🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :29.03.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💡 *நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்*
💐 *ஜான்மில்டன்.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *_கல்வி என்பது ஆடம்பரமோ அல்லது அடகு வைக்ககூடிய பொருளோ அல்ல கல்வி என்பது நமக்கான உரிமை_*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*இன்றைய கால கட்டத்தில் படிப்பறிவு தேவையா? இல்லையா?*
👨🏻🎓👩🏻🎓🎒📖📚🤔👨🏻🎓👩🏻🎓🎒📖📚
😇 *_கலந்துரையாடல் குழுவில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம். 🙏நீங்கள் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள் என்றால், உலகத்தில் உள்ள நல்ல விஷயங்களை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக கல்வி கற்க வேண்டும். சமூகதில் நற்பெயருடன் இருக்க நன்றாக படிக்க வேண்டும்.நான் ஒரு படித்த நபர் என்று சொல்வதில் பல நன்மைகள் உள்ளது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோரின் வாக்கு. இதனை மனதில் நிறுத்தி நன்றாக படிக்க வேண்டும். கல்வி என்பது ஒரு உறுதிமிக்க மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான வாழ்க்கைக்கும் அவசியம்._*🤩💝
👨🏻🎓👩🏻🎓💝 *_எல்லோரும் சமமான வாய்ப்புகளை வழங்கியுள்ள இடமாக உலகைப் பார்க்க விரும்பினால், கல்வி தேவைப்படுகிறது. வேறுபட்ட சமூக வகுப்புகள் மற்றும் பாலினர்களிடையே இருக்கும் வேறுபாடுகளுடன் நாம் விலகிச் செல்ல விரும்பினால் கல்வி என்பது ஒரு கட்டாயம். ஏழைகளுக்கு வாய்ப்புகளை உலகம் முழுவதும் திறந்து விடுகிறது,இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி என்பது பெண்களின் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது._*📚📖
👨🏻🎓👩🏻🎓📚 *_நீங்கள் சுய சார்புள்ள நபராக விரும்பினால் கல்வி மிகவும் முக்கியம். நீங்கள் நிதி ரீதியாக சுயாதீனமாக ஆக உதவுவது கல்வி,நீங்கள் உங்கள் சொந்த முடிவை எடுக்க முடியும் என்று கல்வி உங்களை வலுவடைய செய்கிறது. உண்மையில் உங்கள் கனவுகளை மாற்றியமைக்கிறது உங்கள் கனவு என்ன, வாழ்க்கையில் உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் செல்வந்தர்களா? பிரபலமாக இருக்க விரும்புகிறீர்களா? மக்களை மதிக்கும் ஒரு மிக வெற்றிகரமான நபராக நீங்கள் விரும்புகிறீர்களா? இது அனைத்திற்கும் முக்கியமானது கல்வி. நிச்சயமாக, கல்வி களத்தில் தங்கள் வெற்றிக்கு விளையாட்டு வீரர்களைப் போல் செயல்பட வேண்டும். இருப்பினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் கனவு உங்கள் அனைத்து கனவுகளையும் உணர உதவுகிறது._*📖👨🏻🎓👩🏻🎓
👨🏻🎓👩🏻🎓📖 *_கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டை எடுத்துக் கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது நல்வழிப்படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். படிப்புடன் பல்வேறு கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் போது 'மதரஸா' கல்விமுறை பின்பற்றப்பட்டது. இதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டார்கள். மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன._*📖💝
👨🏻🎓👩🏻🎓📖👆 *_மேற்சொன்ன இரு காலகட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு கல்வித்திட்டம் அப்போதைய லார்ட் மெக்காலேயால் உருவாக்கப்பட்டது. ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அக்கால – மெக்காலேயின் கல்வித்திட்டத்தைத்தான் நாமும் பின்பற்றினோம். இந்தக் கல்வித் திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகைய வழிகாட்டல்களும் இல்லை. மனிதன் யார்? அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான்? அவன் மரணத்திற்குப் பின் எங்கு செல்வான்? இவ்வுலகில் மனிதன் செய்ய வேண்டிய நற்கருமங்கள் என்னென்ன? போன்ற எந்த நல் வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின் மேம்பாடு பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப்படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர்._*😔😞😰
👨🏻🎓👩🏻🎓📖 *_ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் மதபோதனைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது._*😰😞😔
👨🏻🎓👩🏻🎓📖😰 *_நெறிகெட்ட கல்வியின் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்ள நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இவற்றை பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் தொலைக்காட்சிகளையும் தான் சேரும்._*😔😞😰
👨🏻🎓👩🏻🎓📖 *_உலகில் கல்வியறிவு பெறாதவர்கள் அதிகமுள்ளவர்கள் நாடுகள் பட்டி யலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா. அறிக்கையின் படி இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் 2013-14 அனைவருக்கும் கல்வி இயக்க கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 1991-ம் ஆண்டு 48 சதவீதமாக இருந்தது. இது 2006-ம் ஆண்டு 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆயினும் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, கல்வியறிவு பெறாத வயதுவந்தோரின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமுமில்லை._*😔😰
👨🏻🎓👩🏻🎓📖 *_அன்றைய நிலவரப்படி, ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது._*📃
👨🏻🎓👩🏻🎓📖 *_வளமான மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமப்புற மாண வர்கள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வியை (5-ம் வகுப்பு) நிறைவு செய்தனர். இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் 5-ம் வகுப்புப் படிப்பவர்களில் 44 சதவீதம் பேரும், தமிழகத்தில் 53 சதவீதம் மாணவர்களும் மட்டுமே இரட்டை இலக்க வகுத்தல் கணக்குக்கு விடை காண முடிபவர்களாக இருக்கின்றனர்._*
👨🏻🎓👩🏻🎓📖 *_மகாராஷ்டிரம், தமிழக மாநிலங்களில் ஊரகப் பகுதிக ளில் உள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் மாணவர் களை விட மாணவிகள் நன்றாகப் படிக்கின்றனர். 3-ல் 2 மாணவி கள் இரு இலக்க வகுத்தல் கணக்குக்குத் தீர்வு காணும் திறன் பெற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தை விட சிறிய அளவிலேயே மகாராஷ்டிர ஊரகப் பகுதி மாணவ, மாணவியர் முன்னணியில் உள்ளனர். மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரேதச மாநிலங்களில் நிலவும் வறுமை, குழந்தைகள் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஏழை மாணவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே 5-ம் வகுப்பு வரை பயில்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் 85 சதவீத ஏழை மாணவர்கள் ஆரம்பக்கல்வியை நிறைவு செய்கின்றனர்._*😰😔
👨🏻🎓👩🏻🎓📖 *_நன்றாகப் படிப்பவர்களில் 15-வது வயதில் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் போல, கணிதத் தில் குறைவான மதிப்பெண் பெறும் 12 வயது மாணவர்கள் பள்ளியில் இருந்து இடை நிற்பது இருமடங்கு அதிகம். மாணவர்களின் கல்வி பாதிக்கப் படுவதற்கு, ஆசிரியர்கள் வகுப் புக்கு முறையாக வராததும் ஒரு காரணமாகும். அதாவது, ஆசிரியர் பள்ளி அல்லது வகுப்புக்கு வராமல் தவிர்க்கும் வீதம் 10 சதவீதம் உயர்ந்தால் அது 1.8 சதவீத மாணவர்களின் வருகையைக் குறைக்கிறது._*😔😰
👨🏻🎓👩🏻🎓📖 *_தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லாவிட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்._*👍
👨🏻🎓👩🏻🎓📖 *_தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்து விடலாம்._*😔😰
👨🏻🎓👩🏻🎓📖 *_இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்._*😔😰
👨🏻🎓👩🏻🎓📖 *_எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது சில விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்._*👍
👨🏻🎓👩🏻🎓📖 *_கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர்களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்._*👍✅
👨🏻🎓👩🏻🎓📖 *_இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அறிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர்களாக நாட்டின் நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர்களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்._*✅👍💝💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏. _*GK*_ 👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🤩 🏅 *_SP.Vignesh_*👏
🤩 🏅 *_ஜெய் கணேஷ்_*👏
🤩🏅 *_இசையருவி_*👏
🤩🏅 *_Sasikanth Neelakantan_*👏
🤩🏅 *_Kumarb_*👏
🤩🏅 *_🏁ஜான்🔴ழைழா🏁_*👏
🤩🏅 *_Bismi_*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🤩🏅 *_Sheikmom_*👏
🤩🏅 *_Arul_*👏
🤩🏅 *_அ. கந்தன்_*👏
🤩🏅 *_Er.iMech SyeD_*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
😊 *_கருத்து சொல்ற அளவுக்கு நா பெரிய ஆள் இல்லைங்க, என் மனசுக்கு பட்டதை சொல்லனும் தோனுச்சு சொல்லிடுறேன்._*
👉 *_இன்றைய காலகட்டத்தில் பலருக்கு படிப்பின் மீது அதிகளவு வெறுப்பு வந்து விட்டது. அதற்க்கு காரணம் வேலையின்மை மற்றும் அறநெறிகள் எதுவும் கற்றுதரபடவில்லை என்பதே_*
👉 *_உங்கள் அனைவரிடமும் சில விசயம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இங்கு நாம் கற்றுக் கொள்ளும் படிப்பு சரியானது ஆனா கற்று கொடுக்கும் முறை சரியில்லை_*
👉 *_நாம் அனைவரும் நமக்கு பிடித்த பாடத்தை விரும்பி தேர்வு செய்வதே சிறப்பு. சிலருடைய வீட்டில் பெற்றோர்கள் நாம் விரும்பிய பாடத்தை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். அதை அவர்களுக்கு எடுத்து புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். மேலும் நாம் எடுக்கும் பாடப்பிரிவு பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்._*
👉 *_சிறு வயது முதலே நாம் ஆத்திசூடி, திருக்குறள் போன்ற அறநெறி பாடல்களையும், குறள்களையும், நீதி கதைகளையும் படித்துள்ளோம் எத்தனை பேர் அதனை இன்றளவும் பின்பற்றுகிறோம்.???_*
👉 *_அவ்வளவு ஏன் தினமும் முடிவுரையில் பதிவிடபடும் திருக்குறளை எத்தனை பேர் படித்து அதன்படி நடந்துள்ளோம்??_*
👉 *_அப்போ தவறு படிப்பில் கிடையாது, கற்று கொடுக்கும் விதத்தில் இருக்கிறது. கற்று கொண்ட அனைத்தும் மதிப்பெண்ணிற்காகவும், வெளியே நான் படிப்பாளி என்று கர்வம் கொள்ளவும் மனப்பாடமாக படித்து எழுதுவதில் இல்லை கல்வி, நாம் படித்த அறநெறிகளை எந்த சூழ்நிலையிலும் விடாமல் கடைபிடிப்பதே கல்வியில் நாம் கண்ட வெற்றி._*
👉 *_படித்தபடிப்பிற்க்கு வேலை கிடைக்கவில்லை அதனால் எனக்கு படிப்பு பிடிக்கவில்லையென்றால், தவறு கல்வியின் மீது இல்ல தங்களின் மீதுதான் இருக்கிறது. தனக்கு பிடித்த பாட பிரிவை பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் சகட்டு மேனிக்கு முதலாம் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்ற நோக்கில் படித்து வெளியேறுகிறோம் இதற்க்கு பெயர் கல்வியறிவு இல்லை_*
👉 *_சரி செய்முறை கல்வியை ஏன் ஆசிரியர்கள் கற்று கொடுக்கவில்லை அப்போ தவறு அவர்கள் மீதுதானேனு நினைக்கலாம். அப்படியும் நினைத்தால் தவறு அவர்கள் மீது இல்லை உங்கள் மீது தான் என்று நிரூபிக்க முடியும்._*
👉 *_சிறு வயது முதல் கடைசி கட்டம் வரை யாராவது கை பிடித்து நடக்க சொல்வதில்லை தானாக முயற்சி செய்து பிறண்டு, தவழ்ந்து, எதையாவது பிடித்து நின்று கொண்டு பிறகு தான் நடக்க முயற்சிக்கிறோம். சிறு வயதில் இருந்த நம்பிக்கையும், சிந்திக்கும் திறனையும் மறந்து விட்டு அதற்குக் படிப்பை குற்றம் சுமத்துவது சாத்தியமா_*
👉 *_கல்வியின் அருமையை பற்றி ஏழை மற்றும் கல்வி செலவிற்க்கு பணமில்லாத மாணவ, மாணவிகளிடம் கேட்டு பாருங்கள். அதனுடைய வலியும், அருமையும் புரியும்._*
👉 *_கல்வியே வேண்டாம் என்றால் இளைஞர்களின் சக்தியாக விளங்கிய மேதகு டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா நமக்கு கிடைத்திருக்கமாட்டார்கள்._*
👉 *_இன்னும் சொல்லனும் தோனுது பதிவு ரொம்ப பெருசா போய்டும் இத்தோடு முடிச்சுக்குறேன். என்றும் அன்புடன் படிக்காதவன்💝_*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்_*
*_கண்ணென்ப வாழும் உயிர்க்கு_*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்_*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்._*
*_கல்விக்கு இருவர், களவுக் கொருவர்_*
🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
😍 *உதயா யுவா ~ 9500764969*😍
🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏