🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு:* 🇮🇳
__________________________________
🌹 *தேதி :16.03.2018* 🌹
🌷 *கிழமை : வெள்ளி* 🌷
____________________________________
*அறிவோம்*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*தன்னுடைய*
*எல்லையை அறிந்தவனே அறிவாளி.*
*-கன்ஃபூசியஸ்*
💖💖💖💖💖💖💖💖💖💖💖
*நிர்வாகிகள் எண்ணம்*
★■◆●★■◆●★■◆●★■◆●★■
*பார்ததை அறிந்ததை படித்ததை எல்லாம் வைத்து யாரையும் நம்ப வேண்டாம்,நன்றாக சிந்தித்து உங்கள் அனுபவத்தில் யாராகினும் நம்புங்கள்.*
*ஏனென்றால் உன் வாழ்க்கையை மற்றவர்கள் வாழ முடியாது,மற்றவர்கள் அறிய முடியாது.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
🏻 *தலைப்பு:*🏻
=======================
*மருந்து பொருட்களின் விலைகளும்,தரமும்.*
💉💉💉💉💉💉💉💉💉💉💉
💊 *மருந்து பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஓரளவுக்கு உள்ளது என்பது இன்றைய விவாதத்தின் மூலம் ஓரளவுக்கு தெரியவருகிறது. ஆனால் படித்தவர்கள் நமக்கு தெரிந்தது படிக்காத மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை அதை மக்களுக்கு தெரியப்படுத்துவது நம் கடமை.*
💊 *இன்று சில மருந்துகளை பற்றிய விரிவான விவாதம் நடந்தது மேலும் சிலதை நாம் பார்ப்போம்.*
💊 *_மருத்துவம் என்பது ஊழலாக சென்று கொண்டிருப்பது ஒரு பக்கம் இருக்க மருந்து பொருட்களின் விலை நிர்யத்திலும் மக்களை ஏமாற்றிவருகின்றனர் என்பது பல வருடமாக நாம் அறிந்தும் அறியாமல் இருக்கும் ஒரு உண்மை._*
💊 *_மருந்து பொருட்கள் மருத்துவமனைக்கு மருத்துவமனை,ஒரு பிராண்டு(BRAND) க்கு பிராண்ட்(BRAND) மாறுபட்ட விலைகளை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறார்கள் என்பது மக்கள் அறிந்தது._*
💊 *_BRAND க்கு மாற்றம் இருந்தாலும் கூட மருத்துவமனைக்கு மருத்துவமனை மாறுபடும் விலை நிர்ணயம் என்பது ஒரு அதிர்ச்சியான விஷயம்._*⚠
💊 *_இரண்டு மருத்துவமனையிலும் கொடுக்கப்படும் மருந்து ஒன்று ஒரே brand தான் ஆனால் விலையில் வேறுபாடு உண்டு ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரு தலைவலி மாத்திரையின் விலை 50 ருபாய் என்றால் ஒரு சிறிய மருத்துவமனை மருந்து கடைகளின் அதன் விலை வெறும் 5 ருபாய் ஏன் 45 ரூபாய்க்கு விலையேற்று விற்க வேண்டும்?_*⚠
💊 *_லாப நோக்கம் மட்டுமே இரண்டு மாத்திரையின் DOSAGE அளவும் ஒன்றே DOSAGE அளவை பொருத்தும் விலை மாறுபடும் ஆனால் DOSAGE ஒரே அளவு என்ற பொழுது விலையில் மாற்றம் ஏன் என்று யாரும் யோசிப்பது இல்லை._*👎
💊 *_பெரிய மருத்துவமனை மருந்து கடைகளில் அவர்களின் லாபம்,அவர்களுக்கு வேலை செய்யும் கூலி எல்லாம் இதில் இருந்தே வருகிறது._*⚠
💊 *_இதை இப்படியும் கூறலாம் ஒரு பெரிய மருத்துவமனையில் ஒருவருக்கு காய்ச்சல் காரணமா ஊசி போடுறாங்க அங்க அதான் விலை வெறும் 2000 ருபாய் மருந்துகள் எதுவும் இல்லாமல்._*⚠
💊 *_ஆனால் ஒரு சிறிய மருத்துவமனையில் ஊசி போடுறாங்க ஆனால் அதில் வெறும் 200 ருபாய் தான்._*⚠
💊 *_அப்போ இருவருமே லாபத்தை நோக்கியே பார்கிறாராகள் ஆனால் யாருக்கு லாபம் அதிகம் பெரிய மருத்துவமனைக்கு தான்._*⚠
💊 *_இது அப்படியே மருந்து பொருட்களுக்கும் பொருந்தும்,பெரிய மருத்துவமனைகள் லாப நோக்கில் செயல்படுகிறது என்பது இதை விட உதாரணம் சொல்ல முடியாது._*⚠
💊 *_நம் தமிழகத்தில் மூன்று விதமான மருந்துகடைகள் உள்ளது._*
*_அந்த மூன்று விதமான மருந்து கடைகளும் மக்களின் பணமதிப்பை பொறுத்தே அமைகிறது என்று நாம் யோசித்தால் தெரியும்._*⚠
💊 *_அம்மா மருந்து கடை(இது தமிழக அரசால் கொண்டுவரப்பட்டு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்கிறது.)_*
*_ஆனால் இந்த மருந்தை பெரும்பாலும் ஏழைகள் தான் வாங்குவார்கள் ஏன் என்றால் ஏழைகளின் பணதேவை அப்படி இருக்கு._*⚠
💊 *_அடுத்து ஒரு பெரிய மறுத்துவமனை சாராத சிறிய மறுத்துவமைக்கு சார்ந்து கிளினிக் இது மருத்துவமனையின் கீழ் தான் செயல் பட்டு வரும் மருத்துவமனையில் ரசீது எழுதும் பொழுது மருந்தது எழுதுவது கிடையாது அந்த BRAND என்னவோ அதை தான் எழுதுவாங்க காரணம் இவர்களுக்கான வருமானம் மருந்தை அடிப்படையாக கொண்டது தான். (இங்கு பெரும்பாலும் நடுத்தர மக்கள் தான் செல்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.)_*⚠
பெரிய மருத்துவமனை என்றால் அவர்கள் மறுத்துவமையிலே மருந்து கடையும் இருக்கும் அங்கு வாங்க வேண்டிய கட்டாயமும் இருக்கும் ஏன் என்றால் அவர்கள் எழுதி கொடுக்கும் மருந்துகளில் பெரும்பாலும் அங்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் (இது போன்ற மருந்து கடைகள் பணக்கார வர்க்கத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்.)
*மேலும் சில விபரங்கள் மருந்தின் தரம் பற்றி பார்ப்போமே!!!*
💊 *_இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிற மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 மருந்துகள் போலி எனவும் மத்திய சுகாதாரத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டில ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது._*⚠
💊 *_இந்தியாவில் போலி மருந்துகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மருந்துகளின் தரம் மற்றும் போலியான மருந்துகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளுமாறு நொய்டாவில் உள்ள தேசிய பயாலஜிக்கல் மையத்திற்கு (NIB) மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தது._*⚠
💊 *_தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 வகையான சிகிச்சை மருந்துகளின் 224 மருந்து மூலக்கூறுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் நாடு முழுவதும் 36 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 650 மாவட்டங்களில் உள்ள சில்லறை மருந்து விற்பனைக் கடைகள், அரசு மருந்தகங்கள் மற்றும் 8 விமான நிலையங்கள், கப்பல் துறை முகாம்களில் இருந்து 47,954 மாதிரி மருந்துகள் சேகரிக்கப்பட்டு தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன._*⚠
💊 *_நாடு முழுவதிலிருந்து 1800 க்கும் மேற்பட்ட மருந்து ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வுப் பணியோடு கணக்கெடுப்பு எடுப்பது தொடர்பாக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது.ஆய்வின் முடிவில், 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 மாதிரி மருந்துகள் போலியானவை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. _*⚠
💊 *_இந்தியாவில் தரமற்ற மருந்துகளின் சதவீதம் 3.16% என்றும் போலியான மருந்துகள் 0.0245% என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது._*⚠
_இதில் நீங்க நினைக்கலாம் இதுலாம் நாம் அன்றாட பிரச்சனைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கு இருக்காது னு ஆனால் உண்மை அன்றாடம் நடக்கும் சில நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் தான் தரமற்ற மருந்துகள் உள்ளது என்பது உண்மை,ஏன் னா இதில் தான் லாபம் ஈட்ட முடியும்._
💊 *_வெளிநாடு வாழ் இந்தியரான தினேஷ் தாகூர், பிரபல மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அங்கு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மருந்துகள் தரமானதாகவும், இந்தியாவுக்குள் விற்கப்படும் மருந்துகளின் தரம் வேறு மாதிரியாகவும் இருந்ததைக் கண்டு விளக்கம் கேட்டிருக்கிறார். சரியான பதில் தராத நிறுவனம், அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டது._*⚠
💊 *_இது வேலையை விட்டு அன்பியதற்கான காழ்புணர்ச்சியில் பேசுகிறார் என்றும் நாம் எண்ணலாம் ஆனால் இந்தியாவில் புழங்கும் தரம் குறைந்த மருந்துகள் என்ற கோணத்தில் இதை யோசிக்கலாம்_*⚠
💊 *_சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் மோசடிகள் பற்றி அரசாங்கத்துக்கு தினேஷ் தாகூர் புகார் அனுப்பியிருக்கிறார். 2014ம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறார். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு பொதுநல வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன._*⚠
💊 *_அதன்பிறகு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான FDAவுக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். _*
*_எஃப்.டி.ஏ. அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து ஆய்வு நடத்திய பிறகு, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் மருந்து களிலும் தரக்குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது._* *_இதனால், தரமான மருந்துகளை வழங்குவதாக அளித்திருந்த ஒப்பந்தத்தை மீறியதாக 500 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருக்கிறது எஃப்.டி.ஏ. இந்த சர்ச்சைக்குப் பிறகு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் மீதான கண்காணிப்பையும் வெளிநாடுகளில் அதிகப்படுத்தி இருந்திருக்கிறார்கள்._*⚠
💊 *_தரமற்ற மருந்துகள், தவறான மருத்துவ முடிவுகளால் அமெரிக்காவில் வருடத்துக்கு 98 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் இருக்கிறது. நம் நாட்டில் அதுபோன்ற புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. அமெரிக்காவை போல 3 மடங்கு மக்கள் தொகை அதிகம் கொண்ட, எந்த விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படாத இந்தியாவில் இந்த பாதிப்பு எத்தனை பெரிதாக இருக்கும் என்று யோசித்தாலே தலை சுற்றும்._* ⚠
💊 *_"ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவ மையங்கள் இருக்கின்றன. அந்த மருத்துவ மையங்களில் பயன்படுத்துகிற மருந்துகளின் தரத்தை மத்திய தணிக்கை மற்றும் கணக்காய்வுக் குழுவான CAG ஆய்வு செய்தது. இதில், 32 சதவிகித மருந்துகள் தரக்குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல, அரசின் அறிக்கைகளையே தினேஷ் தாகூர் தனது வாதங்களில் முன்வைத்திருக்கிறார்._* *_இதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 125 மனுக்கள் அளித்து இந்தத் தகவல்களை பெற்றிருக்கிறார்._* ⚠
_ராணுவ வீரர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களாகிய நமக்கு எப்படி னு யோசிங்க??_
💊 *_நோயாளிகள் பாதுகாப்பு பற்றி 1960ம் ஆண்டிலிருந்து மொத்தமே 13 ஆய்வுகள்தான் செய்திருக்கிறார்கள். பிறகு எப்படி மருந்துகளின் தரம், மருத்துவ சிகிச்சைகள் பற்றி யோசிக்க முடியும் என்று 2014ம் ஆண்டில் National medical journal of India தலையங்கம் எழுதியிருந்தது. ஒரு மருந்தின் தரத்தைப் பரிசோதிப்பதற்கு Bioequivalence studies என்று சில அடிப்படையான சோதனை முறைகள் இருக்கின்றன._*⚠
_சிலர் இதை பற்றி இப்போ தான் கேள்விப்படுவாங்க னு நினைக்கிறேன்._
💊 *_ஒவ்வொரு வருடமும் தரமற்ற மருந்துகளின் சதவிகிதம் கூடிகொண்டே தான் இருக்கிறது._*⚠
💊 *_வருடா வருடம் இப்படி கூடி கொண்டே இருந்தால் மக்களுக்கு நோய்களை பற்றிய அச்சம் விட்டு மருந்தை கண்டு தான் அச்ச படுவார்கள்,தரமற்ற மருத்துவமும் மருந்துகளும் மனிதர்களின் உயிர்களுக்கு மிக பெரிய அச்சுருத்தல் என்பது மக்கள் அறியாத உண்மை._*⚠
💊 *_மருந்துகளின் விலை ஒருபக்கம் இருந்தாலும் கூட அந்த விலைக்கான மருந்து சரியாக இருக்க வேண்டும் ஆனால் அதுவே சரி இல்ல பணம் கொடுத்து நோய்களை வாங்கும் நிலையில் தான் மக்கள் உள்ளனர்._*⚠
💊 *_மக்களிடம் தான் மாற்றம் வேண்டும் தவிர மருத்துவர்களிடமோ மருந்து கடைகளில் இருந்தோ மாற்றம் எதிர்பார்க்க முடியாது மக்கள் முடிந்த அளவு சித்த மருந்துகளை பின்பற்றினால் நமக்கு நலமும் உண்டு நம் பாரம்பரிய சித்த மருத்துவமும் வளர்ச்சியடையும்_*⚠⚠✅
👍🙏🤝👍🙏🤝👍🙏🤝🙏👍
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த அட்மின்* 👑
*இன்று பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கங்களை கொடுத்த அருள்முருக இன்பன் சிறந்த அட்மின்.*
👑 *சிறந்த பேச்சாளர்கள்*👑
*கலந்துரையால் 1*
🥇 *@ஆண்டவன் கட்டளை Ak*
🥈 *@ப்ரியா யுவராஜ்👨👩👧& @ஜெய்கணேஷ்.*
🥉 *@ஞாலமைந்தன்*
*கலந்துரையாடல் 2*
🥇 *@🌻 வாழ்க வளமுடன் 🌼*
🥈 *@sriramkrm &*
*@இரமேஷ்பாலசுப்பிரமணியன்*
🥉 *@வி.சூ.மார்க்கசு & @kandhan* & *@All Is Well ✍*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நமக்கு கிடைக்கும் எந்த பொருட்கள் சரியா கிடைக்கனும் னு ஆசைப்படுபவர்கள் அதற்கான எந்த நடவடிக்கையும் நாம் மேற்கொள்வது இல்லை,நம் உரிமைகளுக்கு நாம் தான் பொறுப்பு அதற்காக நாம் எடுத்து வைக்க வேண்டிய பொறுப்புகள் நம் கையில் தான் உண்டு.*
*சித்த மருத்துவத்தில் தரம் இல்லாமல் இல்லை தரமாக உள்ளது சித்த மருத்துவம் தான் மாறுவோம் சித்த மருந்துகளுக்கு வரவேற்போம் சித்த மருத்துவத்தை.*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது*
*அற்றது போற்றி உணின்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.*
*_📝 பழமொழி 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💢 *அறிந்துகொள்ளவும்*
💢
*நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.*
💢 *புரிந்துகொள்ளவும்*💢
*மருந்தும் விருந்தும் மூன்று வேளை.*
*மருந்தே யாயினும் விருந்தோடு உண்.*
💢 *தெரிந்துகொள்ளவும்*💢
*சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.*
*மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👨🏻💻 *மணி மாதேஷ் 8428073724*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்.*
*😎சங்கிலி பூதத்தான் - 8925553996*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment