🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்ச்சி காக*🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :வியாழன்*🌹
🌹 *தேதி :18.01.2018* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
👍 *"எந்த மனிதனுக்கும் தன் உயிரை தானே எடுத்துக் கொள்வதற்கு உரிமையில்லை''*
💐 *பிளாட்டோ* 💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
😇 *முள் குத்தினாலே கத்தும் நாம், டாக்டர் ஊசி போடும்போது மட்டும் தாங்கிக்குவோம்.*
*வலி என்னவோ ஒண்ணுதான்.*
💖 *ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டால் வலிகளும், வேதனைகளும், ஒன்றுதான்...*
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
📣 *தலைப்பு*📣
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
*கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் திடிர் தற்கொலைக்கு யார், யார் காரணம்? 👁ஓர் சிறப்பு பார்வை 👁*
👩🏻🎓👨🏻🎓🧐🤨😰😥😓😔🧐👩🏻🎓👨🏻🎓
😶 *""""மிகவும் தனிப்பட்ட விஷயம், புரிந்துகொள்ளவே முடியாதது, பயங்கர கலக்கம் என தற்கொலை செய்துகொள்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது."""*😶
🙇🏻♀🤦🏻♀👊 *உயிரை மாய்த்துக்கொள்ளும் பலர் உண்மையில் சாக விரும்புவதில்லை,🙅🏻♀ ஆனால் "நடக்கிற எந்த விஷயத்திற்கும் ஒரு முடிவு கட்டவே" விரும்புகிறார்கள். தற்கொலைக்கு முன்பு எழுதி வைக்கப்படும் கடிதங்களில் மிகவும் பொதுவாக காணப்படும் வார்த்தைகள் இதைத்தான் மறைமுகமாக தெரிவிக்கின்றன.🤷🏻♀ 'இனிமேல் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியாது' அல்லது 'நான் எதுக்காக இனியும் வாழணும்?'⁉ போன்ற வார்த்தைகள், வாழ்க்கையின் வேதனைமிக்க நிஜங்களை விட்டு ஓடவே அவர்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள் என்பதை காட்டுகின்றன.🤦🏻♀🙇🏻♀ ஆனால் தற்கொலை செய்துகொள்வது, "ஜலதோஷத்திற்கு அணுகுண்டை மருந்தாக பயன்படுத்துவதைப் போல" இருக்கிறது.*🤦🏻♀🙇🏻♀🤷🏻♀
🤷🏻♀ *இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை.😇 சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு.🤷🏻♀ ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று,🤷🏻♀ அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.*🤷🏻♀
🤷🏻♀ 🤭 *பல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியை தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக் கிடங்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது.🤷🏻♀ 😱 அன்றாடம் பத்திரிக்கைளை புரட்டினால் இளம்பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காதலினால் தற்கொலை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை, பரிட்சையில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவ-மாணவி தற்கொலை... 😳😨என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது. இந்திய சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய் நிகழ்கின்றன.*😔
🧐 *உலக தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு பத்தில் ஒரு பங்கு ஆகும் (1/10). இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்த தற்கொலை இறப்புக்கள் விலைவாசி போல் ஏறிக்கொண்டேதான் போகின்றன.*🧐😨😱
🤔😰 *ஏன் இந்த கோழைத்தனம்?⁉ உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா?⁉ இவர்கள் நினைக்கின்றார்கள் பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது.😏 உலகிலேயே யாருக்கும் வராத தர்ம சங்கடம் ஏன் தனது வாழ்க்கையில் வந்துவிட்டது என்று மனம் உடைந்துதான் இத்தகைய முடிவை எடுக்கின்றார்கள்.🤦🏻♀ பிரச்சினைக்கு தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது🙅🏻♀🤦🏻♀ ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது, இருக்கும். 🤷🏻♀ஏழைக்கு பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை. சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சினை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள், இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டவனாகவே வாழ்கின்றனர்.🤷🏻♀ இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 👍ஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு முழவதும் ஏன் ! உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.*🤷🏻♀👍
👉 🧑🏻 *ஆண்களைவிட 👩🏻பெண்களில் இரண்டு முதல் மூன்று மடங்கானோர் தற்கொலை முயற்சி செய்யும் சாத்தியம் இருந்தாலும், வெற்றிபெறும் சாத்தியமோ ஆண்களில் நான்கு மடங்கு அதிகம் என ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.🤷🏻♀ ஆண்களைவிட பெண்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர், இதுவே அதிகளவான பெண்கள் தற்கொலை முயற்சி செய்வதற்குக் காரணமாக இருக்கலாம். இருந்தாலும், அவர்களுடைய மனச்சோர்வு வியாதி அதிக தீவிரமின்றி இருக்கலாம், ஆகவே அவர்கள் அதிக தீவிரமல்லாத முறைகளை நாடலாம். மறுபட்சத்தில் ஆண்களோ தற்கொலை முயற்சியில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த அதிக தீவிரமான, திட்டமான முறைகளை பின்பற்ற மனமுள்ளவர்களாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.*🧐
🎓 *கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் திடிர் தற்கொலைக்கு யார் யார் காரணம்?*🧐⁉
👨👩👧👦 *பெற்றோர்கள்*👨👩👧👦
🧑🏻👩🏻 தன் பிள்ளைகளை மிகுந்த கட்டுப்பாடுகளுடனும், அதே சமயம் சுதந்திரமாக தன்னுடன் பேசும் மனநிலையயும் பக்குவப்படுத்தி வளர்க்க வேண்டியது, ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.👍 மாணவர்கள் படிக்கும் வயதில் எப்போதும் பெற்றோர்களுடன் இருப்பதே மிகச் சிறப்பு. சூழ்நிலை காரணமாக ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படுவது உண்டு. ஒன்றை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோரை பிரிந்து இருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சகஜமாக பேசாத மாணவர்களே அதிக மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். சில விசயங்களை பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுத்தும், சில விசயங்களை அன்பான முறையில் எடுத்துச் சொல்லியும், தன் கஷ்டங்களையும் பிள்ளைகளுடன் பகிர்ந்து வாழ்ந்தால் நலமாக இருக்கும்.😇
💑 *காதல்*💑
👊 காதல்... காதல்... காதல்...😴🤦🏼♂. பார்த்ததும் காதல், பார்க்காததும் காதல், எத்தனை எத்தனை காதல், கத்திரிக்காய்கள், முடியல. பத்து மாசம் சுமந்து, கஷ்டப்பட்டு தன் உயிரையும் பணயம் வைத்து, பிள்ளைய பெத்து, படிக்க வச்சி ஆளாக்குறதுக்குள்ள போதும், போதும்னு ஆகிடும். ஆனா திடிர்னு வர காதலிக்காகவோ, காதலனுக்காகவோ, உயிரை விடுறானுங்க. ஒண்ணு பெத்தவங்க கிட்ட பேசி சமாதானம் வாங்கணும். இல்ல இரண்டு பேருமே பெத்தவங்களுக்காக வாழ்ந்துட்டு போயிடணும். *இதுல தற்கொலை தான் முடிவுனா, அத விட கோழைத்தனம் வேற எதுவுமில்லை. (சில காதலுக்கு சம்மதிக்காத பெற்றோர்களும் (மாணவர்களின்) தற்கொலைக்கு காரணமாகின்றனர்.)*😖🤦🏻♂
🙇🏻♂ *பீஸ் கட்ட முடியல, வேற படிப்பு படிக்க முடியல*😔
🙇🏻♂ படிக்க முடியலனா, படிச்ச வரைக்கும் என்ன வேலைக்கு போக முடியுமோ, அதுக்கு போகலாம்ல. என் இலட்சியம் இது தான். இத விட்டா வேற வழி தெரியல என்பவர்களுக்கு என்னத்த சொல்றது🤦🏼♂. இங்கு எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. நாட்டுல 70% நபர்களின் இலட்சியம் நிறைவேறாம தான் கிடக்கு. எல்லாத்துக்கும் முடிவு தற்கொலை அல்ல.🤦🏻♂😔
👨🏻🏫 *ஆசிரியர்கள்*👩🏻🏫
📚📖 புத்தகத்தில் இருப்பதை மக் அடித்து ஒப்பித்து கொடுப்பவர்களெல்லாம், ஆசிரியர் ஆகி விட முடியாது. அனைத்து பாடங்களையும், வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு கற்பித்துக் கொடுப்பவரே சிறந்த ஆசிரியர்கள் ஆவார்கள். அவ்வாறு கற்பித்துக் கொடுத்தாலே எந்த மாணவரும் தற்கொலை என்ற எண்ணத்திற்கு வரப் போவதில்லை. ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ ஒரு மாணவன் தற்கொலை முடிவை எடுக்கிறான் என்றால் ஆசிரியர்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கதான் செய்யும். 🙄🤕 *ஒரு படித்த மாணவன் தற்கொலை முடிவுக்கு வருகிறான் என்றால், அப்ப படித்து என்ன பயன்? அவன் கற்பித்தது தான் என்ன? ஒரு மாணவனின் மன தைரியத்தை கூட சொல்லிக் கொடுக்காத படிப்பு எதற்கு? இல்லை ஆசிரியர்கள் ஒழுங்காக கற்பித்துக் கொடுக்கவில்லையா? இல்லையென்றால் பாட முறை தான் சரியில்லையா?*
👨🏻🏫👩🏻🏫 *சில ஆசிரியர்கள் பாட முறை தான் சரியில்லைனு சொல்லுவாங்க. அதெல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம், ஒத்துக்கவும் முடியாது😏.*
👨👩👧👦🎓 *பெற்றோர்கள் புள்ளைங்கள, கல்வி கற்க அனுப்புவதே அனைத்தும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான். அதில் தைரியமும் அடங்கும்.*👍
📚📖 *பாடப் புத்தகத்தில் நிறைய இடங்களில் விட்டுக் கொடுத்தல், போராடி வாழ்வது பற்றியும், வீரத்தைப் பற்றியும் உள்ளது. அதை சரியான முறையில் மாணவர்களுக்கு போதித்தல் வேண்டும்.*👍
🤦🏻♂🙇🏻♂ *இப்ப A,B,C,D ல இருந்து Z வரைக்கும் டிகிரி இருக்கு. இப்ப உள்ள படிப்பு கூட அந்த காலத்துல இல்ல. அப்போது ஆசிரியர்களும் கம்மியாக இருந்தனர். அப்போது தற்கொலைகளும் கம்மி. ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, படித்த மாணவர்களின் தற்கொலைகளும் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கின்றது.*🙇🏻♂🤦🏻♂
*அப்ப தவறு எங்கே தான் நடக்கிறது🤔🙌🏼*
🙇🏻♂🤦🏻♂🎓 *ஒரு படித்தவன் தற்கொலை செய்கின்றான் என்றால் 99% ஆசிரியர்களையே சாரும் என்பதே நிதர்சனமான உண்மை.*👍
🤦🏻♂🙇🏻♂ *ஒரு படிக்காதவன் தற்கொலை செய்கின்றான் என்றால் முழுக்க முழுக்க பெற்றோரைத் தான் சாரும்.*👍
🙇🏻♂ *மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் மனது வைத்தால் மட்டுமே முழுக்க, முழுக்க தடுக்க முடியும்.🔚*👍
🖤 *மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.*🤷🏻♀
🤦🏻♀🙇🏻♀ *இவர்களுக்கு பிரச்சினைகளை சந்திக்கவே நேரமில்லை எனில் சிந்திக்க நேரமேது ?*👊
*பிரச்சினைகளும், கஷ்டங்களும்... தான் விரும்பினால் வருவதோ விரட்டினால் ஓடிவிடுவதோ அல்ல மாறாக, இறைவனின் ஏற்பாட்டின்படிதான் வருகின்றன. 🤷🏻♀இதைப் புரியாமல் ஏன் இந்த தற்கொலைகள் செய்யும் என்று இவர்கள் சிந்திப்பதில்லை.*🙇🏻♀🤦🏻♀
🤷🏻♀👉 *இறைவன் வானம் – பூமி, இவற்றிற்கிடையே உள்ள எண்ணற்ற வாழ்வாதாரங்கள் இவற்றை எதற்காக படைத்துள்ளான்? ⁉நாம் இவ்வுலகில் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளோம்? ⁉போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண முயல வேண்டும்.🤷🏻♀ அப்போதுதான் தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகள் நம்முன் ஏற்படா.*🙅🏻♀
🧑🏻👩🏻 *பிள்ளை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைகளுக்கேற்ப வாழுதல், தன்னம்பிக்கை, சிக்கல்களை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்.*💪👍
🧐👉 *பிரச்சினையோடு யாராவது தனியாக இருக்கும்போது அதை அவர் பூதாகரமாக,😱 தீர்க்க முடியாத ஒன்றாக நினைக்கிறார்.*🧐
🤕😱 *சொந்த பிரச்சினைகள் உங்கள்மீது வெள்ளம்போல் பாய்ந்து உங்களை மூழ்கடிப்பதற்கு அனுமதித்துவிடாதீர்கள்.🙅🏻♀ நம்பகமான ஒருவருடைய உதவியை நாடி, அவரிடம் உங்களுடைய மனதில் உள்ளதை கொட்டுங்கள்.🤷🏻♀ 'ஆனால் என்னுடைய மனசுல இருப்பதை கொட்டுவதற்கு எனக்கு யாரும் இல்லையே' என நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்.*🤷🏻♀
💖💗 *மனம்விட்டு பேசினாலே குணமாகும் பல பிரச்சனைகள் அப்படி மனம்விட்டு பேசக்கூட நினைப்பதில்லை இதுவே அவர்களின் மனசோர்வை துணிவை இழக்கச்செய்கிறது எனலாம்.*💪👍🤷🏻♀
😇💐 *இறைநெறியில் நாட்டம், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுதல், சரியான முறையில் உடல்நலத்தைப் பேணுதல், புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல் போன்றவை மூலமும் தற்கொலை மனப்பான்மையைக் களையெடுக்க முடியும்.*💪👍
🤷🏻♀👉 *கவலைகள், தோல்விகளுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வதென்றால் இவ்வுலகில் யாரும் உயிருடன் வாழ முடியாது.*🤷🏻♀
😇💐💪 *இறைநம்பிக்கை, கடின உழைப்பு, பொறுப்பை உணர்ந்து செயல்படுதல், ஒழுக்கம் இவையே இன்றைய உலகில் வாழ்வதற்குத் தகுதியான கருவிகள் ஆகும்.🤷🏻♀இவற்றை ஒரு மனிதன் பெற்றிருந்தால் எத்தகைய இயல்பிற்கு மாறான சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும்.*👍
💔 *உணர்ச்சிகளின் கொந்தளிப்பே தற்கொலைக்கு காரணமாவதால், அத்தகைய எண்ணத்தைத் தாண்டி வெற்றி கொண்டவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர். பிரச்னைகளை எதிர்கொண்டு வெல்லும் பக்குவம் தற்கொலை எண்ணத்தை தலை தூக்காமல் தடுக்கிறது.👍 அர்த்தமுள்ள வாழ்வை அற்ப விஷயங்களுக்காக இழக்க வேண்டாமே...*🙅🏻♀🤷🏻♀
🖤💔 *மனச்சோர்வுக்கும் தற்கொலைக்கும் மக்களை வழிநடத்தும் காரணிகளில் ஒன்று தனிமை.* 🙇🏻♀
🙇🏻♀🖤 *மற்றவர்களுக்கு மிகவும் அற்பமாக தோன்றுகிற விஷயங்களுக்குங்கூட நம்பிக்கை இழந்து தற்கொலை செய்கிற இளைஞர் கூட்டம் இன்று ரொம்ப சர்வசாதாரணம்.🤕 யாராவது புண்படுத்தி அதற்காக எதுவும் செய்ய முடியாமல் இருக்கும்போது, தங்களை புண்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க தங்களுடைய சாவை ஓர் அஸ்திரமாக இளைஞர் கருதலாம்.*🤦🏻♀🙇🏻♀
🤷🏻♀🙇🏻♀ *நீங்கள் யாருடைய உதவியுமின்றி தன்னந்தனிமையில் வாடுவது போன்ற உணர்வை, நீங்கள் செத்தால் யாருக்கு என்ன கவலை போன்ற உணர்வை உண்டாக்கும் சூழ்நிலைமைகள் உங்களுக்கு ஏற்படலாம்.🤷🏻♀ ஆனால், தனிமையில் இருப்பதாக உணர்வதற்கும் தனிமையில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.*👊
💝💖 *உங்கள் மீது அக்கறை காட்டும் நபர்கள் இருக்கிறார்கள்.🤷🏻♀ உங்களுடைய பெற்றோர், உங்களுடைய திருமண துணை, உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய நண்பர்கள் ஆகியோரைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். 🤷🏻♀👍 இன்னும் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர் உங்களுக்கு அருகிலே இருந்தபோதிலும் அதை நீங்கள் உணராமல் சிந்தித்து பார்ப்பதும் இல்லை.*🤦🏻♀
👊🙇🏻♀🤦🏻♀ *"""'தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை.🙅🏻♀ தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார்.😡 தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது""'' என மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.*👍🤷🏻♀
😇💐🙏 *உயிர்—கடவுள் தந்த ஒரு பரிசு. ஆனால் சிலசமயத்தில் இது ஒரு பரிசாக தோன்றாமல் பெரும் பாரமாக தோன்றுவது உண்மையே. ஆனால், நீங்கள் யாருக்காவது விலைமதிப்புமிக்க ஒரு பரிசைக் கொடுத்து அதை அவர் உண்மையில் பயன்படுத்துவதற்கு முன்பே தூக்கியெறிந்துவிட்டால் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?*👊🙇🏻♀
🤷🏻♀💪 *எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கையுடன் பார்ப்பதற்குக் கற்றுத் தர வேண்டும்*👍
🤷🏻♀🤦🏻♀ *எந்த நிகழ்வையும் இவர்கள் தனக்கு மட்டுமே நிகழ்ந்ததாக விரக்தியடைபவர்கள். சுயபச்சாதாபத்தை தேடிக் கொள்ள முயல்பவர்கள்*🤦🏻♀🙇🏻♀
🙇🏻♀🤦🏻♀ *சின்னப் பிரச்னைக்கே சிறகு ஒடிந்துவிடுபவர்கள். இவர்கள் மூளையில் சில ரசாயன உற்பத்தி குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.🤷🏻♀ எனவே, தக்க மருந்துகளைக் கொடுத்து மனநல மருத்துவர்கள் இவர்களை மீட்பார்கள்.*🤷🏻♀
🖤💔 *மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்பதை அறிய வேண்டும். சிலரது பிரச்னைகள் காரணங்களோடு ஏற்படுபவை.🤷🏻♀ அவற்றை அகற்றினாலே அவர்கள் சகஜமாகி விடுவார்கள். பிடிக்காத பள்ளி, ஒத்துவராத கல்லூரி, விருப்பமில்லாத படிப்பு ஆகியவற்றால் ஒருவர் மனச்சோர்வு அடைந்திருந்தால் மேலும் மேலும் வற்புறுத்தி அவர்களை அங்கே நீடிக்கச் செய்வது தவறு.* 🙅🏻♀🙅🏻♀
🤷🏻♀👉 *வேலை கிடைக்காத வருத்தத்தில் ஒருவர் இருந்தால், வீட்டிலிருப்பவர்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.👍குத்திக் காட்டுவதோ, கடிந்து கொள்வதோ, அவர்களிடம் கொஞ்ச நஞ்சமிருக்கும் தன்னம்பிக்கையையும் காணாமல் அடித்துவிடும்.*🙇🏻♀ *ஒருவரை அவமானப்படுத்தி அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வரவும் முடியாது.🙅🏻♀ நம்பிக்கையூட்டி அவர்களை ஆசுவாசப்படுத்துவதன் மூலம்தான் அவர்கள் நேர்மறையாகச் சிந்திக்கத் தொடங்குவார்கள்.*👍💪
🤷🏻♀👉 *பணியில்லாமல் அவதிப்படுகிறவர்களுக்கு மற்ற வாய்ப்புகளை சுட்டிக்காட்ட வேண்டும்.👍அடிக்கடி அவர்களுக்கு தன்னம்பிக்கை பிறப்பதுபோல பேச வேண்டும்.👍ஏற்கெனவே இருட்டறையில் சுருண்டுபோய் இருக்கிறவர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.* *எதற்குமே பயனற்றவர்கள் போல் அவர்களிடம் கெளரவக் குறைச்சலான பணிகளை ஒப்படைத்து குட்டக் கூடாது.* 🙅🏻♀🙅🏻♀
🤷🏻♀💪 *உலக அளவில் சாதித்த மனிதர்களுடைய வாழ்க்கைச் சரிதங்களை கல்லூரி மாணவர்கள் வாசிக்க வேண்டும்.👍அவர்கள் சந்தித்த சோதனைகளுக்கு முன்னால் நம்முடைய பிரச்னைகள் ஒன்றுமில்லை என்பது புரியும்.*👍 💖💝 *அதைப்போலவே நம் இதயத்தை வெளிச்சமாக்கும் இலக்கியங்கள், நூல்கள், நம்பிக்கையை வளர்க்கக் கூடிய செயல்கள்,பேச்சுக்கள் போன்றவற்றின் மூலம் ஒருவரை தொடர்ந்து போராட வைக்க முடியும்.* 💪👍😇💐
😇💪🙏 *ஒவ்வொரு மனிதனும் இந்த உலகிற்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாக அமையாது.பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பாடப்புத்தகங்களில் உள்ளதை சொல்லிக் கொடுப்பதோடு நின்று விடாமல், மாணவ–மாணவிகளின் மன வலிமையை மேம்படுத்தவும், தன்னம்பிக்கை, தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம், தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.*💪👍😇
😇💪 🏹 *"தன்னுடைய இடத்தில் நின்றுகொண்டு காவல் காக்கும் ஒரு சிப்பாயைப்போல, நாம் நம் பணி முடியும் வரை உலகத்தைவிட்டு அகல முயற்சி செய்யக்கூடாது'' என்று கூறுகிறார் பிளாட்டோ*👌💪👍
😇 *மறப்போம் கவலையை...!!*💐
😇 *வாழ்வோம் சிறப்போடு..!!!*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♂*
*🏆 அருள்முருகஇன்பன்*🏆
🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣
👑 *கலந்துரையாடல்~1*👑
🏅 *ம கணேசமூர்த்தி, & saai-jaanu*👌
🏅 *ஆனந்தன், &jaiganesh2881*👌
🏅 *@மகாராஜன், & @ஞாலமைந்தன்*👌
👑 *கலந்துரையாடல் 2*©®
🏅 *Veera Kumar, Balasundar p & g mani121990*👌
🏅 *Shagul JRS, இசையருவி & S.V.குமார் பாண்டியன்*👌
🏅 *விஸ்வநாதன் கோவை, Sabaripalaniyappan,& Muthuselvam*👌
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
💪 *நம்மை நாமே உணர்ந்து கொண்டால் மட்டுமே தற்கொலை எண்ணங்களை தடுக்க முடியும்.*👍
🤷🏻♀ *மக்கள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினையாகவே தற்கொலை இருக்கின்றது. மனம் மற்றும் சமூக ரீதியான குழப்பங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளே ஒருவரை தற்கொலைக்கு தூண்டுகின்றது.*🤷🏻♀
👉 *ஒவ்வொரு 40 நொடிகளிலும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மனிதன் தற்கொலைக்கு முயல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.🤷🏻♀ ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட 80 லட்சம் பேர் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.🙇🏻♀🤦🏻♀ மேலும் பலர் மருத்துவமனைகளில் சேர்த்து காப்பாற்றப்படுகின்றனர்.*🙇🏻♀
🤦🏻♀🙇🏻♀ *உலகளவில் கிட்டதட்ட 15 முதல் 29 வயதிலான இளைஞர்களில் இறப்பில் இரண்டாவது காரணியாக தற்கொலை விளங்குகின்றது.😔 மேலும், தென் கிழக்கு ஆசியாவில்தான் 39 சதவீத தற்கொலை வழக்குகள் பதிவாகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உடல் நமக்கு சொந்தமில்லை....உயிரை விடுவதால் எல்லா பிரச்சினைகளும் முடிந்து விடாது...🙅🏻♀🙇🏻♀ உங்களை சுற்றி உள்ளவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்....!!உங்கள் வாழ்க்கையை நலமுடன் வாழுங்கள்...!!!*😇💐
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய*
*மன்னுயி ரெல்லாந் தொழும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
♨ *அறிந்து கொள்ளவும்*♨
*கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது*
*நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.*
♨ *புரிந்துகொள்ளவும்*♨
*பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே*
♨ *தெரிந்துகொள்ளவும்*♨
*விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?*
*வாழ்வும் தாழ்வும் சில காலம்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
👩🏻✈🏹 *_GK_🏹👩🏻✈*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *சங்கிலி பூதத்தான்*
*8925553996*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment