Saturday, 24 March 2018

வெளிவராத தமிழக இளம்தலைமுறையினரின் கண்டிபிடிப்பு சாதனைகள் பற்றிய ஓர் சிறப்பு அலசல் பாகம் - 2


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :24.03.2018.* 
         🌹 *கிழமை :சனி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*_வெளிவராத தமிழக இளம்தலைமுறையினரின் கண்டிபிடிப்பு சாதனைகள் பற்றிய ஓர் சிறப்பு அலசல்_*

🧐👩🏻🧑🏻🧐👩🏻🧑🏻🧐👩🏻🧑🏻🧐👩🏻

*_🏹பாகம் - 2⃣🏹_*

🧐🔎 *_9⃣ மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவி (திருவண்ணாமலை எம்.ஏ.காதர் சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் - ச.சந்தோஷ்)_*😇💐👍

🧐🔎 *_மாடியில் குடியிருப்பவர்களுக்கு தண்ணீர் சுமந்து செல்வதில் இருந்து விடிவுகாலம் இல்லையா? என்ற எண்ணமே புதிய படைப்புக்கு வழி வகுத்தது. இதுகுறித்து அவருடைய  பள்ளி அறிவியல் ஆசிரியர் பி.ஹயாத் பாஷாவின் உதவியுடன் வகை யில், தொட்டியில் இருந்து எளிய முறையில் மின்சாரம் இல் லாமல் நீரேற்றும் கருவியை உருவாக்கினார். இவர்  தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்_*🧐😇👍🔎

🧐🔎 *_🔟மாரடைப்பை கண்டறியும் கருவி (ஆகாஷ் மனோஜ் ஓசூர்)😇💐_*

🧐🔎 *_கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ் மாரடைப்பு வருவதற்கான அறிகுறியை, இந்தக் கருவி 6 மணி நேரத்துக்கு முன்பே கண்டுபிடித்து, எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் வடிவமைத்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆகாஷுக்கு, 'ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்' விருது வழங்கி கவுரவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் எய்ம்ஸ் மருத்துவமனை இந்தக் கருவிக்கு, அங்கீகாரம் அளித்துள்ளன. அரசே இக்கருவியை தயாரிக்க முன்வரும்போது, வெறும் 900 ரூபாய்க்கு அனைவருக்கும் கிடைக்கும்._*😇🔍👍

🧐🔎 *_1⃣1⃣ கலாம் சேட் செயற்கைக்கோள் (ரிஃபாத் ஷரூக் - பள்ளப்பட்டி)😇💐_*

🌎🧐🔎 *_இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது ரிஃபாத் ஷரூக் என்ற இளைஞர் கலாம் சேட் என்ற 64 கிராம் எடையுள்ள செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார். இது கடந்த வருடம் ஜூன் மாதம் 21ம் தேதி நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த மிஷனின் காலம் 240 நிமிடங்களுக்கு இருக்கும்._*🔍😇💐

🧐🔎 *_1⃣2⃣ Watch with button for pungent spray on bullies ( அபர்ணா - 4ம் வகுப்பு பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளி, மயிலாப்பூர், சென்னை.)😇💐_*

🧐🔎 *_மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோரின் சுய பாதுகாப்புக்காக அவர்களை தாக்க வரும் எதிரிகள் மீது மயக்க மருந்து தெளிக்கும் கைக்கடிகாரம் (Watch with button for pungent spray on bullies) ஒன்றை 4-ம் வகுப்பு படிக்கும் சென்னையை சேர்ந்த அபர்ணா கண்டுபிடித்துள்ளார். இதன் மூலமாக அந்நியர்கள் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயலும்போது இதயத் துடிப்பு அதிகரித்து பயப்படும்போது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் மாறுபடும். இந்த மாறுபாடு சென்சார் மூலம் உணர்ந்து கைக்கடிகாரத்திலிருந்து ஒரு துர்நாற்றம் எதிராளியின் முகத்தில் தெளிக்கும். எதிராளி மயங்கிவிடுவார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லலாம்._*😇🧐👍

🧐🔎 *_1⃣3⃣ உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க பயன்படும் கருவி (ஹர்சா அ.சத்பதி - 10ம் வகுப்பு, எம்.சி.சி மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.)😇💐_*

🧐🔎 *_தன்னை மறந்து வேலையில் ஈடுபடுபவர்களும், வயதானவர்களும், குழந்தைகளும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் பல உடல்நலக் கோளாறு களுக்கும், நோய்களுக்கும் ஆளாகிறார்கள். குறைந்த அளவில் நீர் பற்றாக்குறை உடலில் ஏற்பட்டால்கூட உடனே நீர் அருந்த வேண்டும் என சமிக்ஞை மூலம்  உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்து நோய் வராமல் தடுப்பதற்காக உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க பயன்படும் (Wearable Indicator to Ensure Body Hydration) என்ற கருவியை 10-ம் வகுப்பு படிக்கும் சென்னையை சேர்ந்த ஹர்ஷா  கண்டுபிடித்துள்ளார்_*🧐😇👍

🧐🔎 *_1⃣4⃣ Smart Wrist Band for Elderly (P.K.ராகுல் 10-ம் வகுப்பு ஆதர்ஷ் வித்யாகேந்திரா, நாகர்கோவில்.)😇💐_*

🧐🔎 *_வயதானவர்கள், முதியோர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களைக் குறைக்க உதவும் வகையில் முதியோருக்கான கூரறிவு மணிக்கட்டுப் பட்டை அல்லது முதியோருக்கான ஸ்மார்ட் கைப் பட்டயம் (Smart Wrist Band for Elderly) என்ற கருவியை நாகர்கோவிலை சேர்ந்த 10-ம்வகுப்பு படிக்கும் P.K ராகுல் என்ற மாணவர் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலமாக வயதானவர்கள் கீழே விழுவதை அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கும் வகையிலும், தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளைக் கண்டறியும் வகையிலும், இதய நோயாளிகளின் நாடித்துடிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்க வேறுபாடுகளைக் கண்டறிய உதவும் வகையிலும் 'அல்சைமர்' என்னும் மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது வீடு மற்றும் குறிப்பிட்ட சுற்றுப்புறத்திலிருந்து தவறுதலாக வெளியேறினால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களில் தேவைப்பட்டால் அருகில் இருப்போரின் கவனத்தை ஈர்க்க 'பஸ்ஸர்'ஒலி எழுப்பும் வகையில் உள்ளது._*🔍😇💐

🧐🔎 *_மேலும் இதன் மூலம் முதியோர்கள் காலம் தவறாமல் சரியான கால இடைவெளியில் பிறரின் உதவியின்றி அவர்களின் மருந்துகளை உட்கொள்வதற்கு. உதாரணமாக, காலையில் உட்கொள்ள வேண்டிய மாத்திரையைக் குறிக்க பச்சை நிற ஒளிரும் LED பல்பும், இரவு நீல நிற ஒளிரும் LED விளக்கும் சிறிய அளவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, எளிதாக மருந்துகளை அடையாளம் கண்டறிய முடியும்._*🧐😇🔍👍

🧐🔎 *_1⃣5⃣ Solar Wetland Leveller and Trimmer ( சா. சிவசூர்யா 12-ம் வகுப்பு வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர்,சென்னை.)_*😇💐

🧐🔎 *_சிறு குறு விவசாயிகள் - தங்கள் நிலத்தைப் பண்படுத்துவதற்கு முக்கியமாக வயல்களில் நெற்பயிர் நடுவதற்கு, முன்னர் வயல்களில் நிலத்தை சமன்படுத்த-பொருளாதார வசதி இல்லாததால் மாடுகளைக் கட்டி மரக்கட்டையை வைத்து சமன்படுத்தினர். தற்போது மாடுகள் கிடைக்காத நிலையில் டிராக்டரைக் கொண்டும் சமன்படுத்த இயலாத நிலையில் மிகவும் துயரம் அடைகின்றனர். இந்நிலையில், மிகக் குறைந்த விலையில் சோலார் சக்தியைக் கொண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள proto type வடிவிலான சோலார் மின்சாரம் மூலம் - ஆட்டோமேட்டிக் கன்ட்ரோலர் அமைப்புடன் விவசாய நிலத்தைச் சமப்படுத்தும் கருவியை (Solar Wetland Leveller and Trimmer) சென்னையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் சா.சிவசூர்யா கண்டுபிடித்துள்ளார். இந்த வேளாண் கருவி சிறிய ஏழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை பெரிய அளவில் உற்பத்தி செய்யவும் இயலும்._*🌾🔍😇👍


🧐🔎 *_1⃣6⃣ எலெக்ட்ரிக் பைக் (மணிகண்டன் - ஸ்ரீவில்லிப்புத்தூர்)_*💐🔍

🧐🔎 *_தற்போதைய காலகட்டத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை காற்று மாசுபாடு ஆகும். அதில் இருச்சகர வாகனமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்க்கான மாற்று வழியை ஸ்ரீவில்லிபுத்தூரில் பொறியில் படிக்கும் மாணவர் மணிகண்டன் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் பைக் ஒன்றை வடிவமைத்துள்ளார். வெறும் 36 ரூபாய் செலவு செய்து அந்த எலெக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யப்பட்டால் போதும், 400 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். சூற்றுச்சூழலைப் பாதிக்காதபடி, புகையேதும் இல்லாமல், சத்தமே சிறிதும் இல்லாத வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 75 கிலோமீட்டரில் வேகத்தில் பயணிக்க முடியும். 3 மணிநேரம் சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதற்கான செலவு வெறும் 36 ருபாய் தான் ஆகும். மின்சாரம் இல்லாத போது சோலார் வசதியின் மூலமும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். நேவிகேசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மேப் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம், எவ்வளவு நேரத்தில் நம்முடைய இலக்குக்கான இடத்தை அடைய முடியும். நாம் செல்லும் இடத்தில் உள்ள வெப்பநிலை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவசர காலத்தில் எவ்வளவு தொலைவில் உதவி கிடைக்கும். அவர்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் ஆகிய வழிமுறைகளும் இதன்மூலம் தெரிந்துகொள்ள முடியும்._*🔍😇👍

🧐🔎 *_1⃣7⃣ சோலார் டிராக்டர் (சிவ சூர்யா -  தூத்துக்குடி)😇🔍_*

🧐🔎 *_மிகக்குறைந்த செலவில் ஆண்களும் பெண்களும் எளிதாக விவசாய நிலத்தை உழவு செய்ய உதவும்  வகையில் தூத்துக்குடியை சேர்ந்த சிவசூர்யா 2016ம் ஆண்டு 10-ம் வகுப்பு மாணவன் சோலார் டிராக்டரை வடிவமைத்துள்ளார். இவருக்கு இளம் விஞ்ஞானி 2016என்ற விருது மற்றும் ஜனாதிபதி விருதினை பெற்றார்._*😇💐👍

🧐🔎 *_1⃣8⃣ ஆர்கானிக் பேனா ( தன்ராஜ், தனுஷ், மனோஜ்குமார், ஜோதிப்ரியா, சங்கர், தமிழ்ச்செல்வன் - புதுப்பாளையம்)😇👍🔍_*

🧐🔎 *_தற்போது பிளாஸ்டிக் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது அவற்றை அழிக்கவும் முடியாமல் நிலத்தில் மக்காமள் இருப்பதாலும் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். அதற்குண்டான மாற்றுவழியின் சிறிய முயற்சியே இந்த ஆர்கானிக் பேனா  இதனை கண்டு பிடித்தவர்கள் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி மாணவர்களான தன்ராஜ், தனுஷ், மனோஜ்குமார், ஜோதிப்ரியா, சங்கர், தமிழ்ச்செல்வன் ஆவார்கள். இந்த பேனாக்கள் அப்புறப்படுத்தும்போது ஆர்கானிக் உரமாக மாறிவிடும். வாழை இலை, வாழைத்தண்டு, தென்னை இலை, ஆமணக்கு தண்டு ஆகியவற்றைக் கொண்டு இந்த பேனா தயாரிக்கப்படுகிறது. இதன் ட்யூப்பின் ஒரு முனை மைதா பசை கொண்டு மூடப்பட்டு இன்க் நிரப்பப்படுகிறது. இந்த பேனாவில் மக்காத ஒரே பகுதி அதன் கூர்முனை (nib). இவை சில மாதங்கள் வரை பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது._*🔍🧐

🧐🔎 *_1⃣9⃣ ஓட்டுநரின் சோர்வை அளந்து அறிவுறுத்தும் கருவி (எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில் குமார், ஆர்.பிரபாகரன் - திருவள்ளூர்)😇👍_*

🧐🔎 *_நாம் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளில் சாலை விபத்துக்கள் முக்கியமான ஒன்றாகும் தூக்கமின்றி தொடர்ந்து வண்டியோட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க உதவும் வகையில் பூந்தமல்லியை அடுத்த வீரராகவபுரத்திலுள்ள எஸ். ஏ பொறியியல் கல்லூரி இக்கல்லூரி மாணவர்களான எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில் குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் தம் விரிவுரையாளர் ஹெச். அன்வர் பாஷாவின் வழிகாட்டுதலின்படி, இந்த, கண்ணிமை மாறுபாடுகளைக் கொண்டு ஓட்டுனரின் விழிப்புநிலையைக் கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி ஓட்டுநரின் கண்ணிமை மாறுபாடுகளைக் கணக்கில் கொண்டு அசதியை அளவிடுகிறது. மேலும், அந்நிலை குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது, வாகனத்திற்குரிய வரின் எண்ணுக்கு குறுஞ்செய்தி யொன்றையும், ஓட்டுநரின் அப்போதைய காணொளி ஒன்றையும் அனுப்பி வைக்கிறது. மேலும் ஜீபீஎஸ் எனப்படும் இடமறிதல் நுட்பம் மூலம் வாகனம் இருக்கும் இடத்தையும் காண்பித்துத் தருகிறது._*🧐🔎

🧐🔎 *_2⃣0⃣ டயரில் காற்றை சீராக வைக்கும் கருவி ( ஜி.தீபக் - சென்னை)🔍😇_*

🧐🔎 *_வாகனங்களின் டயர்களில் ஒரே சீரான காற்று அழுத்தத்தை பராமரிப்பது மிகவும் கடினமான செயல். 15 சதவீத வாகன விபத்து களுக்கும், 40 சதவீத எரிபொருள் வீணாவதற்கும் காற்று அழுத்தம் சீராக இல்லாததே காரணம் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை போக்கவே ஆர்எம்கே மாணவர் ஜி.தீபக் என்பவர் டயர் காற்றை சீராக வைக்கும் கருவியை கண்டுபிடித்து வாகன டயர்களில் காற்றின் அழுத்தத்தை சீராகப் பராமரிக்கும் முறையை பரிசோதனை முறையில் செய்து வெற்றி கண்டுள்ளார். இவருக்கு 2016-க்கான 'ஐஎஸ்டிஇ-மணக்குள விநாயகர்' விருது வழங்கப்பட்டது._*🧐👍😇💐

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...