Friday, 16 March 2018

நுகர்வோர் உரிமை (Consumer Rights) பற்றி ஓர் பார்வை.


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👁 *_விழிப்புணர்ச்சி_*
  *_குழுமத்தின்_*​​©👁

        🥁 *_விழிப்புணர்ச்சிக்காக_* 🥁 
            🎉 *_தொடங்கும்_*🎉
             📯 *_முடிவுரை._* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *_கலந்துரையாடல் குழு:_* 🤛
__________________________________
         🌹 *_தேதி :15.03.2018_* 🌹                  🌷 *_கிழமை :வியாழன் _* 🌷    
____________________________________
🌱 *_அறிவோம்:_* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால் சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும்.*
🌱 *ரிச்சர்ட் சாண்டர்ஸ்.*💐🌳

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🌱 *_நிர்வாகிகள் எண்ணம்:_* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

🔺 *முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்*🔻
       
          👨🏻‍⚖ *_தலைப்பு:_*👩🏻‍⚖
      ============================
*நுகர்வோர் உரிமை (Consumer Rights)  பற்றி  ஓர் பார்வை.*
============================

🙆🏻‍♂ *ஏமாறுபவர்கள் இருக்கிறவரை இந்த உலகம் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கும்.🙇🏻‍♂ இயந்திரமயமான இன்றைய உலகில்... நாம் ஏதாவது ஒரு வகையில் தெரிந்தோ தெரியமாலோ ஏமாற்றப்படுகிறோம்.*🙆🏻‍♂
*ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக தான் நுகர்வோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.*👁‍🗨⚖

🤝 *நுகர்வோராக இருக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் உலக நுகர்வோர் தின நல்வாழ்த்துக்கள்.*💐🤝

🔭 *என்ன நுகர்வோர் தினமா அப்படியென்றால்🤔*

🔰 *பொருட்களையோ அல்லது நமக்கு தேவையான சேவையோ பெரும் அனைவரும் நுகர்வோரே👥 (Consumers).*

🤩 *தள்ளுபடி (Offer) என்றால் போதும் எப்படியாவது வாங்கிட வேண்டுமென  மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.*🤩

*% தள்ளுபடியில் வாங்கும் பொருள் நமக்குத் தேவையா? இல்லையா? ⁉என்று சிந்திப்பது கூட இல்லை.*👎

*% ⬇குறைந்த விலை, தள்ளுபடி, இலவசம் என்னும் மாயையில் மயங்குவதால் பொருட்களின் தரத்தில் ஏமாற்றத்தை சந்திக்கின்றனர்.*🤢🙆🏻‍♂

🙆🏻‍♂ *ஏமாற்று வியாபாரிகளிடம் ஏமாந்துவிடக்கூடாது  என்பதற்காக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர்  பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் நாளில் நடைபெற்றது.ஆதலால் 1963ம் ஆண்டு முதல்  ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுசரிக்கப்படுகிறது.*👁‍🗨⚖

🌍👁‍🗨⚖ *இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ல் இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.*✅

 👥👁‍🗨⚖ *நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு மார்ச் 5, 2004ல் அமலுக்கு வந்தது.*🛡

👁‍🗨⚖🛡 *இச்சட்டத்தில் நுகர்வோர்களுக்கு எட்டு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை:*⚖👁‍🗨🛡

*1⃣பாதுகாப்பு உரிமை.*
*2⃣தகவல் பெறும் உரிமை.*
*3⃣தேர்வு செய்யும் உரிமை.*
*4⃣முறையீட்டு உரிமை.*
*5⃣குறைதீர்க்கும் உரிமை.*
*6⃣நுகர்வோர் கல்வி பெறும் உரிமை.*
*7⃣தூய்மையான சுற்றுப்புறச் சூழலைப் பெறுவதற்கான உரிமை.*
*8⃣அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை.*

👨🏻‍⚖ *_நுகர்வோர் நீதிமன்றங்கள் (Consumer Court):_*👩🏻‍⚖ 

 👉 *மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்(நஷ்டஈடு 20லட்சம் வரை).* 

👉 *மாநில ஆணையம்(நஷ்டஈடு 20லட்சம் முதல் 1கோடி வரை).*

👉 *தேசிய ஆணையம்.(     நஷ்டஈடு  1கோடி மேல்).*

👁‍🗨⚖🛡 *தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகளின் மேல்முறையீடுகள் இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட வேண்டும்.*

✅ *_வழக்கு தொடர தேவையான தகுதிகள்:_*✅

*👉வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும்*

*👉வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.*

*👉நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.*

 *👉புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.*

*👉பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.*

🧐🤔 *_யார் மீது வழக்கு தொடர முடியும்:_*⚖👨🏻‍⚖

*👉நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.*

*👉பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.*

🚨 *_வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:_*🚨

*👉பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.*

*👉விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.*

*👉தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.*

*👉எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும்.*
*👉சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும்.*

💴💶 *_கட்டணம் நிர்ணயம்:_* 📌👁‍🗨⚖

*♻1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = ரூ. 100.*
*♻1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = ரூ.200.*
*♻5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = ரூ.400.*
*♻10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = ரூ.500.*

👁‍🗨⚖🛡 *நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தல்*🧐🤨

👇👇👇👇👇👇👇👇👇👇👇

⁉ *ஏன் புகார் செய்யவேண்டும்*⁉

🌍👁‍🗨⚖ *இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நுகர்வோர் தங்களுக்கு இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் பொருத்துக் கொள்ள வேண்டிய அவல நிலையில் இருந்தோம். 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நாம் வாங்கிய பொருளில் குறையோ, அல்லது சேவையில் குறைபாடோ இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம்.இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் செய்வதினால் நாமும் இழந்த நஷ்டத்தை அபாராதத்துடன் பெற முடியும். இது போல் மற்ற நுகர்வோருக்கு நஷ்டம் நேரிடுவதை தவிர்க்கலாம். இதன் மூலம் அனைவருக்கும் தரமான பொருள் – சேவை அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படும்.*🛡👁‍🗨⚖

⁉🤔 *யார் புகார் செய்யலாம்*⁉

👥🧐 *ஒரு பொருளை அல்லது சேவையைத் தன்னுடைய உபயோகத்திற்காக அல்லது பயனுக்காக பணம் கொடுத்து வாங்குபவர்/பெறுபவர் மட்டுமே நுகர்வோர் ஆவர். இவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யலாம்.*🏫🧐⚖

⁉🤔 *எப்போது புகார் செய்யலாம்*⁉

🧐🎯 *• ஒரு வியாபாரி கடைப்பிடித்த, முறைகெட்ட வர்த்தகச் செயலால் உங்களுக்கு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட்டிருந்தால்,*📌

🎯 *• நீங்கள் பெற்றுக் கொண்ட சேவையில் எந்த விதத்திலாவது குறைபாடு இருந்தால்,*📌

🎯 *• நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிகளின்படி தீர்மானிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட விலையைவிட அதிகமான விலை உங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருந்தால்,*📌

🎯 *• உபயோகப்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்புக்கோ அல்லது உயிருக்கோ ஆபத்து விலைவிக்கக்கூடிய பொருளை நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தின் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு விற்கப்படுகிறதென்றால்,*📌

🎯 *• மேற்கண்ட காரணங்களுக்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி புகாரை பதிவு செய்யலாம்.*👁‍🗨⚖✅👍

🧐⚖ *புகார் செய்வது எப்படி*⁉🤔

🔰 *• உங்கள் புகாருக்கு உரிய இழப்பீடு – நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் சரியான முறைகளைப் பின்பற்றிப் புகார் செய்வது நல்லது.*⚠

🔰 *• புகார் செய்யவேண்டிய அளவுக்கு நியாமான குறையோ அல்லது இழப்போ உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் முதலில் எதிர் தரப்பிற்கு (நீங்கள் யாருக்கு எதிராகப் புகார் செய்ய இருக்கிறீர்களோ அவர் அவர் எதிர்த்தரப்பு என்று குறிப்பிடப்படுவர்) எழுத்து மூலம் ஒரு கடிதம் எழுதி, நீங்கள் அவரிடமிருந்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் உங்கள் குறையை விவராமகத் தெரிவித்து அதற்கு நீங்கள் விரும்பும் பரிகாரம் என்ன என்பதையும் தெரிவிக்கவேண்டும். அக்கடிதம் அவரை அடைந்ததற்கான அத்தாட்சி தேவை (பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும் அல்லது நகலில் அவர் கையெழுத்து பெறவேண்டும்)*⚠

🔰 *• உங்கள் புகார் சம்மந்தப்பட்ட எல்லாத் தகவல்களையும் மற்றும் ஆதாரங்களையும் ஒன்றாய் திரட்டுங்கள். ஆதாரங்கள் என்று நீங்கள் பொருளை வாங்கியதை உறுதி செய்யும் பில் அல்லது ரசீது பொருளின் தன்மைப் பற்றி விளக்கி வெளியிடப்பட்ட விளம்பரத்தாள் அல்லது புத்தகம். முன் மதிப்பீடு, கொட்டேஷன் போன்றவையாகும்.*⚠

🔰 *• முடிந்தவரை விரைவாக புகார் செய்யுங்கள். உங்கள் கடிதத்தில் எதிர்தரப்பு செயல்படுவதற்கு நியாயமான கால அவகாசம் (சுமார் 15 நாட்கள்) கொடுங்கள்*⚠

🔰 *• எல்லா ஒரிஜினல் ஆவணங்களையும் (Originial Bills, Receipts, Brochures etc.,) நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அவற்றை நீதிமன்றம் சொன்னாலொழிய வேறு எவரிடமும் கொடுக்காதீர்கள்.🙅🏻‍♂🙅🏻‍♂ தேவைப்படும் போதெல்லாம் ஜெராக்ஸ்(Xerox) எடுத்தே பயன்படுத்துங்கள்.*⚠

🧐⚖ *புகார் செய்வதற்கான காலவரையறை*🕰⏰

🕰🔎 🏷 *நீங்கள் ஆதாரமாக குறிப்பிடும் எதிர்த்தரப்பின் குற்றத்தை ஒப்புக்கொண்ட கடிதம் நோட்டிஸ் பில், ரசீது போன்றவற்றில் எது தேதிவாரியாக கடைசியில் வருகிறதோ, அதனுடைய தேதியிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் புகாரைப் பதிவு செய்யவேண்டும். புகாரை பதிவு செய்வதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. பிரமாண வாக்குமூலம் கூட ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டியதில்லை. புகாரை நுகர்வோரோ அல்லது பிரதிநிதியோ கொடுக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.*📩📮

👁‍🗨⚖🛡 *இச்சட்டப்படி பெறக்கூடிய நிவாரணங்கள் என்ன?*🤙

👁‍🗨⚖🛡 *நுகர்வோர் நீதிமன்றங்கள் கீழ்கண்ட நிவாரணங்களை வழங்கி உத்தரவிடலாம்.*👍✅

✅ *(1) விற்கப்பட்ட பொருளில் உள்ள குறைகளை அகற்றுதல்*👍
✅ *(2) மாற்றுப் பொருள் தருதல்*👍
✅ *(3) பொருளின் விலையை வட்டியுடன் திருப்பித் தருதல்*👍
✅ *(4) ஏற்பட்ட கஷ்டத்துக்கும் நஷ்ட்டத்துக்கும் ஈடு செய்தல்*👍
✅ *(5) சேவையில் காணப்பட்ட குறைபாடுகளை அகற்றுதல்*👍
✅ *(6) முறைகெட்ட/தடை செய்யும் வர்த்தக செயல்களைத் தடுத்தல் மற்றும் மேலும் தொடராதிருக்க உத்தரவிட*👍
✅ *(7) ஆபத்தான பொருட்களின் விற்பனையை நிறுத்துதல்*👍
✅ *(8) போதுமான செலவுத் தொகை வழங்கி உத்தரவிடல்.*👍

🧐⏱⚖ *மேல் முறையீடு செய்வதற்கான கால வரையறைகள்*⏱

⚖🕰 *(1) மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தீர்ப்பை பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.*⏱
⚖🕰 *(2) மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும்.*⏱
⚖🕰 *(3) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.*⏱

🧐📄📑 *புகாரை பதிவு செய்யும் முறை.*🕹

📄🕹 *முதல் கட்டம்:- எதிர் தரப்புக்கு நோட்டிஸ் அனுப்பவேண்டும்.*🕹
📄🕹 *2ஆம் கட்டம்:- புகாரை அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.*🕹
📄🕹 *3-ஆம் கட்டம்:- பிரமாண வாக்கு மூலம் அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து அனுப்பிய நோட்டிஸ், பில், ரசீது நகல்களோடு நுகர்வோர் நீதிமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும்.*🕹
📄🕹 *4-ஆம் கட்டம்:- தீர்ப்பு வழங்கப்பட்ட பின் எதிர்தரப்பு தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறினால், அதற்குண்டான விண்ணப்பத்தை தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.*🕹
📄🕹 *5-ஆம் கட்டம்:- தீர்ப்பு உங்களுக்கு நிறைவளிக்காவிட்டால், நியாயம் மறுக்கப்பட்டதென்று கருதினால் அதற்குண்டான படிவத்தின்படி மேல்முறையீடு செய்யலாம்.*🧐🏷

🧐📑 *புகாரில் கொடுக்கப்பட வேண்டிய விவரங்கள்*👇

👉 *(1) புகார் செய்பவரின் பெயரும், முழுவிலாசமும்,*📑
👉 *(2) எதிர் தரப்பினர் பெயரும், முழு விலாசமும்,*📑
👉 *(3) பொருளை வாங்கிய அல்லது சேவையைப் பெற்ற தேதி, அதற்காக கொடுக்கப்பட்ட தொகை/விலை,*📑
👉 *(4) வாங்கிய பொருளின் பெயர், செயல் அல்லது பயன், அளவு போன்ற விவரங்கள்,*📑
👉 *(5) முறையில்லா வர்த்தகர் செயலைப் பற்றியோ, குறையுள்ள பொருளைப் பற்றியோ, சேவையில் குறைபாடு பற்றியோ அல்லது அதிக விலை வசூலிக்கப்பட்டது குறித்தோ அல்லது வேறு எதற்காக என்ற விவரம்,*📑
👉 *(6) பில்கள், ரசீதுகள், வவுச்சர்கள், கடிதங்கள் போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டுளளதா என்ற விவரம்,*📑
👉 *(7) செயல்படுத்தும் விண்ணப்பங்களில் (Executive Petition Documents) எதிர் தரப்பின் பெயர்கள் கொடுக்கப்படவேண்டும்.*📑

⛔ *எதிர்த்தரப்புக்கு அனுப்பப்பட வேண்டிய நோட்டிஸின் மாதிரி படிவம்:-*📄

🛑 *(இது நுகர்வோர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான முதல் செயலாகும். இந்த நோட்டிஸ் எதிர்தரப்புக்கு உங்களால் பதிவுத் தபாலில் அனுப்பப்படவேண்டும்)*
👤 *அனுப்புனர்:- உங்கள் பெயரும், முகவரியும் தேதி……..*
👤 *பெறுனர்:- எதிர்தரப்பினரின் பெயரும் முகவரியும்.*
*ஐயா,*
🔎 *பார்வை:………………* *பெற்றதற்கு உங்கள்……………….. தேதியிட்ட பில் எண்………………*
👉 *(1) எனக்கு ……………..பொருள்/சேவை அளித்தீர்கள், அதில் உள்ள குறைபாடுகளை இதன் கீழ் கொடுக்கிறேன் (விவரமாக எழுதவும்)*🔎
👉 *(2) ஏற்கனவே நீங்கள் ஏதேனும் அவருக்கு கடிதம் எழுதியிருந்தால் அதை நினைவுப்படுத்தவும்.*🤔
👉 *(3) (அவர்கள் 15 நாட்களுக்குள்) குறையைச் சரிசெய்ய வேண்டும் அல்லது புதிய பொருள் கொடுக்கவேண்டும்,* *அல்லது அதன் விலையைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அப்படி அவர்கள் செய்யத் தவறினால் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய உள்ளேன் என்பதையும் தெரிவிக்கவும்.*📩📨✅

👤 *இப்படிக்கு*

*உங்கள் கையொப்பம்.*✍👤

🔴🔥 *கோலி சோடா குழு*🔥
©👁 *விழிப்புணர்ச்சி குழுமம்*🤝

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *_சிறந்த கருத்தாளர்கள்:_*👑

*_கலந்துரையாடல்~1_*
*🥇@⁨ப்ரியா யுவராஜ்👨‍👩‍👧⁩, @⁨Karthi VS⁩*

*🥈@⁨⁨SP Vignesh⁩⁩, @⁨க நிருபன்கதிர்⁩* 

*🥉@⁨Jaiganesh⁩, @⁨ஞாலமைந்தன்⁩*


*_கலந்துரையாடல்~2_*

*🥇@⁨sriramkrm⁩⁩*

*🥈@⁨பாலசுப்பிரமணியன் ⁩⁩, @⁨All Is Well⁩⁩, @⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩*

*🥉@⁨எழில்மணி⁩*


🕴 *_சிறந்த அட்மின்:_*🕴

*👑 அருள் முருக இன்பன்*
*_( வழக்கறிஞர் )_* 
   
🤷‍♂ *_கருத்து:_*  🤷‍♀                              
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*🙆‍♂தேவையில்லா குப்பைகளை வாங்கி குவிப்பதை விடுத்து*🙆‍♀ 

🤷‍♂ *முடிந்தளவு பொருட்களை தேவையான அளவு பார்த்துவாங்குகள்.வாங்கிய பொருளிளோ அல்லது சேவையிலோ திருப்தியில்லாத போது இனியாவது யாரு நீதிமன்றத்திற்கு லோ லோயென அலைவதுயென நினைக்காது நீதியின் கதவினை தட்டுங்கள்,கதவுகள் திறக்கப்படும்.*🤷‍♀

👶 *ஏனெனில் அழுகிற குழந்தைக்கு தான் 🍼பால்முதலில் கிடைக்கும்.*

 📜 *_திருக்குறள்:_* 📜
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
          *வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்*
*பிறவும் தமபோல் செயின்*  

📜 *_விளக்கம்:_* 📜     
       
*வணிகத்திற்கு உரிய இலக்கணத்தை கடைப்பிடித்துப் பிறர் பொருளையும் தம் பொருள் போல மதித்து வணிகம் செய்வார் வணிகம், பெருகும்; பணப்பயனும் பெருகும்.*

📝 *_பழமொழி :_* 📝

*👴🏻காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்👵🏻.* 

*👴🏻கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.👵🏻*

*👴🏻நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.👵🏻*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *_முடிவுரை  தொகுப்பாளர்:_*

 🌱🌏 *_கனகராஜ்.வே_*🌏 🌳
🌱🌏 *_9047493815_*🌏 🌳

🕴 *_விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:_* 🕴
😎 *_ஜாஹீர் ஷாஹ்_*
        *_78450 32987_* 📲

😎 *கார்த்திக் ராஜ்பவன்.*
 *_8072 908 455_* 📲
                                                              
😎 *_அருள் முருக இன்பன்-8668196093_*
*_( வழக்கறிஞர் )_* 

*​​© _Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்​​_*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...