதனை கண்டு பிடித்தவர்கள் பெருந்துறை கொங்கு கல்லூரி மாணவர்கள் சங்கர் மற்றும் சார்மி குழுவினர்_*🧐🔍👍
No comments:
Post a Comment