Saturday, 31 March 2018

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-4

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

     *_💝பாகம் - 4⃣💝_*

*_2017, ஜூலை - 14 :  இறுதித்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் - தமிழ்நாடு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் முறையான விசாரணை தொடங்கியது. அதன் வாதங்கள் 2017, செப்டம்பர் - 20 :  உச்ச நீதிமன்றத்தில் நீர் ஒதுக்கீடு தொடர்பான வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது._*

*_2018, ஜனவரி - 9 : இந்நிலையில், காவிரி பிரச்சினையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாக்கப்பட்டன, இதனை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்._*

*_பிப் 16,2018 காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. _*

*_இதற்குப் பிறகு, இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து, தீர்ப்பின் 456-57ஆம் பக்கங்களில் பேசும் உச்ச நீதிமன்றம், "இதற்கென ஒரு திட்டத்தை (Scheme) உருவாக்குவதன் நோக்கமே, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல் படுத்துவதற்காகத்தான்.. இதற்கான திட்டத்தை மத்திய அரசு இன்றிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும். அப்போதுதான், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள், நடுவர் மன்றத்தின் ஆணையை எளிதாகச் செயல்படுத்துவதோடு, எங்களால் விதிக்கப்பட்டபடி மாநிலங்களின் உரிமையையும் செயல்படுத்த முடியும்" என்று குறிப்பிடுகிறது._*

*_பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில், மார்ச் 29ஆம் தேதியோடு உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வாரக் கெடு முடிவடைந்தது. இந்நிலையில்தான் இந்த வரிகளில் குறிப்பிட்டிருக்கும் Scheme என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது._*

*_கர்நாடகத்தின் தரப்பிலும்கூட Scheme என்றுதான் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறதே தவிர, காவிரி மேலாண்மைவாரியம் எனக் குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டனர். குஜராத்தில் உள்ள நர்மதா நீர் ஆணையத்தைப் போல ஒன்றை உருவாக்கலாம் எனவும் வாதிடப்பட்டது._*

*_ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் என்பதையே Scheme என்ற வார்த்தை குறிப்பிடுகிறது; ஆகவே, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும் என்கிறது தமிழகத் தரப்பு. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஊன்றிப் படித்தவர்கள், Scheme என குறிப்பிடப்படுவது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விரிவாகப் பேசும் உச்ச நீதிமன்றம், அந்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு குறித்து அந்தத் தீர்ப்பிலேயே கூறப்பட்டிருப்பதை மேற்கோள்காட்டியுள்ளது._*

*_தன்னுடைய இறுதித் தீர்ப்பு எந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டுமென நடுவர் மன்றம் கூறியிருப்பதை தீர்ப்பின் 335-336ஆம் பக்கங்களில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டினர்._* 

*_இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்டத்தை (Scheme) வகுக்க வேண்டுமெனக் கூறினால், அது ஒரு குழப்பமான சூழலுக்கு இட்டுச்செல்லக்கூடும் என நடுவர் மன்றம் கருதுகிறது. 1980ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான தாவா சட்டமும் இம்மாதிரியான ஒரு அமைப்பை உருவாக்கி செயல்படுத்துவது குறித்து ஏதும் கூறவில்லை. என்றாலும்கூட, இது தொடர்பான பரிந்துரையை அளிக்க நடுவர் மன்றத்திற்கு இந்தச் சட்டம் அதிகாரமளிக்கிறது. அதன் அடிப்படையில், பக்ரா - பீஸ் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்ததைப் போல காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைக்க வேண்டும்" என காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது._*

*_தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்ததைத் தவிர்த்த பிற விஷயங்களில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே, Scheme என்று சொல்லப்படுவது காவிரி மேலாண்மை வாரியம்தான். ஓரிடத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் ரஞ்சித் குமார், Schemeஐ வேண்டுமென்றால் (may) அமைக்கலாம் என்று தீர்ப்பளிக்கும்படி வாதிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், அவரது வாதத்தை ஏற்காமல் கண்டிப்பாக (Shall) அமைக்க வேண்டுமெனக் கூறியது. ஆகவே Scheme என்பது மேலாண்மை வாரியம்தான்" என்கிறார் உச்ச நீதிமன்ற விவகாரங்களை நீண்ட காலமாக கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர் ஜே. வெங்கடேசன்_*

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...