🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :18.03.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💡 *கல்வியை பலர் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும், மிகச் சிலரே நல்வழியில் உபயோகிக்கின்றனர் என்பதையும் நாம் தினமும் காண்கிறோம். இதனால், நன்மையை விட தீமையே அதிகம் செய்யப்பட்டிருக்கிறது...!!*
👴🏻 *மகாத்மா காந்தியடிகள்*
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *படிப்பது மட்டும் கல்வி இல்லை.... சார்ந்திருக்கும் கொள்கைகள், அறிவுப்பின்னணி, காலச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் கல்விச் சித்தாந்தம் பிறக்கிறது அதுவே அவர்களை வழி நடத்துகிறது...!!*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*ஒவ்வொரு ஆண்டும் தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம்*
*'வசூல் வேட்டை'* *காரணம் என்ன?*
🏢🎒📖💶💸🤔🏢🎒📖💴💸
📚📖🎒 *கல்வியின் தேவை இன்று மாறிவிட்டது. வாழ்கையின் அடித்தளத்தை அறிந்து கொள்ளும் அளவிற்கான தொடக்கக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் இலவசமாகப் பெற்ற பின்னர் அதற்கு மேல் 'வேலைக்குச் சென்று பணம்' சம்பாதிக்கக் உயர் கல்வி தான் தேவைப்படுகிறது என்ற ஒரு நிலைவர அரசு வழங்கும் இலவசக் கல்வியைத் தாண்டி பணம் கொடுத்தேனும் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தனியார் கல்விக் கூடங்கள் பெருக இதுவே முதல் காரணம்.*📖
👧🏻🧒🏻 🎒 *தமிழகத்தில் தனியார் நர்சரி பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.*🎒
🏢 🎒 *தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு" தமிழக அரசால் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தனியார் பள்ளிகளில் நிலவும் தன்னிச்சையான கட்டண வீகிதங்களை முறைப்படுத்தும் நோக்கத்துடன் 2009இல் குழு ஏற்படுத்தப்பட்டது.*🧐
🏢📖 *இதில் 10,233 மானியம் பெறாத பள்ளிகளின் கட்டுமானம், ஆசிரியர்களின் ஊதியம், மற்றபிற செலவினங்கள் ஆகியவை குறித்த தகவல்களைப் பெற்று, அவ்வகை தகவல்களைத் தர மறுத்த 701 பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை அக்குழு பரிந்துரைத்தது.*🧐🏢
🧒🏻➡ *UKG கட்டணம் – 3750*💶
🎒➡ *1-ம் வகுப்பு கட்டணம் – 4550*💸💶
🎒➡ *2-ம் வகுப்பு கட்டணம் – 4550*💶💸
🎒➡ *3-ம் வகுப்பு கட்டணம் – 4550*💶💸
🎒➡ *4-ம் வகுப்பு கட்டணம் – 4550*💶💸
🎒➡ *5-ம் வகுப்பு கட்டணம் – 4550*💶💸
🎒➡ *6-ம் வகுப்பு கட்டணம் – 5050*💶💸
🎒➡ *7-ம் வகுப்பு கட்டணம் – 5050*💶💸
🎒➡ *8-ம் வகுப்பு கட்டணம் – 5050*💶💸
🎒➡ *9-ம் வகுப்பு கட்டணம் – 6300*💶💸
🎒➡ *10-ம் வகுப்பு கட்டணம் – 6300*
*அதன்படி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.*🧐💶💸
🧐🏢📚 *ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது இருந்தும் கட்டணம் குறைந்ததாக இல்லை ஏன்?*🤔
🏢💶 *அதிகரித்துவரும் கல்வி செலவே இன்று பெற்றோர்களின் முக்கிய கவலையாக இருக்கிறது. பிள்ளைகளின் உயர்கல்விக்காக செய்யும் செலவை காட்டிலும் பள்ளிக் கல்வியின்போதே கூடுதல் செலவுகள் வருகிறது.*💶💸☹
🏢🧐🧒🏻👧🏻 *ஒரு ஆய்வில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், வாழ்க்கை முறை அல்லது திருமணம் போன்ற விஷயங்கள் பற்றி கவலைப்படுவதைவிட, படிப்பிற்கான கூடுதல் செலவுப் பற்றியே கவலைப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.*☹😔
🏢👨👩👧👦 *பெற்றோர்கள், கல்வியின் தரம், பள்ளியில் சேர்த்தல் மற்றும் குழந்தைகள் பெறும் மதிப்பெண்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே கல்விக்கான செலவை அதிகம் செய்கின்றனர்*💶💸☹
🏢💸💶 *நாட்டின் வளர்ச்சியில் தனியார் பள்ளிகள் முக்கியப் பங்காற்றி உள்ளன. இங்கு படித்தவர்கள் தான் தொழில் துறையிலும் அரசு நிர்வாகத்திலும் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என இதை காரணம் காட்டியே பல கல்வி நிறுவனங்கள் பல கோடிகளை பார்க்கிறது.*💸💶☹
🏢💸💶 *இன்றய லாபம் தரும் தொழில் இது தான்... ஒரு பள்ளியை தொடங்குவது திறமையான ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவது அந்தப் பள்ளி உடனே நல்ல பெயர் எடுக்கும் மாணவர்கள் பெற்றோர் மற்றும் சமூகத்தின் நன்மதிப்பைப் பெறும். பிறகு அது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பள வித்தியாசத்தைப் பற்றிப் பேசும். வேறு வழியில்லாமல் உங்கள் பள்ளி ஆசிரியர்களின் மாதச் சம்பளத்தை உயர்த்துவதாகவும் பராமரிப்பு வசதிகளுக்காகவும் என்று நம்மை நம்பவைத்து கட்டணங்களை உயர்திவிடுவார்கள்.*💸💶💴💷⬆👍
🔴 *அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து உயர்ந்தவர்கள் இந்த சமுதாயத்தில் பலர் இருக்கிறார்கள்.*🤷🏻♂🤷🏻♂
🤨📖 *சேவையாக இருந்த கல்வி இப்போது வியாபாரமாகி வருகிறது காரணம் பல அரசியல்வாதிகள் தான் இதை நடத்துகின்றனர் பிறகு எப்படி இலவசமாக கிடைக்கும்...*🤨
💶🤨 *இரண்டாயிரம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டுவிட்டு அவர்கள் கட்டிய பள்ளியில் இருபதாயிரம் கட்டி சேருகின்றனர். இதில் பெருமை வேறு...*😠😏
🏢🧒🏻👧🏻 *எதிர்கால தலைமுறை குழந்தைகளின் கனவை நிறைவேற்ற விரும்பும் நாம் அரசுப் பள்ளிகளில் கல்வி,📖 பாடபுத்தகம், 🧦👔சீருடை,🎒 புத்தகப் பை, 🍱மதிய உணவு, 💻மடிகணிணி, 🚲மிதிவண்டி என அனைத்தும் இலவசமாகக் கிடைத்தாலும் அங்கு கல்வித் தரம் இல்லை.😠🙅🏻♂ ஆசிரியர்கள் பாதி நாள் பணிக்கு வருவதில்லை.🙅🏻♂👎 வரும் ஆசிரியர்களும் சரியாக பாடம் கற்றுக் கொடுப்பதில்லை.🙅🏻♂👎 அப்படியே சிலர் கற்றுக் கொடுத்தாலும் ஆர்வமுடன் அதைச் செய்வதில்லை என பல காரணங்களை முன்வைத்து தனியார் பள்ளிகளையே தேர்வு செய்கிறோம்.*😠☹🧐
🏢🧐👥🗣 *மக்களுக்கு அரசு பள்ளிகளின் தரம் பற்றிய கவலை..ஆனால் அரசு இலவசமாக தரும் பொருட்களின் தரத்தை பற்றி கவலை இல்லை...அதற்காக செலவிடப்படும் மக்களின் வரிப்பணம் பற்றி கவலை இல்லை.*💶🙅🏻♂🙅🏻♂
😡🚲💻 *இலவசங்களை வரிசையில் நின்று பெற்று கொள்வதை போல இலவச அரசு கல்வி தங்கள் பிள்ளைகளுக்கு படிக்கவைக்க தேவை என்று கேட்கக் தோன்றுவதில்லை மக்களின் மனநிலையை என்னத்த சொல்ல...*🤦🏻♂🤦🏻♂😞
🏣 📖 *இதன் காரணமாக*
*கடந்த 2011 முதல் 2015 வரை அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.1 கோடி குறைந்துள்ளது.*⬇ *ஆனால் 🏢📖தனியார் பள்ளிகளில் 1.6 கோடி அதிகரித்துள்ளது. இதை அரசே புள்ளிவிவரமாக கொடுக்கிறது.*⬆
🏢📖 *சமச்சீர் கல்வி முறையை பலர் விரும்பவில்லை அதனால் சிபிஎஸ்சி பள்ளிகளை நாடிசெல்கின்றனர், டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது விலை உயர்வும் அதிகமாக இருக்கும் அதுபோல கல்வி கட்டணமும் உயர்ந்து இருக்கிறது.*💶💶⬆
🏢💶📖 *இப்போது பல மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்சி பள்ளிகளாக மாறிக்கொண்டு இருக்கின்றன.* *அப்போது தான் அவர்களாலும் அதிக கட்டணம் வசூலிக்க முடியும் அதிகம் சம்பாதிக்க முடியும்.*😡💶
*காரணம் நீட்' என்று கூறுகின்றனர்.*🤨😞
🏢💶💶 *பள்ளிக் கட்டணம் உயர்வதால் பெற்றோர்கள் ஆத்திரப்படுவார்களா இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் குறைக்கப்படுமா என்று கேட்டால் சந்தேகமே!இன்று பெரும்பாலான பள்ளிகளை அரசியல்வாதிகள் தான் நடத்திக் கொண்டிருக்காங்க..அது ஆளும்கட்சி,எதிர்கட்சி என்று இல்லை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் நடத்துராங்க இங்கு ஒரு தடவை முதளீடு ஒவ்வொரு ஆண்டும் அறுவடை. ( விவசாயம் இல்லை அதுக்கும் மேல.. )*😔😞
🏢📖💶 *3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் வளர்ச்சியையும் பராமரிப்பையும் உள்ளடக்கிய இடமாக இருக்கவேண்டிய அங்கன்வாடிகள் அதை சோறு வழங்கும் மையமாக மாற்றி வைத்திருக்கிறது அரசு காரணம் கல்வித்தந்தைகள் அரசியல்வாதிகளாக இருப்பதால்...*🤨🤦🏻♂
🏢📖💶 *Lkg சேருவதற்கு கூட சிபாரிசு கடிதங்கள் தேவைப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வருட சேர்க்கைக்கு இப்போது வந்து விண்ணப்பம் கேட்டால் என்ன செய்வது, நாங்கள் போன வருடமே கொடுத்து முடித்து விட்டோம் என்று பதில் வேறு..எதிர்காலத்தில் குழந்தை கருவில் இருக்கும் போதே விண்ணபிக்க வேண்டும் போல.. இந்தியாவில் மட்டுமே இது போன்ற செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடுகின்றனர்... ( இதில் அதிகம் படித்தவர்கள் தான் அதிகமாக ஈடுபடுகின்றனர் )*🤦🏻♂😔😞
🏢📖💶 *புகழ்பெற்ற கல்லுரிகளுக்கு( iiT ) கூட அப்ளிகேசன் ஆன்லைனில் கிடைக்கிறது ஆனால் L.G.K க்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி வாங்கணும் போல.. விண்ணப்ப கட்டண விலையும் பல்கலைக்கழக விண்ணப்ப கட்டணங்களை விட அதிகம்.*📄💶💶🤦🏻♂
🏢🧒🏻👧🏻✍ *இதில் குழந்தைக்கு நுழைவு தேர்வு வேறு வைக்கிறார்கள். நல்ல வேளை பெற்றோருக்கு நுழைவு தேர்வு வைக்கவில்லை இருந்தாலும் படித்திருக்க வேண்டும்.. இந்த அளவுக்கு கல்வி வியாபாரமாகி போனது ஏன்?...*😡🤨
🏢💶💶 *கட்டண உயர்வுக்கு பெற்றோர்களின் மனநிலை தான் முக்கிய காரணமாக உள்ளது. 👨👩👧👦 ஒரு நடுத்தர குடும்பத்தின் வருமானத்தில் முக்கால் வாசியை வீட்டு வாடகையும், கல்வி கட்டணமும் தான் சாப்பிடுகிறது. மீதியை தான் அவர்கள் சாப்பிடமுடிகிறது.*☹😰
🏢💶 *இருந்தும் தனியார் வசம் உள்ள மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்தால் தான் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற தவறான மனநிலையே இதெற்கெல்லாம் காரணம்.*😰☹
🏢👨👩👧👦☹ *படி, கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகு, சம்பாதி, வீடு, கார் வாங்கு, உறவுகள், தோழமைகள் என எந்தத் தொடர்பும் இல்லாத வேலை, உணவு, உறக்கம் என சுய செயல்கள் மட்டுமே வாழ்க்கை என்று மாற்றினால் தான் கல்வியை காசாக்க முடியும் என்று கற்றுவைத்துள்ளனர் கல்விதந்தைகள்...*👨👩👧👦😰
🏢😰👨👩👧👦 *ஆங்கிலம் என்பது மொழி... அது அறிவல்ல. ஆனால், ஆங்கிலத்தில் பேசினாலே வேலை கிடைத்துவிடும் என்ற அதீத மூடநம்பிக்கை நம் மக்களிடம் இருக்கிறது. படிப்புக்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பலருக்கு புரிவதில்லை.*😰☹🙅🏻♂
🏢👨👩👧👦☹ *10ம் வகுப்பில் 500க்கு 498 எடுத்து தேர்ச்சிப் பெற்றவர்கள், பிளஸ்டூவில் 1,198 மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள்? ஒரு ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெரியும்.*🧐🤦🏻♂
🏢 🧒🏻👧🏻 *இந்தாண்டு பள்ளிக்கல்வி துறைக்கு மொத்தம் 27 ஆயிரத்து, 205 கோடியே, 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 💶💶இந்த நிதி அனைத்தும் முழுமையாக கல்விதுறைக்கு செலவிடுடப்படுகிறதா... 😰🤨இல்லை செலவிடப்படும் என்று நம்பிக்கை தான் இருக்கிறதா... ☹நாம் தான் கேள்வி கேட்க்கப்போகிறோமா... நமக்கு வேண்டியது எல்லாம் இலவசம் தானே...*😰🤦🏻♂😔
🤨🚲💻 *இலவசங்களை வாங்க எவ்வளவு உரிமை உள்ளதோ, அதை விட பலமடங்கு உரிமை உள்ளது தரமான கல்விச்சேவையை பெற அரசிடம் உரிமை கோர. ஆனால் நாம் அதை செய்வதில்லை...🙅🏻♂ ஒருசிலர் செய்யத் துணிந்தாலும் அவர்களை கல்வித்தந்தைகள் அரசியல் பலம் கொண்டு ஒடுக்கிவிடுகின்றனர்.*☹😰
🧐🤨 *இதற்கு வழி என்ன என்று கேட்டால் முதலில் நாம் மாற வேண்டும், நம் எண்ணங்கள் மாற வேண்டும்...*👍 *அரசுப்பள்ளிகளுக்கு நம் முடைய ஆதரவை தொடர்ந்து வழங்கும்போது அரசின் கவனம் அதன்பாலும் திரும்பும். 👍நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்களே...* *அடிமேல் அடிவெச்சா அம்மியும் நகரும்..👍 நம்ம அரசாங்கம் அசையாதா...??*🤨
*நாம் கேட்கவில்லை...😏 அவர்கள் செய்யவில்லை...*🤨☹
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
🏅🏆 *KS*🏆🏅
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@க.நிருபன்கதிர்😍💐, @ப்ரியா யுவராஜ்👨👩👧*
🥈 *@Santhi😊🦅*
🥉 *@Sridevi 🌈*
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@Yuva 😜*
🥈 *@All Is Well ✍, @அ. கந்தன்*
🥉 *@Arul*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🏢 *தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதன் மூலமும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி பெற்றோரை ஈர்ப்பதன் மூலமுமே மாற்றத்தை கொண்டு வரமுடியும்...*👨👩👧👦
🏢📖🧒🏻👧🏻 *படிக்கும் குழந்தை, படிக்காத குழந்தை என்று பிரிப்பதை விட படிப்பு பாடபுத்தகம் மட்டுமல்ல... ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதைக் கண்டறிந்து வளர்த்தெடுக்கும் இடம்தான் பள்ளிக்கூடமாகும். அரசுப் பள்ளிகளில் இதற்க்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. ( ஏற்க்க தான் ஆல் இல்லை )*☹
🏢 *தனியார் பள்ளிகள் பற்றிய குறையை யாரிடமுமே சொல்லமுடியாது. எந்த இடத்திலும் நியாயம் கிடைக்காது. இந்த யதார்த்தம் உணர்ந்தும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியுமே பெரும்பாலான பெற்றோர் அமைதி காக்கிறார்கள்.*👨👩👧👦☹
🏢😔 *வேதனை என்னவென்றால் தரமான கல்வியை தருவதாக நினைத்து சில நேரம் தவம் இருந்து பெற்ற பிள்ளைகளை இழந்து விடுகிறோம்.*☹😔
👨👩👧👦 *பெற்றோர்களை தயவு செய்து உங்கள் ஆதங்கத்துக்கு குழந்தைகளை வீனாக்காதீர்*🙅🏻♂🙅🏻♂
😔☹ *வேதனையுடன் நிறைவுசெய்கிறேன் நன்றி.*😰😥🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்*
*கண்ணென்ப வாழும் உயிர்க்கு..*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
☀ *அறிந்துகொள்ளவும்*☀
*கல்வி என்ற பயிறுக்கு கண்ணீர் என்ற மழையே துணை..!!*
☀ *புரிந்துகொள்ளவும்*☀
*கல்வி கற்ப்பதைவிட கருத்தை ஆராய்வது மேல்..!!*
☀ *தெரிந்துகொள்ளவும்*☀
*கல் விதைத்து நெல் அறுத்தவர் யார்..??*
✒✒✒✒✒✒✒✒✒✒✒
⚖ *முடிவுரை தொகுப்பாளர்*⚖
👨🏻🏫 *ராமலிங்கம் அங்கப்பன்*
*0060122646502*📲
✒✒✒✒✒✒✒✒✒✒✒
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment