🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👁 *_விழிப்புணர்ச்சி_*
*_குழுமத்தின்_*©👁
🥁 *_விழிப்புணர்ச்சிக்காக_* 🥁
🎉 *_தொடங்கும்_*🎉
📯 *_முடிவுரை._* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *_கலந்துரையாடல் குழு:_* 🤛
__________________________________
🌹 *_தேதி :17.03.2018_* 🌹 🌷 *_கிழமை :சனி_* 🌷
____________________________________
🌱 *_அறிவோம்:_* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*"எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு.*
🌱 *கிளப்டைன்*💐🌳
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌱 *_நிர்வாகிகள் எண்ணம்:_* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*ஆயிரம் தடவை உன் சந்தேகத்தை நேரே கேள் அது சிறிய கோபத்தை உருவாக்கும் ஆனால் பதில் கிடைத்து விடும், ஆனால் உன் சந்தேகத்தை நேரே கேட்க்காமல் உன்னுள் வைத்து மறை முகமாய் ஒருவனைக் காயப் படுத்தாதே அது உனக்கு எல்லையற்ற துன்பத்தை தந்துவிடும்...*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
👨🏻⚖ *_தலைப்பு:_*👩🏻⚖
============================
*தமிழ்நாடு பட்ஜெட் 2018 - ஒரு பார்வை*
============================
💁🏻♂🔖 *மறைத்த முதல்வர் ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் 2வது பட்ஜெட்….,📑 ஜிஎஸ்டி வரி அமலாக்கத்துக்கு பிறகான முதல் பட்ஜெட் என, 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றி – பல கருத்துகள் சொல்லப்பட்டாலும், இது, மற்ற பட்ஜெட்களில் இருந்து எப்படி மாறுபட்டிருக்கிறதா என்பதும், மாறி இருந்தால்… எந்த விதத்தில் என்பதும்தான் முக்கியம்.*🗃
🔖📑 *தமிழ்நாட்டினுடைய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 2018-19-ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் செலவினம் ரூ.1.91 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிதிநிலை விவரங்கள் வெளியாகியுள்ளன. அவை குறித்த விவரங்கள்...*🗃
🔖 *2018-19ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்*📑🗃
🔖 *2018-19ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் கணிப்பு - ரூ.1,76,251 கோடி.*😱🙄
🔖📑 *மாநிலத்தின் பிரத்யேக வரி வருவாய் கணிப்பு - ரூ.98,693 கோடி.*😱🙄
🔖📑 *2018-19ம் ஆண்டில் ரூ.1,12,616 கோடி வரி வருவாய் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.*🧐🙄😱
🔖📑 *2018-19 தமிழகத்தின் செலவினம் கணிப்பு ரூ.1,93,742 கோடி. இது 2017-18ம் ஆண்டு கணித்ததை விட 11.22 சதவீதம் அதிகம்.*🗃⬆
🔖📑 *2018-19ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை கணிப்பு - ரூ.17,491 கோடி.*🙄😱
🔖📑 *2018-19ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை கணிப்பு - ரூ.44,481 கோடி.*🙄😱
🔖📑 *மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 2018-19ம் நிதியாண்டில் 2.79 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 3 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை விட குறைவாக உள்ளது.*⬇⬇
🔖📑 *2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகை - ரூ.632 கோடி.*😱😨
🔖📑 *2018-19ம் ஆண்டில் மானியத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.75,722.76 கோடி. 2017-18ம் நிதியாண்டில் மானியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.70,662.74 கோடி*😨🙄
🔖📑 *2017-18ம் நிதியாண்டில் தமிழக மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.03 சதவீதம். 2012-13ம் நிதியாண்டில் 4.85 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.*😨
📑 *பட்ஜெட் பற்றிய விமர்சனம்...*♻
♻📑 *அரசிடமிருந்து மாநில மக்கள் பெறும் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கிட மின்னணு தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்ட இ சேவை மையங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 900 எண்ணிக்கையில் அதிகரிக்கப்படும் என்பது மட்டுமின்றி, 'ஒருங்கிணைந்த மக்கள் இணையதளம்' ஒன்று உருவாக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. மேலும், ஒரு சில அரசு கோப்புகளில் சாமானிய மக்களே தங்களது சுய தகவல்களை மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், இதுபோன்ற வசதிகள் தடையின்றியும், தாமதிக்காமலும் கிடைக்க தேவையான – பிராட் பேண்ட் இணைய வசதிக்கு, மாநிலத்தில் ஏற்கனவே உள்ளது போக, மேலும் பல பகுதிகளுக்கு கண்ணாடி இழை குழாய் மூலமான தகவல் பரிமாற்ற வசதி செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று அரசிடம் சாமானியர்கள் பெற வேண்டிய சேவைகள் பலவும் ஊழல் மயமாகி, காசு தராமல் எந்த அலுவலகத்திலும் எந்த பணியும் நடக்காது என்று சொல்லப்படும் நிலைக்கு தீர்வு காண உதவும் முதல்படியாக இந்த முயற்சியைப் பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு மேற்கொள்ளும் டிஜிட்டல் இந்தியா திட்ட வழிமுறையின் பின்னொட்டி செல்வதாக இருந்தாலும், இது நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள் கட்டாயமாக மாநில மக்களுக்கு பலன் தருவதாக இருக்கும்.*
🗃📈
♻📑 *அண்மையில் அதிகம் பேசப்பட்ட மற்றொரு விஷயம் பேருந்துகளின் கட்டண உயர்வு. கணிசமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், பேருந்துகள் பாதுகாப்பாற்றவையாக உள்ளன என்ற விமர்சனங்கள் இருந்தன. இதற்கு பதில் சொல்லும் வகையில் – 10 ஆண்டுகள் தாண்டிய 4500 பஸ்கள் திரும்பப் பெறப்பட்டு, புதிய பஸ்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்போடு, மாநில போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 3000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். கூடவே, ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சேர வேண்டிய பாக்கித் தொகை முழுவதையும் விரைவில் கிடைக்க செய்ய வேண்டும். இதற்கு உத்தரவாதம் தரும் எந்த தகவலும் பட்ஜெட் உரையில் இல்லாததது ஏமாற்றமே.*📈🗃
♻📑 *மாநிலத்தின் தொழில்வளர்ச்சி குறித்து பேசும்போது, தமிழ்நாடு வணிக எளிதாக்கல் திட்டம் குறித்த அறிவிப்பு மட்டும் போதாது. புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க, தற்போது மாநிலங்களிடையே அதிகரித்துள்ள போட்டியில், தமிழகம் எந்த அளவுக்கு முன்னிலை வகிக்கிறது என்பது சந்தேகத்துக்குரியதே. அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்களை ஈர்த்து முதலீடு திரட்ட நடத்தப்பட உள்ள மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்பது எளிது. ஆனால், கடந்த மாநாட்டின்போது உத்தரவாத அளிக்கப்பட்ட முதலீடுகள் குறித்தே கேள்விகள் உள்ள நிலையில் பெருந்தொழில் முதலீடுகள் மாநிலத்தின் வேலைவாய்ப்புக்கு எந்த அளவு பங்களிக்கும் என்ற கேள்வியும் எழுப்புகிறது. மறுபுறம், அதற்காக தரப்படும வரிச்சலுகைகள், பிற தளர்வுகளை தாண்டி, அவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிஜமாகவே பலனளிக்கின்றனவா என்ற கேள்வி நியாயமானது. பெரும முதலீடுகள் பலவும் பெருமளவு இயந்திரமயத் தொழில்களாக அமைவதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதிலும் பின்தங்கியுள்ளன என்றே சொல்லப்படுகிறது. அதனால், அந்த முதலீடுகளால் பலன் என்ன என்ற கேள்விகள் அர்த்தமற்றவை அல்ல. மறுபுறம், மத்திய அரசின் ஆதரவோடு, எதிர்பார்க்கப்படும் வானூர்தி தொழிற் பூங்கா, சென்னை – ஓசூர் இடையே பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தி நெடும்பாதை, செங்கல்பட்டில் மருத்துவ தொழில் பூங்கா, உணவுப் பதப்படுத்தல் தொழில் பூங்கா, ஓசூர் மற்றும் ோவாளையில் மலர் பதப்படுத்தல் பூங்கா போன்றவை எந்த அளவு முன்னேற்றம் காட்டும் என்பதை பார்க்க வேண்டும்.*📈🗃
♻📑 *அடித்தட்டு மக்களைப் பொறுத்த வரை, மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு முக்கியமானது. அரிசி மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய தேவைகள், ஏற்கனவே உள்ளது போல 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மான்யமாக 6000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.*
🧐💸💶💴
*ஏழை மக்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு, முதன்முறையாக, தனியார் நிலம் கையகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு மாநில அரசு பெரும்பாலும் நீர்நிலைகளையும், அவற்றுக்கான தடங்களையும் பயன்படுத்திய அணுகுமுறையில் மாற்றம் வந்துள்ளதாக உணர்ந்தாலும், தனியார் நில கையகப்படுத்தல் எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.*🧐🗃🤷🏻♂
🔖📑🗃 *இன்றைய பட்ஜெட்டின் இன்னொரு முக்கிய அறிவிப்பு – பயறு வகை நேரடி கொள்முதல் திட்டம். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நீண்ட காலமாக இருந்து வரும் நெல் கொள்முதல் போலவே, இந்த ஆண்டு முதல் தமிழக விவசாயிகளிடமிருந்து துவரை, உளுந்து, பச்சை பயறு போன்றவை முதல்முறையாக நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம், இவ்வகை பயிர்களில் அதிக ஆர்வம் காட்டாத தமிழக விவசாயிகளை திசைத் திருப்பும் என்பதோடு, மண்ணில் இயற்கையான நைட்ரஜன் சத்து அதிகரிக்கவும் இந்த பயிர் வளர்ப்பு உதவும் என்பதால், தமிழக வேளாண் வளாகத்தில் இது புதிய கதவுகளைத் திறந்துவிடும் என எதிர்பார்க்கலாம். பயிர்காப்பீடு திட்டத்துக்கு மாநில அரசின் பங்கு பிரிமியமாக 632 கோடி ஒதுக்கீடு, 25 லட்சம் ஹெக்டேரில் மானாவாரி பயிர் வளர்ப்பு திட்டம், 2000 புதிய வேளாண் உற்பத்திக் குழுக்கள் உருவாக்க முயற்சி, உழவன் செயலி அறிமுகம், நுண்ணீர் பாசன மேம்பாட்டுக்கு உதவும் பண்ணைக் குட்டை எண்ணிக்கையை மேலும் 10 ஆயிரம் அதிகரித்தல் போன்ற இன்னும் பலவும், மாநிலத்தின் விவசாயிகளை எந்த அளவுக்கு எட்டுகிறதோ, அந்த அளவில் பலன் தரும் என நம்பலாம்.*🌾🌾🤷🏻♂
🔖📑🗃 *அண்மைக்காலமாக தமிழகத்தில் செய்திகளில் அதிகம் இடம்பிடிக்கும் மற்றொரு விஷயம் காவலர்கள் தொடர்பானது.🧐👮🏻♂👨🏻✈ பணிச்சுமை காரணமாக காவல் பணியில் உள்ள பலர் தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்லப்படும் நிலை ஒருபுறம்…. மறுபுறம், சமூகத்தில் தங்களுடனேயே வாழும் சக மனிதர்களை காவல் துறையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் முறை குறித்து பொதுமக்களிடையே உள்ள கோபம்…. இந்த நிலையில் காவலர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும விருதுகளின் எண்ணிக்கையை 1500ல் இருந்து 3000 ஆக, அதாவது இரு மடங்காக உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*🧐🤷🏻♂🤷🏻♂
*🙄🤔இது அவசியம்தானா…? காவல் பணியில் உள்ளவர்களை முதலில் சாமானிய மனோபாவம் கொண்டவர்களாக மாற்றத் தேவையான நடவடிக்கைதான் முக்கியம். பணிச்சுமையால் தற்கொலை என சொல்லப்பட்டாலும், உண்மையில் மூத்த காவலர்களால் தாங்கள் நடத்தப்படும் விதம்தான் – மனச்சுமையை அதிகரித்து, பணிச்சுமையை உணர்த்துகிறது என்ற மனோபாவப் புரிதல் அவசியமாகிறது. இதே மனப்போக்கில் நடந்தும் கொள்ளும் மற்ற காவலர்களால்தான் பொதுமக்கள் அசவுகரியங்களை சந்திக்க நேர்கிறது. எனவே இன்று காவலர்களுக்கு வழங்கப்பட வேண்டியது விருதுகளும், பதக்கங்களும் அல்ல.*🙅🏻♂🙅🏻♂
🧐🗃📑 *அடுத்து நீண்ட நாட்களாக எதிர்பார்ப்புடன் காத்திருந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடும் இன்றைய பட்ஜெட் அறிவிப்புகளில் அடங்கும்.*💸💶💴
📑🗃 *மாநிலத்தின் சுய வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக புதிய தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை இருந்த அதிகபட்ச ஒதுக்கீடு அளவான 1 கோடி, 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கலாம். பள்ளிக் கூடங்களில் 📚📖நூலகம் உருவாக்கப்படும் என்பது வரவேற்பைப் பெற்றாலும், பள்ளிக்கல்வித்துறையில் தொடரும் வழக்கமான இலவசங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்ற வகையிலேயே மற்ற பல அறிவிப்புகள் இருந்தன.*🧐🤷🏻♂🤷🏻♂
🗃📑 *நகர உள்கட்டமைப்பு பணிகளைப் பொறுத்தவரை, பல நகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்புகளும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாத 17 மாவட்டங்கள் என பொதுச் சுகாதாரம் பற்றிய அறிவிப்புகள் பல இருந்தாலும், மனிதக் கழிவை மனிதர்களைக் கொண்டே நீக்கும் (பாதாள சாக்கடை அடைப்பு நீக்கம் போன்றவற்றில்) அவலம் இன்னும் தொடர்வதைப் பார்க்க முடிகிறது. இது தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்புகளும், யோசனைகளும் செவிடன் காதில் விழுந்த சங்காக ஒலிப்பதுதான் யதார்த்த நிலை. இதில் தற்போது கேரள மாநில இளைஞர்கள் பேன்டிகூட் (Bandikoot) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள முற்றிலும் இயந்திர வழி சுத்தம் செய்யும் முறை போன்றோ, அது போன்ற வேறு வழிகளைப் பற்றியோ யோசிக்காமல், மக்களின் மனோபாவத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்காமல் செய்யப்படும் விரிவாக்கம் எத்தனை பலன் தரும் என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.*🤨😰🤔
🤨☹😟 *மொத்தத்தில் இந்த பட்ஜெட் எப்போதும் போல, சில சாதகங்களையும், பல கேள்விகளையும், சில பாதகங்களையும் கொண்டதாகவே தொடர்கிறது*☹😰😥
*தமிழக பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்...*
*தமிழக அரசின் பட்ஜெட்டில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 27, 205 கோடி ஒதுக்கீடு*
*இந்த பட்ஜெட்டில் புதிய வரி ஒன்றும் இல்லை.*
*14வது நிதிக்குழு காலத்தில் 89% உயர்வை மட்டுமே தமிழ்நாடு பெற்றுள்ளது. கர்நாடகா 155.14%, மகாராஷ்டிரா 148.93%, குஜராத் 137.70%, கேரளா 149.82% உயர்வுகளை பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி ஒதுக்குவதில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.*
*மத்திய அரசிடம் தமிழகம் சிறப்பு உதவி மானியம் வழங்கக் கோரியது. ஆனால் இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.*
*2018-19 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் ரூ.1,12,616 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.*
*மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் பாதிப்பு.*
*மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.*
*முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்வு*
*எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.587.50 கோடி ஒதுக்கீடு.*
*ரூ.21.43 கோடி மதிப்பீட்டில் 7,000 ஏக்கரில் மரங்கள் நடப்படும்.*
*விலையில்லா சேலைகள், வேட்டிகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.490.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.*
*ரூ.28.23 கோடி செலவில் 20 இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டிடம் கட்டப்படும்.*
*உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.*
*பிரசிடன்சி மற்றும் ராணி மேரி கல்லூரிகளை புதுப்பிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு.*
*போக்குவரத்து கழகங்களுக்காக 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.*
*குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு.*
*பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு.*
*உயர்கல்வித்துறைக்கு ரூ.4,620.20 கோடி நிதி ஒதுக்கீடு.*
*நிதி அயோக் வெளியிட்ட மாநிலங்களுக்கான சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு 3ம் இடத்தில் உள்ளது.*
*2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது*
*சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.750 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும் 1000 கோடி ரூபாயை துணைக் கடனாகவும் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.*
*தகவல் தொழில் நுட்பத்தில் 'Tamilnadu Fibre Net Corporation' என சொல்லப்படும் தமிழ்நாடு இழை வலையமைப்புக் கழகத்தின் மூலம் பாரத் நெட் திட்டம் செயல்ப்படுத்தப்படும். தமிழ் நெட் திட்டமும் செயல்படுத்தப்படும். தொழில்நுட்பத் துறைக்கு மொத்தமாக 158.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.*
*அத்திக்கடவு அவினாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். அதற்கு 1789 கோடி ரூபாய் ஒதுக்கீடு.*
*போக்குவரத்து துறைக்கு மொத்தமாக 2,717.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு.*
*நெடுஞ்சாலை துறைக்கு மொத்தமாக 11,073.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.*
*சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கு 649.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது*
*இந்த பட்ஜெட்டில் காவல்துறைக்கு 7877.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.*
*மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500மீட்டர் தொலைவில் மதுபானக்கடைககை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் வரவு குறைந்துள்ளது.*
*சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.540.66 கோடி ஒதுக்கீடு*
*விவசாயம்..*
*இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு.*
*துவரை, உளுந்து, பச்சைப் பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.*
*விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.*
*கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 8,000 கோடிக்கு புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும்.*
*இந்த நிதியாண்டில் ஒருகோடியே பத்து லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*
*சென்னை கிண்டியில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அம்மா பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.*
*ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும்.*
*கடலூர் மாவட்டம் மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும்.*
*தோவாளையில் மலர் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும்.*
*பெண்களுக்கு....*
*டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டதில் ரூ.12,000த்தில் இருந்து ரூ.18,000 ஆக நிதி உயர்வு.*
*வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்கு பயனளிக்கும் விதமாக அரசு செலவில் மகளிர் விடுதி கட்டித்தரப்படும்.*
*கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம்.*
*திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.724 கோடி ஒதுக்கீடு.*
*பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க ரு.250 கோடி ஒதுக்கீடு.*
*பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க ரு.250 கோடி ஒதுக்கீடு.*
*மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க ரூ,60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி ஒதுக்கீடு.*
*சுகாதாரத்துறைக்கு,..*
*சுகாதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு.*
*மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2வது மாநிலம் தமிழகம் திகழ்கிறது.*
*முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி ஒதுக்கீடு.*
*ரூ.24 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும்.*
*ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்.*
*அரசு மருத்துவமனைகளில் ரூ.66.50 கோடியில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் வழங்கப்படும்.*
*ரூ.24 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும்.*
*தமிழ்மொழி...*
*தமிழ்மொழி விரிவாக்க மையம் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் உருவாக்கப்படும்.*
*தமிழ்மொழி விரிவாக்க மையத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.*
*ரூ.1 கோடி மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.*
*நலிந்த தமிழ் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.1.500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.*
*ஜெயலலிதா..*
*ஜெயலலிதா நினைவு மண்டபம் மெரினாவில் ரூ.50.80 கோடியில் அமைக்கப்படும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்படும்.*
*ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.*
*தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ. 1,03,219 ஆக இருந்தபோதிலும் தமிழகத்தில் ரூ. 1,53,263 ஆக உள்ளது*
*காவல்துறை உள்கட்டமைப்புக்காக ரூ.217 கோடி ஒதுக்கீடு ; இணைய வழி குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இணைய வழி குற்றத்தடுப்பு காவல் நிலையம் அமைக்கப்படும்.*
*ஏழை குடும்பங்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.*
*மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு.*
*தென் சென்னையில் ரூ.1,245 கோடியில் வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.*
*தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்கத் திட்டம் ரூ.920 கோடியில் செயல்படுத்தப்படும்.*
*2018 - 2019 ஆண்டில் மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 1,76,251 கோடி ரூபாயாக இருக்கும்.*
*ஜி.எஸ்.டி யால் தமிழகத்துக்கு தற்காலிக பாதிப்பு.*
*அரசு தொழிற்கூடங்களில் உள்ள குறைபாடுகளை நீக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு. 20 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும்.*
*2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.*
*🤔🤔💰ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது எப்படி?*💸💰😫
*🎭🎭ஓபிஎஸ் 2018 -19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரும் நிதியாண்டில் தமிழக அரசு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாயை நிகர கடனாக வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழக அரசின் கடன் சுமை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.*😫😩
*🤔😳கடந்த பத்தாண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை பல மடங்காக உயர்ந்துள்ளது. காரணம் இலவசங்களை அள்ளி வீசி கடன்காரர்களாக மாற்றியுள்ளனர்.*😏😏
*🤔🤔அதிகரிப்பது எப்படி?*🧐🤨
*🤔🤔😢2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த கடன் 3,14,366 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டும் தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. காரணம் இலவசங்களை அள்ளி வீசுவதுதான் என்பது நிதித்துறை வல்லுநர்களின் கருத்து.*🗣🎙
*💸கடன் வட்டி...*💰
*🏳🏁🏴தமிழக அரசு கடனுக்கு வட்டி செலுத்துவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துத்தான் வருகிறது. 2011-12-ம் நிதி ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.9,233.40 கோடி. இது 2012-13-ல் ரூ.10,835.84 கோடியும், 2013-14-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.13,129.77 கோடியும், 2014-15-ல் ரூ.15,890.18 கோடி என்று வட்டி செலுத்தியுள்ளது. இதுவே 2015-16-ல் ரூ.17,856.65 கோடியாகவும், 2016-17-ல் ரூ.19,999.45 கோடியாக செலுத்தப்பட்டது. இப்போது ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டி மட்டுமே செலுத்துகின்றனர்.*😨😨🤦🏻♂
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *_சிறந்த கருத்தாளர்கள்:_*👑
*_கலந்துரையாடல்~1_*
🥇 *@ப்ரியா யுவராஜ்👨👩👧, @SP Vignesh*
🥈 *@Bismi, @Prakash B*
🥉 *@Jaiganesh, @க நிருபன்கதிர்*
*_கலந்துரையாடல்~2_*
🥇 *@அ. கந்தன், @Arul*
🥈
*@இரமேஷ்பாலசுப்பிரமணியன், @மதுரை மலைராஜ்📿, @⚫இருட்டு உலகம்⚫*
🥉 *@sriramkrm, @பிரதீப் விஸ்வா*
🕴 *_சிறந்த அட்மின்:_*🕴
👁 *சங்கிலி பூதத்தான்* 👁
🤷♂ *_கருத்து:_* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*😥😥இலவசம் என்ற பெயரில் நம் தலையில் 45,000 கடன் உள்ளது. அந்த கடன் நம் பெயரில் நமக்கு விதிக்கப்பட்டுள்ளது... மேலும் இது போன்ற நல்ல ஆட்சி அமைய காசு கொடுத்து வாக்களிக்க சொல்லும் தலைவருக்கு வாக்களிக்கவும்....*😠😠😡
📜 *_திருக்குறள்:_* 📜
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்*
*ஊதியமும் சூழ்ந்து செயல்.*
📜 *_விளக்கம்:_* 📜
*ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.*
📝 *_பழமொழி :_* 📝
*வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?*
🤔♻ *_பொருள்:_* ♻🤔
*மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல் செய்துவிட்டுப் பின் வராத கடன்களைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *_முடிவுரை தொகுப்பாளர்:_*
🌱🌏 *_ராமகிருஷ்ணன்_*🌏 🌳
🌱🌏 *_8124323975_*🌏 🌳
🕴 *_விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:_* 🕴
😎 *_ஜாஹீர் ஷாஹ்_*
*_78450 32987_* 📲
😎 *கார்த்திக் ராஜ்பவன்.*
*_8072 908 455_* 📲
😎 *_அருள் முருக இன்பன்-8668196093_*
*_( வழக்கறிஞர் )_*
*© _Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்_*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment