🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :24.03.2018.*
🌹 *கிழமை :சனி*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*_வெளிவராத தமிழக இளம்தலைமுறையினரின் கண்டிபிடிப்பு சாதனைகள் பற்றிய ஓர் சிறப்பு அலசல்_*
🧐👩🏻🧑🏻🧐👩🏻🧑🏻🧐👩🏻🧑🏻🧐👩🏻
*_🏹பாகம் -3⃣🏹_*
🧐🔎 *_2⃣1⃣ ஈஸி வாக்கர் ( கோகுல்ராஜ் - பெரம்பலூர்)😇💐_*
🧐🔎 *_சாலைவிபத்தில் கால் இழந்த நண்பருக்கு உதவ கருவியை பெரம்பலூர் பகுதி பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, நான்கு மாணவர்களின் முயற்சியில் `ஈஸி வாக்கர்` என்ற நடக்க உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்._*😇💐
🧐🔎 *_2⃣2⃣ பார்டர் அலர்ட் (ஜெனிபர் ராபின்சன், ஹரிஹரன் - தஞ்சாவூர்)😇💐_*
🧐🔎 *_இந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சிறைப்பிடிப்பு, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு, இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளினர் என்ற தலைப்புச் செய்தி தினம் தினம் நாம் காண்கிறோம். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த செயலுக்கு அரசு எந்த ஒரு நடவடிக்கைகளையும் இன்றுவரை எடுத்ததில்லை அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தஞ்சாவூர் கிங்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜெனிபர் ராபின்சன், ஹரிஹரன் ஆகியோர் இணைந்து பார்டர் அலர்ட் என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர்._*🧐😇👍
🧐🔎 *_இதனுடைய பிளாக் பாக்சில் 12 வோல்ட் பேட்டரியுடன் பொருத்தப் பட்ட டிரான்ஸ்மிட்டரை பொருத்தி அதை இந்திய எல்லையில் கடலின் மேற்பரப்பிலோ அல்லது கடலின் ஆழப்பகுதியிலோ வைக்கலாம். கடலின் மேற்பரப்பில் அல்லது ஆழத்தில் வைக்கப்பட்ட பிளாக் பாக்சி லிருந்து வெளிப்படும் அலைகற்றை 50 மீட்டருக்கு அப்பால் வரும் மீனவ படகில் பொருத்தப்பட்டிருக்கும். ரிலேவுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ள ரிசீவர், அலைக்கற்றையை உள்வாங்கிக்கொண்டு படகில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் முதலில் ஒலிக்கும். அலாரம் ஒலித்தவுடன் மீனவர்கள் படகினை இந்திய எல்லையின் முடிவு வந்துவிட்டது என உணர்ந்து கொண்டு மீனவர்கள் படகினை அந்த பக்கம் செலுத்தாமல் நிறுத்திக்கொள்ளலாம். அதையும் மீறி மீனவர்கள் இந்திய எல்லையை கடக்க நினைத்தால் தானாகவே படகின் முன்னோக்கி தள்ளும் கருவியை நிறுத்தும் சக்தி கொண்ட ரிலே கருவி. அதையும் மீறி தாண்ட முயற்சித்தால் படகில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் தானாகவே நின்றுவிடும் இந்த கண்டுபிடிப்பில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மீட்டர் மற்றும் பேட்டரியின் அளவை கூட்டினால் எவ்வளவு தெலைவிலிருந்து இந்த டிரான்ஸ்மீட்டரை (பிளாக் பாக்ஸ்) இயக்க முடியும். பிளாக் பாக்ஸில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி செயல்படுத்தினால், மீனவர்கள் எல்லையை தாண்டும் போதோ அல்லது மீனவர்கள் எங்கு செல்கிறார்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். கடல் அளவான மைல் நாட்டிகல் அளவை பயன்படுத்தினால் மீனவர்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். இன்னும் கொஞ்சம் பிளாக் பாக்ஸில் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து, கேமராவை பொருத்தி மாற்றி அமைத்து அதற்கான இணைப்புகளை துறைமுகங்களிலும், காவல்நிலையங்களிலும் பொருத்தினால் மீனவர்களை பூமி யிலிருந்து கடலுக்கு சென்று மீன்பிடிப்பதையும், எல்லை மீறும் மீனவர்களையும், இலங்கை மீனவர்களால் தாக்கப்படும் சம்பவத்தையும், இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் சம்பவத்தையும் உடனுக்குடன் கவனித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கலாம்._*😇👍💐
🧐🔎 *_2⃣3⃣ சோலார் ஆட்டோ (கே.தினேஷ், ஈ.இழந்தமிழன், கே.கோபி, எம்.செல்வநாதன் - திருவண்ணாமலை)😇💐_*
🧐🔎 *_திருவண்ணாமலை, தனியார் பொறியியல் கல்லுாரி, இயந்திரவியல் துறை சார்பில், மாணவர்கள் கே.தினேஷ், ஈ.இழந்தமிழன், கே.கோபி, எம்.செல்வநாதன் ஆகியோர் சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சோலார் ஆட்டோ கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆட்டோவின் மேற்கூரையில் பொருத்தப்பட்ட சோலார் தகடுகளால், சூரிய ஒளி கவரப்பட்டு, மின்னாற்றலாக பேட்டரி மூலம் சேமித்து, அதை பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை சோலார் மூலம் ரீசார்ஜ் செய்தால், 220 கி.மீ தூரம் வரை இயக்க முடியும். இதன் மூலம் எரிபொருள் சேமிப்பாவதோடு, இரைச்சல் வராது. இதில், 45 டிகிரி அளவில் மேடுகளை ஏறும் வகையில் ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னோக்கி மற்றும் பின்னோக்கி செல்லும் வகையில் கியர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி செலவு, 75 ஆயிரம் ரூபாய் ஆகிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கும் ஆட்டோக்களின் உற்பத்தி செலவை விட, இதை தயாரிக்க பாதிதான் செலவாகிறது._*🙇🏻♀🤷🏻♀😇👍
🧐🔎 *_2⃣4⃣ இரு கைகள் இல்லாதவர்களுக்கான இருசக்கர வாகனம் ( ஷெரின் ஷாம் சுப்பிரமணி, ஆடின் கோல்ட்வின் - திருநெல்வேலி)😇💐_*
🧐🔎 *_இன்றைய அவசர உலகில் மனிதர்களுக்கு இருசக்கர வாகனம் மிக அத்யாவசியமானதாக மாறிவிட்டது. தினமும் பைக்கில் செல்பவர்களுக்கு சிறிது நேரம் பைக் பழுதாகி முடங்கினாலும் மன உளைச்சல் ஏற்படும். இந்த இருசக்கர வாகனங்களை கால்கள் இல்லாதவர்களும் பயன்படுத்தும் வகையில் ஏற்கனவே நவீன வசதியுடனான மூன்று சக்கர மொபட்டுகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனால் கைகள் இல்லாதவர்கள் ஓட்டுவதற்கான மொபைட் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. வெகு சிலர் ஒரு கையுடன் சிரமப்பட்டு பைக் ஓட்டுவதை காணமுடிகிறது. கால்கள் இருந்தும் இரு கைகள் இல்லாதவர்களுக்கு நம்மால் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாதே என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது. இதைப் போக்கவே நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அகரகட்டு ஜேபி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மெக்கானிக் துறை மாணவர்கள் ஷெரின் ஷாம் சுப்பிரமணி மற்றும் ஆடின் கோல்ட்வின் ஆகியோர் கைகள் இல்லாதவர்கள் இயக்கும் மொபட்டை வடிவமைத்தனர். இந்த மாதிரி மொபட்டை இக்கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவர்கள் வேதநாயகம், கிவியோன், ஜிபின் பி ஜார்ஜ், அருண்ராஜ், வில்ஷன் ஆகியோர் இணைந்து சில புதிய தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்து மெருகூட்டியுள்ளனர்._*😇💐👍
🧐🔎 *_இதில் இரு கால்களை பயன்படுத்தி 7 வகையான இயக்க நிலைகளை கட்டுப்படுத்த முடியும். இருகால்களை பயன்படுத்தி ஸ்டியரிங்கை இயக்க முடியும். வலது காலை பயன்படுத்தி இயக்கும் வகையில் ஆக்ஸிலரேட்டர், ஒலிபெருக்கி, இயந்திரம் இயக்கும் ஸ்விட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இடது காலை பயன்படுத்தி பிரேக், இண்டிகேட்டர் மற்றும் சீட் பெல்ட் பயன்படுத்தலாம்._*🤷🏻♀😇👍
🧐🔎 *_2⃣5⃣ ஹெல்மெட் அணியாவிட்டால் இயக்க முடியாத இருசக்கர வாகனம் (எம்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன், ரமேஷ்பாபு - நெல்லை)😇💐_*
🧐🔎 *_நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அகரகட்டு ஜேபி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை 4ம் ஆண்டு மாணவர்கள் எம்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன், ரமேஷ்பாபு ஆகியோர் ஹெல்மெட் அணியாவிட்டால் இயக்க முடியாத இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர். ஹெல்மெட்டை தலையில் அணிந்தால் மட்டுமே இந்த வாகனம் இயங்கும். மது அருந்தியிருந்தாலோ, சீரான இதய துடிப்பு இல்லாவிட்டாலோ இந்த வாகனம் இயங்காது. இதன் மூலம் தேவையற்ற விபத்து மற்றும் உயிரிழப்பு, உடல் காயங்களை தவிர்க்க முடியும். இதற்காக 3 விதமான சென்சார்களை வாகனத்தில் பொருத்தி அதன் சிக்னலை பெறும் வகையில் ஹெல்மெட்டில் இணைத்துள்ளனர்._*😇👍💐
🧐🔎 *_2⃣6⃣ லேடீஸ் சேப்டி ஷாக்கர் (மணிகண்டன், பரத்கிரண் - திருவில்லிபுத்தூர்)😇💐_*
🧐🔎 *_டெல்லியில் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய கருவியை கண்டுபிடிக்க திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மணிகண்டன் பரத்கிரண் தீர்மானித்தனர். இதன்படி, 15 நாட்கள் கடுமையாக முயற்சித்து கருவியொன்றை செய்துள்ளனர். இதற்கு 'லேடீஸ் சேப்டி ஷாக்கர்' என பெயரிட்டுள்ளனர்.60 கிராம் எடையுள்ள இக்கருவியை பெண்கள் தலையில் கிளிப் போல் மாட்டிக் கொள்ளலாம். குடை, கீசெயின், செல்போன் பவுச் ஆகியவற்றிலும் பொருத்திக் கொள்ளலாம். இந்த கருவியில் 3 பேட்டரிகள் உள்ளன. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும். இந்த கருவியில் 2 பட்டன்கள் உள்ளன. முதல் பட்டனை அழுத்தினால் அபாய ஒலி எழுப்பும். இந்த ஒலி சுமார் 20 மீட்டர் தூரம் கேட்கும். கருவியை எதிரியின் உடலில் படும்படிவைத்து 2வது பட்டனை அழுத்தினால், அவர் மீது 1,700 வோல்ட் மின்சாரம் தாக்கிவிடும். இதனால் எதிரி நிலைகுலைந்துவிடுவார். ஆனால், அவரது உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படாது. இக்கருவியை வெயிலில் ரீசார்ஜ் செய்யும் வசதியும் உண்டு._*🤷🏻♀👍
🧐🔎 *_2⃣7⃣ நீர்நிலைக் கழிவுகளை அகற்றும் இயந்திரம் (அருண் - உதகை)😇💐_*
🧐🔎 🔴 *_தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது, இருக்கிற நீர்நிலைகளை சரியாகவும் முறையாகவும் பராமரிக்காமல் இருப்பதுதான். சரியான பராமரிப்பு இல்லாமல் பல நீர்நிலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதகை அரசு நகராட்சிப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் அருண் என்ற மாணவர் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரை போன்ற தாவரங்களையும் மிதந்துகொண்டிருக்கும் குப்பைகளையும் ரிமோட்மூலம் அகற்றும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். ரூ.20,000 செலவில் 25 கிலோ எடையுள்ள இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த இயந்திரத்தை தண்ணீரில் மிதக்கவிட்டு ரிமோட்மூலம் இயக்கினால், அது எங்கு ஆகாயத் தாமரை போன்ற களைச்செடிகள் இருக்கிறதோ அங்கு சென்று அவற்றை வெட்டி அகற்றுகிறது. இதுமட்டுமில்லாமல், தண்ணீரில் மிதந்துவரும் பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து அகற்றுகிறது. சூரியசக்திமூலம் இந்த இயந்திரம் இயங்குவது இதன் கூடுதல் சிறப்பு._*💐👍👌
🧐🔎 *_2⃣8⃣ கடல் எல்லையைச் சுட்டிக் காட்டும் கருவி (நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா - சென்னை)😇💐_*
🧐🔎 *_சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையைச் சுட்டிக் காட்டும்' கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்._*🧐😇👍
🧐🔎 *_இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது._*👍
🧐🔎 *_முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது._*👍🔍
🧐🔎 *_ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்._*🔍🤷🏻♀👍
🧐🔎 *_சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது._*🤷🏻♀👍🔍
🧐🔎🔴 *_இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது._*🔴🔍👍😇💐
🧐🔎 *_2⃣9⃣காற்று இல்லாமல் காற்றாலையை இயக்கும் கருவி (விஸ்வநாதன் - சேலம்)😇💐_*
🧐🔎 *_காற்று இருந்தால் தான் காற்றாலை இயங்கும் ஆனால் காற்று இல்லாமலே காற்றாலை இயக்கும் கருவியை பத்தாம் வகுப்பு வரை படித்த சேலத்தை சேர்ந்த விஸ்வநாதன் கண்டுபிடித்துள்ளார். காற்று வீசும் காலத்தில் மட்டும் தான் காற்றாலையில் மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இலக்குகள் சுற்றாது. இவருடைய தொழில்நுட்பத்தின்படி மூன்று இறக்கைகள் கொண்ட காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்தவேண்டும். மேலும் கீழும் உள்ள இரண்டு இறக்கையில் நடுவில் ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையில் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரு சீராக இருக்கும்படி அமைக்க வேண்டும். ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்._*🔍😇👍
🧐🔎 *_3⃣0⃣டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் (வெற்றிவேல், விக்னேஷ், மகேஷ்ராஜா, பிரவீன்குமார் - தரங்கம்பாடி)😇💐_*
🧐🔎 *_தரங்கம்பாடி, ஹைடெக் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோருடன், திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தில் இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வரும் வெற்றிவேல், விக்னேஷ், மகேஷ்ராஜா, பிரவீன்குமார் ஆகிய 4 மாணவர்கள் இணைந்து வாகனங்களுக்கான இந்த புதிய எரிபொருளை கண்டறிந்துள்ளனர். இந்த புதிய எரிபொருளில், 80 சதவீதம் சுத்திகரிக்கப்படாத தவிடு எண்ணெய் மற்றும் 20 சதவீதம் டீசல் என்ற அளவில் கலக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருளை பயன்படுத்தும்போது, ஒரு லிட்டரில் 45 கிமீ தூரம் செல்ல முடியும். 85 சதவீதம் தூய்மையான இந்த எரிபொருளை தயாரிக்க குறைவான செலவு பிடிக்கிறது. எனவே, ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்க முடியும். டீசலைவிட 85 சதவீதம் குறைவாக புகை வெளியாகும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும். இந்த எரிபொருள் எஞ்சின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்தவொரு டீசல் எஞ்சினிலும் இந்த எரிபொருளை பயன்படுத்தலாம். இதற்கென எஞ்சினில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை._*🤷🏻♀🔍👍👍
*_3⃣1⃣ டூவீலர் 3ஜி கருவி (மணிகண்டன் - சிவகங்கை)😇💐_*
🌎🧐🔎 *_இந்தியாவில் வருடம் தோறும் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் ஏற்பாடும் விபத்துக்கள் 75 சதவீதம் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திலாக கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இந்த சாதனத்தை வண்டியில் பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும் வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும் சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும். இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். இதன் மூலம் ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும் . டூவீலர்களால் ஏற்படும். விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்🤣_*
🧐🔎 *_3⃣2⃣ காந்தம் மூலம் இயங்கும் பைக் என்ஜின் (வெங்கடேஷ் - கடலூர்)😇💐_*
🧐🔎 *_பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ். தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும் இந்த இன்ஜின். இது அதிக வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த எடையுடையது, அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது. மின்வெட்டுக்கும தீர்வாகிறது. இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம். இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின் அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும் தயாரிக்கலாம்._*🔍🧐👍🤷🏻♀
No comments:
Post a Comment