Sunday, 25 March 2018

தமிழக மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்துகிறதா இந்த அரசியல் கட்சிகள்.. பாகம்-1


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :25.03.2018.* 
         🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *நம்முடன் வாழ்வோரைப் புரிந்துகொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து*
*கொள்வது அவசியம்.*

💐 *-அன்னை தெரசா.*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

🔮 *மக்கள் மனநிலையறிந்து செயல்படுபவனே தலைவன், பல குழப்பங்களுக்குப் பின்னர் இறுதி முடிவெடுத்து செயல்பட்டுக் கொண்டிருப்பவனிடம் இன்னொரு தீர்வைச் சொல்லாதீர்கள். துர்நாற்றத்தையும் விரும்பிச் சுவைக்க வைப்பதே இன்றைய தமிழக அரசியல் களம்...!!!*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*_தமிழக மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்துகிறதா இந்த அரசியல் கட்சிகள்.._*

💺👥🗣💔😰🤔💺👥🗣💔😰

               🔥 *பாகம்*   1⃣🔥

😇 *_கலந்துரையாடல் குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம். 🙏💐இன்று நாம் நமது அன்றாட வாழ்வில் வீட்டில் உள்ளவர்கள், அலுவலகத்தில் உள்ளவர், நண்பர்களை வசை பாடுகிறோமோ இல்லையோ தவறாமல் அரசியல் கட்சிகளை வசை பாட மறுப்பதில்லை. 😏ரோடு சரியில்லையா, தண்ணீர் சரியில்லையா எதுவாக இருந்தாலும் அரசியல் வாதிகளை வசைபாடுவதை நிறுத்துவதில்லை.🙅🏻‍♂ அனைவரும் தங்களின் உரிமைகளை இந்த அரசியல்வாதிகள் எரித்துவிட்டனர்🤦🏻‍♂ என்று புலம்பும் நாம் ஏன் ஒற்றுமையாக அதை குரல் கொடுத்து நம் உரிமைகளை ஏன் மீங்க முடியவில்லை என்று யோசித்ததுண்டா🤔🤨 கேட்டால் உடனே அரசியல்வாதிகள் தான் காரணம் என்று சொல்வோம் அதை பற்றிய தொகுப்பே இது அரசியல் கட்சிகளால் மக்களிடையே ஏற்படும் பிளவுகளை பற்றி காண்போம்_* 🧐🤨👇👇👇

  
🌎👥🗣🤨 *_இந்தியாவில் தனித்துவமான அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.🤗 1970களிலிருந்து திமுக, அதிமுக ஆகிய மாநிலகட்சிகள் தான் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து அதிமுக உருவாகிற்று. இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. ஏன் இந்திய அரசியலே பணபலம் உள்ள கட்சிதான் ஆட்சியமைக்க முடிகிறது._*💺🤗

💺🗣🤨 *_தமிழ் நாட்டில் வேறு எந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூட இருந்ததில்லை.🙅🏻‍♂ இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர்களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை._*🙅🏻‍♂🤨

💺👥🗣🤨 *_தமிழகத்தில் மேலும் பல கட்சிகள் உள்ளன அவைகள் கொள்கை அடிப்படையிலும் மத அடிப்படையிலும் ஜாதிகள் அடிப்படையிலும் தங்களை வளர்த்துக்கொண்டு வருகின்றன.🤦🏻‍♂🧐 இருந்தும் ஆட்சியில் அமரமுடியவில்லை._*🙅🏻‍♂

💺🗣🤨 *_திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் மக்களை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன.🤦🏻‍♂👊 வாக்கை தாண்டி அவர்கள் எந்த அரசியல் தெளிவையும் பெற்றுவிடக்கூடாது என்பதில் கட்சி வேறுபாடுகள் தாண்டி மிக கவனமாக இருக்கிறார்கள்._*🤦🏻‍♂🤨

💺🤨🗣 *_ஏன் இவர்கள் இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த அஞ்சுகிறார்கள்...? அவர்களுக்கு நன்கு தெரியும், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், அனைத்தையும் கேள்வி கேட்பார்கள்  என்ற வியூகத்தை மிகத்தெளிவாக அரசியல்வாதிகள் தெரிந்து வைத்துள்ளனர்._*👊😡

💺🗣🤨 *_இங்கு அனைத்து விஷயங்களும் அரசியலுடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. பார்க்கும் சினிமாவில் இருந்து மாதம் நாம் போடும் வீட்டு பட்ஜெட் வரை என அனைத்திலும் நுண்ணிய அரசியலின் ரேகை படர்ந்து இருக்கிறது._*🤦🏻‍♂🤨

💺🗣🤨 *_மக்களுக்காக சேவையாற்றுகின்ற அனைத்து கட்சிகளும் ஒருமைப்பாட்டுடன் செயல்படுகிறதா, மக்கள் நலன் சார்ந்து பாடுபடுகிறதா என்றால் நிச்சயமாக எந்த கட்சியும் அந்த கொள்கையில் உறுதிபட இருப்பதில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கமுடியும்._*🧐🤨👍

💺🗣🤨 *_கொள்கைகளை வரையறுக்கும்போது, பொது சமூகத்தின் நலனைவிட, யாரோ ஒரு சிலரின் நலன் முதன்மையாகிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், வெறும் கட்சி உறுப்பினராக மட்டும் இருந்து வரும் நாம் இந்த நவீன சமூகம் ஏற்படுத்தி உள்ள சிக்கல்களை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் தலை மேல் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறோம்._*🤦🏻‍♂😡👊

💺🗣🤨 *_இவற்றையெல்லாம் விவாதிக்க கல்லூரிகள் களம் அமைத்து தராமலும், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை பற்றிய புரிதல் இல்லாமலும். அவர் சொன்னா சரியாக தான் இருக்கும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையை வைத்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்._*👊😠

💺🗣🤨 *_ஒரு சிலர் ஒருபடி மேல சென்று எதிர்கட்சி ஆதரவாளர்களை தாக்கியும், வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இங்கு தான் அரசியல்வாதிகளின் பிரித்தாளும் தன்மையின் முதல் தொடக்கம் ஆரம்பமாகிறது. என்றாவது கவணித்ததுண்டா😠🤨 அனைத்து கட்சி கொள்கைகளும் ஒரே சமநிலையை தான் கொண்டிருக்கும். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களுக்குள்ளான ஒற்றுமையை மறைமுகமாக செயல்படுத்திக்கொள்கின்றனர் என்று. குற்றவாளி என்று தொண்டை கிழிய கத்தி எதிர்கட்சி தலைவர்கள் அவர் இறந்ததும் அவரை போன்ற ஒரு திறமை மிகு தலைவர் இனி யாரும் வரமாட்டார்கள் என்று பெருமிதம் கொண்டார்(இது மனிதாபிமானம்) ஆனால் அதே தலைவரை இன்று வசைமேல் வசைபாடிக்கொண்டிருக்கிறார். இதை என்றாவது எந்த கட்சியின் தொண்டராவது யோசித்ததுண்டா🤔 அப்படி யோசிக்க தெரிந்தால் தான் நாம் என்றோ தலைசிறந்து விளங்கியிருப்போமே. அடுத்த மாநில தலைவர் தமிழகத்தை நக்கலடிக்கும் வகையில் தமிழகம் தரம் தாழ்ந்து போக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைவரும் தான் காரணம்.._*🤦🏻‍♂😡👊

💺🗣🤨👊 *_எப்படி நம்மளோட ஒற்றுமையை சிதைத்தார்கள்,_*😠🤦🏻‍♂ _*நம்முடைய சிந்தனைகளை மழுங்கடித்தார்கள் என்று யோசிக்கிறீர்களா*_🤨🤔😠

🤨🤜 *_2015ல் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா தற்கொலைக்கு நியாயம் கேட்டு இரண்டு நாட்கள் போராடினோம் மூன்றாவது நாள் சிம்புவோட படம் வெளிவந்தது அதை பாத்துட்டு இதை கோட்டை விட்டோம் அது தான் நியாயம் கேட்டு போராடுவதில் மாதார் சங்கத்தின் கடைசி போராட்டமா கூட இருந்துச்சு😏_*🤦🏻‍♂😡

🤨🤜 *_அதன்பிறகு சுவாதி கொலை வழக்குக்கு நீதி கேட்டு மாதர்சங்கம் தலையை வெளியே காட்டல எதிர்கட்சிகள் எல்லாரும் இரண்டு நாட்கள் துள்ளி குதித்தனர்_* _*தமிழ்நாட்டில் பாதுகாப்பு சரியில்லை ஆட்சியில் இருப்பவர்கள் உடனே பதவியை விட்டு வெளியேறனும்னு மக்களாகிய நாமும் அதே முழக்கத்தையும் எதிர்ப்பையும் தான் வெளிப்படுத்தினோம்.*_😏😏

🤨🤜 *ஆனால் மூன்றாவது நாள் சிம்புவோட பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பாட்டை டிரண்ட் வேற செய்தார்கள். சுவாதி கொலைக்கு நியாயம் கேட்காத மாதர்சங்கம் சிம்பு பாட்டுக்கு கம்பு சுத்திட்டு வந்துட்டாங்க. என்னைக்காவது யோசித்திங்களா🤔 அந்த பாட்டை விட பல அருவருக்க தக்க படங்கள் உதாரணமாக திரிஷா இல்லனா நயன்தாரா படம் வந்தபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லைனு😏*🤦🏻‍♂😡👊

🤨🤜 *_அடுத்து ஜல்லிகட்டு அப்போ சுசீ லீக்ஸ்🤦🏼‍♂ கேவலம் டுவிட்டர்ல இல்லாதவர்கள் கூட அதன் பிறகு டுவிட்டர் கணக்கு பயன்படுத்த தொடங்கினர். இப்படி தான் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் ஒவ்வொரு படம் காட்டி திசை திரும்புகின்றனர்._*🤦🏻‍♂👊

🤨🤜 *இதுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா கட்சி அரசியல் தலைவர்கள் நம்முடன் சேர்ந்து போராட்டம் நடத்துவது போல கபட நாடகம் ஆடுகின்றனர். ஏன் நாம் திசை திருப்பபடுகிறோம் என்றால் அதை சுதாரித்து மக்களை திசை திருப்பாமல் இருக்க செய்திருக்கலாம் அல்லவா.. இப்போ புரிகிறதா இதன் அரசியல் என்னவென்று._*🤦🏻‍♂😡👊

🤨🤜🤦🏻‍♂ *_நாமளும் வெட்கம் மானம் சூடு சொரணையில்லாமல் ஒரு விசயத்தை சீக்கிரம் மறந்து விடுகிறோம்.😡🤦🏻‍♂ ஒரு பிரச்சனை நடந்தால் மறுநாளே ஒரு குறிப்பிட்ட சில துண்டு படங்களை போட்டால் மக்கள் அதுக்கு பின்னால் சென்று விடுவார்கள் என்று அழகா தெளிவா அரசியல்வாதிகள் புரிந்து வைத்து கொண்டுள்ளனர். அவர்கள் நினைப்பது போல தான் இங்கு நடக்கிறது._*😡🤦🏻‍♂

🤨🤜 *ஜிமிக்கி கம்மல் பாட்டையும், பிரியா வாரியர் கண் புருவத்தையும் ட்ரெண்ட் செய்த ரசிக பெருமக்களில் நாம் தான் அதிகம்னு கணக்கெடுப்பு கொடுத்துருக்காங்க.. நமக்குலாம் வெட்கம் மானம் சூடு சொரணை இல்லனு ஏன் சொல்கிறேன் என்று இப்போ புரியலாம்.*🤦🏻‍♂🤦🏻‍♂👊

🤨🤜 🙇🏻‍♂ _*எல்லாரும் அப்படி இல்லை 🙅🏻‍♂சிலர் இன்னும் தன் உரிமைகளுக்காக போராடிகொண்டு தான் இருக்கிறார்கள்.🙇🏻‍♂😔 (எ.கா) மதுவிற்க்கு எதிராக போராடும் மாணவி மற்றும் ஸ்டெர்லைட் மற்றும் மீத்தேன் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து*_ _*போராடுபவர்களையும் கொச்சை படுத்துறீங்கனு கம்பு சுத்தலாம். நான் சரியாக இருக்கிறேன் மற்றவர்கள் எப்படி போனா என்ன என்னையும் சேத்து தவறாக*_ _*சொல்லாதீங்கனு பொருள். இதுலையே நமக்கு ஒற்றுமை இல்லை பின்ன எப்படி நம் உரிமைகளுக்காக ஒற்றுமையாக*_ _*போராடபோகிறோம்🤔*_🙇🏻‍♂😰😔

💺🧐😠 *தனக்கென்று உள்ள சாதியின் பெயரில் கட்சி தொடங்கி தலைமை பதவியில் இருக்கும் சில அரசியல்வாதிகள் வேற்றுமையில் ஒற்றுமையை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது தமிழன், தமிழினம் என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்கும் செயலை மிக சிறப்பாக செய்கிறார்கள்.*😠👊

💺😠😰 *அரசியல் கட்சி அல்லது தத்துவம் எதுவாக இருப்பினும் பொது மக்களுடைய நன்மைக்காக சேவையாற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் நோக்கமாக இருக்க வேண்டாமா...*👊😠

🧑🏻👩🏻 💺 *இளைஞர்கள் அரசியல் அறிவதை கட்சிகள் ஏன் விரும்புவதில்லை?*⁉

💺🧐 *தமிழகத்தின் அரசியல், சமூகவியல், கலாச்சார எல்லைகளை தமது கட்டுக்குள் வைத்திருந்த காலம் திராவிட கட்சிகள் கடந்துவிட்டதாக கருதலாமா...*☹😰

💺😰🧐 *விலைவாசி ஏன் ஏறுதுனு தெரியாது, விளைநிலங்கள் ஏன் காணாமல் போகுதுனு தெரியாது. தெரியாது என்பதை பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதை விட அதைத் தெரிந்து கொண்டு செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும்.*🤷🏻‍♂🤷🏻‍♂

🧐🤷🏻‍♂💺 *தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளும் பொழுது அடுத்தடுத்த நிலைகளுக்கு உங்களைத் தகுதிப் படுத்திக்கொள்ளலாம்.*🤷🏻‍♂🤷🏻‍♂

💺🧐🗣 *பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும், ஈழப் போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்... பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.*📌🎯🕹

💺🤷🏻‍♂🧐 🖲  *இருந்தும் குழம்பிய குட்டையில் மீன் பிடித்தல் என்ற*
*பிரித்தாளும் சூழ்ச்சி, என்கிற தத்துவம் மூலம் கட்டாயமாக தமிழர்களை பிளவுபடுத்தி சாதி ரீதியாக மதரீதியாக பொருளாதார ரீதியாக பிரித்து சூழ்ச்சி செய்து ஆண்டு வருகிறார்கள்.*😡👊
*தமிழர்கள் ஒன்று சேர்ந்துவிடாமிலிருக்க கவனமாக பிரித்தாளும் சூழ்ச்சி நகர்த்தப்படுகிறது.*😡👊🕹

💺😡👊🕹 *அந்த சூழ்ச்சி போதிய சிந்தனையறிவற்ற கல்வியறிவற்ற பணத்துக்காக எதுவும் செய்யக்கூடிய குற்றப்பின்னனி கொண்ட தனிமனித ஒழுக்கமற்ற தமிழர்களில் பலரை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து தலைவர்களாக்கி அமைச்சர்களாக்கி ஊழலை செய்யவைத்து லஞ்சத்தை பெருகவிட்டு சாதி மத சண்டைகளை  உருவாக்கி ஊடகங்கள் மூலம் ஊதி ஊதி பெரிதாக்கி ஒற்றைத்தலைமையை உருவாக்கி  தமிழர்களை ஏய்த்து பிழைக்கிறது.*😡👊🕹

💺😡👊 *எப்போது எதை செய்யவேண்டும்? எதற்கு முன்னுரிமை தரவேண்டும்? என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பவன் தான் சமூக அக்கறை உள்ளவனாக இருக்க முடியும். மாறாக, அரசியல் தெளிவின்றி வெறும் ஆர்வமும், கோபமும் இருந்தால் அவர்களை சந்தர்ப்பவாதிகள் தான் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்வார்கள். சமூகத்திற்கு எந்த நன்மையும் ஆகாது.*😡👊📌

💺😡👊 *ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினால் எக்காலத்திலும் நம் உரிமையை பெற முடியாது. எனவே தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், கட்சி பாகுபாடு கடந்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து மக்களையும் ஓர் அணியாக திரள கேட்டுக்கொள்வோம்!நமது உரிமையை நிலைநாட்டுவோம்!*👍🔴

🔴💺🕹 *இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தயும் சகித்துக் கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்து கொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும்.*🕹👍🔴

🔴🕹💺 *நம்மைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஆணவமே இவ்விருவரின் பலமாக இருக்கும்பொழுது மாற்றத்திற்கான சிந்தனை பொது மக்களிடம் நிறைந்துவிட்டது என உணர்ந்தால்தான், அவர்களால் இனி பெரும்பான்மை ஆட்சி பெற முடியாது என்ற நிலை உருவானால் தான் மக்களுக்காக உழைக்க தொடங்குவார்கள்.*👍🕹🔴

🔴🕹💺 *தமிழ்நாடு என்ற கட்டமைப்பு மேற்கூறிய எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் திராணி படைத்தவை. அந்த கட்டமைப்பு இன்றைய நிலையில் பேர் சொல்லும் அமைப்பாக இல்லை, ஆனால், எண்ணற்ற தனிமனிதர்களிடம் வேரூன்றி உள்ளது.*🕹🎯👍🔴

🔴🕹💺 *இந்தியாவில் எதிர்ப்பே இல்லாத எத்தனையோ சுற்றுச்சூழல்* *அழிவுத்திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும், நீட் உள்ளிட்ட சமூக நீதிக்கெதிரான எண்ணற்ற செயல்திட்டங்களுக்கு தொடக்கத்திலேயே எதிர்ப்பு உருவாகிவிடும்.* *காஷ்மீர் ஆகட்டும், பாலஸ்தீனம் ஆகட்டும்,ஈழம் ஆகட்டும் உலகின் எந்த மூளையில் நடக்கும் அநீதியாகட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முதல் ஆதரவு குரல் தமிழகத்தில் இருக்கும்.*
*வெகு தொலைவிற்கு முன்னோக்கி பார்க்கும் வருங்கால பார்வை இங்கே வீரியமாய் வெளிப்படும்.*💪💪🎯🕹🔴

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...