Saturday, 31 March 2018

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

   *_💝பாகம் - 6⃣💝_*

*_சாகுபடி பரப்பு குறைவதோடு, காவிரியின் கடைமடை பகுதிகளில் கடல் நீர் உட்புகுவது மேலும் அதிகரித்து, சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு ஏற்படும் என எச்சரிக்கிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜ். இந்த வஞ்சனைகளை மூடிமறைத்துத் தமிழகத்திற்கு ஏதோ நியாயம் வழங்கிவிட்டது போலக் காட்டுவதற்காகவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக காலனிய ஆட்சிக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களும் செல்லத்தக்கவைதான், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் மைய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உதார்விட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்._*

*_இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதற்கு, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், ஊடகங்களும் பொழிப்புரை எழுதுகின்றன. இந்தப் பொய்யுரையின் மூலம் வஞ்சனை நிறைந்த இத்தீர்ப்பைத் தமிழக மக்களும் விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையை உருவாக்க முயலுகின்றன._*

*_கடந்த ஆண்டில் இவ்வழக்கு விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதனை மறுத்து, "அதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" என வாதிட்டு, கர்நாடகாவிற்குச் சாதகமாக நடந்து கொண்டது பா.ஜ.க. கூட்டணி அரசு. மைய அரசின் இந்த அடாவடித் தனத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் உச்ச நீதிமன்றமும் சமரசமாகிப் போனது._*

*_காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் படிப்படியாகக் குறைப்பது, அதனையும்கூட  வழங்காமல் டெல்டாவைப் பாலைவனமாக்குவது, அதன் மூலம் டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றியமைப்பது என்ற திட்டத்தின் ஒருபகுதியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது._*

*_தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும், உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவிட்டிருக்கிறது. எனினும் எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்._*

*_இதற்குச் சட்டப்படியான தீர்வு என்பது இனியும் காலந்தாழ்த்தாமல் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்துத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உண்மையாகச் செயல்படுத்துவதே. இந்த விவகாரத்தில் இந்திய அரசு காட்டும் அக்கறையும், தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் அழுத்தமுமே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்._*

*_இறுதியில் ஒரு நாள் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் ஏற்பட்ட பிறகு, அதையும்கூட கர்நாடகம் ஏற்க மறுக்கக் கூடும். வரலாற்றின் சுவரில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியத்தை ஏற்க மறுத்து கர்நாடகம் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கூடும். அதற்கு எதிராக தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும், உடனே முடிவுசெய்யாமல் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிடும் ஆபத்து உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இப்படித்தான் நடந்தது என்பதை மறக்க வேண்டாம். இந்திய அரசு கர்நாடகத்தின் பிடிவாதத்துக்குத் தரும் மதிப்பை தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்குத் தந்து அரசமைப்புச் சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும்._*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

       🏆👏.    *_அருள்முருகஇன்பன்_*    👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑


🤩 🏅 *_SP.Vignesh⁩_*👏

🤩 🏅 *_ஜெய் கணேஷ்⁩_*👏

🤩 🏅 *_Prabakar.😊_*👏

🤩🏅 *_Bismi⁩_*👏

🤩🏅 *_Sasikanth Neelakantan⁩_*👏

🤩🏅 *_Kumarb⁩_*👏

🤩🏅 *_இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩_*👏

🤩🏅 *_sriramkrm⁩_*👏


👑 *கலந்துரையாடல்2⃣*👑

🤩🏅 *_VKR⁩_*👏

🤩🏅 *_Sheikmom⁩_*👏

🤩🏅 *_uuacqq d⁩_*👏

🤩🏅 *_Prabhumathi⁩_*👏

🤩🏅 *_🌷பிரதீப் விஸ்வா 🤝⁩_*👏

🤩🏅 *_மதுரை மலைராஜ்📿⁩_*👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

*தமிழா இந்த அடிமை கட்டமைப்பான மத்திய மாநில அரசையும்,நம் அன்றாட செய்திகளை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து தரோம் னு சொல்ல கூடிய மீடியாவையும் நம்பி இருந்தால்,அவர்களை இனிமேலும் நம்பினால்...*

*உன் அடுத்த தலைமுறை மட்டும் அல்ல உன் தலைமுறைக்கே காசு கொடுத்து நீர் வாங்க வேண்டிய நிலையை சந்திப்பாய்!!!*

*சிந்தித்து பார்!!! உன் சந்ததியின் எதிர்காலம் புரியும்!!!*

*சிந்தித்து பார்!!! ஓட்டை இவர்களுக்கே குத்தி பார் உன் தலைமுறையின் அவலத்தையும் அறிவாய்!!!*

*_அழிவது நம் வளம், அழுவது நம் இனம்_*


❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்_*

*_தீமை இலாத சொலல்_*

    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      
*_உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்._*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை_*

*_சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை_*

*_உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை_*

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

     😍  *உதயா யுவா ~ 9500764969*😍

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-5


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

   *_💝பாகம் - 5⃣💝_*

*_காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசு தனது அணைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர வேண்டும் என அளித்த தீர்ப்பில், 14.75 டி.எம்.சி. நீரைப் பிடுங்கி கர்நாடகாவிற்குக் கொடுத்துவிட்டு, இது சமநிலையான தீர்ப்பு என நாக்கூசும் பொய்யைக் கூறியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். காவிரி டெல்டா பகுதியில் 20 டி.எம்.சி. அளவிற்கு நிலத்தடி நீர் இருக்கிறதென்றும், அதில் 10 டி.எம்.சி. நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, இத்திருட்டை  நியாயப்படுத்தியிருக்கிறார்கள்._*

*_"காவிரி கிடைக்காது; கடல் தண்ணிய வாங்கிக்க.."  என சுப்பிரமணிய சுவாமி  கொழுப்பெடுத்துப் பேசியதற்கும், "காவிரிக்குப் பதிலாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துங்கள்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரத்தோடு உத்தரவிட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடில்லை. தமிழகத்தை வஞ்சிப்பதில் சு.சாமியைப் போலவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சிந்திக்கிறார்கள்._*

*_காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டத்திலிருந்து 21.5 மீட்டருக்குக் கீழும், கடலூர் மாவட்டத்தில் 25.5 மீட்டருக்கும் கீழும் சென்றுவிட்டது. இம்மட்டம் நாகை மாவட்டத்தில் 6.5 மீட்டருக்குக் கீழும், திருவாரூர் மாவட்டத்தில் 9.2 மீட்டருக்கும் கீழும் உள்ளது. தஞ்சை, கடலூர் மாவட்டங்களைவிட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் தரைமட்டத்திலிருந்து அதிக ஆழத்தில் இல்லையென்றாலும், இம்மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையை எட்டியிருக்கிறது._*

*_சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழ்குழாய் மூலம் சாகுபடி நடந்துவந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் தற்பொழுது நிலத்தடி நீர் உவராகிவிட்டது. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள நன்னிலம், திருமருகல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வட்டாரங்களிலும்; கல்லணைக்கு அருகேயுள்ள பூதலூர், மாரனேரி, விண்ணமங்கலம், கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் வட்டாரங்களிலும் கிடைக்கும் நிலத்தடி நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாது._*

*_கல்லணை கால்வாய் பாசனப் பகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசமுத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் நிலத்தடி நீர் 120 மீட்டருக்குக் கீழாகச் சென்றுவிட்டது. இப்பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் கிணறைத் தோண்டுவதற்கு ஏறத்தாழ 8 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டுமென்பதால், குறு, சிறு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை._*

*_இதுதான் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவிவரும் எதார்த்த நிலை. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுத்துச் சாகுபடிக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்குமானால், 2016-ஆம் ஆண்டு வறட்சியின்போது அம்மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்?  இந்த உண்மைகளை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, சாகுபடிக்கு நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ளுங்கள் என உத்தரவில் எந்த வித நீதியும் கிடைக்கவில்லை_*

*_சாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூறும் இத்தீர்ப்பு அறமும், அறிவும் அற்றது மட்டுமல்ல, ஒருபக்கச் சார்பான ஓரவஞ்சனை கொண்டதாகும். தமிழகத்திற்கு ஒதுக்கும் நீரைக் குறைக்க வேண்டும் எனக் கோரிய கர்நாடகா அரசுதான் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏராளமான நிலத்தடி நீர் இருப்பதாக வாதாடியது.  நடுவர் மன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட கர்நாடகா அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகா மாநிலத்தில் கிடைக்கும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை._*

*_கர்நாடக அரசு நிலத்தடி நீர் குறித்து 2016-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், அம்மாநிலத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது; 97 சதவீத நிலத்தடி நீர்க் குடிப்பதற்கு உகந்தது எனக் கூறியிருக்கிறது. இதில் ஒரு சதவீதம்கூட எடுத்துப் பயன்படுத்துமாறு உத்தரவிடாத நீதிபதிகள், தமிழகத்திடமிருந்து 14.75 டி.எம்.சி. நீரைத் தட்டிப் பறித்து, இந்த ஓரவஞ்சகமான நடவடிக்கையை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை என்ற பெயரில் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்._*

*_பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்கெனவே தினமும் 140 கோடி லிட்டர் நீர் காவிரியிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் நீரில் 52 சதவீத நீர் தேவையற்ற விதத்தில் வீணடிக்கப்படுவதாக பெங்களூரு சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியிருக்கிறது._*

*_இந்தக் குற்றத்தைச் செய்யும் கயவர்கள் யார்? பெங்களூருவைச் சுற்றி அமைந்துள்ள ஷாப்பிங் மால்கள், நீர்ப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள், குதிரைப் பந்தய மைதானங்கள், செயற்கை கடல்கள், ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். இக்கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பெங்களூரு குடிநீர்த் தேவையின் பெயரில் எடுக்கப்படும் நீரில் 50 சதவீதத்திற்கும் மேலாக, 72 கோடி லிட்டர் நீரைப் பெறுகிறார்கள்._*

*_இந்த கார்ப்பரேட் கும்பல் அடைந்திருக்கும் வளர்ச்சியைத்தான் பெங்களூரு நகர உலகத்தர அந்தஸ்தாக நீதிபதிகள் காட்டுகிறார்கள். இவர்களின் நீர்த் தேவைக்காகத் தமிழக விவசாயிகளின் நீர்த் தேவையைப் பலியிட்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் ஓரவஞ்சனை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்றுரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது எனத் தீர்ப்பில் எழுதி, கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது. கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த வரம்பை ரத்து செய்துவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என உத்தரவிட்டு தமிழகத்தின் மீது இரட்டைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது._*

*_கர்நாடகத்தின் இழப்பு குறித்து மூக்கைச் சிந்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், 1974 தொடங்கி தமிழகத்திற்கு கர்நாடகம் இழைத்து வரும் அநீதி குறித்து வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மூன்று அணைகளைச் சட்டவிரோதமாகக் கட்டி இயக்கிவருகிறது, கர்நாடகம். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, அதன் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இவை எதனையும் நடைமுறைப்படுத்தாமல், தமிழகத்தின் டெல்டா பகுதியை உபரி நீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாக மாற்றிவிட்டது. கர்நாடகம் இழைத்துவரும் இந்த அநீதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலாவது முடிவு வரும் என எதிர்பார்த்திருந்த தமிழக மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்._*

*_கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பை நீக்கியதன் மூலமும், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் அதிகரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாலும், அம்மாநிலத்தில் மேலும் 1 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காவிரி பாசனப் பரப்பின் வரும் எனக் கூறப்படுகிறது. அதேபொழுதில் தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏறத்தாழ 88,500 ஏக்கர் நிலப்பரப்பு தரிசாகும் அபாயம் எழுந்து நிற்கிறது._*

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-4

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

     *_💝பாகம் - 4⃣💝_*

*_2017, ஜூலை - 14 :  இறுதித்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் - தமிழ்நாடு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் முறையான விசாரணை தொடங்கியது. அதன் வாதங்கள் 2017, செப்டம்பர் - 20 :  உச்ச நீதிமன்றத்தில் நீர் ஒதுக்கீடு தொடர்பான வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது._*

*_2018, ஜனவரி - 9 : இந்நிலையில், காவிரி பிரச்சினையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாக்கப்பட்டன, இதனை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்._*

*_பிப் 16,2018 காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. _*

*_இதற்குப் பிறகு, இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து, தீர்ப்பின் 456-57ஆம் பக்கங்களில் பேசும் உச்ச நீதிமன்றம், "இதற்கென ஒரு திட்டத்தை (Scheme) உருவாக்குவதன் நோக்கமே, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல் படுத்துவதற்காகத்தான்.. இதற்கான திட்டத்தை மத்திய அரசு இன்றிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும். அப்போதுதான், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள், நடுவர் மன்றத்தின் ஆணையை எளிதாகச் செயல்படுத்துவதோடு, எங்களால் விதிக்கப்பட்டபடி மாநிலங்களின் உரிமையையும் செயல்படுத்த முடியும்" என்று குறிப்பிடுகிறது._*

*_பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில், மார்ச் 29ஆம் தேதியோடு உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வாரக் கெடு முடிவடைந்தது. இந்நிலையில்தான் இந்த வரிகளில் குறிப்பிட்டிருக்கும் Scheme என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது._*

*_கர்நாடகத்தின் தரப்பிலும்கூட Scheme என்றுதான் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறதே தவிர, காவிரி மேலாண்மைவாரியம் எனக் குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டனர். குஜராத்தில் உள்ள நர்மதா நீர் ஆணையத்தைப் போல ஒன்றை உருவாக்கலாம் எனவும் வாதிடப்பட்டது._*

*_ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் என்பதையே Scheme என்ற வார்த்தை குறிப்பிடுகிறது; ஆகவே, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும் என்கிறது தமிழகத் தரப்பு. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஊன்றிப் படித்தவர்கள், Scheme என குறிப்பிடப்படுவது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விரிவாகப் பேசும் உச்ச நீதிமன்றம், அந்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு குறித்து அந்தத் தீர்ப்பிலேயே கூறப்பட்டிருப்பதை மேற்கோள்காட்டியுள்ளது._*

*_தன்னுடைய இறுதித் தீர்ப்பு எந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டுமென நடுவர் மன்றம் கூறியிருப்பதை தீர்ப்பின் 335-336ஆம் பக்கங்களில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டினர்._* 

*_இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்டத்தை (Scheme) வகுக்க வேண்டுமெனக் கூறினால், அது ஒரு குழப்பமான சூழலுக்கு இட்டுச்செல்லக்கூடும் என நடுவர் மன்றம் கருதுகிறது. 1980ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான தாவா சட்டமும் இம்மாதிரியான ஒரு அமைப்பை உருவாக்கி செயல்படுத்துவது குறித்து ஏதும் கூறவில்லை. என்றாலும்கூட, இது தொடர்பான பரிந்துரையை அளிக்க நடுவர் மன்றத்திற்கு இந்தச் சட்டம் அதிகாரமளிக்கிறது. அதன் அடிப்படையில், பக்ரா - பீஸ் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்ததைப் போல காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைக்க வேண்டும்" என காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது._*

*_தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்ததைத் தவிர்த்த பிற விஷயங்களில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே, Scheme என்று சொல்லப்படுவது காவிரி மேலாண்மை வாரியம்தான். ஓரிடத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் ரஞ்சித் குமார், Schemeஐ வேண்டுமென்றால் (may) அமைக்கலாம் என்று தீர்ப்பளிக்கும்படி வாதிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், அவரது வாதத்தை ஏற்காமல் கண்டிப்பாக (Shall) அமைக்க வேண்டுமெனக் கூறியது. ஆகவே Scheme என்பது மேலாண்மை வாரியம்தான்" என்கிறார் உச்ச நீதிமன்ற விவகாரங்களை நீண்ட காலமாக கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர் ஜே. வெங்கடேசன்_*

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-3


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

     *_💝பாகம் - 3⃣💝_*

*_2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சிதான். கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. அதுவும்கூடக் கிடைக்க வழியில்லாமல் தவித்தது தமிழகம்._*

*_தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, மீளாய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன. இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) பின்வருமாறு அட்டவணையிடப்பட்டது: ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5._*

*_ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறைக் காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து நின்றது._*

*_மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி ஆற்று ஆணையத் தலைவர் என்ற முறையில் 2012-ல் ஒரு முறை, நாளொன்றுக்கு ஒரு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் கட்டளையிட்டார். கர்நாடக அரசு இந்தக் கட்டளையை நிறைவேற்ற மறுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயிற்று. வேறு வழியின்றி தண்ணீர் திறந்துவிட்ட பின், கர்நாடகத்தில் பரவலான வன்முறைக் கிளர்ச்சி மூண்டது._*

*_தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு 2013 பிப்ரவரி 20 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அந்த நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. 1991, 2001, 2012 ஆண்டுகளில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைவு என்று தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்து வன்முறைக் கிளர்ச்சி நடைபெற்றது._*

*_நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 2007ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, 2013ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் 2013 மார்ச் மாதத்தில் வழக்கு தொடர்ந்தது._*

*_2013 மே மாதத்தில் காவிரி நீர் திறப்பை உறுதி செய்வதற்கான காவிரி கண்காணிப்பு குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் தற்காலிக உத்தரவை மத்திய அரசு 2013 மே 24ம் தேதி வெளியிட்டது. எனினும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டது._*

*_இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் 2013 ஜூன் 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 28ம் தேதி கர்நாடக முதல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வ‌ழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மே 13ம் தேதி நீதிபதி பி.எஸ் சவுஹான் காவிரி நடுவர் மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் நடுவர்‌ மன்றத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலவில்லை._*

*_2016ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்தில் சட்ட ஆணைய தலைவராக நியமனம் பெற்ற சவுஹான் காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஆண்டும் போதிய தண்ணீர் கையிருப்பு இல்லை எனக் கூறி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து விட்டது. 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை கடந்த மாதம் மீண்டும் அணுகியது._*

*_உச்சநீதிமன்ற நீதிபதியே... 'வாழுங்கள்... வாழவிடுங்கள்...' என்று கருணை அடிப்படையில் தமிழகத்துக்கு நீரை ஒதுக்குங்கள் என்று கூறி விநாடிக்கு 15000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்._*

*_இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ம் தேதிவரை விநாடிக்கு 12000 கனஅடி தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் வன்முறை வெடித்தது._*

*_டெல்லியில் செப்டம்பர் 19ம் தேதி கூடிய காவிரி மேற்பார்வைக்குழு, செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு முறையிட்டது._*

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-2


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

  *_💝பாகம் - 2⃣💝_*

*_கல்லணையிலிருந்து காவிரி கவைகவையாகக் கிளைவிட்டு அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு, புது ஆறு, மன்னியாறு என்று பலவாகப் பிரிந்து, காவிரிக் கழிமுகம் (டெல்டா) படர்ந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தைப் படைக்கிறது. கல்லணையிலிருந்து வெளியேறும் சராசரி நீரளவு: வினாடிக்கு 8,324 கன அடி. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் (12,000 ச.கி.மீ.) நிலப்பரப்பு காவிரிப் பாசனம் பெறுகிறது. காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள உழவர் தொகை பல லட்சங்களைத் தாண்டும். நைல் நதிக்கும் எகிப்திய நாகரிகத்துக்கும் உள்ள அதே உயிர்த் தொடர்பு காவிரி ஆற்றுக்கும் பழந் தமிழர் நாகரிகத்துக்கும் உண்டு. தமிழ்நாட்டில் விவசாயம் மட்டும் அல்ல; வீராணம் திட்டவழி சென்னையின் குடிநீர்த் தேவையையும் காவிரிதான் பூர்த்திசெய்கிறது. காவிரியால் குடிநீர் பெறும் கிராமங்கள், நகரங்கள் ஏராளம். ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதியாகி மாறியது😓_*

*_1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூரு - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப் பகிர்வு நடந்துவந்தது._*

*_1956-ல் மொழிவழி மாநில மறுசீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று. 1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது. கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது._*

*_1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி ஆயக்கட்டு (நீர்ப்பாசனப் பரப்பு) 25,80,000 ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் ஆயக்கட்டு 6,80,000 ஏக்கர் என்றும் தெரியவந்தது. தமிழகம் தன் ஆயக்கட்டைச் சுருங்கவிடக் கூடாது என்றும், கர்நாடகம் தன் ஆயக்கட்டை விரிவாக்க வேண்டும் என்றும் விரும்பியதுதான் உடன்பாடு ஏற்பட முடியாமல் போனதற்குக் காரணம்._*

*_1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதால் திரும்பப் பெற்றது. இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான உறுப்பு 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பூசல் சட்டம், 1956 என்பது தீராத சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது._*

*_1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது. தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3._*

*_உடனே தண்ணீர் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது._*

*_1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு. மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு வரையறுக்கப்பட்டது._*

*_கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை (ஆயக்கட்டு) அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது._*

*_தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன._*

*_1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது._*

*_உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழ்நாடு தீர்ப்பாயத்தை அணுகியது. தீர்ப்பாயம் 11 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. கர்நாடகம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியபோது, பிரதமர் நரசிம்ம ராவ் இதில் தலையிட நீதிமன்றம் ஆணையிட்டது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டார்._*

*_1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை._*

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-1


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*_நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்._*

    *_💝நெப்போலியன்💝_*

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*_நம் அரசாங்கத்தை நீங்கள் சஹாரா பாலைவனத்தில் ஆட்சி செய்ய வைத்தால், 5 ஆண்டுகளில் மணல் பற்றாகுறை இருக்கும்._*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

    *_💝பாகம் - 1⃣💝_*

*_கலந்துரையாடல் குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம்🙏🏻. பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ._*

*_இயற்கை ஆறுகள் நேர்க்கோட்டில் பாய்வதில்லை. காவிரி பொதுவாக தெற்கு, கிழக்கு திசைகளில் ஓடுகிறது. அது பாயும் நில அமைப்பு முதலில் குடகின் மலைப் பகுதியாகவும் பிறகு, தக்கணப் பீடபூமியின் மேட்டு நிலமாகவும், இறுதியில் தமிழகத்தின் சமவெளியாகவும் அமைகிறது. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு (ஊரகம்), சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாகவும், தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகவும் காவிரி பாய்கிறது. நகரங்கள் கர்நாட கத்தில் குசால்நகர், மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணம். தமிழ்நாட்டில் மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தலை, திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார்._*

*_துணையாறுகள், கிளையாறுகள் உட்பட காவிரியின் வடிநிலம் எனப்படும் மொத்த நீரேந்துப் பரப்பு 81,303 சதுர கி.மீ. தமிழ்நாட்டில் 43,856 ச.கி.மீ., கர்நாடகத்தில் 34,273 ச.கி.மீ., கேரளத்தில் 2,866 ச.கி.மீ., புதுவையில் 160 ச.கி.மீ. காவிரியில் பாயும் சராசரி நீரளவு வினாடிக்கு 23,908 கன அடி._*

*_குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. ககனசுக்கி அருவியில்தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை நோக்கிப் பாய்ந்து செல்கிறது. இங்கு அது ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது._*

*_மாநில எல்லை தாண்டி தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி (1.62 கி.மீ.), உயரம் 176 அடி (54 மீ). மேட்டூர் அணை தோற்றுவித்த நீர்நிலையான ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் பரப்பு 155 சதுர கிமீ ஆகும்._*

*_மேட்டூரிலிருந்து புறப்பட்டுவரும் காவிரியுடன் பவானி ஆறு சேர்கிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின்பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. பெயர்தந்த அந்த இரு நீரோடைகளில் ஒன்று காவிரி, மற்றது காளிங்கராயன் வாய்க்கால். பிறகு, கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது._*

*_முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் ஆகிறது. வெள்ளப் பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் கொள்ளிடம் என்று பெயர். காவிரிக்குக் கொள்ளிடம் வடிகால் என்பதுபோல் காவிரிக் கழிமுகத்தில் பாயும் முதன்மையான எல்லா ஆறுகளுக்கும் வடிகால் ஆறுகள் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் நீர்ப்பாசன வாய்க்கால்போலவே வடிகால் வாய்க்காலும் இருப்பது பழந் தமிழரின் சிறந்த நீர் மேலாண்மைக்கு ஒரு சான்று._*

*_ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டுக்கடங்காத காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் கல்லணை கட்டினான். மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை என்பது கல்லணையின் சிறப்பு. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள நான்காவது பழைய அணை. நீர்த்தேக்கம் என்பதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று கல்லணையைச் சொல்லலாம். பழந் தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவுக்குச் சான்று. கல்லணை கட்டியதோடு அங்கிருந்து பூம்புகார் வரை காவிரிக்குக் கரை கட்டியவன் கரிகாலன்._*

Friday, 30 March 2018

இன்றைய கால கட்டத்தில் படிப்பறிவு தேவையா? இல்லையா?


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :29.03.2018.* 
         🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்*

💐 *ஜான்மில்டன்.*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *_கல்வி என்பது ஆடம்பரமோ அல்லது அடகு வைக்ககூடிய பொருளோ அல்ல கல்வி என்பது நமக்கான உரிமை_*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*இன்றைய கால கட்டத்தில் படிப்பறிவு தேவையா? இல்லையா?*

👨🏻‍🎓👩🏻‍🎓🎒📖📚🤔👨🏻‍🎓👩🏻‍🎓🎒📖📚

😇 *_கலந்துரையாடல் குழுவில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம். 🙏நீங்கள் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள் என்றால், உலகத்தில் உள்ள நல்ல விஷயங்களை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக கல்வி கற்க வேண்டும். சமூகதில் நற்பெயருடன் இருக்க நன்றாக படிக்க வேண்டும்.நான் ஒரு படித்த நபர் என்று சொல்வதில் பல நன்மைகள் உள்ளது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோரின் வாக்கு. இதனை மனதில் நிறுத்தி நன்றாக படிக்க வேண்டும். கல்வி என்பது ஒரு உறுதிமிக்க மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான வாழ்க்கைக்கும் அவசியம்._*🤩💝

👨🏻‍🎓👩🏻‍🎓💝 *_எல்லோரும் சமமான வாய்ப்புகளை வழங்கியுள்ள இடமாக உலகைப் பார்க்க விரும்பினால், கல்வி தேவைப்படுகிறது. வேறுபட்ட சமூக வகுப்புகள் மற்றும் பாலினர்களிடையே இருக்கும் வேறுபாடுகளுடன் நாம் விலகிச் செல்ல விரும்பினால் கல்வி என்பது ஒரு கட்டாயம். ஏழைகளுக்கு வாய்ப்புகளை உலகம் முழுவதும் திறந்து விடுகிறது,இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி என்பது பெண்களின் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது._*📚📖

👨🏻‍🎓👩🏻‍🎓📚 *_நீங்கள் சுய சார்புள்ள நபராக விரும்பினால் கல்வி மிகவும் முக்கியம். நீங்கள் நிதி ரீதியாக சுயாதீனமாக ஆக உதவுவது கல்வி,நீங்கள் உங்கள் சொந்த முடிவை எடுக்க முடியும் என்று கல்வி உங்களை வலுவடைய செய்கிறது. உண்மையில் உங்கள் கனவுகளை மாற்றியமைக்கிறது உங்கள் கனவு என்ன, வாழ்க்கையில் உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் செல்வந்தர்களா? பிரபலமாக இருக்க விரும்புகிறீர்களா? மக்களை மதிக்கும் ஒரு மிக வெற்றிகரமான நபராக நீங்கள் விரும்புகிறீர்களா? இது அனைத்திற்கும் முக்கியமானது கல்வி. நிச்சயமாக, கல்வி களத்தில் தங்கள் வெற்றிக்கு விளையாட்டு வீரர்களைப் போல் செயல்பட வேண்டும். இருப்பினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் கனவு உங்கள் அனைத்து கனவுகளையும் உணர உதவுகிறது._*📖👨🏻‍🎓👩🏻‍🎓

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் ‎கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டை எடுத்துக் கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது ‎நல்வழிப்படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு ‎அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். ‎படிப்புடன் பல்வேறு கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் ‎போது 'மதரஸா' கல்விமுறை பின்பற்றப்பட்டது. இதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் ‎கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் ‎மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் ‎கொண்டார்கள். மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் ‎தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன._*📖💝

👨🏻‍🎓👩🏻‍🎓📖👆 *_மேற்சொன்ன இரு காலகட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி ‎மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு ‎கல்வித்திட்டம் அப்போதைய லார்ட் மெக்காலேயால் உருவாக்கப்பட்டது. ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற ‎பின்னரும் அக்கால – மெக்காலேயின் கல்வித்திட்டத்தைத்தான் நாமும் பின்பற்றினோம். இந்தக் ‎கல்வித் திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகைய வழிகாட்டல்களும் இல்லை. மனிதன் யார்? அவன் ‎எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான்? அவன் மரணத்திற்குப் பின் எங்கு செல்வான்? இவ்வுலகில் மனிதன் செய்ய ‎வேண்டிய நற்கருமங்கள் என்னென்ன? போன்ற எந்த நல் வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின் மேம்பாடு ‎பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் ‎கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப்படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் 'கண்டதே ‎காட்சி கொண்டதே கோலம்' என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு ‎விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர்._*😔😞😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித ‎வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் ‎மதபோதனைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ‎ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி ‎அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் ‎தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது._*😰😞😔

👨🏻‍🎓👩🏻‍🎓📖😰 *_நெறிகெட்ட கல்வியின் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச ‎அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், ‎கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா,  அபின், ஹெராயின் போன்ற ‎போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்ள ‎நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இவற்றை ‎பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர ‎மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் ‎தொலைக்காட்சிகளையும் தான் சேரும்._*😔😞😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_உலகில் கல்வியறிவு பெறாதவர்கள் அதிகமுள்ளவர்கள் நாடுகள் பட்டி யலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா. அறிக்கையின் படி இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் 2013-14 அனைவருக்கும் கல்வி இயக்க கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 1991-ம் ஆண்டு 48 சதவீதமாக இருந்தது. இது 2006-ம் ஆண்டு 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆயினும் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, கல்வியறிவு பெறாத வயதுவந்தோரின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமுமில்லை._*😔😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_அன்றைய நிலவரப்படி, ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது._*📃

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_வளமான மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமப்புற மாண வர்கள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வியை (5-ம் வகுப்பு) நிறைவு செய்தனர். இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் 5-ம் வகுப்புப் படிப்பவர்களில் 44 சதவீதம் பேரும், தமிழகத்தில் 53 சதவீதம் மாணவர்களும் மட்டுமே இரட்டை இலக்க வகுத்தல் கணக்குக்கு விடை காண முடிபவர்களாக இருக்கின்றனர்._*

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_மகாராஷ்டிரம், தமிழக மாநிலங்களில் ஊரகப் பகுதிக ளில் உள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் மாணவர் களை விட மாணவிகள் நன்றாகப் படிக்கின்றனர். 3-ல் 2 மாணவி கள் இரு இலக்க வகுத்தல் கணக்குக்குத் தீர்வு காணும் திறன் பெற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தை விட சிறிய அளவிலேயே மகாராஷ்டிர ஊரகப் பகுதி மாணவ, மாணவியர் முன்னணியில் உள்ளனர். மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரேதச மாநிலங்களில் நிலவும் வறுமை, குழந்தைகள் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஏழை மாணவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே 5-ம் வகுப்பு வரை பயில்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் 85 சதவீத ஏழை மாணவர்கள் ஆரம்பக்கல்வியை நிறைவு செய்கின்றனர்._*😰😔

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_நன்றாகப் படிப்பவர்களில் 15-வது வயதில் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் போல, கணிதத் தில் குறைவான மதிப்பெண் பெறும் 12 வயது மாணவர்கள் பள்ளியில் இருந்து இடை நிற்பது இருமடங்கு அதிகம். மாணவர்களின் கல்வி பாதிக்கப் படுவதற்கு, ஆசிரியர்கள் வகுப் புக்கு முறையாக வராததும் ஒரு காரணமாகும். அதாவது, ஆசிரியர் பள்ளி அல்லது வகுப்புக்கு வராமல் தவிர்க்கும் வீதம் 10 சதவீதம் உயர்ந்தால் அது 1.8 சதவீத மாணவர்களின் வருகையைக் குறைக்கிறது._*😔😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லாவிட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து ‎மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது ‎இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் ‎நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை வருங்கால சமுதாயத்தை ‎வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக ‎அமையும்._*👍

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க ‎வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் ‎எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. ‎பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல ‎கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய ‎தவறாகவும் அமைந்து விடலாம்._*😔😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான ‎நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் ‎தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி ‎நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் ‎கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் ‎விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ ‎மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய ‎பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய ‎முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்._*😔😰

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் ‎பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் ‎பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது சில விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்._*👍

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல ‎பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை ‎மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் ‎நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர்களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் ‎கொள்ள வேண்டும்._*👍✅

👨🏻‍🎓👩🏻‍🎓📖 *_இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அறிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே ‎தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய ‎அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த ‎வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் ‎நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர்களாக நாட்டின் ‎நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர்களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் ‎அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்._*✅👍💝💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

       🏆👏.    _*GK*_    👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑


🤩 🏅 *_SP.Vignesh⁩_*👏

🤩 🏅 *_ஜெய் கணேஷ்⁩_*👏

🤩🏅 *_இசையருவி⁩_*👏

🤩🏅 *_Sasikanth Neelakantan⁩_*👏

🤩🏅 *_Kumarb⁩_*👏

🤩🏅 *_🏁ஜான்🔴ழைழா🏁⁩_*👏

🤩🏅 *_Bismi⁩_*👏


👑 *கலந்துரையாடல்2⃣*👑

🤩🏅 *_Sheikmom⁩_*👏

🤩🏅 *_Arul⁩_*👏

🤩🏅 *_அ. கந்தன்⁩_*👏

🤩🏅 *_Er.iMech SyeD⁩_*👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

😊 *_கருத்து சொல்ற அளவுக்கு நா பெரிய ஆள் இல்லைங்க, என் மனசுக்கு பட்டதை சொல்லனும் தோனுச்சு சொல்லிடுறேன்._*

👉 *_இன்றைய காலகட்டத்தில் பலருக்கு படிப்பின் மீது அதிகளவு வெறுப்பு வந்து விட்டது. அதற்க்கு காரணம் வேலையின்மை மற்றும் அறநெறிகள் எதுவும் கற்றுதரபடவில்லை என்பதே_*

👉 *_உங்கள் அனைவரிடமும் சில விசயம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இங்கு நாம் கற்றுக் கொள்ளும் படிப்பு சரியானது ஆனா கற்று கொடுக்கும் முறை சரியில்லை_*

👉 *_நாம் அனைவரும் நமக்கு பிடித்த பாடத்தை விரும்பி தேர்வு செய்வதே சிறப்பு. சிலருடைய வீட்டில் பெற்றோர்கள் நாம் விரும்பிய பாடத்தை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். அதை அவர்களுக்கு எடுத்து புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். மேலும் நாம் எடுக்கும் பாடப்பிரிவு பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்._*

👉 *_சிறு வயது முதலே நாம் ஆத்திசூடி, திருக்குறள் போன்ற அறநெறி பாடல்களையும், குறள்களையும், நீதி கதைகளையும் படித்துள்ளோம் எத்தனை பேர் அதனை இன்றளவும் பின்பற்றுகிறோம்.???_*

👉 *_அவ்வளவு ஏன் தினமும் முடிவுரையில் பதிவிடபடும் திருக்குறளை எத்தனை பேர் படித்து அதன்படி நடந்துள்ளோம்??_*

👉 *_அப்போ தவறு படிப்பில் கிடையாது, கற்று கொடுக்கும் விதத்தில் இருக்கிறது. கற்று கொண்ட அனைத்தும் மதிப்பெண்ணிற்காகவும், வெளியே நான் படிப்பாளி என்று கர்வம் கொள்ளவும் மனப்பாடமாக படித்து எழுதுவதில் இல்லை கல்வி, நாம் படித்த அறநெறிகளை எந்த சூழ்நிலையிலும் விடாமல் கடைபிடிப்பதே கல்வியில் நாம் கண்ட வெற்றி._*

👉 *_படித்தபடிப்பிற்க்கு வேலை கிடைக்கவில்லை அதனால் எனக்கு படிப்பு பிடிக்கவில்லையென்றால், தவறு கல்வியின் மீது இல்ல தங்களின் மீதுதான் இருக்கிறது. தனக்கு பிடித்த பாட பிரிவை பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் சகட்டு மேனிக்கு முதலாம் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்ற நோக்கில் படித்து வெளியேறுகிறோம் இதற்க்கு பெயர் கல்வியறிவு இல்லை_*

👉 *_சரி செய்முறை கல்வியை ஏன் ஆசிரியர்கள் கற்று கொடுக்கவில்லை அப்போ தவறு அவர்கள் மீதுதானேனு நினைக்கலாம். அப்படியும் நினைத்தால் தவறு அவர்கள் மீது இல்லை உங்கள் மீது தான் என்று நிரூபிக்க முடியும்._*

👉 *_சிறு வயது முதல் கடைசி கட்டம் வரை யாராவது கை பிடித்து நடக்க சொல்வதில்லை தானாக முயற்சி செய்து பிறண்டு, தவழ்ந்து, எதையாவது பிடித்து நின்று கொண்டு பிறகு தான் நடக்க முயற்சிக்கிறோம். சிறு வயதில் இருந்த நம்பிக்கையும், சிந்திக்கும் திறனையும் மறந்து விட்டு அதற்குக் படிப்பை குற்றம் சுமத்துவது சாத்தியமா_*

👉 *_கல்வியின் அருமையை பற்றி ஏழை மற்றும் கல்வி செலவிற்க்கு பணமில்லாத மாணவ, மாணவிகளிடம் கேட்டு பாருங்கள். அதனுடைய வலியும், அருமையும் புரியும்._*

👉 *_கல்வியே வேண்டாம் என்றால் இளைஞர்களின் சக்தியாக விளங்கிய மேதகு டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா நமக்கு கிடைத்திருக்கமாட்டார்கள்._*

👉 *_இன்னும் சொல்லனும் தோனுது பதிவு ரொம்ப பெருசா போய்டும் இத்தோடு முடிச்சுக்குறேன். என்றும் அன்புடன் படிக்காதவன்💝_*


❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்_*

*_கண்ணென்ப வாழும் உயிர்க்கு_*

    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

*_எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்_*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்._*

*_கல்விக்கு இருவர், களவுக் கொருவர்_*

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

     😍  *உதயா யுவா ~ 9500764969*😍

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Thursday, 29 March 2018

தற்போதைய செல்போன் டவர் பிரச்சினைகளும், பாதிப்புகளும்????


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :28.03.2018.* 
         🌹 *கிழமை :புதன்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.*

💐 *– சாக்ரடீஸ்.*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*தற்போதைய செல்போன் டவர் பிரச்சினைகளும், பாதிப்புகளும்????*

📶📲🤨😰😥😓📲📶😰😥📶

📲📱📶 *"செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை பல நாடுகள் கடுமையாக்கி உள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு அருகே வாழ்வது என்பது மைக்ரோவேவ் அவனுக்குள் நாம் வாழ்வதைப் போன்றது. மும்பையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் ஒருவர், அதில் 90 சதவிகித நேரம் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார், என்று பம்பாய் ஐ.ஐ.டி. மின் பொறியியல் பேராசிரியர் கிரீஷ் குமார் உள்ளிட்டவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்,"✅ என்று குறிப்பிடுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் நித்தியானந்த் ஜெயராமன்.*🤷🏻‍♀

📱📶 *செல்போனை அளவிற்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் செல் திசுக்கள் சூடாகிவிடும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.🔍✅ இதனால் மூளையில் பாதிப்பு வருவதோடு ஏதேனும் சிறிய கட்டிகள் இருந்தால் கூட அது பெரிதாகிவிடும் வாய்ப்பு உள்ளது😱😨 ✅👍என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் முக்கியமான எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.*😱😰😔

📲📱 🏢 *செல்போன் நிறுவனங்களில் பிரச்சாரம்*🗣😡

📶📲🏢 *செல்போன் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் இல்லை இது டிஎன்ஏவை சிதைக்காது என்று செல்போன் நிறுவனங்கள் பசப்பு வார்த்தைகளை தெரிவித்து வருகின்றன.😡👊 சர்வதேச ஆணையம் பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுக்கு ரொம்ப குறைவாகத்தான் செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும் என்றும் சப்பைக் கட்டு கட்டுகின்றன நிறுவனங்கள்.*😡👊😡

✅ *செல் திசுக்கள் சூடாகும்*😡👊👇

📲📶 🤜 *செல்போன் நிறுவனங்களின் பொய்யான பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.📃 அதாவது செல்போன் கதிர்வீச்சு டி.என்.ஏவை பாதிக்கா விட்டாலும் அது செல் திசுக்களை சூடாக்கும் என்று தெரிவித்துள்ளது.*📲🔍✅😡

🧠 *மூளைப் புற்றுநோய் வரும்*🧠✅

📲📶🧠 *செல்போன்களின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்சை மூளையின் சில பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்ச்சிதை மாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதாம்.😔😱 இதனால் மூளைப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்கின்றனர் நிபுணர்கள்.*✅😱🧠

🌍 *உலக சுகாதார நிறுவனம்*🌍👇

🌍✅ *இதை உறுதிப் படுத்தும் வகையில் 2000-லிருந்து 2004 வரை 5 வருடங்களில் 13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் 8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக் அதிகமாக செல்போன் உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.*🌍📃🔍👍

📲📶🐦 *செல்போன் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை பாதிப்பதில்லை என்று கோவை அனைக்கட்டியில் உள்ள சாலிம் அலி பறவையியல், இயற்கை அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.🔍✅ இது தொடர்பாக கூடுதல் ஆராய்ச்சி களையும் மேற்கொண்டும் உள்ளது.*✅🔍

🐦 *சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கதிர்வீச்சைத் தாண்டி உணவு கிடைக்கும்தன்மை, கூடுகட்டும் இடங்கள் போன்றவை குறைந்துவிட்டதே முக்கியக் காரணம்.*🔴😔

🐦🏬 *நகர்மயமாக்கம் காரணமாகச் சிட்டுக்குருவிகளின் வாழிடம் அதிவேகமாக அழிந்துவிட்டன.😔 மேலும் இப்போது தானியங்கள் நெகிழிப் பைகளில் வருவதால், குருவிகளுக்கு தானியங்கள் கிடைப்பதில்லை. குருவிக் குஞ்சுகளிகன் அதிவேக வளர்ச்சிக்குத் தோட்டங்களில் கிடைக்கும் புழு, பூச்சிகள்தான் முக்கிய உணவு. பூச்சிக்கொல்லிகள் அதிகரிப்பு, புழு பூச்சிகளைக் குறைத்துவிட்டது.⛔😔 இப்படியாக குஞ்சுகள் முதல் வளர்ந்த குருவிகள் வரை உணவு கிடைக்காமல் போவதாலேயே குருவியின் இனப்பெருக்கம் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றன.*⛔🐦😔

🐦⛔ *எனவே, சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு செல் போனை வந்தடையும் கதிர்வீச்சோ, செல்போன் கோபுரங்களில் வெளியிடப்படும் கதிர்வீச்சோ நேரடிக் காரணம் என்று இதுவரை நிறுவப்படவில்லை.*👎👎

🌍📲📶 *இந்தியா முழுவதிலும் சென்னை, கோவை உள்ளிட்ட 900க்கும் அதிகமான பெருநகரங்களில் 40,000 க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை அமைக்கும் பணிகளை 2014 ல் துவங்கியுள்ளனர்.✅ இந்த அலைபேசி கோபுரங்கள் மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்புப்பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் அருகில் துவங்க அனுமதியில்லை.⛔👎 இந்த கோபுரங்களை 50மீ முதல் 1000மீ.க்கு அப்பால் தான் அமைக்க வேண்டும்.✅ டெல்லி உயர்தீதிமன்ற தீர்ப்புகளும், அரசின் புதிய விதிமுறைகளும் இதனை உறுதிப் படுத்தியிருக்கின்றன. ✅👍ஆனால் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக்க் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் அரசு விதித்திருக்கும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சட்ட விரோதமாக மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளிலும் அடுக்குமாடிகளிலும் கோபுரங்களை அமைத்து வருகின்றனர்*😡👊

📲📶⛔ *இத்தகைய கோபுரங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளும் கதிரியக்கங்களும் மிகவும் அபாயகரமானவை.😱 கர்ப்பிணிப் பெண்கள், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெண்கள் ஆகியோரை எளிதில் தாக்கி இரத்தப்புற்றுநோய், தோல் புற்றுநோய், மூளைபாதிப்பு, வலிப்பு போன்ற நோய்களை உண்டாக்கும்.😱👍 மேலும் கதிரியக்கதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலட்டுத்தன்மை, தலைவலி, ஞாபகமறதி, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற எண்ணிலடங்கா பாதிப்புகள் ஏற்படக்கூடும்.*😱😔

     ⛔📲📶 *ஏற்கனவே அமைக்கப்பட்ட அலைபேசி கோபுரங்களிலிருந்து 50 மீ முதல் 300 மீ தொலைவு வரை கதிரியக்கம் நிலவுவதை தகுந்த ஆதாரத்துடன் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT) ""பேராசிரியர் கிருஷ்குமார்"""இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு அளித்துள்ள தனது அறிக்கையில் நிரூபித்துள்ளார்.📃🔍👍 சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ராம்நாத் கார்க் என்பவரின்   சிறுவயது பையனும் திடீரென இறந்துருக்கிறான்.😔 🤨அதற்கான காரணத்தைத் தேடும் போது அவர் வீட்டருகே அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரத்திலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தால் தான் பாதிக்கப்பட்டு இறந்தது கண்டறியப்பட்டது.*🤨😔😨😰

     😡😨🤨 *இதேபோல் செல்போன் கோபுரத்திற்கு அருகே வசித்துவந்த எஸ்.கே விஜயா பட் என்னும் பெண்மணி மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வருகிறார்.😨😰🤨 இந்த நோய்க்கு காரணம் செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.*🔍🤨😨😰

    📲📶🤨  *செல்போன் கோபுரத்தின் கதிரிக்கத்தால் கோவையில், பீளமேடு காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற மாணவன் அதிகமான மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறான்.😰😔 இந்த மாணவனுக்கு மூச்சுதிணறல் ஏற்படுவதற்கு செல்போன் கோபுரத்தின் அருகில் வசிப்பதே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.🔍😱😔 👆🔴இவர்களைப்போல் கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் தங்களை அறியாமல் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.😰😱😔 ஆனால் இந்த பாதிப்பிற்கு என்ன காரணம் என்று அவர்களுக்கே தெரியாது.*😱😰😔🤨🔴

📲📶⛔   *இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக நிர்வாக இயக்குனர் (ISMR) டாக்டர் எம்.வி.கோட்டா தனது அறிக்கையில் செல்போன் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.🔍😰😔 மேலும் வெளிநாடுகளில் பெண்களுக்கு மலட்டுத்தன்மையும், சிறுவயது குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற நோய்கள் அதிகம் வருவது ஆதாரப்பூர்வமாக நிரூப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.🔍✅ இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின்(TRAI) விதிகுறைகளின்படி, செல்போன் கோபுரங்கள் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 400 மீ.க்கு அப்பால் மட்டுமே அமைக்க வேண்டும்.✅ ஆனால் எந்தவொரு நிறுவனமும் இவ்விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.😡👊 கண்காணிக்க வேண்டிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும்(TNPSB) இந்த அத்துமீறலை கண்டுகொள்வதில்லை.*😡👊

📲📶📑 *பெருமுதலாளிகளால்*
*போடப்படும் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.🤷🏻‍♀இதனால் ஒப்பந்தம் போடப்படும் போது 90 சதவீத இடத்தின் உரிமையாளர்கள் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள செய்திகளை அறியாமலேயே கையொப்பம் இடுகின்றனர். 🤕🙄😴இதில் கள்ளிமடைபகுதியில் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் 20 ஆண்டுகள் வரை செல்லத்தக்கதது. இடைப்பட்ட காலத்தில் ஒப்பந்தத்தினை ரத்து செய்யவோ, அடமானம் வைக்கவோ, விற்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ நிலத்தின் உரிமையாளருக்கு உரிமை கிடையாது.🙅🏻‍♀👎 ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கோ ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் உரிமை உண்டு. 😡👊இவர்கள் முதலில் 100 சதுர அடிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.😏 பிறகு புவித்தொடுப்பு (Earthing), ஒளியிழைக் கம்பிகள்(Optical Fiber), செல்லத் தேவையான இடங்கள் என ஆக்கிரமிப்புகள் தொடரும்.😡👊 மேலும் தொழிற்நுட்ப வளர்ச்சியினால் புதிய புதிய உபகரணங்களை நிறுவுவார்கள்.😡👊 இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமென்று தெரியாது.🙅🏻‍♀ முதலில் சாதரண அலைபேசிக்குத்தான் என்று கோபுரங்களை அமைப்பார்கள். பிறகு தொலைபேசி(Basic Telephone connection), அகன்ற அலைக்கற்றை(Broadband), ஒளியிழை கேபிள் டிவி(Fiber to the Home or FTTH) என திட்டங்களை விரிவுபடுத்திக்கொண்டே போவார்கள்.*😡👊

😡👊 _*பெரும்பாலானோர் வளர்ச்சி என்ற அடிப்படையில் இது போன்ற திட்டங்களை ஆதரிக்கின்றனர். ஆனால், வளர்ச்சி என்பது மக்களின் நல்வாழ்வுக்கு பயனளிக்க கூடியதாக இருக்க வேண்டும். ✅👍மாறாக இத்திட்டங்கள் மக்களை மரணக் குழியில் தள்ளுவதாக உள்ளது.*_🙅🏻‍♀🙅🏻‍♀🔴

🔴😡👊 _*செல்போன் நிறுவனங்களின் இலாபவெறிக்கு பலிகடாவாக்கப்படுவது உழைக்கும் மக்களே.*_😡😔😰

     🔴🌍📲📶 _*இந்தியாவில் ரிலையன்ஸ், இந்துஸ் டவர், ஜி டி எல் போன்ற 12 முன்னணி நிறுவனங்கள் செல்போன் டவர்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து மக்களைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காமல் நாடு முழுவதும் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான செல்போன் கோபுரங்களை அமைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அரசும் அதிகாரிகளும் காவல்துறையும் துணை நிற்கின்றனர். இந்த செல்போன் கோபுரங்களால் ஏற்கனவே அரிய வகைப் பறவைகளும், சிட்டுகுருவிகளும், தேனீக்களும் காணாமல் போக இதுவும் ஒரு காரணமாக உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் பன்னாடு நிறுவனங்கள், டாட்டா-அம்பானி போன்ற இந்திய தரகு முதலாளிகள் தங்களின் இலாப வெறிக்காக ஏராளமான உழைக்கும் மக்களை பலியாக்கி வருகின்றனர்.*_😡👊🔴

     🔴📶📲 _*கதிர்வீச்சின் அளவு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சுவிட்சர்லாந்தில் 42 மில்லிவாட், ரஷ்யாவில் 100 மில்லிவாட், உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் கூட வெறும் 400 மில்லிவாட் மட்டுமே. ஆனால் இந்தியாவிலோ 4500 மில்லிவாட் ஆக உள்ளது. ஒரே கோபுரத்தில் பல அலைபேசி நிறுவனங்களின் இணைப்புகளை வழங்குவது என்ற நடைமுறை எந்த நாடுகளிலும் இல்லை. இந்தியாவில் மட்டும் தான் சட்டவிரோதமாக கடைபிடிக்கப்படுகிறது.*_😡🔴

     🔴📲📶 😡 _*ஒரு செல்போன் கோபுரம் அமைக்க தொலைத்தொடர்பு அமைச்சகம், மாநில அரசு, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்ற அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகு மட்டுமே அமைக்க முடியும்.👍 ஆனால் இங்கு அமைக்கப்படும் கோபுரங்கள் மேற்குறிப்பிட்டுள்ள அமைப்புகளின் உரிய அனுமதியின்றியோ அல்லது லஞ்சம் வாங்கி அனுமதி பெற்றோ குடியிருப்பு பகுதிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அலுவலங்கள் போன்ற பகுதிகளில் சட்ட்த்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளன. 😡👊அரசும், அதிகார வர்க்கமும், பெருமுதலாளிகளும்,  அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் வர்க்கத்தின் இத்தகைய திட்டங்களை தடுக்க அதிகாரமற்ற அடிமை மாநில அரசால், தமிழ்நாட்டின் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற இயலமுடியவில்லை*_👊😡😰🔴

🔴💪 _*நம் மண்ணையும், மக்களையும், சுற்றுப்புறச் சூழலையும் மலடாக்கும் கதிர்வீச்சு அபாயம் கொண்ட செல்போன் கோபுரங்கள் அமைக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்....*_👍

🔴 😡👊 _*கொடிய நோய்களை ஏற்படுத்தி நமது சந்ததியினரையும், சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தும் மக்கள் விரோத திட்டங்கள் வேண்டாம்...*_😡👊🙅🏻‍♀

🔴💪 _*இயற்கையையும் மனிதகுலத்தையும் காத்திடுவோம்...!!!நாமாகவே....!!*_👍🤝

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

                        🏆👏. *KS* 👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🤩🥇 *@⁨sriramkrm⁩⁩, @⁨⁨Kumarb⁩⁩*👏🎉

🤩🥈 *@⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩⁩, @⁨Jaiganesh⁩*👏🎉

🥉 *@⁨⁨தமிழன்⁩⁩, @⁨ப்ரியா யுவராஜ்👨‍👩‍👧⁩, @⁨பிரபாகரன் சிதம்பரம்⁩*👏🎉

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🤩🥇 *@⁨அ. கந்தன்⁩*👏🎉

🤩🥈 *@⁨Sheikmom⁩*🎉

🤩🥉 *@⁨⁨பிரதீப் விஸ்வா⁩⁩, @⁨தமிழன் ராஜா⁩, @⁨🌻 வாழ்க வளமுடன் 🌼⁩*👏🎉


✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

📲 📑 *சமீபத்திய ஒரு அறிவிப்பை தற்போது காண்போம்.*📲📑

📑📲📶 *ரிலையன்ஸ் ஜியோ வழியாக மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்க ஒரு வாய்ப்பு*

📲📑 *முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனம் உட்பட இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், அவர்களின் உள்கட்டமைப்பு சார்ந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றிற்கு ரூ.74,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.*✅😡

📲📶📑 *ஏற்கனவே ரூ.16,000 கோடி முதலீட்டை நிகழ்த்தி விட்டதாகவும், மேலும் ரூ.24,000 கோடி முதலீட்டை செய்துள்ளதாகவும் பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.*✅

*😡மறுமுனையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ, வரும் நிதி ஆண்டில் 1 லட்சம் மொபைல் டவர்களை நிறுவுதல் சார்ந்த பணிக்காக ரூ.50,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் கூறியுள்ளது.*😡

🤨 *மாதத்திற்கு ரூ.50,000/- வரை சம்பாதிக்கலாம் என அறிவித்துள்ளது.*🤨

🤜 *இந்த வாய்ப்பின் கீழ் நீங்களொரு ஜியோ டவர் நிறுவலுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக நிகழ்த்தலாம். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் மாதத்திற்கு ரூ.50,000/- வரை சம்பாதிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*🤨

📲📑 *விண்ணப்பம் மற்றும் ஒப்புதல்?*👇

🤜📲📑📶 *நீங்களொரு ஜியோ டவர் நிறுவல் சார்ந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.*🤨

📲📶📑 *பின்னர் நீங்கள் உங்களின் தேர்வு செய்யப்பட்டுள்ளதா? ஏற்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைன் வழியாகவே சரிபார்க்க முடியும்.*🤨

📲📑📶 *ஜியோ டவர் நிறுவலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?*🤨

😔 *(நம்மளே நாமே நோய் வர வைத்துக கொள்வது எப்படி)*🤦🏻‍♂🤦🏻‍♀

🤜 *நீங்கள் உங்கள் கட்டிடத்தில் / கிராமத்தில் அல்லது வேளாண் பண்ணையில் ஜியோ டவர் ஒன்றின் நிறுவலுக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் நிர்வாகியை அழைத்து, உங்கள் இருப்பிடம் / கிராமம் / மாவட்டம் சார்ந்த விவரங்களை கொடுக்க வேண்டுமாம்.* 

🤜 *நீங்கள் www.jiotowerindia.com என்க்ரியா வலைத்தளத்திலும் கூட ஜியோ டவர் நிறுவலின் ஆன்லைன் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம் மற்றும் பூர்த்தி செய்யலாம். ஒரு ஜியோ 4ஜி டவருக்கான மாத வாடகைக்கு இடத்திற்கு இடத்திற்கு மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.*

📲📑📶 *நீங்கள் மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கலாம்?*

🤜 *ஜியோ டவர் நிறுவல் செயல்முறையின்கீழ், ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று கணக்கிடுவது ஒரு கடினமான மதிப்பீடாகும். கிராமப்புற பகுதி (கிராமீன் க்ஷேத்திரா): ரூ.20,000 முதல் ரூ.30,000/- வரை மற்றும் நகர்ப்புற பகுதி (ஷெரிரி க்ஷேத்திரா): ரூ.35,000 முதல் ரூ.50,000/- வரை சம்பாதிக்கலாம்.*

😡🤦🏻‍♀ *(எப்படி எப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் சொல்றாங்க)*🤦🏻‍♂

📲📶📑 *ஸ்பேஸ் லீஸ் அப்ரூவல்*👇

🤜 *கிராமப்புற பகுதிக்கு தேவையான இடம் : குறைந்தபட்சம் 500 சதுர அடி நிலப்பரப்பு நிலம்.*

🤜 *நகர பகுதிக்கு தேவையான இடம் : குறைந்தபட்சம் 500 சதுர அடி.*

🤜 *கிராமப்புற பகுதிக்கான குத்தகை காலம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்*

🤜 *நகர்ப்புற பகுதிக்கான குத்தகை காலம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்*

📲📑📶 *முன்பெல்லாம் தொலைதொடர்பு அதிகாரிகள் டவர் வைக்கும் இடத்தை தேர்வு செய்து, நம்மிடம் பேச்சுவார்தை நடத்துவார்கள்.*

📲📑📶 *தற்போது நாமே online ல் apply செய்து, டவர் வைக்க சொல்லுமளவுக்கு 4ஜி காலமாக மாறிவிட்டது.*

📲📑📶 *டவர் வைப்பவர்கள் ஆரம்பத்தில் சரியான முறையில் சொன்னவாரே வைப்பார்கள். ஆனால் எப்போது ரேஞ்ச் அதிகமாக்கப்படுகிறது, சரியாக வைக்கப்படுகின்றது என்பதை மக்களால் தினமும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்க முடியாது. அது நம் வேலையும் அல்ல.*😡

📲📶 *செல்போன் டவர்கள் தேவைதான். ஆனால் சரியான அளவுகளுடன் பாதிப்புகள் இல்லாதவாறு அமைத்தால் நலம்.*🤷🏻‍♀🤷🏻‍♂

🤜 *சில தினங்களுக்கு முன் நடந்தது.*👇

📲📶📑 *திருவண்ணாமலையில், வேட்டவலம் சாலை பகுதியில், ஜியோ நிறுவன மொபைல் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த டவரில் இருந்து, வெளிப்படும் கதிர்வீச்சால், கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர் பாதிக்கப்படுவர். மழை, புயல் காலங்களில், டவர் விழுந்தால், உயிரிழப்பு ஏற்படும் என மக்களிடையே கருத்து நிலவியது. இதையடுத்து, டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, திருவண்ணாமலை கிழக்கு போலீசார், மக்களை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர். மறியலால், அப்பகுதியில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.*🔴

🔴 *மக்கள் சற்று விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் எதிர்கால பாதிப்புகளை தவிர்க்கலாம்.*✅👍

*நன்றி🤝🏻💐*


❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*சிறப்பீனுஞ் செல்வம் பெறினும்* *பிறர்க்கின்னா*
*செய்யாமை மாசற்றார் கோள்*
    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

*மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🎯 *அறிந்துகொள்ளவும்*🎯

*இடம் கொடுத்தால் மடம் பிடிப்பான்.*

🎯 *புரிந்துகொள்ளவும்*🎯

*நீர் மேல் எழுத்து போல்.*

🎯 *தெரிந்துகொள்ளவும்*🎯

*பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.*

*சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.*

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻‍♂
      
                       👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈

🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *அன்புதோழன்-*
*9677527522*

😎  *கிருஷ்ணன்-*
*9787239449*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Tuesday, 27 March 2018

திராவிடர்களும், தமிழர்களும் ஓர் பார்வை. பாகம்-2

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :27.03.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*திராவிடர்களும், தமிழர்களும் ஓர் பார்வை.*

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

🏹 *பாகம்* 2⃣🏹

🔥 *தமிழர்னா யாரு?  தமிழ் பேசுறவங்களா? அப்ப ஊமையா இருக்கிறவன யார்னு சொல்லுவிங்க?*⁉

🔥 *தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தான் தமிழர்களா? அப்ப திராவிடர்களும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்களே அவங்க தமிழர்கள் இல்லையா?*⁉

🔥 *உண்மையான தமிழர்கள் யார் தெரியுமா? தமிழ்நாடு அரசு மூலமாக, இலவசம், இலவசமாக சலுகைகள் பெற்று தமிழ்நாட்டில் காலம் காலமாக வாழ்பவர்கள் அனைவரும் தமிழர்களே.*

🔥 ⁉ *திராவிடர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?🤔. அவங்களும் இங்கதான்பா காலம் காலமாக இருக்காங்க. திராவிடம்னா ஒண்ணுமே இல்ல..*

🔥 *இப்போதைக்கு என்னதான் நம்ம தமிழனாகவோ, திராவிடனாகவோ இருந்தாலும், ஒரு ஸ்கூல், காலேஜ் படிக்கிற சர்டிபிகேட்ல இனம் என்ற இடத்தில் இந்தியன் என்று தான் போடுகின்றோம். காரணம் நம் அனைவரும் வேற்றுமையில் ஒற்ற்மையுள்ள நாடு.*👍✅

🔥🔱 *வேற்றுமையில் ஒற்றுமை ஏன் குறிப்பிட்டார்கள் தெரியுமா?*⁉

🔥 *நம் நாட்டில் பல இன, மொழி, மதங்கள் இருந்தாலும் அனைவரும் சமமாக, சகோதரத்துவத்துடன் வாழ்கின்ற நாடு எங்கள் இந்தியா என்ற வெளிநாட்டவரிடம் மார்த்தட்டிக் கொள்ளவே இவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை என குறிப்பிட்டார்கள். இதுபோன்று வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது. இருக்கவும் விட மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.*✅👍

🔥🔱 *ஆனால் இன்றோ தமிழன், திராவிடன் என்று சொல்லி, மக்களை முட்டாளாக்கி அரசியல் செய்யவே இதுபோன்ற வார்த்தைகளை கூறி, மக்களை பிளவுப்படுத்த நினைக்கின்றார்கள்.*
😔😞
🔥 *கர்நாடகா, கேரளாவில் அந்த மாநிலத்தவரே முதலமைச்சர் நம் நாட்டில் அப்படியில்லையே, இங்கு திராவிடர் என்பவர்களும் காலம் காலமாக தமிழ்நாட்டில் குப்பை கொட்டியவர்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு உங்களை தான் நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும். இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. யார் மக்களுக்கு சேவை புரிவார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும்.*✅

🔥 *caste பார்த்து பழகுறதும், இனம் பார்த்து பழகுறதும் ஒண்ணு தான்பா.*😏

🔥 *போராட்டம் என்றால் நம் சாதி, மத, இனங்களை கடந்து ஒன்று கூடுகிறோம்.*✅

🔥 😡 *ஆனால் அரசியல் கட்சிகளோ தமிழன், திராவிடன், இஸ்லாமியன், இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர், மிகவும் தாழ்த்தப்படவர், பழங்குடியினர், பொது பிரிவினர் மற்றும் பல சாதிப் பெயர்களை வைத்து, பிரித்து பிரித்து மக்கள் அனைவரையும் வைத்து அரசியல் செய்கிறார்கள்.*😡👊

🔥 *அப்போது ஆரியர்கள் சாம்ராஜ்யம் அதிகமாக இருந்தது. அனைத்து துறைகளிலும் கை ஓங்கி இருந்தனர். அதனை எதிர்க்க புறப்பட்டதே திராவிட இயக்கங்கள்.*✅👍

🔥✅ *அப்போது தேவைப்பட்டது. சரி ஏற்றுக் கொள்ளக் கூடிய விசயம்.*✅👍

🔥 *ஆனால் தற்போதுள்ள திராவிட கட்சிகள் (முன் குறிப்பு : கட்சிகள் மட்டுமே, திராவிடர்கள் அனைவரும் அல்ல) ஊழல்கள் பல செய்துள்ளனர்.*😔😡👊

🔥 *அந்த கட்சிகளை அகற்றுவதற்காக, ஒட்டுமொத்த தமிழர்களையும், திராவிடர், தமிழர் என்று பிரித்து பார்க்க சொல்லி, ஆராய்ச்சிகளும் செய்ய வைத்து,  உசுப்பேத்தி, உசுப்பேத்தி🤦🏼‍♂, இப்ப நான் யாரு? நான் யாருனு தேட போயிட்டாங்க.*😡👊

🔥 *இங்கிருப்பவர்கள் அனைவரும் பிறக்கும் போது குழந்தை, பிறகு மனிதன் அதுக்கம்புறம் தான் மற்றவையெல்லாம்.*✅👍

🔥 *நீ திராவிடனா இருந்தாலும் சரி, தமிழனாக இருந்தாலும் சரி. உழைத்தால் தான் சோறு. சோறு முக்கியம் அமைச்சரே.*✅👍

🔥 *நம் முதலில் மனிதனாக, சக மனிதர்களுடன் மனிதாபிமானமாக இருக்க பழகுவோம்.*✅👍

🔥 *ஆட்சிக்கு திராவிடனோ, தமிழனோ, யார் வந்தாலும் சரி, நல்லவனாக இருந்தால் மக்களுக்கு நல்லது பண்ணுவான். இல்லயென்றால் எல்லோரும் என்ன பண்ணுனாங்களோ அத தான் பண்ணுவாங்க.*😔😡

🔥✅ *நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது ஒரு திராவிடனையோ, தமிழனையோ அல்ல. மக்களுக்கு ஊழல் இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமுடைய ஒரு நல்ல மனிதனை மட்டுமே.*✅👍

🔴✅👍 *இனிமேலாவது மக்கள் உங்களுக்குள் பிரிவினைகளை உண்டாக்கி அதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் சிந்தித்து செயல்படுங்கள்.*✅👍

*நன்றி🤝🏻💐*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

🏆👏 *உதயாயுவா*👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🤩🏅 *@⁨paramesvaran Ak⁩, @⁨பிரபாகரன் சிதம்பரம்⁩, @⁨⁨தமிழன்⁩⁩⁩*💐

🤩🏅 *@⁨sriramkrm⁩⁩, @⁨Sasikanth Neelakantan⁩, @⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩⁩*💐

🤩🏅 *@⁨Syed Basha⁩, , @⁨ஞாலமைந்தன்⁩*💐

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🤩🏅 *@⁨அ. கந்தன்⁩, @⁨தமிழன் ராஜா⁩, @⁨வி.சூ.மார்க்கசு⁩*💐

🤩🏅 *@⁨🌻Raja 🌻⁩*💐

🤩🏅 *@⁨VKR⁩, @⁨ரூபன்⁩*💐

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

🔴🔥 *30 மாநிலங்கள்*
*1618 மொழிகள்*
*6400 சாதிகள்*
*6 மதங்கள்*
*6 இனங்கள்*
*29 பெரிய பண்டிகைகள்*
*ஒரு நாடு இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்...!*💐

🔴🔥 *அதெல்லாம் முடியாது நான் முதலில் தமிழன். அதுக்கப்புறம் தான் இந்தியன்.*

🔴🔥 *இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டா மாதிரி இருக்குல. இங்க திராவிடனா இருந்தாலும் சரி, தமிழனாக இருந்தாலும் சரி, முதலில் தமிழன் பிறகு இந்தியன் என்று சொல்லித்தான் பெருமைப்பட்டுட்டு இருந்தாங்க.*

🔴🔥 *இப்ப என்னான்ன திராவிடம், தமிழன்னு சொல்லி புதுசா குழப்பதை உண்டு பண்ணி சில அரசியல் தலைவர்கள் குளிர் காயுறாங்க.*😡👊

🔴🔥 *நான் முதலில் தெலுங்கன். அப்புறம் தான் இந்தியன்.*

🔴🔥 *நீ யாரா வேணாலும் இருந்துட்டு போப்பா. உன் உடம்புல ஓடுற இரத்தமும், என் உடம்புல ஓடுற இரத்தமும் ஒண்ணுதான்பா.*✅👍

🔴🔥 *உலகத்துல யாருக்கு எங்க, என்ன பிரச்சனை நடந்தாலும், நம்ம தமிழர்கள் தான், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் முதலில் கண்ணீர் வடிப்பாங்க. அதுல திராவிடர் கண்ணீர் வடித்தார். தமிழர் கண்ணீர் வடித்தார்னு எங்கேயும் வரல. உங்களை நீங்களே போட்டு குழப்பிக்காம ஆகுற வேலைய பாப்போம்.*🙅🏻‍♀🙅🏻‍♂

🔴🔥 *எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு தான்பா. வேற்றுமையில் ஒற்றுமைனு அதுக்கு தான் அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.*✅👍

🔴🔥 *தமிழ்நாட்டு கவர்மண்ட்ல இலவச அரிசி வாங்கி திங்குற எல்லாருமே தமிழர்கள் தான்பா.*

*நீ இலவச அரிசி வாங்குறியா? ஆமா.*

*நானும் இலவச அரிசி வாங்குறேன். இந்தா போட்டுக்கோ🙌🏻.*

*நம்ம எல்லாரும் தமிழர்களே.*✅👍

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்*
*அதுநோக்கி வாழ்வார் பலர்*
    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

*அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்*

*_📝 தெரிந்து, அறிந்து,புரிந்து கொள்ளவும்: 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🎶 *வடவேங்கடம் தென்குமரி*
*ஆயிடைத்*
*தமிழ்கூறு* *நல்லுலகத்து*🎶

📜 *(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)*📜

🔎 *என்பது பனம்பாரனார் கூற்று. இவ்வடிகளில் பனம்பாரனார் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் குறித்துள்ளார். அதுபோலவே, இளங்கோ அடிகளும் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் தமிழகத்துக்கு வேங்கட மலையை வட எல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும் காட்டியுள்ளார்.*🔍

🎶 *நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்*
*தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு*🎶

📜 *(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)*📜

🎶 *தென்குமரி வடபெருங்கல்*
*குணகுட கடலா எல்லை*🎶

📜 *(புறநானூறு,17:1-2)*📜

🔎 *புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,*
🎶 *(மதுரைக்காஞ்சியில்:70-71)*🎶

🔎 *தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.*🔍

🔎 *வேங்கடத்துக்கு வடக்கில் வேறுமொழி (தெலுங்கு) இருந்து வந்தது என்பதனை மாமூலனார் அகநானூற்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.*👇🔍

🎶 *பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்*
*மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,,,,,*🎶

📜 *(அகநானூறு, 211:7-8)*📜

🔎 *குறுந்தொகையில் மாமூலனார் கட்டி என்னும் மன்னனின் நாட்டுக்கு வடக்கில் வடுகர் (தெலுங்கர்) வாழ்ந்து வந்தனர் என்பதை,*🔍

🎶 *குல்லைக் கண்ணி வடுகர் முனையது*
*வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்*
*மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்.*🎶

📜 *(குறுந்தொகை,11:6-7)*📜

🔎 *சங்க காலத் தமிழகத்தில் தற்போது உள்ள கேரளமும் சேர்ந்திருந்தது என்பது நன்னூல் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நன்னூலார் தமது இலக்கண நூலாகிய நன்னூலில் தமிழகத்தின் நான்கு எல்லைகளைச் சரிவரக் குறிப்பிட்டுள்ளார்.*🔍

🎶 *குணகடல் குமரி குடகம் வேங்கடம்*🎶

📜 *(நன்னூல்,சிறப்புப்பாயிரம்:8)*📜

🔎 *என்று மேற்கு எல்லையாகக் குடகு மலை (மேற்குத்தொடர்ச்சி மலை) உள்ளதைச் சுட்டியுள்ளார். நன்னூல் இந்த எல்லைகளை உணர்த்துவதால், கி.பி 12ஆம் நூற்றாண்டில் மேற்கே குடகு வரை தமிழகம் பரவி இருந்தது தெரியவருகிறது.*🔍✅👍

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻‍♂

             
                  👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *கந்தசாமி- 9080669640*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

திராவிடர்களும், தமிழர்களும் ஓர் பார்வை. பாகம்-1


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :27.03.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *அடிக்கடி சொல்லப்படும் ஒரே பொய் உண்மையாகிவிடும்.*

💐 *லெனின்*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *எதுவும் நிரந்தரமில்லா உலகில் எல்லாம் சிலகாலமே.*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*திராவிடர்களும், தமிழர்களும் ஓர் பார்வை.*

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

🏹 *பாகம்* 1⃣🏹

🔱🔥 _*சங்ககாலத்தின் முடிவில், தமிழகத்தை வென்ற களப்பிரரும் பல்லவரும் கன்னட, ஆந்திர பகுதிகளில் இருந்து படையெடுத்தோரே ஆவர். கி.பி.2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை இவ்விரு அரச குலத்தவருமே ஆண்டனர். 👑களப்பிரர் நாளடைவில் வலிமை குன்றி சிற்றரசர்களாக மாறி ஒழிந்தனர். பல்லவர்கள் பேரரசர்களாக நீடித்து வலிமை குறைந்து சோழர் எழுச்சியால் வீழ்ந்தனர். இதன் பிறகுதான், பிற்காலச் சோழர், பாண்டியர் அரசுகள் வழியே மீண்டும் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தோன்றியது.*_✅⚜

🔱🔥 *_கி.பி.2 முதல் கி.பி.9 வரையிலான 700 ஆண்டு காலம், தமிழினம் ஆரியப் புதல்வர்கள் ஆட்சியின் கீழ் வாடியது.😔 தமிழர் தவிர்த்த, தென்னிந்திய இனங்கள் ஆரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவையே ஆகும். பல்லவரது ஆட்சியில் வடமொழியே ஆட்சி மொழி. களப்பிரர் ஆட்சிப் பகுதிகளிலும் வட மொழியின் ஆதிக்கமே மிகுந்தது. இவ்விரு அரசுகளும் தமிழ் இனத்தின் மீது பகைமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.🔴 தமிழர்கள், பேரரசுகள் கட்டி ஆண்ட காலத்தில், தமிழ் இனத்தின் வாழ்வெல்லையைக் கடந்து தமது அரசை விரிவாக்கவில்லை.👎 பிற தேசங்களில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவில்லை.👎 ஆனால், தமிழரை வெற்றி கொண்ட அயலார் அனைவரும், தமிழ் மொழியைச் சீர்குலைப்பதில் தனி கவனம் செலுத்தினர்_.😡👊🔴*

🔱🔥 _*சங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டு கால வரலாற்றில். களப்பிரர் , பல்லவர் - 700 ஆண்டுகளும், விஜயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர்.🔱✅ இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300 ஆண்டுகளுக்கும் குறைவாகவே.*_⚜

🔱🔥 _*உண்மையில், திராவிடரான பல்லவர்கள் ஏற்படுத்திய பிராமண ஆதிக்கத்தைப் பிற்காலச் சோழர்கள், தாம் அரசாண்ட குறுகிய காலத்தில் குறைத்துள்ளனர் என்பது நாம் உணர வேண்டிய உண்மை.*_⚜

🔱🔥 _*தமிழரின் வெளிநாட்டு வணிகத்திற்கான போக்குவரவுகளை ஆரியர் சீர்குலைத்தமையும், மரபுவழிப்பட்ட தமிழரின் பண்பாட்டு நடவடிக்கைகளை, வட இந்தியாவில் ஆரியர் தடுத்தமையும் ஆரியருக்கும் தமிழருக்குமான போர்களுக்கான காரணங்களாக, இருந்திருக்கலாம்.*_🏹

🔱🔥⚔  _*வாள் வலிமையால் போர் வெற்றி கண்ட தமிழர்கள், தேசிய இனத்தின் எல்லையை விரிவாக்காததன் விளைவாக, ஆரியம் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி, தமிழகத்தைக் குறுக்கியது. ஆரியக் கலப்பால், வட தமிழகம் ஆந்திரமானது.✅தென் தமிழகம் கேரளமானது...✅ மேற்கே கன்னடம் உருவானது.✅*_

🔱🔥 _*தமிழர் முழுமையாக ஆட்சி செய்த சங்ககாலத்தில், ஆரியத்திற்கு எதிரான அரசியலே இருந்தது. அதன்பின்னர்தான் தமிழகத்தில் ஆரியம் வளர்ந்தது. இந்த அடிப்படையில் அணுகினால், உண்மையில் ஆரியத்தை வளர்த்தெடுத்தவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? என்பது வெளிப்படையாகப் புரியும்.*_⚜

🔱🔥 _*இது ஒரு எளிய உண்மையே. ஆனால், இந்த எளிய உண்மையைக்கூட தமிழர்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில்தான், திராவிடக் கோட்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளின், கல்லூரிகளின் பாடத் திட்டங்கள் மேற்கண்ட வரலாற்றை மறைக்கின்றன.*_⚜

🔱🔥 _*திராவிட அரசர்களின் ஆரியக் கொள்கைகளை மறைப்பதும், தமிழர் மரபான ஆரிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதுமே இவர்களின் நோக்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.*_⚜

🔱🔥  *ஆரியத்தின்* *பிள்ளையே திராவிடம்!*
*ஆரியம்,* *சிந்துவெளியில் தமிழரை வென்றது.* *அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை. கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே,* *அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.*
*பின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது.* *அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலைநிறுத்தியபோதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், தமிழ் இனத்தில் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.*⚜

🔱🔥 _*சங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராக ஆய்தம் ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளது. இவ்வினங்களின் மதிப்பீடுகள் ஆரியத்திற்குச் சார்பானவையாக உள்ளன. இந்தி மொழியைக் கற்பதில் இவ்வினங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தென்னிந்திய நிலப்பரப்பில் இந்தியை ஏற்காத ஒரே இனம் தமிழ் இனம்தான். தெலுங்கு, கன்னட இனத்தவர் தமிழரை ஆண்ட காலங்களில் எல்லாம், வட மொழியையே தூக்கிப் பிடித்தனர். அந்தளவு இவ்வினத்தவருக்கு ஆரியத்தின் மீது பற்று உண்டு.*_⚜

🔱🔥 _*பல்லவர்கள் தம்மை 'பரத்வாஜ கோத்திரத்தார்' என்றுதான் அழைத்துக்கொண்டனர். பரத்வாஜ கோத்திரம் என்பது, ஆரிய பிராமண குலம் ஆகும். 🔴🔎உண்மையில் இவர்கள் பிராமணர் அல்லர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.✅🔍👍 ஆயினும், தம்மை பிராமணர் எனப் பொய்யாகவேனும் கூறிக்கொள்ளுமளவு ஆரியத்தில் கரைந்து போனவர்கள் என்பதைக் குறிக்கவே இச்சான்று குறிப்பிடப்படுகிறது.*_⚜

🔱🔥 _*இவ்வினங்களின் ஆரியக் கூடாரத்தில் தமிழரையும் அடைத்து வைக்கும் சொல்தான் '"""திராவிடர்'""" என்பது.பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 13 ஆம் நூற்றாண்டு முதல், 19 ஆம் நூற்றாண்டு வரை, தமிழரை ஆரியத்தில் ஊறிய விஜயநகரப் பேரரசும் நாயக்கரும் ஆண்டனர். இக் காலகட்டத்தில், இந்தத் திராவிடர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.*_⚜

🔱🔥 _*தமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகளாக்கினர். பெண்களை வணிகம் செய்த அரசு விஜய நகரப் பேரரசு என்கிறது வரலாறு. தமிழகத்தின் தன்னிகரற்ற முறையான தேவரடியார் முறையை, தேவதாசி முறை என மாற்றியதும் இந்தத் திராவிடர் ஆட்சியே.*_⚜

🔱🔥 _*20 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களால் தமிழரது தேசிய இன விடுதலை உணர்வு மட்டுப்பட்டது. இதைக்காட்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிடர் என்ற மாயை உருவாக்கப்பட்டு, தேசிய இன விடுதலை உணர்வு பொங்கிவிடாது பார்த்துக்கொள்ளப்பட்டது. இப்போதும், தமிழர்களுக்கென தனி அரசு வேண்டும் என்ற கோரிக்கையை, எந்தத் திராவிட இயக்கமும் தமது கொள்கையாக முன் வைப்பதில்லை. இதற்கான காரணம், திராவிடம் என்ற சொல்லே, தமிழருக்கு எதிரான வரலாற்றைக் கொண்டிருப்பதுதான்.*_⚜

🔱🔥 _*தமிழரிடையே தமிழ்த் தேசிய இன உணர்வு பீறிட்டுக் கிளம்பும்போதெல்லாம், திராவிட இயக்கத் தலைவர்கள் ' தமிழனுக்கு நாடு வேண்டும்' என்பார்கள். அந்தப் போர்க் குணம் மட்டுப்படும் வரை காத்திருந்துவிட்டு, 'திராவிடம்தான் சரி' என்பார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்படும் வித்தை ஆகும்.*_⚜

🔱🔥 _*தமிழரது இனப் போராட்ட வரலாற்றை,*_
⚔ _*1⃣ ஆரியர் – தமிழர் போர்*_
⚔ _*2⃣ தமிழர் – திராவிடர் போர்*_
_*என்ற இரு கட்டங்களாகப் பிரிக்கலாம்.*_⚜ 

🔱🔥 _*ஆரியருக்கெதிரான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் வென்றனர். சிந்துவெளியில் தோற்றதற்கான காரணங்களில் முகாமையானவை :*_

🔱 _*ஆரியர் கூட்டத்திற்கு அழித்தொழிப்பு செய்வது வாழ்வியலாக இருந்தது. ஆகவே, அவர்களால் எளிதில் போர் புரிய முடிந்தது.*_

🔱 _*சிந்துவெளித் தமிழருக்கென்று பாதுகாக்க ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு இருந்தது. ஆகவே, தற்காப்புச் சமர் புரிந்து தோற்றனர். முன்னேறித்தாக்கிய ஆரியர் வென்றனர்.*_

🔱 *_சிந்துத் தமிழரிடத்தில் அறக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆரியர், சுய நலனையே வேதங்களாக்கினர்._*

🔱🔥 _*இந்தக் காரணங்களை வெற்றிகரமாகக் களைந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பேரரசர்கள். போர்க் கலை வளர்ந்திருந்தது. ஆரியருக்கும் தற்காப்புச் சமர் புரிய வேண்டிய தேவை எழுந்தது. ஆரிய அரசுகளைக் காக்கும் கடமை அவர்களுக்கு உருவானது. ஆனால், தமிழ் வேந்தர்கள் தமது அறச் சிந்தனையின் எல்லையைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகவே, தமிழரின் தேசிய இன எல்லை சுருங்கியது. ஆரியக் கலப்பைக் கட்டுப்படுத்தாமையாலும், புதிய ஆரியக் குழந்தைகளான திராவிட அரசுகளைத் தொடக்கத்திலேயே ஒடுக்காமையாலும் தமிழர் அரசுகள் தோல்வியைத் தழுவின.*_⚜

🔱🔥 _*விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி, ஆகிய திராவிடக் காலகட்டத்தில் தமிழரால் எதிர்த்துப் போரிடக் கூட இயலவில்லை. எங்கெங்கு காணினும் இனக் கலப்பு மிகுந்துவிட்டது. இந்தத் துரோக வரலாறு தமிழர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, 'திராவிடம்' என்றாலேயே புரட்சிகரமான சொல் என்பது போல் மடைமாற்றம் செய்யப்பட்டது.*_⚜🔴

🔱🔥 _*இப்போது, தமிழினம் குறிப்பிட்ட எல்லைக்குள் குறுகி நிற்கிறது. ஆயினும், இதுவே தமிழினத்தின் போர்க்களம். இந்தக் களத்தில், பல்வேறு இனத்தவரும் தமிழராய்க் கலந்துதான் நிற்கின்றனர். தூய தமிழ்க் குருதி வாதம் தமிழ் இனத்தின் மரபுக்கு எதிரானது. ஏனெனில், தமிழ் இனம் என்பது, ஒரு பேரினம் ஆகும். இந்திய நிலப்பரப்பு எங்கும் ஆண்ட இனம் இது. இவ்வினத்தில் பல்வேறு சிறு இனங்கள் கால வெள்ளத்தில் கலந்துவிட்டன. அவற்றை ஏற்று அவ்வினத்தவரையும் தமிழர் ஆக்கியதுதான் தமிழின் சிறப்பு.*_⚜
🔱🔥 _*பல்லவர் குல அரசர்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன், தமிழை ஏற்று சிவனியத்தைத் தமிழில் பரப்பினார். கூற்றுவ நாயனார் எனும் சிவனியத் தொண்டர் களப்பிரர் வழி வந்தவர்தான்.*_⚜

🔱🔥 _*இவர்கள்போல் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம். இந்திக்கு எதிராக நடந்த போரில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு உயிர் நீத்த ஈகிகளில் பிற இனத்திலிருந்து உருவான மறவர்களும் உண்டு.*_⚜

🔱🔥 _*விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், தோல் தொழில்களுக்காகவும் பிற ஏவல் பணிகளுக்காகவும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர். கடும் உழைப்பாளர்களான இம்மக்களைத் திராவிட அரசர்கள், அடியாட்களாகவும் பயன்படுத்தினர். மதுரைவீரன் அவர்களில் ஒருவர்தான். திருமலை நாயக்கனின் சாதி வெறியால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மதுரை வீரன்.*_⚜

🔱🔥 _*அவரைத் தமிழர்கள் இன்று தங்கள் தெய்வமாக்கிக் கொண்டுள்ளனர். தமிழரின் சிவன் கோயில்களிலும், சிற்றூர் குல தெய்வக் கோயில்களிலும் கூட மதுரைவீரன் சிலை வணங்கப்படுகிறது. இதுவே, தமிழரின் அறச் சிந்தனை மரபின் சான்று. அருந்ததியர் மக்கள் இன்று சந்திக்கும் சாதிக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் திராவிட அரசகுலத்தவர்தான். ஆனால், திராவிட அரசர்கள், தமிழரிடையே சாதிய மோதல்களைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்து, ஒற்றுமையின்மையை உருவாக்கிவிட்டனர். அருந்ததியர்கள் இன்று கடை நிலை இழிவைச் சந்திக்கும் பிரிவினராக வாடுகின்றனர். இம்மக்கள் தமிழர்கள்தான். இவர்களின் இழிவைப் போக்க வேண்டிய முதற்கடமைத் தமிழ்த் தேசிய அரசியலுக்குத்தான் உண்டு.*_⚜

🔱🔥 _*இதுபோலவே, திராவிட அரசர்கள் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கன்னட, தெலுங்கு வழியினர் அனைவரும் இன்று தமிழர்களே! இதில் குருதித் தூய்மைவாதம் கூடாது. தமிழ்த் தேசிய அரசியலில் கரம் கோக்க வேண்டிய கடமை இவர்களுக்கும் உண்டு. ஆனால், இம்மக்களைத் தெலுங்கராவும் கன்னடராகவுமே நீடிக்க வைக்கும் சதிச் செயல்களில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இச் சதியை முறித்துக் கொண்டு வந்து தமிழராகத் தலைநிமிர்த்தும் பொறுப்பு இம்மக்களுக்கு உள்ளது. தமிழ்த் தேசியக் கருத்தியல் இவர்களை அரவணைக்க வேண்டும்.*_⚜

🔱🔥 _*தமிழ், களப்பிரர்களை, பல்லவர்களை, நாயக்கர்களை, பிரிட்டானியர்களையெல்லாம் கண்டுவிட்டு செம்மாந்து நிற்கும் மொழி. இம்மொழியைப் பிற மொழிகளால் எவ்வாறு அழிக்க முடியவில்லையோ, அதேபோல பிற இனங்களால், தமிழ் இனத்தை அழித்துவிட முடியாது. ஆனால், இனத்தின் பாதுகாவலர்களாக தமிழர்கள் தம்மை உணர வேண்டும். போராடாத இனம் வெல்லாது. ஈழத்தில் நடப்பது ஆரியத்தின் நவீன வடிவங்களான சிங்கள – இந்திய கூட்டணிக்கு எதிரான தமிழரின் போர்தான்.*_⚜

🔱🔥 *தமிழினத்தின் போராட்ட வரலாற்றின், சுருக்கம் நமக்கு உணர்த்தும் உண்மைகள்,*
*ஆரியமே தமிழரின் முதல் பகை*
*திராவிடம் ஆரியத்தின் கிளை!*
*-என்பவையாகும்.*⚜

🔱🔥 _*இந்தப் பாடங்களிலிருந்து, எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். திராவிட இனங்களான / ஆரிய பிராமணியத்தில் தோய்ந்த இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள இனங்கள் தமிழர் நிலத்தைப் பறித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் ஒருபோதும் தமிழருடன் நட்பு பாராட்டா. இந்திய தேசிய ஒடுக்குமுறை என்பது, இந்தி பேசும் மக்கள் நேரடியாக தமிழர் மீது படையெடுத்து வருவது அல்ல. ஆரியத்தின் தென்னிந்திய சட்டாம்பிள்ளைகளாக உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள இனங்களே, இந்தியாவின் தமிழர் மீதான ஒடுக்குமுறை வடிவங்கள்.*_⚜

🔱🔥 _*இவ்வினங்கள் தமக்குள் உள்ள எல்லைச் சிக்கல்களை சுமுகமாகவும் விட்டுக்கொடுத்தும் தீர்த்துக்கொள்கின்றன. ஆனால், தமிழகத்துடன் உள்ள சிக்கல்களில் மட்டும் ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகின்றன. இதற்குக் காரணம், இவ்வினங்களுக்குத் தமிழர் மீது உள்ள இனப்பகையே ஆகும். இந்த இனப்பகையை, இந்தியம் வளர்த்தெடுக்கிறது.*_⚜

🔱🔥 _*ஆகவே, திராவிடம் – இந்தியம் இரண்டும் தமிழினத்தை எதிர்க்கின்றன, அழிக்கத் துடிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.*_🔴⚜

🔱🔥 _*திராவிடம் குறித்த நமது ஆய்வு முடிவுகள் அனைத்துமே, தமிழ் இன விடுதலைக்கான தேடலின் விளைவுகள்தாம். திராவிடர் என்றால் பிராமணர் வரமாட்டார் என்ற வாதம் முழுக்க முழுக்கப் பொய்யானதும், தமிழின விடுதலை உணர்வை மட்டுப்படுத்தியதும் ஆகும்.*_🔴⚜

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...