Wednesday, 21 March 2018

இன்றைய சினிமாவில் காமெடியின் நிலை...?


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :20.03.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

🎭 *உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை.*🤣

🎭 *கண்ணாடி தான் என் சிறந்த நண்பர். ஏனெனில், நான் அழும்போது அது ஒருபோதும் சிரித்ததில்லை*🤣

🎭 *"நான் அழுதாலும் மழையில் அழவே ஆசைப்படுகிறேன்"*🤣

💐 *சார்லி சாப்ளின்*👌😇


*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

👊 *இங்கே இன்றைய நகைச்சுவை என்பது அடுத்தவர்களின்*
*துன்பத்தில் இருந்து*
*கிடைக்கப் படுகிறது*
😓😰

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*இன்றைய சினிமாவில் காமெடியின் நிலை...?*
🎥🤣😅🤔🎥🤣😅🤨🎥🤣😅

📽🎥 🤣😅 *சினிமா என்பது மிகப் பிரம்மாண்டமான மாற்றங்களை மனிதர்களின் மனதில் ஏற்படுத்தக்கூடிய சாதனம் என்றே சொல்லலாம்.ஒரே ஒரு நல்ல திரைப்படம் பார்த்தாலே அந்த உணர்வு நமது மனதில் நீங்காமல் நிறைந்திருப்பதை* *அறிய முடியும்.வெறும் மூன்று மணி நேரம் என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற* *நினைப்பில் செல்லும் ரசிகன் பார்வையில்சினிமா என்பது பொழுதுபோக்கு தான்.*
*ஆனால், வெறும் பொழுதுபோக்காக மட்டும் சினிமாவை பார்க்கும் ரசிகனுக்கு சமூக சார்ந்த விஷயங்களையும் எடுத்துரைப்பது ஒரு நல்ல படைப்பாளியின் வேலை.*😎📽🎥

📽🎥🙃 *தற்போது காலத்தின் மாற்றமோ அல்லது ரசிகர்களின் தேவையோ என்னவோ தமிழ் சினிமாவின் நிலை தற்போது மாறிக்கொண்டே வருகிறது. தற்போதெல்லாம் கவர்ச்சியும் ஆபாச வசனங்களும் இருந்தால் தான் படம் ஓடும் என்று பெரும்பாலான திரைத்துறையினர் நினைக்கிறார்கள்/திணிக்கிறார்கள்.*🤦🏻‍♀📽🎥

😂😅🤦🏻‍♀ *காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டது போல் இரட்டை அர்த்த வசனங்களில் தான் தற்போது வரும் படங்களில் காமெடியும் இடம் பெறுகிறது.*🤦🏻‍♀🎥📽

📽🎥🤦🏻‍♀ *இரட்டை அர்த்த வசனங்களை தான் இன்றைய இளைஞர்களும் கை தட்டி ரசிக்கிறார்கள்.*🤦🏻‍♀😰😨

📽🎥🤦🏻‍♀ *ஆபாச வசனங்கள் இல்லாமல் நகைச்சுவை பண்ண முடியும். ஆனால், தற்போது மக்கள் இதை தான் விரும்புகிறார்கள் என்று இத்தகைய ஆபாச வசனங்களை திணிக்கிறார்கள். இதனால் குடும்பத்துடன் சென்று திரைப்படம் பார்க்க முடியவில்லை. ஆபாச வசனங்கள் பேசி எளிதில் மக்களை கவர முடியும் என நினைத்து தற்போது நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. இதனால் எந்த ஒரு பயனும் இல்லை.ஆபாச வசனங்கள் தொடர்ந்து வருவதினாலேயே தமிழ் சினிமாவில் தற்பொழுது நகைச்சுவை தரமும் குறைந்துவருகிறது.*👎👎👎👎

📽🎥😰😨 *தற்போது பெரும்பாலான நகைச்சுவை நடிகர்கள்… சமூகப் பிரச்சனைகளுக்கு இரையாகும் மனிதர்களை கேலி செய்வதன் மூலம், தம் 'நகைச்சுவை' திறனை வெளிப்படுத்துகின்றனர். உடல் பருமனையோ அல்லது ஒருவரின் நிறத்தையோ, அவர் பாலினத்தையோ, பால் நாட்டத்தையோ, 'நகைச்சுவை'விருந்தளிக்க பயன்படுத்தும் கேவலமான கலாச்சாரம்…நம் திரைத்துரைக்கே சொந்தமானது.*🤦🏻‍♀😠

📽🎥😠 *கேலிப்பொருட்கள் வரிசையில், நிறத்திற்கு அடுத்தபடி, நம் நகைச்சுவை நடிகர்கள் கைவசம் இருப்பது, சக நடிகர்களின் உடல் அமைப்பு.*🤦🏻‍♀
*சக நடிகர்களின் உடல் பருமன், அல்லது அவர்கள் உணவு உட்கொள்ளும் அளவு, போன்ற விஷயங்கள் தலைமுறை தலைமுறையாய் 'நகைச்சுவை' விருந்தாக பரிமாறப் படுகிறது.*🤦🏻‍♀😠👊

📽🎥😠 *திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளாய் அரங்கேறுபவை…நிஜ வாழ்க்கையிலும் செவ்வனே பயன்படுத்தப்படுகிறது. ☹🤷🏻‍♀பாதிக்கப்பட்டவர் துக்கப்பட்டாலோ வருத்தப்பட்டாலோ, "மச்சி …எல்லாம் ஒரு காமெடிக்கு தான்", என்ற சப்பகட்டுகளும் கேட்டவண்ணமே உள்ளது*☹🙁😕

📽🎥🤦🏻‍♀ *சமீப காலத்தில், பெண்களின் உணவு பழக்கங்களை கேலி செய்யும், அல்லது அவர்களின் 'காதலனிடம் இருந்து பணம் 'பிடுங்கும்' குணாதிசயத்தை'…நகைச்சுவைக்கு பயன்படுத்தும் 'கலாச்சாரம்' சற்று அதிகமாகவே வலம் வர ஆரம்பித்துள்ளது.*🤦🏻‍♀😠😰

📽🎥☹😰 *சமீபத்தில் பார்த்த வடிவேலு மற்றும் சந்தானம் நடித்த நகைச்சுவை காட்சிகளில், 'சண்டாளன்' என்ற சொல், மிக அதிகமாக பயன்படுத்தப் படுவதை கவனித்து இருப்பீர்கள்*🧐🤨

📽😰🤨 *முதலில் 'சண்டாளன்' என்ற சொல், ஒரு* *சாதிப்பிரிவினை குறிக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்🤨 என்பது சந்தேகமே*
*இது ஒரு இழிச்சொல்லாக (swear word ) மட்டுமே கருதப்படுவது, சமூகத்தின் அறியாமையையே காட்டுகிறது.*🤦🏻‍♀☹

🤦🏻‍♀😰🤨 *சாதிவெறி தலைவிரித்தாடும் தமிழ் சமூகத்தில், அதன் சுவடுகளையே* *வேரோடு அழிக்க வேண்டுமெனில், அந்த சாதிப் பிரிவுகளின் பெயர்களை, நம் பேச்சு வழக்கிலிருந்து வெட்டி எறிவதே எடுக்கும்* *முதல்படியாகும்*👍
*அந்நிலை நோக்கி போக சமூகம் எத்தனிக்கையில், அதனை சரளமாக நகைச்சுவை காட்சிகளில் பயன்படுத்துவது ஒரு நெருடலாகவே உள்ளது.*🤦🏻‍♀😠👊

🤦🏻‍♀😰🤨 *சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தா விடினும், இச்சொற்களின் தீவிரம் அறிந்து, நகைச்சுவை காட்சிகள் மற்றும் பாடல்களிலிருந்து இச்சொற்களை களைவதே கொஞ்சம் போதும்,*☹

🤦🏻‍♀🧐😰🤨 *தணிக்கை குழுவிற்கே பெரிதாக இதைப் பற்றி கவலை இல்லை எனும்போது…ஒரு பாட்டாக அல்லது ஒரு 'காமெடி' காட்சியாக பார்த்து விட்டு போவதில்…தவறொன்றும் இல்லையே", என சப்பக்கட்டு கட்டுபவர்களுக்கு,*👇😠

😰🤨 *"fact fact", "வடை போச்சே", "வேணாம்…அழுதுடுவேன்"…மாதிரியான வசனங்கள் இன்று நம் பேச்சு வழக்கில் இடம் பெற காரணமாய் இருந்தது…☹lexicon என அழைக்கப்படும் பேரகரமுதலியோ அல்லது லிப்கோ சொல் களஞ்சியமோ இல்லை…அவை நம் நகைச்சுவை செம்மல்களின் கைவண்ணமே!*😰🤨

😠👊🎥 *இவற்றின் வரிசையில், சாதிப்பெயர்களும் சரளமாக இணைகையில், 'சாதிகள் இல்லையடி பாப்பா", "சாதி இரண்டொழிய வேறில்லை", போன்ற வாக்கியங்கள்…புத்தகங்களில் வாக்கியங்களாக மட்டுமே இருக்கும்*😔😞😒😓

🤦🏻‍♀😰😡 *பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பார்த்த மாத்திரத்தில்*
*"போதும்டா சாமி காமெடினு இன்னும் எவ்வளவு கேவலமா போவீங்க", என கேட்கத் தோணுகிறது.*😡🤦🏻‍♀👊

🤦🏻‍♀😡👊 *'சிரிச்சா போச்சு' என்ற ஒரு பகுதி…அதில் நாட்டாமையாக வரும் ஒரு நபர், ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்தை விசாரிக்கிறார். அந்த நாட்டாமையும், அந்த காட்சியில் இடம் பெற்ற மற்றவரும் அந்த பலாத்காரத்தை பற்றி பேசும் கொச்சை பேச்சுக்களும், அதனை நகைச்சுவையாய் அளந்துவிடும் வசனங்களும்…இழிவின் உச்சம்....*
😡🤦🏻‍♀😰👊

🤔🤙 *"அப்ப என்ன சொல்ல வர…தமிழ் படங்கள்ல ஒரு காமெடி சீன் கூட வேலைக்கு ஆகாதுனா…?", என புருவத்தை உயர்த்துபவர்களுக்கு..*🤷🏻‍♀👇

🤷🏻‍♀😓🤨 *தமிழ் படங்களின் நகைச்சுவை காட்சிகளை தொடர்ந்து பார்ப்பதனால் மட்டுமே…இன்று இப்படி என் வருத்தங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்த முடிகிறது*😡🤦🏻‍♀😰😔

🤣😂🙌 *'சூப்பர் காமெடி' என கூறிய உடன், என் நினைவிற்கு வருபவை, காதலிக்க நேரமில்லை படத்தில், நாகேஷ் பாலய்யாவிற்கு சொல்லும் திகில் கதை, வாலி படத்தில் விவேக் passport புகைப்படம் எடுக்கும் சாக்குடன், ஒளிப்பட நிலையத்தின் வரவு செலவு கணக்குகளை கேட்கும் காட்சி, போக்கிரி படத்தில் வடிவேலு தன் கொண்டையினால் ஒவ்வொரு முறையும் மாட்டிக்கொள்ளும் தருணங்கள் …என நீண்ட பட்டியல் கூட உண்டு.*🙌🤷🏻‍♀🤷🏻‍♀🤷🏻‍♀

☠💀👻 *பேய் மீது உள்ள பயத்தை போக்கி சிரிக்க வைத்த பெருமையே தற்பொழுது சினிமாவை கூறலாம்..*🤣😂

🔴🔴📽 *எப்போது நாம் வேண்டாதவைகளை அகற்ற, அப்புறப்படுத்த நாம் முன் நிற்கிறோமோ அன்றுதான் நல்ல செயல்களை நம்மளை சுற்றி உருவாக வாய்ப்பு ஏற்படும்*👍👍🔴

📽🎥🔴 *திரைப்படம் என்பது '3 மணி நேர பொருளற்ற பொழுதுபோக்கே', என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வரும் போது, தரமான, நினைத்த மாத்திரத்தில் முகத்தில் ஒரு சிரிப்பை கொண்டு வரும் நகைச்சுவைக் காட்சிகள் உருவெடுக்கும்.*📽🎥🔴

📽🙌 🤣 *நகைச்சுவைப் படங்களுக்கு நம் தமிழ் மக்களிடையே எப்பொழுதுமே வரவேற்பு உண்டு.* 🤣🙌

📽🤦🏻‍♀👎 *கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவு நல்ல நகைச்சுவைப் படங்கள் எதுவும் வரவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், வெளியான ஒருசில நல்ல நகைச்சுவைப் படங்களும் மக்களை திரையரங்கிற்கு ஈர்க்கவில்லை என்பதே உண்மை. நம் மக்கள் நகைச்சுவைப் படப் பிரியர்கள்தான் என்றாலும் அவர்கள் நம்பி திரையரங்கிற்குச் செல்வதற்கு ஒரு நல்ல நகைச்சுவையாளர் தேவைப்படுகிறார். இன்றைய சூழலில் அப்படி யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.*👎👎😰

😰🤨😅 *நகைச்சுவை வறட்சி என நம்மை உணர வைப்பதற்கு தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியும் புது இயக்குநர்களின் வருகையும் கூட ஒரு முக்கியக் காரணம் என்றே கூறலாம். மேலும் இப்பொழுது வரும் நகைச்சுவைகள் வெறும் வசனங்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. வெறும் வசனங்களைத் தாண்டி, காட்சி அமைப்புகளும் நகைச்சுவையாளர்களின் உடல் மொழிகளுமே ஒரு நகைச்சுவையின் வெற்றிக்கு மிக முக்கியம். அது தற்பொழுது இருக்கும் நகைச்சுவையாளர்களிடம் மிகவும் குறைவு.*👎😰😒

📽🎥🤨 *இளம் இயக்குநர்கள் அயல்நாட்டுப் படங்களின்பால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் படங்களில் black comedy வகைகளையே பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற black comedy கள் பெரும்பாலும் திரையரங்கில் பார்ப்பவர்களை மட்டுமே சிரிக்க வைக்கும்.🤷🏻‍♀😔 அதுவும் ஒரே ஒரு முறை. நமக்கு ஆதி முதல் இன்றுவரை பழக்கப்பட்டதும் விரும்புவதும் உடல் மொழிகளை அதிகம் உபயோகிக்கும் Slapstick வகை நகைச்சுவைகளே.*😰😔

🎥📽💐 *நகைச்சுவைப் படங்களுக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே இன்று தடுமாறி நிற்கின்றனர். *😔😰😒

🎥📽😰 *சினிமா என்பது ஒரு கட்புலன் ஊடகம். ஒரு நொடியில் தோன்றி மறையும் ஒரு காட்சி, ஒவ்வொரு தனிமனித மனதிற்குள்ளும் ஏற்படுத்தும் விளைவு மிக பெரியது. இப்படியான நகைச்சுவைப் படங்களில் வரும் வசனங்களும், அதை ஒட்டி வரும் காட்சிகளும், சாதாரண ஒரு பார்வையாளனின் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள், விளைவுகள் உடனடியாக தெரியாது.*🙅🏻‍♀🙅🏻‍♀

🎥📽💴💵 *சினிமா வெறும் வியாபாரம் மட்டும்தானா?😡👊 எப்படியெல்லாம் பார்வையாளனை யோசிக்க விடாமல் செய்தால், நாம் வெற்றிபெறலாம், பார்வையாளனை முட்டாளாக்கி நாம் நமது பாக்கெட்டை நிரப்பிக் கொள்ளலாம் என்கிற சிந்தனை ஒன்று மட்டும்தான் சினிமாவில் இருப்பவர்களுக்கு இருக்கிறதா?*😡👊

😡👊😰 *அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் போதை தரும் வஸ்துவை விற்பதால், அதை எதிர்த்து போராடும் அத்தனை அமைப்புகளும், இப்படி சினிமாவை ஒரு வணிக லாபம் அடையக்கூடிய போதை வஸ்துவாக பார்க்ககூடிய சினிமா வியாபாரிகளை எதிர்த்து ஏன் போராடுவதில்லை?👊 இந்த சினிமா வியாபாரிகள் இப்படி மக்களை நகைச்சுவை, வெறும் பொழுதுபோக்கு என்கிற போதையின் பிடியில் இருந்து மீண்டுவிடாமல் தொடர்ச்சியாக அவர்களுக்கு அந்த போதையை கொடுத்துக் கொண்டே வெற்றி பெறுவது சரி என்றால், அரசின் டாஸ்மாக் மட்டும் எப்படி தவறாகும்?*🤨🤨🤨🤙

🙅🏻‍♀🤦🏻‍♀😰 *சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் செய்துகொண்டிருப்பது நகைச்சுவை அல்ல. அது ஒருவிதமான, சுயசொறிதல். ஒட்டுமொத்த சமூகத்தை முட்டாளாக்கி, தங்களை ஒருவிதமான புகழ்பெற்றவர்களாக காட்டத் துடிப்போரின் எதிர்வினை.*🤦🏻‍♀😰

📽🎥🤦🏻‍♀ *சினிமா எனும் ஊடகத்தை மொன்னையாக்கி, அதன் கலைத் தன்மையை தங்களின் வியாபார விருத்திக்காக மாற்றி பயன்படுத்திக் கொண்டு, மக்களை சிரிக்க வைக்கிறோம் என்கிற மாய வலையை போர்த்திக்கொண்டு இவர்களும், இவர்களை இயக்குபவர்களும் செய்வது சமூக சீர்கேடு. இவர்கள் மக்களை சிரிக்க வைக்கவில்லை. மாறாக மக்களை முட்டாளாக்குகிறார்கள். மக்களை முட்டாளாக்க அரசு இயந்திரங்கள் செய்யும் தந்திரத்திற்கு ஈடானது இவர்களின் சிரிக்க வைக்கும் தந்திரமும். ஒட்டுமொத்தமாகவே எதிரில் இருக்கும் அப்பாவிகள் வாழ்வதற்கே தகுதியில்லாதவர்களை போல் சித்தரிக்கும் இவர்கள் செய்வதுதான் நகைச்சுவையா?*😡👊🤨

🎥📽🤨 *பல படங்களில் சந்தானத்தின் நகைச்சுவை வெறும் வார்த்தை ஜாலங்களாக இருக்கும். அப்படியா, அவன் யாருகூட ஓடிட்டான்... ஆங்.. உங்க அக்கா கூட ஓடிட்டான்... இப்படி பல வசனங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.*😡🤦🏻‍♀

🙅🏻‍♀🤦🏻‍♀ *வெறும் வார்த்தைகளால் வடை சுடுவது அல்ல, நகைச்சுவை.*👊😡

📽🎥😰 *சினிமா இப்படிதான் இருக்க வேண்டும் என்றோ, நகைச்சுவை படங்கள் எல்லாம் இந்த சமூகத்திற்கு தேவையே இல்லை என்றெல்லாமோ  சொல்லவில்லை.🙅🏻‍♀🤷🏻‍♀ ஆனால் சினிமாவை வெறும் வணிக / கேளிக்கைக்கான இடமாக மட்டும் நினைத்துக் கொண்டு, எந்தவிதமான சமூக பொறுப்புணர்ச்சியும் இல்லாமல், யாரையும், எப்படியும் கலாய்த்து, எப்படியோ மக்களை சிரிக்க வைத்து, அவர்களை ஒட்டுமொத்தமாக இரண்டு மணி நேரம் மடையர்களாக இருக்கவைத்து, தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்ள நினைத்தால், அதை மட்டும் அனுமதிக்க முடியுமா.*😡🤙

📽🎥😰 *சினிமாவில் பணம் சம்பாதிப்பதை குற்றம்  சொல்லவில்லை.🙅🏻‍♀🤷🏻‍♀ ஆனால், சினிமாவை வெறும் பணம் சம்பாதிக்கும் களமாக மட்டும் பார்த்தால் அதைத் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது. 😡🤙தினக்கூலி வாங்கும் வெகு சாதாரண மனிதன் கூட ஒருபோதும், தனக்கு வேலையளிக்கும் முதலாளியை, துறையை வெறும் பணம் கொடுக்கும் இயந்திரமாக பார்க்க மாட்டான். ஆனால் சினிமாவில், புகழையும், பணத்தையும் சம்பாதித்துக் கொண்டு சினிமாவின் அடிப்படை கூட தெரியாமல், கடைசி வரை கத்திக் கொண்டிருப்பதே, பிறரை இழிவாகப் பேசிக்கொண்டிருப்பதே காமெடி என்று இவர்கள் நினைத்தால் அதை எப்படி ஏற்க முடியும்?*🤙😡😰

🙅🏻‍♀😰🤙 *இந்த நாடு ஒன்றும், முதலாம் உலக நாடு அல்ல, இங்கே கலை, அது இது என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது.🙅🏻‍♀ மக்களுக்கு பொழுதுபோக்கு சாதனம் ஒன்று வேண்டும், அதை சினிமாவில் அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள், என்று ஒரு கருத்தை அனைவரும் முன்வைப்பார்கள்.🤦🏻‍♀ இது அபத்தத்திலும், அபத்தம்.🤦🏻‍♀🤦🏻‍♀😰 முதலாம் உலக நாடுகளில் இப்படி கேளிக்கைகளை விரும்பினால் கூட சரி என்று விட்டுவிடலாம். அவர்கள் அடிப்படை வசதிகள் உட்பட எல்லாவற்றிலும் தன்னிறைவு அடைந்தவர்கள். அவர்களுக்கு கேளிக்கை தேவைப்படுவதில், அதை தங்களிடம் இருக்கும் பணம் கொண்டு நிறைவேற்றிக்கொள்வதை ஏதோ கொஞ்சம் அனுமதிக்கலாம்.😏 ஆனால் அதையும் சரி என்று சொல்லிவிடவில்லை.😏   இன்னமும் வளர வேண்டிய, தங்களின் அடிப்படைகளை அரசு இயந்திரங்கள் தின்றுக் கொழுத்துக் கொண்டிருக்கும் நாட்டில், தொடர்ச்சியாக மக்களை முட்டாள்களாக, சிரிக்க வைத்து, சிரிக்க வைத்து அவர்களின் பொழுதுகளை வீணாக்க சினிமா துணை புரிய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்?*
😡😰🤙
📽🌍 *உலக அளவில் இது எங்கள் ஊர் படம், இது எங்கள் நாட்டுப் படம் என்று நாம் மார்தட்டிக் கொள்ள ஏதாவது படங்கள் வெளிவருகிறதா?🤦🏻‍♀🤔 குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல, ஏதாவது ஒரு வகையிலான படம் வெற்றிபெற்றால், தொடர்ந்து அதையே டிரெண்ட் என்று சொல்லிக்கொண்டு, அப்படியான படங்களையே தயாரித்தும், இயக்கிக் கொண்டும், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*😡👊

📽🎥🤣 🔴 _*நகைச்சுவை என்பதை கூட வெறுமனே எந்தவித உள்ளர்த்தங்களும் இல்லாத, சமூகத்திற்கு கேடு விளைவிக்காத நகைச்சுவை என்றால் அதில் யாருக்கும், எவ்வித பிரச்சினையும் இல்லை.🙅🏻‍♀🙅🏻‍♀🤷🏻‍♀ ஆனால் தொடர்ச்சியாக இப்போது நகைச்சுவை என்கிற போர்வையைப் போர்த்திக் கொண்டு வெளிவரும் படங்கள், மறைமுகமாக திணிக்கும், மக்கள் முன்வைக்கும் கருத்துகள் மிக மோசமாக இருக்கின்றன.*_🤦🏻‍♀😡👊

🎥😰😡 *தொடர்ச்சியாக, நடுத்தர வர்க்கத்தின் கதை மாந்தர்களையே பெரும்பாலான படங்களில் கதாபாத்திரங்களாக வடிவமைக்கிறார்கள். ஆனால் எந்த படத்திலாவது நடுத்தர வர்க்கத்தின் அன்றாட பிரச்சினைகளை ஒரு இடத்திலாவது பதிவு செய்திருக்கிறார்களா?*🤨🤙

🤦🏻‍♀😡👊 *இளைஞர்கள் விரும்புவார்கள்,ரசிப்பார்கள் என்பதற்காகவே எதையும்,எப்படி பட்ட காட்சிகளையும் சர்வ சாதாரணமாக காட்சிப்படுத்தி, பணம் சம்பாதித்து அதை எங்கே வைத்து, என்ன செய்வீர்கள்? நீங்கள் விதைக்கும் நஞ்சு, உங்கள் சந்ததிக்கும் சேர்த்தேதான் அறுவடை செய்யப்படும் என்பதை மறவாதீர்கள்.*😡🙅🏻‍♀👊

🔴 🤦🏻‍♀🍾 _*இன்றைய கால நகைச்சுவை பெருமளவு   டாஸ்மார்க்கிலும்,மதுபானத்தை அருந்தியவண்ணமே எடுக்கப்பட்டு அதையும் ரசிக்கபடுகிறது.இதை அன்றாடம் காணுவதால் என்னவோ அதன் வலி கூட கேலிக்கயாகிறது..இதை போல வருத்தப்படவேண்டிய திருத்தப்படவேண்டிய விஷயங்கள் எல்லாம்  தற்பொழுதைய  நகைச்சுவை என்று நம்பபட்டு நம்மை திருந்தவழி செய்யாமல்  செய்துவருகிறது*_🤦🏻‍♀🔴

😡👊🤦🏻‍♀ _*இன்றைய நகைச்சுவையில் எந்த இடத்திலாவது சமகால கல்வி / நடுத்தர வர்க்க பொருளாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு   இருக்கிறதா? சமகால பிரச்சினைகளை பதிவு செய்யாமல் போனாலும் போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம், படிக்கும் பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என்கிற வரைமுறையாவது இருக்கிறதா? பள்ளியில் படிக்கும் அத்தனை சிறுவர்களும், சிறுமிகளும் இவர்கள் காதலுக்கு தூது போகும், தூதுவர்களாகத்தான் இருக்கிறார்கள்....இளம் வயதிலேயே காதலுக்கு அடி போடுபவர்களாகவும் சித்தரிக்க பட்டு அதை நகைச்சுவை என்றும் ரசித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் மூளை மழுங்கிய மனிதர்களாக நம்மை மாற்றி உள்ளதான் பெருமை திரை துறையையே சாரும்.*_🤦🏻‍♀😡👊

🎥👫👭👬 _*இன்றைய இளைஞர்களை எதிர் நோக்கி தான் நம் நாடு பயணிக்கிறது. ஒரு சமூகம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறதா என்பதை நிரூபிக்க இளைஞர்களின் செயல்பாடுகளே காரணமாக இருக்கிறது. ஆனால் இன்று இளைஞர்களை வழிகெடுக்கும் வகையில் சில சினிமாக்கள் உள்ளது. இன்று நகைச்சுவை என்றாலே இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசுவது போல் ஆகிவிட்டது.மக்களை சிரிக்க வைக்கும் என்ற தரமற்ற எண்ணத்துடன் மட்டுமே காட்சிகளை எடுக்க செய்கிறார்களே தவிர சிந்திக்க வைப்பதும் இல்லை சிந்திக்க வைக்க மறக்கவும் செய்கிறார்கள் என்றே  தோன்றுகிறது.*_🎥🤦🏻‍♀😒😓😔

🔴😡👊 _*இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் அதாவது பெற்ற தந்தையையே மகன் திட்டுவது, ஒருமையில் அழைப்பது,தெய்வமாக பாவிக்க வேண்டிய ஆசிரியர்களை கிண்டல் செய்வது,அவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி சக மாணவர்கள் மத்தியில் அழைப்பது,பிறரின் உடலாமைப்புகளை கேலிசெய்வது,அடுத்தவர் மனைவி,கணவன் என்று உறவுகளை*_  _*கேவலப்படுத்தியும்,பிறர் மதத்தை நம்பிக்கையை கேலி பேசியும்*_
_*திருநங்கைகளையும் நகைச்சுவை பொருளாக்கி வக்கிரத்தை விதைப்பது....*_
_*இதுதான் இன்றைய திரைப்படங்களின் நகைச்சுவை.😡👊நகைச்சுவை என்றால் இப்படித்தான் அதாவது பிறரை துன்புறுத்தி,கேலி செய்வதுதான் என்ற நிலைக்கு இன்று மக்கள் வந்துவிட்டனர்.*_😡👊😰🔴

😡👊 *நகைச்சுவை என்கிற பெயரில் வக்கிர விதைகளை தூவி வயிறு வளர்க்கும் நகைச்சுவை நடிகர் ஒருவர் இன்றைய நிலையில் தென்னிந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என்கிற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்..??*😡👊

*எங்கே போகிறோம் நாம்???*😡👊

😰😓😔 *நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களை சொல்லி சிந்திக்க தூண்டிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் சிலர் வறுமையிலேயே உழன்று வறுமையிலேயே மறைந்தார்கள்.*😔😰😓🤦🏻‍♀

🔴😍👌 _*தமிழ் சினிமா உலகில் நகைசுவைக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு,பிறர் மனதை ப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாண்ட அற்புதக்கலைஞன் திரு. என்.எஸ்.கே. ஆவார்.*_😍👌🔴

🎶🎵🎵👌 _*"""சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு""*_🎵🎶🎶

🎶🎵 _*என்ற பாடல் ஒன்றே அவரது சீரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.*_😍👌

🔴😍💐 _*தமிழில் மட்டும் அல்ல,இந்தியாவிலேயே நகைச்சுவை நடிகராக விளங்கிய ""தமிழ்நாட்டு சாப்ளின்""" என்று அழைக்கப்பட்டவர் திரு.என்.எஸ்.கே.*_😇💐😍🔴

👉 *ஆனால் அதற்கு அவர்*👇👇👇

🔴😇 _*என்னை சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளின் என்று சொல்கிறார்கள்.ஆனால் சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாகமாட்டேன் என்றார் அடக்கத்துடன்.*_🙏💐😇🔴

🔴😇💐 _*ஆனால் உண்மையில் என்.எஸ்.கே அதற்கு தகுதியானவர் தான்.சார்லி சாப்ளின் போல,சிரிப்புடன் சிந்தனையையுயும் கலந்து கொடுத்த பெருமைக்குரியவராவார்.*_😇💐

🔴😔😰 _*ஆனால் இவர்களை போன்றோர்களை எல்லாம் இன்றைய தலைமுறையினர் மறந்தாலும்...என்றும் இவர்கள் நினைவுகளும்,புகழும் அழியாவே அழியாத வண்ணம் முத்திரை பதித்துஉள்ளனர்...💐🙏இவர்கள் இடத்திற்கு வரும் அளவுகூட வேண்டாம்...நகைச்சுவை என்ற பெயரில் அதன் பொருளையே மாற்றி அமைக்காமல் இருந்தால் போதும்.*_😰😔😓🔴

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்🎉*
          🏅🏆  *குட்டிராஜேஷ்*  🏆🏅

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🏅  *@⁨SP.Vignesh⁩*
*@⁨ப்ரியா யுவராஜ்👨‍👩‍👧⁩*

 🏅 *@⁨Sridevi 🌈* *@⁨ஜெய்கணேஷ்.⁩*

🏅 *Niruban kathir& srini*


👑 *கலந்துரையாடல்2⃣*👑

🏅  *@⁨sriramkrm⁩ &* *@⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩* 

🏅  *@ஜெயில் பறவை &*
*@⁨அ. கந்தன்⁩* 

🏅 *@⁨இசையருவி⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

🤣  *சிரிப்பு என்பது சிந்தனையை தூண்ட வேண்டும்*👍

😅 *சிரிப்பு என்பது சிந்தனையை மழுங்க செய்ய கூடாது*🙅🏻‍♀👎
*சிரிப்பு யாரையும் புண்படுத்த கூடாது*🙅🏻‍♀👎

🤣 *சிரிப்பு எல்லாரையும் பண்படுத்தனும்* 👍💐

😅😰 *புண்படுத்தும் சிரிப்பை யாரும் உருவாக்க முடியும்* 

🤣😇 *பண்படுத்தும் சிரிப்பை எல்லாராலும் உருவாக்க இயலாது* 

😅 *சிரிப்பை மட்டும் வைத்து நான் கடைவிரிக்க முடியாது*🙅🏻‍♀

😇 *சிரிப்புடன் கூடிய சிந்தனையை வைக்க வேண்டும்* 👍💐

😓😰 *வறட்டு சிந்தனைகள் வலம் வரும் போது* 
*வறுமை போக்க சிரிப்பு சிறிதே தேவைப்படும்*🤣👍

🤷🏻‍♀ *உணவு என்பது சிந்தனை எனில்* 
*சிரிப்பு என்பது சிறு இனிப்புதான்*😇💐

🤷🏻‍♀ *இனிப்பே உணவாக இயலாது*

🤷🏻‍♀ *சிரிப்பும் அப்படித்தான்*
*கலைகளில் சிரிப்பு முதல் கலையாம்.*
*முறைகளில் அதுவே நுண்ணியதாம்* 
*சிரிக்க வையுங்கள்....!!!* *கூடவே  சிந்திக்க வையுங்கள்..!!!* 🤣😇💐👍

💐 *நன்றி வணக்கம்*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று*
*பண்பின் தலைப்பிரியாச் சொல்*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆   
                   
*நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🤣 *அறிந்துகொள்ளவும்*🤣

*காற்றுள்ள போதே தூங்கிவிடு, கரண்ட் போனா தூக்கம் வராது.*

*சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை.*

*பழகின செருப்பு காலை கடிக்காது*

🤣 *புரிந்துகொள்ளவும்*🤣

*தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்.*

*கார் ஓட டயரும் தேயும்.*

*முடியுள்ள போதே சீவிக்கொள்*

🤣 *தெரிந்துகொள்ளவும்*🤣

*ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫
      
                     👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈
       
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴🏻

  😎 *சங்கிலி பூதத்தான்* *8925553996*😎


😎 *விக்ரம்(காளையன் அரசு)-8072020151*😎


👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...