🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 22.01.2018*_ 🌹
🌹 _*கிழமை : திங்கள்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*"விலங்குகள் பொய்யுரைப்பதில்லை; புறங்கூறு வதில்லை; இருளில் குற்றத்தன்மையுள்ள தவறான காரியங்கள் எதனையும் செய்வதில்லை. இந்நிலையில் நான் ஓர் விலங்காக மாற மாட்டேனா?" மனிதன் நீசனாகி விட்டதால் அவனிடம் மானுடப் பண்பு மறைந்து விட்டது.*
*-விட்மன்*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*திருநங்கைகளுக்கும் தனது பலம் என்ன என்பது தெரியாமல் போய், பலவீனம் என்ன என்பது மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்திருக்கிறது.*
*ஒவ்வொருவரின் பலவீனம் என்னென்ன என்பது அவர்களுக்குத் தானாகவே தெரியவரும். ஆனால், பலத்தை மற்றவர்கள் சொல்லும் போதுதான் அவர்களே உணர முடியும்.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*திருநங்கைகளின் வாழ்வு தற்போது எந்தளவில் உள்ளது? அவர்களை நாம் முழுமையாக ஒதுக்கி விட்டோமா? இல்லை ஏற்றுக்கொண்டோமா?*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*🌎🌍சமூகம் பற்றிப் பேசும் அநேக சந்தர்ப்பங்களில் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களைப் பற்றிய விஷயங்கள் மட்டும் அலசப்படுகின்றன.🍃🍂*
*🤷♂🤷♀மூன்றாம் பாலினமான திருநங்கைகளைப் பற்றிய சிந்தனை பலருக்கு வருவதில்லை. பாலினப் பாகுபாடால் அவர்களுக்கு நேரும் இன்னல்களைப் பற்றியும் அதிகம் பேசப்படுவதில்லை.🗣👀👀*
*🤔🧐யார் இந்த திருநங்கைகள், ஒரு சின்ன கதை மூலம் பாக்கலாம் வாங்க (கற்பனையாக)*👀👇
*👰🤵கல்யாணமாகி நான்கு வருடங்கள் கழித்துப் பிறக்கும் குழந்தை அது. தன் பெண்மையைப் பூர்த்திச் செய்ய வந்த ஒரு பொக்கிஷமாகவே அந்தக் குழந்தையை நினைத்தாள்.😊🙂*
*🤱👩❤💋👩தாயை விட்டு அவனாலும் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத அளவுக்குப் பாசத்தால் பிணைந்திருந்தான். ஆண்டுகள் நகர்ந்து அவன் இளமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம்.😳🧐*
*🙁😟இதுவரை தன்னை ஓர் ஆணாகக் கருதி ஆசிரியர் ஆண் பிள்ளை பக்கத்தில் உட்கார வைக்கும் போதெல்லாம் அவனுக்குள் ஏதோ ஒரு நெருடல்.*☹😖
*😢🙁பெண் பிள்ளைகளோடு சகஜமாகப் பழக முடிந்த அவனால் ஆண் பிள்ளைகளோடு அந்த நெருக்கத்தைக் காட்ட முடியவில்லை. யாரிடம் சொல்வது என்றும் புரியவில்லை.*😨😢
*🤔😰ஏற்கெனவே தன் நடையையும், பேச்சையும் எல்லோரும் வித்தியாசமாகப் பார்ப்பதும் தன்னைக் கேலி செய்வதும் அவனுக்கு விளங்காமல் இல்லை.*😓😞
*💃🕺நன்றாக நடனம் ஆடும் இவனும் ஒரு நடனப் போட்டியில் பங்குகொள்ள, அவன் வகுப்பின் ஆசிரியை "நீ என்ன பொம்பளப் புள்ள மாதிரி ஆடுற?" என்று கேட்டதும், அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பது தெரியாமல், அச்சப்பட்டு ஓடிப் போய் கழிவறைக்குள் நின்று அழுகிறான்.*😣😓
*😟😲வீட்டுக்குள் வந்து கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்க்கும்போது அவனை அறியாமலே அவனுக்குள் ஒரு நாணம் பூக்கிறது.*🙄🤔
*☺😊ஆசையை அடக்க முடியாமல் அம்மாவின் சேலையை அணிந்துகொள்கிறான். அதில் ஏதோ ஒரு நிறைவு.*😃🙂
*🧐😕அம்மா இல்லாத சமயங்களில் அதுவே அவனுக்கு வழக்கமாகி விடுகிறது. ஆனால், என்றாவது ஒரு நாள் தெரிந்துவிடும் அல்லவா! அந்தநாளும் வந்தது.*😒😏
*😳😨தன் சேலையை உடுத்தி நின்ற அவனைப் பார்த்துவிடுகிறார் அம்மா. வீடே போர்க்களமாகி விடுகிறது. இதுவரை மனதில் பூட்டி வைத்திருந்தை உடைத்து, "எனக்குப் பொண்ணுங்க மாதிரிதான் இருக்கப் பிடிக்கிறது " என்று அழுகையின் ஊடாகச் சொல்கிறான்.*🙁😖
*👀🗣அம்மா அவனை ஏதேதோ கூறி, ஆண் பிள்ளையைப் போல இருக்கச் சொல்லி கெஞ்சுகிறார். ஆனால், எவ்வளவு நாள்களுக்குத்தான் நடிப்பது என்று தன் நிலையை விளக்கும்போது அம்மாவுக்கு உலகம் சுற்றுவதே நின்றதுபோலாகி விட்டது.*😟😔
*👩👦👩👧இறுதியாகத் தனக்குள் இருக்கும் அவளை மறைக்க விரும்பாததால் வீட்டை விட்டு வெளியேறுகிறான் அவன் (அவள்).🏃♀🏃♂*
*🧐☹திருநங்கை பிறப்பில் ஆண் மகனாக பிறந்து வளரும் போது, தன் பெண் தன்மையை உணர்ந்து ஆணின் உடலுக்குள் பெண் மனம் தவிக்கிறது. கூடுவிட்டு கூட பாய எண்ணும் நிலை... அந்த மனநிலையை குடும்பத்தினர் புரிந்து கொள்வதில்லை என்பதை காட்டிலும் புரிந்து கொள்ள எந்த வித முயற்சியும் மேற்கொள்வதில்லை என்பதே உண்மை. *😓😔
*📖👀படிப்பதற்கு ஒரு கதைபோல இருந்தாலும் இதான் உண்மையாவே நடக்குது.☹😓*
*👫👫திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இதை விடக் கொடுமையான பல வலிகளும், அவமானங்களும் நிறைந்ததாகவே இருக்கும்.*😥😓
*👼🤱சிறுவயதிலிருந்தே இந்தச் சமூகம் அவர்களை, தப்பிப் பிறந்த ஜீவன்களாகவே பார்த்துவருகிறது.*😟😢
*😔😢எனக்கும் சிறு வயதிலிருந்தே இவர்களைப் பார்த்தால் சற்றுப் பயமாக இருக்கும். இந்தச் சமூகத்தின் தாக்கம் என்னுள்ளும் விதைத்திருக்கிறது அல்லவா!*🧐😖
*🌀👀ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு வரை, பிற மக்களைப்போல மூன்றாம் பாலினத்தவரும் சமமாகவே மதிக்கப்பட்டுவந்தனர். ஆங்கிலேயரின் வருகையை அடுத்து, பல்வேறு காரணங்களால் மூன்றாம் பாலினம் குறித்த மக்களின் பார்வை மாறியது. இந்நிலை இன்று வரை தொடர்கிறது.*😨😥
*🌀🌀வரலாறு (திருநங்கை)*
*♻⚜பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வேதங்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழின் தொன்மையான தொல்காப்பியம், இந்தியாவின் புகழ்பெற்ற பாலியல் படைப்பான காம சாஸ்திரம், மநு சாஸ்திரமும்கூட திருநங்கைகள் பற்றிப் பேசியுள்ளன.*▶⏩
*♻⚜இந்திய ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிற ஒன்பது கிரகங்களில் சனியும் புதனும் மாற்றுப் பாலினமாகவே குறிப்பிடப்படுகின்றன.*▶⏩
*♻⚜கி.மு இருபத்தி இரண்டாம் வருடங்களிலேயே சுமேரிய நாகரிகத்தில் திருநங்கைகள் பொது மற்றும் வீட்டு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.*▶⏩
*♻⚜நீதிமன்றப் பணியாளர்கள், பாடகர்கள், ராணுவ அதிகாரிகள், பெண்களைப் பாதுகாக்கும் அந்தப்புர அதிகாரிகள், மத பூசாரிகள், ராஜாங்க ஆலோசகர்கள் என்று பல உயர்பதவிகளை வகித்தார்கள்.(ஆனாலும் அவர்களின் சமூக அந்தஸ்து கீழான நிலையிலேயே தான் இருந்தது.)*▶⏩
*♻⚜அசிரியப் பேரரசு, கிளியோபாட்ராவின் டாலமிப் பேரரசு போன்றவற்றிலும் செல்வாக்காக இருந்தார்கள் திருநங்கைகள்.*▶⏩
*♻⚜சீனாவில் மிங் வம்ச அரசு முடிவுக்கு வந்த போது இம்பீரியல் அரண்மனையில் சுமார் 70,000 திருநங்கைகள் பணியில் இருந்தார்களாம்.*▶⏩
*♻⚜செங் ஹி என்கிற சீனாவின் புகழ்பெற்ற கப்பற்படைத் தளபதி ஒரு திருநங்கை. வியட்நாம் ராஜ குடும்பங்களிலும் அவர்கள் ஊடுருவி இருந்தார்கள்.▶⏩*
*♻⚜ரோம சக்கரவர்த்தி கான்ஸ்டான்டினச் சுற்றி திருநங்கைகளின் ஆலோசனைக் கூட்டமே இருந்தது. பைபிளில் அவர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது (சொர்க்கத்தின் ராஜாங்கத்தில் அவர்களுக்கான இடம் உண்டு) வாத்ஸ்யாயனரின் காமசாஸ்திரம் அவர்களை "தேர்ட் செக்ஸ்" என்று குறிப்பிடுகிறது.*▶⏩
*♻⚜காகிதத்தைக் கண்டுபிடித்த காய் லுன் என்பவர் ஒரு சீன தேசத் திருநங்கை.*▶⏩
*♻⚜ல ங் கியட் வியட்நாமின் முதல் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட தேசிய ஹீரோ. அவரும் ஒரு திருநங்கையே.*▶⏩
*♻⚜முகம்மது கான் காஜர் 1794ம் வருடம் பெர்ஷியாவின் மன்னராகி காஜர் வம்சத்தயே தோற்றுவித்தார். அவரும் திருநங்கைதான்.*▶⏩
*🧐😨இவர்கள் எல்லாருமே சரித்திரத்தில் மறக்கப்பட்டவர்கள். அல்ல மறைக்கப்பட்டவர்கள்.😟😢*
*🤱👀திருநங்கைகள் பற்றிய தகவல்கள் நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத பதிவுகள்...*📖👀
*🌀🗣திருநங்கைகளின் உடலில் எந்த மாற்றமும் இருக்காது ஆனால் ஆண் தோற்றத்தில் இருப்பவர்களின் எண்ணம்(உணர்வு) பெண்களை போன்று இருக்கும்.*🎭🎯
*🌀🗣அதே போல் சில மூன்றாம் பாலினத்தில் பெண் தோற்றத்தில் இருப்பவர்களின் எண்ணம்(உணர்வு) ஆண்களை போன்றும் இருக்கும்.(இவர்களை திருநம்பிகள் என்றும் அழைப்பார்கள்.)*🎭🎯
*🌀🗣இதில் சிலர் தங்கள் உடல் அமைப்பை மாற்றிக்கொள்ள மருத்துவ வளர்ச்சியில் சில அறுவை சிகிச்சை செய்து கொண்டு தங்களது உடல் அமைப்பை உருவாக்கி கொள்கிறார்கள்.*🎭🎯
*🌀🗣ஒரு சிலர் இந்த மாதிரி அறுவைசிகிச்சை க்கு உடன்பாடு இல்லாமல் தங்களுக்கு உண்டான தோற்றத்துடனே வாழ்கின்றனர்.*🎭🎯
*🌀🗣இவர்களுக்கு குழந்தைகளாக இருக்கும் போது எந்த மாற்றமும் தெரியாது ஆனால் பருவ வயதை அடையும் போதுதான் தான் யார்? ஏன் இப்படி இருக்கிறோம்? என்ற கேள்விகள் இவர்களிடையே தோன்றுகிறது.*🎭🎯
*🌀🗣ஒரு புரிதலின் பிறகு இவர்கள் தங்களின் நிலையை வீட்டில் எடுத்து கூறினால். பெற்றோர்கள் மற்றும் இவர்களின் உறவினர்கள் இவர்களை மாற்றத்தான் முயற்சி செய்கிறார்களே தவிர இவர்களின் நிலையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.*🎭🎯
*🌀🗣குடும்பம் மற்றும் உறவினர்களின் முன்னாள் இவர்களின் நிலை தெரியாமல் இருப்பதால் வீட்டைவிட்டு ஓடி விடுகிறார்கள் அல்லது துரத்தி விடப்படுகிறார்கள்.*🎭🎯
*🌀🗣இவர்களின் போக்கிடம் என்பது இவர்களை போல் இருக்கும் திருநங்கைகளின் இடமே தவிர வேறு எங்கும் இல்லை.*🎭🎯
*🤔🧐இவர்கள் மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகள்,*🎯
*🚫பாலியல் தொழில்*
*🚫பொதுமக்கள் நடந்து செல்லும் போது இடையூறு ஏற்படுத்துவது*
*🚫பெட்டி கடைகளில் வந்து அநாகரிகமான வார்த்தைகளை உபயோக படுத்தி காசு வாங்குவது.*
*😨😖இன்னும் சில குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது உள்ளது.*🎯
*🤔👀இவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்? இந்த கேள்வியை அவர்களிடம் கேட்டாள் அதற்கு பதில்,*🧐🗣
*🎭 வேலையில்லை,*
*🎭 சமூகம் என்னை ஒதுக்கி வைக்கிறது,*
*🎭 எங்களுக்கு அடைக்கலம் கொடுப்பார்கள் எங்களை இது போன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறார்கள்,*
*🎭 நாங்க எதாவது நல்ல வேலைக்கு சேர்ந்தாலும் அவர்கள் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வேலையில் இருந்து வெளியேறும் படி சொல்வார்கள்.*
*👆இது போன்ற காரணங்களால் தான் நாங்கள் இது போன்ற செயல்களை செய்கிறோம் என்கிறார்கள். சில திருநங்கைகள்.*🎭🎯
*🌀🗣இது போன்ற குற்றங்களை சில திருநங்கைகள் மட்டுமே செய்கின்றார்கள். அதற்காக நாம் அனைவரையும் குறை சொல்லி ஒதுக்கி வைப்பது சரியல்ல.*🎭🎯
*🌀🗣 சமூகத்தின் மத்தியில் இவர்களின் வாழ்கை கேலிப்பேச்சும், சலிப்புடன் கூடிய பார்வையும், இன்னும் சில தவறான நடவடிக்கைகளாலும் திருநங்கைகளில் 50% பேர் தற்கொலைக்கு முயலும் அவலமும் இங்குதான் நடக்கிறது.🎭🎯*
*🌀🗣 திருநங்கைகளுக்கு தங்கள் பலவீனம் எது என்பது தான் அதிகம் தெரிகிறது. அவர்களின் பலம் என்ன என்று தெரிவதே இல்லை.🎭🎯*
*🌀🗣 இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் திருநங்கைகளில் சிலர் தங்கள் வாழ்வில் வெற்றியடைந்ததுள்ளனர். அவர்கள் தங்களைப் போல் இருக்கும் திருநங்கைகளுக்கு கூறும் அறிவுரை "படிப்பு மட்டுமே உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி" என்கிறார்கள்.*🎭🎯
*🌀🗣 அரசு தரப்பிலும் திருநங்கைகளுக்கான சில சலுகைகள் மற்றும் வழிகாட்டி கூட்டமும் ஆங்காங்கே செயல்படுத்தப்படுகிறது.*🎭🎯
*🌀🗣 கழிவறையில் இவர்களுக்கு ஓர் இடம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இவர்கள் பெண்கள் கழிவறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒரு உத்தரவு வந்தது ஆனால் இதை காரணமாக வைத்து சில ஆண்கள் திருநங்கைகள் போல் நடித்து சில தவறுகள் நடந்ததாகவும் குற்றங்கள் உள்ளது.🎭🎯*
*🤔சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். ஏதாவது குற்றம் குறை இருந்தால் அடியேனை மன்னிக்கவும்...🙏*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல் 1,2*_
*🎭🗣"திருநங்கைகள்" ஏதோ ஒரு தீண்டத்தகாத சொல்போல் மாறிவிடுமோ என்ற எண்ணம் பொதுவாக இருந்தது. ஆனால் இன்று விவாதத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்த அனைவரும் ஒரு மாற்றத்திற்கான சிந்தனையாளர்களே.*👏💪
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*இந்த பூமியில் ஜனித்த அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. அப்படியிருக்க திருநங்கை போன்றவர்களை மட்டும் வாழத் தகுதியற்றவர்களைப் போல் இச்சமூகம் பார்ப்பதற்கு காரணம் என்ன? திருநங்கைகள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?*_
_*அத்தனை திருநங்கைகளும் வாழப் பிறந்தவர்களே!.*_
_*திருநங்கைகளை புரிந்துகொள்ளுங்கள்; ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண், பெண் போல் திருநங்கைகளையும் ஏற்றுக்கொள்வதில் சமூகம் தயக்கம் காட்டக்கூடாது.*_
_*நம்மிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் சொல்லில் மட்டும் இல்லாமல் செயலில் காட்டுவது நன்று.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு*
*இனத்தியல்ப தாகும் அறிவு.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*💚அறிந்து கொள்ளவும்*💚
*அறிந்தவன், புரிந்தவன் அடுத்தவனை பார்ப்பதில்லை.*
*💙தெரிந்து கொள்ளவும்*💙
*புனிதப்படுத்துதலும் அசிங்கப்படுத்துதலும், இரண்டுமே ஒரே மனநிலையின் இரு பரிமாணங்கள். இரண்டுமே வாழ்வின் இயல்புக்கும் படைப்புக்கும் எதிரி.*
*💜புரிந்து கொள்ளவும்*💜
*யானையின் பலம் தும்பிக்கையில் மனிதர்களின் பலம் நம்பிக்கையில்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment