Saturday, 31 March 2018

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

   *_💝பாகம் - 6⃣💝_*

*_சாகுபடி பரப்பு குறைவதோடு, காவிரியின் கடைமடை பகுதிகளில் கடல் நீர் உட்புகுவது மேலும் அதிகரித்து, சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு ஏற்படும் என எச்சரிக்கிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜ். இந்த வஞ்சனைகளை மூடிமறைத்துத் தமிழகத்திற்கு ஏதோ நியாயம் வழங்கிவிட்டது போலக் காட்டுவதற்காகவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக காலனிய ஆட்சிக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களும் செல்லத்தக்கவைதான், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் மைய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உதார்விட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்._*

*_இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதற்கு, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், ஊடகங்களும் பொழிப்புரை எழுதுகின்றன. இந்தப் பொய்யுரையின் மூலம் வஞ்சனை நிறைந்த இத்தீர்ப்பைத் தமிழக மக்களும் விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையை உருவாக்க முயலுகின்றன._*

*_கடந்த ஆண்டில் இவ்வழக்கு விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதனை மறுத்து, "அதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" என வாதிட்டு, கர்நாடகாவிற்குச் சாதகமாக நடந்து கொண்டது பா.ஜ.க. கூட்டணி அரசு. மைய அரசின் இந்த அடாவடித் தனத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் உச்ச நீதிமன்றமும் சமரசமாகிப் போனது._*

*_காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் படிப்படியாகக் குறைப்பது, அதனையும்கூட  வழங்காமல் டெல்டாவைப் பாலைவனமாக்குவது, அதன் மூலம் டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றியமைப்பது என்ற திட்டத்தின் ஒருபகுதியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது._*

*_தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும், உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவிட்டிருக்கிறது. எனினும் எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்._*

*_இதற்குச் சட்டப்படியான தீர்வு என்பது இனியும் காலந்தாழ்த்தாமல் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்துத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உண்மையாகச் செயல்படுத்துவதே. இந்த விவகாரத்தில் இந்திய அரசு காட்டும் அக்கறையும், தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் அழுத்தமுமே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்._*

*_இறுதியில் ஒரு நாள் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் ஏற்பட்ட பிறகு, அதையும்கூட கர்நாடகம் ஏற்க மறுக்கக் கூடும். வரலாற்றின் சுவரில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியத்தை ஏற்க மறுத்து கர்நாடகம் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கூடும். அதற்கு எதிராக தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும், உடனே முடிவுசெய்யாமல் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிடும் ஆபத்து உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இப்படித்தான் நடந்தது என்பதை மறக்க வேண்டாம். இந்திய அரசு கர்நாடகத்தின் பிடிவாதத்துக்குத் தரும் மதிப்பை தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்குத் தந்து அரசமைப்புச் சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும்._*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

       🏆👏.    *_அருள்முருகஇன்பன்_*    👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑


🤩 🏅 *_SP.Vignesh⁩_*👏

🤩 🏅 *_ஜெய் கணேஷ்⁩_*👏

🤩 🏅 *_Prabakar.😊_*👏

🤩🏅 *_Bismi⁩_*👏

🤩🏅 *_Sasikanth Neelakantan⁩_*👏

🤩🏅 *_Kumarb⁩_*👏

🤩🏅 *_இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩_*👏

🤩🏅 *_sriramkrm⁩_*👏


👑 *கலந்துரையாடல்2⃣*👑

🤩🏅 *_VKR⁩_*👏

🤩🏅 *_Sheikmom⁩_*👏

🤩🏅 *_uuacqq d⁩_*👏

🤩🏅 *_Prabhumathi⁩_*👏

🤩🏅 *_🌷பிரதீப் விஸ்வா 🤝⁩_*👏

🤩🏅 *_மதுரை மலைராஜ்📿⁩_*👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

*தமிழா இந்த அடிமை கட்டமைப்பான மத்திய மாநில அரசையும்,நம் அன்றாட செய்திகளை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து தரோம் னு சொல்ல கூடிய மீடியாவையும் நம்பி இருந்தால்,அவர்களை இனிமேலும் நம்பினால்...*

*உன் அடுத்த தலைமுறை மட்டும் அல்ல உன் தலைமுறைக்கே காசு கொடுத்து நீர் வாங்க வேண்டிய நிலையை சந்திப்பாய்!!!*

*சிந்தித்து பார்!!! உன் சந்ததியின் எதிர்காலம் புரியும்!!!*

*சிந்தித்து பார்!!! ஓட்டை இவர்களுக்கே குத்தி பார் உன் தலைமுறையின் அவலத்தையும் அறிவாய்!!!*

*_அழிவது நம் வளம், அழுவது நம் இனம்_*


❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்_*

*_தீமை இலாத சொலல்_*

    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      
*_உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்._*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை_*

*_சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை_*

*_உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை_*

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

     😍  *உதயா யுவா ~ 9500764969*😍

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-5


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

   *_💝பாகம் - 5⃣💝_*

*_காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசு தனது அணைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர வேண்டும் என அளித்த தீர்ப்பில், 14.75 டி.எம்.சி. நீரைப் பிடுங்கி கர்நாடகாவிற்குக் கொடுத்துவிட்டு, இது சமநிலையான தீர்ப்பு என நாக்கூசும் பொய்யைக் கூறியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். காவிரி டெல்டா பகுதியில் 20 டி.எம்.சி. அளவிற்கு நிலத்தடி நீர் இருக்கிறதென்றும், அதில் 10 டி.எம்.சி. நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, இத்திருட்டை  நியாயப்படுத்தியிருக்கிறார்கள்._*

*_"காவிரி கிடைக்காது; கடல் தண்ணிய வாங்கிக்க.."  என சுப்பிரமணிய சுவாமி  கொழுப்பெடுத்துப் பேசியதற்கும், "காவிரிக்குப் பதிலாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துங்கள்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரத்தோடு உத்தரவிட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடில்லை. தமிழகத்தை வஞ்சிப்பதில் சு.சாமியைப் போலவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சிந்திக்கிறார்கள்._*

*_காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டத்திலிருந்து 21.5 மீட்டருக்குக் கீழும், கடலூர் மாவட்டத்தில் 25.5 மீட்டருக்கும் கீழும் சென்றுவிட்டது. இம்மட்டம் நாகை மாவட்டத்தில் 6.5 மீட்டருக்குக் கீழும், திருவாரூர் மாவட்டத்தில் 9.2 மீட்டருக்கும் கீழும் உள்ளது. தஞ்சை, கடலூர் மாவட்டங்களைவிட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் தரைமட்டத்திலிருந்து அதிக ஆழத்தில் இல்லையென்றாலும், இம்மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையை எட்டியிருக்கிறது._*

*_சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழ்குழாய் மூலம் சாகுபடி நடந்துவந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் தற்பொழுது நிலத்தடி நீர் உவராகிவிட்டது. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள நன்னிலம், திருமருகல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வட்டாரங்களிலும்; கல்லணைக்கு அருகேயுள்ள பூதலூர், மாரனேரி, விண்ணமங்கலம், கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் வட்டாரங்களிலும் கிடைக்கும் நிலத்தடி நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாது._*

*_கல்லணை கால்வாய் பாசனப் பகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசமுத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் நிலத்தடி நீர் 120 மீட்டருக்குக் கீழாகச் சென்றுவிட்டது. இப்பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் கிணறைத் தோண்டுவதற்கு ஏறத்தாழ 8 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டுமென்பதால், குறு, சிறு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை._*

*_இதுதான் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவிவரும் எதார்த்த நிலை. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுத்துச் சாகுபடிக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்குமானால், 2016-ஆம் ஆண்டு வறட்சியின்போது அம்மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்?  இந்த உண்மைகளை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, சாகுபடிக்கு நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ளுங்கள் என உத்தரவில் எந்த வித நீதியும் கிடைக்கவில்லை_*

*_சாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூறும் இத்தீர்ப்பு அறமும், அறிவும் அற்றது மட்டுமல்ல, ஒருபக்கச் சார்பான ஓரவஞ்சனை கொண்டதாகும். தமிழகத்திற்கு ஒதுக்கும் நீரைக் குறைக்க வேண்டும் எனக் கோரிய கர்நாடகா அரசுதான் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏராளமான நிலத்தடி நீர் இருப்பதாக வாதாடியது.  நடுவர் மன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட கர்நாடகா அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகா மாநிலத்தில் கிடைக்கும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை._*

*_கர்நாடக அரசு நிலத்தடி நீர் குறித்து 2016-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், அம்மாநிலத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது; 97 சதவீத நிலத்தடி நீர்க் குடிப்பதற்கு உகந்தது எனக் கூறியிருக்கிறது. இதில் ஒரு சதவீதம்கூட எடுத்துப் பயன்படுத்துமாறு உத்தரவிடாத நீதிபதிகள், தமிழகத்திடமிருந்து 14.75 டி.எம்.சி. நீரைத் தட்டிப் பறித்து, இந்த ஓரவஞ்சகமான நடவடிக்கையை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை என்ற பெயரில் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்._*

*_பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்கெனவே தினமும் 140 கோடி லிட்டர் நீர் காவிரியிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் நீரில் 52 சதவீத நீர் தேவையற்ற விதத்தில் வீணடிக்கப்படுவதாக பெங்களூரு சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியிருக்கிறது._*

*_இந்தக் குற்றத்தைச் செய்யும் கயவர்கள் யார்? பெங்களூருவைச் சுற்றி அமைந்துள்ள ஷாப்பிங் மால்கள், நீர்ப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள், குதிரைப் பந்தய மைதானங்கள், செயற்கை கடல்கள், ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். இக்கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பெங்களூரு குடிநீர்த் தேவையின் பெயரில் எடுக்கப்படும் நீரில் 50 சதவீதத்திற்கும் மேலாக, 72 கோடி லிட்டர் நீரைப் பெறுகிறார்கள்._*

*_இந்த கார்ப்பரேட் கும்பல் அடைந்திருக்கும் வளர்ச்சியைத்தான் பெங்களூரு நகர உலகத்தர அந்தஸ்தாக நீதிபதிகள் காட்டுகிறார்கள். இவர்களின் நீர்த் தேவைக்காகத் தமிழக விவசாயிகளின் நீர்த் தேவையைப் பலியிட்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் ஓரவஞ்சனை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்றுரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது எனத் தீர்ப்பில் எழுதி, கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது. கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த வரம்பை ரத்து செய்துவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என உத்தரவிட்டு தமிழகத்தின் மீது இரட்டைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது._*

*_கர்நாடகத்தின் இழப்பு குறித்து மூக்கைச் சிந்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், 1974 தொடங்கி தமிழகத்திற்கு கர்நாடகம் இழைத்து வரும் அநீதி குறித்து வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மூன்று அணைகளைச் சட்டவிரோதமாகக் கட்டி இயக்கிவருகிறது, கர்நாடகம். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, அதன் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இவை எதனையும் நடைமுறைப்படுத்தாமல், தமிழகத்தின் டெல்டா பகுதியை உபரி நீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாக மாற்றிவிட்டது. கர்நாடகம் இழைத்துவரும் இந்த அநீதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலாவது முடிவு வரும் என எதிர்பார்த்திருந்த தமிழக மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்._*

*_கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பை நீக்கியதன் மூலமும், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் அதிகரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாலும், அம்மாநிலத்தில் மேலும் 1 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காவிரி பாசனப் பரப்பின் வரும் எனக் கூறப்படுகிறது. அதேபொழுதில் தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏறத்தாழ 88,500 ஏக்கர் நிலப்பரப்பு தரிசாகும் அபாயம் எழுந்து நிற்கிறது._*

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-4

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

     *_💝பாகம் - 4⃣💝_*

*_2017, ஜூலை - 14 :  இறுதித்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் - தமிழ்நாடு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் முறையான விசாரணை தொடங்கியது. அதன் வாதங்கள் 2017, செப்டம்பர் - 20 :  உச்ச நீதிமன்றத்தில் நீர் ஒதுக்கீடு தொடர்பான வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது._*

*_2018, ஜனவரி - 9 : இந்நிலையில், காவிரி பிரச்சினையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாக்கப்பட்டன, இதனை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்._*

*_பிப் 16,2018 காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. _*

*_இதற்குப் பிறகு, இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து, தீர்ப்பின் 456-57ஆம் பக்கங்களில் பேசும் உச்ச நீதிமன்றம், "இதற்கென ஒரு திட்டத்தை (Scheme) உருவாக்குவதன் நோக்கமே, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல் படுத்துவதற்காகத்தான்.. இதற்கான திட்டத்தை மத்திய அரசு இன்றிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும். அப்போதுதான், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள், நடுவர் மன்றத்தின் ஆணையை எளிதாகச் செயல்படுத்துவதோடு, எங்களால் விதிக்கப்பட்டபடி மாநிலங்களின் உரிமையையும் செயல்படுத்த முடியும்" என்று குறிப்பிடுகிறது._*

*_பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில், மார்ச் 29ஆம் தேதியோடு உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வாரக் கெடு முடிவடைந்தது. இந்நிலையில்தான் இந்த வரிகளில் குறிப்பிட்டிருக்கும் Scheme என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது._*

*_கர்நாடகத்தின் தரப்பிலும்கூட Scheme என்றுதான் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறதே தவிர, காவிரி மேலாண்மைவாரியம் எனக் குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டனர். குஜராத்தில் உள்ள நர்மதா நீர் ஆணையத்தைப் போல ஒன்றை உருவாக்கலாம் எனவும் வாதிடப்பட்டது._*

*_ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் என்பதையே Scheme என்ற வார்த்தை குறிப்பிடுகிறது; ஆகவே, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும் என்கிறது தமிழகத் தரப்பு. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஊன்றிப் படித்தவர்கள், Scheme என குறிப்பிடப்படுவது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விரிவாகப் பேசும் உச்ச நீதிமன்றம், அந்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு குறித்து அந்தத் தீர்ப்பிலேயே கூறப்பட்டிருப்பதை மேற்கோள்காட்டியுள்ளது._*

*_தன்னுடைய இறுதித் தீர்ப்பு எந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டுமென நடுவர் மன்றம் கூறியிருப்பதை தீர்ப்பின் 335-336ஆம் பக்கங்களில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டினர்._* 

*_இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்டத்தை (Scheme) வகுக்க வேண்டுமெனக் கூறினால், அது ஒரு குழப்பமான சூழலுக்கு இட்டுச்செல்லக்கூடும் என நடுவர் மன்றம் கருதுகிறது. 1980ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான தாவா சட்டமும் இம்மாதிரியான ஒரு அமைப்பை உருவாக்கி செயல்படுத்துவது குறித்து ஏதும் கூறவில்லை. என்றாலும்கூட, இது தொடர்பான பரிந்துரையை அளிக்க நடுவர் மன்றத்திற்கு இந்தச் சட்டம் அதிகாரமளிக்கிறது. அதன் அடிப்படையில், பக்ரா - பீஸ் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்ததைப் போல காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைக்க வேண்டும்" என காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது._*

*_தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்ததைத் தவிர்த்த பிற விஷயங்களில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே, Scheme என்று சொல்லப்படுவது காவிரி மேலாண்மை வாரியம்தான். ஓரிடத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் ரஞ்சித் குமார், Schemeஐ வேண்டுமென்றால் (may) அமைக்கலாம் என்று தீர்ப்பளிக்கும்படி வாதிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், அவரது வாதத்தை ஏற்காமல் கண்டிப்பாக (Shall) அமைக்க வேண்டுமெனக் கூறியது. ஆகவே Scheme என்பது மேலாண்மை வாரியம்தான்" என்கிறார் உச்ச நீதிமன்ற விவகாரங்களை நீண்ட காலமாக கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர் ஜே. வெங்கடேசன்_*

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-3


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

     *_💝பாகம் - 3⃣💝_*

*_2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சிதான். கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. அதுவும்கூடக் கிடைக்க வழியில்லாமல் தவித்தது தமிழகம்._*

*_தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, மீளாய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன. இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) பின்வருமாறு அட்டவணையிடப்பட்டது: ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5._*

*_ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறைக் காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து நின்றது._*

*_மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி ஆற்று ஆணையத் தலைவர் என்ற முறையில் 2012-ல் ஒரு முறை, நாளொன்றுக்கு ஒரு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் கட்டளையிட்டார். கர்நாடக அரசு இந்தக் கட்டளையை நிறைவேற்ற மறுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயிற்று. வேறு வழியின்றி தண்ணீர் திறந்துவிட்ட பின், கர்நாடகத்தில் பரவலான வன்முறைக் கிளர்ச்சி மூண்டது._*

*_தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு 2013 பிப்ரவரி 20 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அந்த நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. 1991, 2001, 2012 ஆண்டுகளில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைவு என்று தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்து வன்முறைக் கிளர்ச்சி நடைபெற்றது._*

*_நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 2007ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, 2013ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் 2013 மார்ச் மாதத்தில் வழக்கு தொடர்ந்தது._*

*_2013 மே மாதத்தில் காவிரி நீர் திறப்பை உறுதி செய்வதற்கான காவிரி கண்காணிப்பு குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் தற்காலிக உத்தரவை மத்திய அரசு 2013 மே 24ம் தேதி வெளியிட்டது. எனினும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டது._*

*_இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் 2013 ஜூன் 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 28ம் தேதி கர்நாடக முதல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வ‌ழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மே 13ம் தேதி நீதிபதி பி.எஸ் சவுஹான் காவிரி நடுவர் மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் நடுவர்‌ மன்றத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலவில்லை._*

*_2016ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்தில் சட்ட ஆணைய தலைவராக நியமனம் பெற்ற சவுஹான் காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஆண்டும் போதிய தண்ணீர் கையிருப்பு இல்லை எனக் கூறி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து விட்டது. 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை கடந்த மாதம் மீண்டும் அணுகியது._*

*_உச்சநீதிமன்ற நீதிபதியே... 'வாழுங்கள்... வாழவிடுங்கள்...' என்று கருணை அடிப்படையில் தமிழகத்துக்கு நீரை ஒதுக்குங்கள் என்று கூறி விநாடிக்கு 15000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்._*

*_இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ம் தேதிவரை விநாடிக்கு 12000 கனஅடி தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் வன்முறை வெடித்தது._*

*_டெல்லியில் செப்டம்பர் 19ம் தேதி கூடிய காவிரி மேற்பார்வைக்குழு, செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு முறையிட்டது._*

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-2


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

  *_💝பாகம் - 2⃣💝_*

*_கல்லணையிலிருந்து காவிரி கவைகவையாகக் கிளைவிட்டு அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு, புது ஆறு, மன்னியாறு என்று பலவாகப் பிரிந்து, காவிரிக் கழிமுகம் (டெல்டா) படர்ந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தைப் படைக்கிறது. கல்லணையிலிருந்து வெளியேறும் சராசரி நீரளவு: வினாடிக்கு 8,324 கன அடி. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் (12,000 ச.கி.மீ.) நிலப்பரப்பு காவிரிப் பாசனம் பெறுகிறது. காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள உழவர் தொகை பல லட்சங்களைத் தாண்டும். நைல் நதிக்கும் எகிப்திய நாகரிகத்துக்கும் உள்ள அதே உயிர்த் தொடர்பு காவிரி ஆற்றுக்கும் பழந் தமிழர் நாகரிகத்துக்கும் உண்டு. தமிழ்நாட்டில் விவசாயம் மட்டும் அல்ல; வீராணம் திட்டவழி சென்னையின் குடிநீர்த் தேவையையும் காவிரிதான் பூர்த்திசெய்கிறது. காவிரியால் குடிநீர் பெறும் கிராமங்கள், நகரங்கள் ஏராளம். ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதியாகி மாறியது😓_*

*_1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூரு - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப் பகிர்வு நடந்துவந்தது._*

*_1956-ல் மொழிவழி மாநில மறுசீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று. 1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது. கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது._*

*_1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி ஆயக்கட்டு (நீர்ப்பாசனப் பரப்பு) 25,80,000 ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் ஆயக்கட்டு 6,80,000 ஏக்கர் என்றும் தெரியவந்தது. தமிழகம் தன் ஆயக்கட்டைச் சுருங்கவிடக் கூடாது என்றும், கர்நாடகம் தன் ஆயக்கட்டை விரிவாக்க வேண்டும் என்றும் விரும்பியதுதான் உடன்பாடு ஏற்பட முடியாமல் போனதற்குக் காரணம்._*

*_1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதால் திரும்பப் பெற்றது. இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான உறுப்பு 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பூசல் சட்டம், 1956 என்பது தீராத சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது._*

*_1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது. தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3._*

*_உடனே தண்ணீர் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது._*

*_1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு. மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு வரையறுக்கப்பட்டது._*

*_கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை (ஆயக்கட்டு) அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது._*

*_தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன._*

*_1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது._*

*_உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழ்நாடு தீர்ப்பாயத்தை அணுகியது. தீர்ப்பாயம் 11 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. கர்நாடகம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியபோது, பிரதமர் நரசிம்ம ராவ் இதில் தலையிட நீதிமன்றம் ஆணையிட்டது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டார்._*

*_1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை._*

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-1


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*_நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்._*

    *_💝நெப்போலியன்💝_*

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*_நம் அரசாங்கத்தை நீங்கள் சஹாரா பாலைவனத்தில் ஆட்சி செய்ய வைத்தால், 5 ஆண்டுகளில் மணல் பற்றாகுறை இருக்கும்._*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

    *_💝பாகம் - 1⃣💝_*

*_கலந்துரையாடல் குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம்🙏🏻. பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ._*

*_இயற்கை ஆறுகள் நேர்க்கோட்டில் பாய்வதில்லை. காவிரி பொதுவாக தெற்கு, கிழக்கு திசைகளில் ஓடுகிறது. அது பாயும் நில அமைப்பு முதலில் குடகின் மலைப் பகுதியாகவும் பிறகு, தக்கணப் பீடபூமியின் மேட்டு நிலமாகவும், இறுதியில் தமிழகத்தின் சமவெளியாகவும் அமைகிறது. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு (ஊரகம்), சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாகவும், தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகவும் காவிரி பாய்கிறது. நகரங்கள் கர்நாட கத்தில் குசால்நகர், மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணம். தமிழ்நாட்டில் மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தலை, திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார்._*

*_துணையாறுகள், கிளையாறுகள் உட்பட காவிரியின் வடிநிலம் எனப்படும் மொத்த நீரேந்துப் பரப்பு 81,303 சதுர கி.மீ. தமிழ்நாட்டில் 43,856 ச.கி.மீ., கர்நாடகத்தில் 34,273 ச.கி.மீ., கேரளத்தில் 2,866 ச.கி.மீ., புதுவையில் 160 ச.கி.மீ. காவிரியில் பாயும் சராசரி நீரளவு வினாடிக்கு 23,908 கன அடி._*

*_குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. ககனசுக்கி அருவியில்தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை நோக்கிப் பாய்ந்து செல்கிறது. இங்கு அது ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது._*

*_மாநில எல்லை தாண்டி தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி (1.62 கி.மீ.), உயரம் 176 அடி (54 மீ). மேட்டூர் அணை தோற்றுவித்த நீர்நிலையான ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் பரப்பு 155 சதுர கிமீ ஆகும்._*

*_மேட்டூரிலிருந்து புறப்பட்டுவரும் காவிரியுடன் பவானி ஆறு சேர்கிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின்பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. பெயர்தந்த அந்த இரு நீரோடைகளில் ஒன்று காவிரி, மற்றது காளிங்கராயன் வாய்க்கால். பிறகு, கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது._*

*_முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் ஆகிறது. வெள்ளப் பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் கொள்ளிடம் என்று பெயர். காவிரிக்குக் கொள்ளிடம் வடிகால் என்பதுபோல் காவிரிக் கழிமுகத்தில் பாயும் முதன்மையான எல்லா ஆறுகளுக்கும் வடிகால் ஆறுகள் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் நீர்ப்பாசன வாய்க்கால்போலவே வடிகால் வாய்க்காலும் இருப்பது பழந் தமிழரின் சிறந்த நீர் மேலாண்மைக்கு ஒரு சான்று._*

*_ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டுக்கடங்காத காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் கல்லணை கட்டினான். மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை என்பது கல்லணையின் சிறப்பு. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள நான்காவது பழைய அணை. நீர்த்தேக்கம் என்பதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று கல்லணையைச் சொல்லலாம். பழந் தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவுக்குச் சான்று. கல்லணை கட்டியதோடு அங்கிருந்து பூம்புகார் வரை காவிரிக்குக் கரை கட்டியவன் கரிகாலன்._*

Friday, 30 March 2018

இன்றைய கால கட்டத்தில் படிப்பறிவு தேவையா? இல்லையா?


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :29.03.2018.* 
         🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்*

💐 *ஜான்மில்டன்.*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *_கல்வி என்பது ஆடம்பரமோ அல்லது அடகு வைக்ககூடிய பொருளோ அல்ல கல்வி என்பது நமக்கான உரிமை_*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*இன்றைய கால கட்டத்தில் படிப்பறிவு தேவையா? இல்லையா?*

👨🏻‍🎓👩🏻‍🎓🎒📖📚🤔👨🏻‍🎓👩🏻‍🎓🎒📖📚

😇 *_கலந்துரையாடல் குழுவில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம். 🙏நீங்கள் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள் என்றால், உலகத்தில் உள்ள நல்ல விஷயங்களை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக கல்வி கற்க வேண்டும். சமூகதில் நற்பெயருடன் இருக்க நன்றாக படிக்க வேண்டும்.நான் ஒரு படித்த நபர் என்று சொல்வதில் பல நன்மைகள் உள்ளது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோரின் வாக்கு. இதனை மனதில் நிறுத்தி நன்றாக படிக்க வேண்டும். கல்வி என்பது ஒரு உறுதிமிக்க மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான வாழ்க்கைக்கும் அவசியம்._*🤩💝

👨🏻‍🎓👩🏻‍🎓💝 *_எல்லோரும் சமமான வாய்ப்புகளை வழங்கியுள்ள இடமாக உலகைப் பார்க்க விரும்பினால், கல்வி தேவைப்படுகிறது. வேறுபட்ட சமூக வகுப்புகள் மற்றும் பாலினர்களிடையே இருக்கும் வேறுபாடுகளுடன் நாம் விலகிச் செல்ல விரும்பினால் கல்வி என்பது ஒரு கட்டாயம். ஏழைகளுக்கு வாய்ப்புகளை உலகம் முழுவதும் திறந்து விடுகிறது,இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி என்பது பெண்களின் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது._*📚📖

👨🏻‍🎓👩🏻‍🎓📚 *_நீங்கள் சுய சார்புள்ள நபராக விரும்பினால் கல்வி மிகவும் முக்கியம். நீங்கள் நிதி ரீதியாக சுயாதீனமாக ஆக உதவுவது கல்வி,நீங்கள் உங்கள் சொந்த முடிவை எடுக்க முடியும் என்று கல்வி உங்களை வலுவடைய செய்கிறது. உண்மையில் உங்கள் கனவுகளை மாற்றியமைக்கிறது உங்கள் கனவு என்ன, வாழ்க்கையில் உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் செல்வந்தர்களா? பிரபலமாக இருக்க விரும்புகிறீர்களா? மக்களை மதிக்கும் ஒரு மிக வெற்றிகரமான நபராக நீங்கள் விரும்புகிறீர்களா? இது அனைத்திற்கும் முக்கியமானது கல்வி. நிச்சயமாக, கல்வி களத்தில் தங்கள் வெற்றிக்கு விளையாட்டு வீரர்களைப் போல் செயல்பட வேண்டும். இருப்பினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் கனவு உங்கள் அனைத்து கனவுகளையும் உணர உதவுகிறது._*📖👨🏻‍🎓👩🏻‍🎓

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் ‎கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டை எடுத்துக் கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது ‎நல்வழிப்படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு ‎அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். ‎படிப்புடன் பல்வேறு கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் ‎போது 'மதரஸா' கல்விமுறை பின்பற்றப்பட்டது. இதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் ‎கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் ‎மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் ‎கொண்டார்கள். மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் ‎தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன._*📖💝

👨🏻‍🎓👩🏻‍🎓📖👆 *_மேற்சொன்ன இரு காலகட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி ‎மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு ‎கல்வித்திட்டம் அப்போதைய லார்ட் மெக்காலேயால் உருவாக்கப்பட்டது. ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற ‎பின்னரும் அக்கால – மெக்காலேயின் கல்வித்திட்டத்தைத்தான் நாமும் பின்பற்றினோம். இந்தக் ‎கல்வித் திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகைய வழிகாட்டல்களும் இல்லை. மனிதன் யார்? அவன் ‎எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான்? அவன் மரணத்திற்குப் பின் எங்கு செல்வான்? இவ்வுலகில் மனிதன் செய்ய ‎வேண்டிய நற்கருமங்கள் என்னென்ன? போன்ற எந்த நல் வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின் மேம்பாடு ‎பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் ‎கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப்படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் 'கண்டதே ‎காட்சி கொண்டதே கோலம்' என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு ‎விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர்._*😔😞😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித ‎வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் ‎மதபோதனைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ‎ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி ‎அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் ‎தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது._*😰😞😔

👨🏻‍🎓👩🏻‍🎓📖😰 *_நெறிகெட்ட கல்வியின் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச ‎அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், ‎கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா,  அபின், ஹெராயின் போன்ற ‎போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்ள ‎நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இவற்றை ‎பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர ‎மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் ‎தொலைக்காட்சிகளையும் தான் சேரும்._*😔😞😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_உலகில் கல்வியறிவு பெறாதவர்கள் அதிகமுள்ளவர்கள் நாடுகள் பட்டி யலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா. அறிக்கையின் படி இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் 2013-14 அனைவருக்கும் கல்வி இயக்க கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 1991-ம் ஆண்டு 48 சதவீதமாக இருந்தது. இது 2006-ம் ஆண்டு 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆயினும் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, கல்வியறிவு பெறாத வயதுவந்தோரின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமுமில்லை._*😔😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_அன்றைய நிலவரப்படி, ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது._*📃

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_வளமான மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமப்புற மாண வர்கள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வியை (5-ம் வகுப்பு) நிறைவு செய்தனர். இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் 5-ம் வகுப்புப் படிப்பவர்களில் 44 சதவீதம் பேரும், தமிழகத்தில் 53 சதவீதம் மாணவர்களும் மட்டுமே இரட்டை இலக்க வகுத்தல் கணக்குக்கு விடை காண முடிபவர்களாக இருக்கின்றனர்._*

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_மகாராஷ்டிரம், தமிழக மாநிலங்களில் ஊரகப் பகுதிக ளில் உள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் மாணவர் களை விட மாணவிகள் நன்றாகப் படிக்கின்றனர். 3-ல் 2 மாணவி கள் இரு இலக்க வகுத்தல் கணக்குக்குத் தீர்வு காணும் திறன் பெற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தை விட சிறிய அளவிலேயே மகாராஷ்டிர ஊரகப் பகுதி மாணவ, மாணவியர் முன்னணியில் உள்ளனர். மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரேதச மாநிலங்களில் நிலவும் வறுமை, குழந்தைகள் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஏழை மாணவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே 5-ம் வகுப்பு வரை பயில்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் 85 சதவீத ஏழை மாணவர்கள் ஆரம்பக்கல்வியை நிறைவு செய்கின்றனர்._*😰😔

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_நன்றாகப் படிப்பவர்களில் 15-வது வயதில் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் போல, கணிதத் தில் குறைவான மதிப்பெண் பெறும் 12 வயது மாணவர்கள் பள்ளியில் இருந்து இடை நிற்பது இருமடங்கு அதிகம். மாணவர்களின் கல்வி பாதிக்கப் படுவதற்கு, ஆசிரியர்கள் வகுப் புக்கு முறையாக வராததும் ஒரு காரணமாகும். அதாவது, ஆசிரியர் பள்ளி அல்லது வகுப்புக்கு வராமல் தவிர்க்கும் வீதம் 10 சதவீதம் உயர்ந்தால் அது 1.8 சதவீத மாணவர்களின் வருகையைக் குறைக்கிறது._*😔😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லாவிட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து ‎மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது ‎இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் ‎நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை வருங்கால சமுதாயத்தை ‎வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக ‎அமையும்._*👍

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க ‎வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் ‎எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. ‎பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல ‎கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய ‎தவறாகவும் அமைந்து விடலாம்._*😔😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான ‎நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் ‎தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி ‎நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் ‎கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் ‎விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ ‎மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய ‎பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய ‎முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்._*😔😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் ‎பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் ‎பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது சில விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்._*👍

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல ‎பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை ‎மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் ‎நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர்களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் ‎கொள்ள வேண்டும்._*👍✅

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அறிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே ‎தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய ‎அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த ‎வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் ‎நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர்களாக நாட்டின் ‎நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர்களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் ‎அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்._*✅👍💝💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

       🏆👏.    _*GK*_    👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑


🤩 🏅 *_SP.Vignesh⁩_*👏

🤩 🏅 *_ஜெய் கணேஷ்⁩_*👏

🤩🏅 *_இசையருவி⁩_*👏

🤩🏅 *_Sasikanth Neelakantan⁩_*👏

🤩🏅 *_Kumarb⁩_*👏

🤩🏅 *_🏁ஜான்🔴ழைழா🏁⁩_*👏

🤩🏅 *_Bismi⁩_*👏


👑 *கலந்துரையாடல்2⃣*👑

🤩🏅 *_Sheikmom⁩_*👏

🤩🏅 *_Arul⁩_*👏

🤩🏅 *_அ. கந்தன்⁩_*👏

🤩🏅 *_Er.iMech SyeD⁩_*👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

😊 *_கருத்து சொல்ற அளவுக்கு நா பெரிய ஆள் இல்லைங்க, என் மனசுக்கு பட்டதை சொல்லனும் தோனுச்சு சொல்லிடுறேன்._*

👉 *_இன்றைய காலகட்டத்தில் பலருக்கு படிப்பின் மீது அதிகளவு வெறுப்பு வந்து விட்டது. அதற்க்கு காரணம் வேலையின்மை மற்றும் அறநெறிகள் எதுவும் கற்றுதரபடவில்லை என்பதே_*

👉 *_உங்கள் அனைவரிடமும் சில விசயம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இங்கு நாம் கற்றுக் கொள்ளும் படிப்பு சரியானது ஆனா கற்று கொடுக்கும் முறை சரியில்லை_*

👉 *_நாம் அனைவரும் நமக்கு பிடித்த பாடத்தை விரும்பி தேர்வு செய்வதே சிறப்பு. சிலருடைய வீட்டில் பெற்றோர்கள் நாம் விரும்பிய பாடத்தை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். அதை அவர்களுக்கு எடுத்து புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். மேலும் நாம் எடுக்கும் பாடப்பிரிவு பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்._*

👉 *_சிறு வயது முதலே நாம் ஆத்திசூடி, திருக்குறள் போன்ற அறநெறி பாடல்களையும், குறள்களையும், நீதி கதைகளையும் படித்துள்ளோம் எத்தனை பேர் அதனை இன்றளவும் பின்பற்றுகிறோம்.???_*

👉 *_அவ்வளவு ஏன் தினமும் முடிவுரையில் பதிவிடபடும் திருக்குறளை எத்தனை பேர் படித்து அதன்படி நடந்துள்ளோம்??_*

👉 *_அப்போ தவறு படிப்பில் கிடையாது, கற்று கொடுக்கும் விதத்தில் இருக்கிறது. கற்று கொண்ட அனைத்தும் மதிப்பெண்ணிற்காகவும், வெளியே நான் படிப்பாளி என்று கர்வம் கொள்ளவும் மனப்பாடமாக படித்து எழுதுவதில் இல்லை கல்வி, நாம் படித்த அறநெறிகளை எந்த சூழ்நிலையிலும் விடாமல் கடைபிடிப்பதே கல்வியில் நாம் கண்ட வெற்றி._*

👉 *_படித்தபடிப்பிற்க்கு வேலை கிடைக்கவில்லை அதனால் எனக்கு படிப்பு பிடிக்கவில்லையென்றால், தவறு கல்வியின் மீது இல்ல தங்களின் மீதுதான் இருக்கிறது. தனக்கு பிடித்த பாட பிரிவை பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் சகட்டு மேனிக்கு முதலாம் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்ற நோக்கில் படித்து வெளியேறுகிறோம் இதற்க்கு பெயர் கல்வியறிவு இல்லை_*

👉 *_சரி செய்முறை கல்வியை ஏன் ஆசிரியர்கள் கற்று கொடுக்கவில்லை அப்போ தவறு அவர்கள் மீதுதானேனு நினைக்கலாம். அப்படியும் நினைத்தால் தவறு அவர்கள் மீது இல்லை உங்கள் மீது தான் என்று நிரூபிக்க முடியும்._*

👉 *_சிறு வயது முதல் கடைசி கட்டம் வரை யாராவது கை பிடித்து நடக்க சொல்வதில்லை தானாக முயற்சி செய்து பிறண்டு, தவழ்ந்து, எதையாவது பிடித்து நின்று கொண்டு பிறகு தான் நடக்க முயற்சிக்கிறோம். சிறு வயதில் இருந்த நம்பிக்கையும், சிந்திக்கும் திறனையும் மறந்து விட்டு அதற்குக் படிப்பை குற்றம் சுமத்துவது சாத்தியமா_*

👉 *_கல்வியின் அருமையை பற்றி ஏழை மற்றும் கல்வி செலவிற்க்கு பணமில்லாத மாணவ, மாணவிகளிடம் கேட்டு பாருங்கள். அதனுடைய வலியும், அருமையும் புரியும்._*

👉 *_கல்வியே வேண்டாம் என்றால் இளைஞர்களின் சக்தியாக விளங்கிய மேதகு டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா நமக்கு கிடைத்திருக்கமாட்டார்கள்._*

👉 *_இன்னும் சொல்லனும் தோனுது பதிவு ரொம்ப பெருசா போய்டும் இத்தோடு முடிச்சுக்குறேன். என்றும் அன்புடன் படிக்காதவன்💝_*


❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்_*

*_கண்ணென்ப வாழும் உயிர்க்கு_*

    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

*_எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்_*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்._*

*_கல்விக்கு இருவர், களவுக் கொருவர்_*

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

     😍  *உதயா யுவா ~ 9500764969*😍

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...